தமிழகம் மீட்போம்..
தேர்தல் வருகிறது .. எல்லா தேர்தலை போல இதையும் சாதாரணமாக கடந்துவிட முடியாது .. தலைவரே
என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன், எளிதில் வெற்றிபெற விடமாட்டார்கள் என சொன்னதை நினைவில் கொள்வோம் .. இது பார்பனீயத்தின் அடக்குமுறைக்கும் அடிமைகள் கூடாரத்திற்கும் சவபெட்டி செய்யும் தேர்தல் .. அதிகாரவர்க்கமும் பாசிச கூட்டமும் கூடவே தேர்தல் ஆணையமும் சேர்ந்து எழுதபடாத ஒப்பந்தத்தோடு வருகிறது .. கவனம் தேவை
மிகப்பெரிய வெற்றி மட்டுமே நமது இலக்கு .. இல்லையெனில் அப்பாவுகள் கதி நேரிடும் ..எச்சரிக்கையோடு களம் காணவேண்டும்..
..
யார் வரகூடாது என்பதை தமிழகம் தெளிவாக இருக்கிறது .. யாரால் முடியும் இந்த இழிவுநிலை நீங்கும் என அறிந்து மக்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறார்கள் .. சில அறிவுஜீவிகள் (அப்படிதான் சொல்லிக்கொள்கிறார்கள்) மடைமாற்ற முயற்சியை தொடர்ந்து செய்துக்கொண்டே இருப்பார்கள்.. நாம் கருத்தாளர்களுக்கு மதிப்பு தருகிறவர்கள் ஆனால் தகரத்திற்கு அல்ல.. யாரோடு கூட்டணி எவ்வளவு இடம் யாரை நிறுத்துவதென்பதை தலைவர் முடிவு செய்வார்.. நாம் மக்களோடு சேர்ந்து பயணிப்போம் .. நல்லவர் யார் யாரால் நல்லதை செய்யமுடியுமென ஒருவருக்கேனும் எடுத்துச் சொல்வோம் ஆளுக்கு இரண்டு வாக்கு திமுக கூட்டணிக்கு சேகரிப்போம்..
..
எடுத்துச் சொல்வோம்..
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கபட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிறமாநிலத்தவரும் தமிழக அரசு பணியில் சேரலாம் என அரசாணை பிறபித்து தமிழக இளைஞர்களின் வேலைவாயப்பிற்கு வேட்டுவைத்த பன்னீர் செல்வம் .. உதய் மின்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது .. நீட் தேர்விற்கு ஒப்புதல் அளித்து தமிழக மாணவர்களின் மருத்துவகல்விகனவை சிதைத்து தற்கொலைக்கு தள்ளியதை, மோடி அரசின் ஒவ்வொரு தமிழகத்திற்கு எதிரான செயலையும் வாய்பொத்தி ஆதரித்ததை,
இந்த மானங்கெட்ட அடிமைகளால் நம் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிபோனதை எடுத்துச்சொல்வோம்..
2016ல் சொன்ன வாக்குறுதிகளை அடிமை அதிமுக அரசு செய்யவிலிலையென மக்களிடம் எடுத்துச்சொல்வோம்.. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை சுட்டு கொன்றுவிட்டு தொலைகாட்சி பார்த்து தான் என்றவர்தான் பழனிசாமி
என்பதை நாட்டுமக்களிடம் சொல்வோம்
..
மக்களோடு நிற்பவர் ..மக்களுக்காக தொண்டாற்றுகிறவர் உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசாதவர் .. உழைப்பில் உயரத்திற்கு வந்தவர் ..நேர்மையும் நன்னெறியும் கொண்டவர் .. நீண்ட அரசியல் அனுபவமும் பேரறிஞர் கலைஞர் பேராசிரியர் என அரசியல் ஆளுமைகளிடமிருந்து நேரடி பயிற்சி பெற்றவர் .. தொலைநோக்கு சிந்தனையும் தூய எண்ணமும் எதற்கும் அஞ்சாத போர்வீரனாய் தளபதியாய் நிற்பவர் .. குறுக்குவழியை நாடாத மக்கள் அதிகாரம் தருதலே ஜனநாயகத்தின் சிறப்பு என உணர்ந்து மக்களோடு பயணித்து அவர்கள் மனமறிந்து செயலாற்றும் மாவீரர்..
நம் தலைவர் தளபதியாரை அறியணையில் அமரவைப்போம்..
விடியும் .. தமிழகம் காத்திருந்த விடியல்
ஏப்ரல் 6 ல் திமுக கூட்டணி வேட்பாளர்களே பெருவாரியான வாக்குகளை பெற வேண்டும்
மே 2.. ஞாயிறு ஒளிரும் ..
#தமிழகம்_மீட்போம்
..
No comments:
Post a Comment