A Leader
வருங்கால முதல்வரே வாழ்த்துகள்.
நடந்து வந்த பாதைகளை சற்று நிதானத்தோடு அவதானிக்கிறேன்.. 14 வயதில் அரசியல் ஆர்வம் கொண்டு தெருவில் இறங்கிய தொடக்கம் இன்று மாபெரும் ஜனநாயக இயக்கத்தின் தலைவனாய் ..
வந்த வழியெல்லாம் முட்கள் நிறைந்திருந்தது .. இளம் வயதில் திருமணம் முடித்த சிலமாதங்களிலேயே மிசா கைதியாக கொடுஞ்சிறைவாசம் ஆனால் அப்பன் அறிய கூடாதென முழுக்கை சட்டைபோட்டு நின்றாயே.. அப்போதே தமிழகம் கவனிக்க தொடங்கியது உன் மனவலிமையை.. எத்தனை வலிகள் வாரிசுயென்று
வசை சொற்கள்.. அவை அனைத்தும் உன் வளர்ச்சிக்கு உரமாகியது ..
..
அரசியல்
எது, எப்படி கையாள்வது எவரை எங்கே நிறுத்துவது யாரை கொண்டு நடப்பது, என்ற அரசியல் அறிவை கண்டு கற்றுணர்ந்து பகை எதுவென்றறிந்து வாள் வீசும் அழகு.. சாதி பெருமை பேசி இளைஞர்களை வெறியேற்றி குளிர்காயும் அப்பன்மகனை அண்டவிடாமல், அரசியலை வியாபாரமாக்கி விலைபேசம் விஜயபிரேமத்தை எழமுடியாமல் செய்து அரசியலில் முடிவுரையை எழுதும் அழகு..
எக்காரணம் கொண்டும் பாசிசமும் பார்பனீயமும் தலைதூக்க கூடாதென்ற கொள்கை தெளிவும்
திராவிடப் பேராசான்கள் சொல்லிச் சென்றதை காத்துநிற்கும் பேரழகு.. மாபெரும் இயக்கத்தின் தலைவன் நான் என்ற மமதையின்றி குழந்தைகளின் குரலையும் செவிமடுக்கும் அழகு..
..
மக்களிடம்செல் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வாக்கை அடிபிறழாமல் மக்களோடு கலந்திருப்பவர்..
கலைஞரின் மகன் என்பதாலேயே வாய்ப்புகள் தள்ளிபோனது .. நல்ல தலைவனை காலம் செதுக்கும் சரியான நேரத்தில் உயரத்தில் தூக்கிபிடித்து அழகுபார்க்கும் ..இதோ மனிதகுல விரோதிகள் பாசிசவாதிகள் மதமேறிய விசமிகள் சாதிவெறி மூடர்கள் அணிவகுத்து தமிழகத்தை சுரண்ட பார்க்கையில் இதோ காலம் தந்த தலைவனாய் தளபதி..
..
தமிழகத்தின் அவலம் கண்டு கேடுகெட்ட கயவர்களின் அடிமைதனம் கண்டு .. சாதிமதம் பேசி மனிதனை சூறையாடும் கொடுமைகண்டு .. ரௌத்திரம் செய் என மனம் கதைக்கிறது .. ஜனநாயகம் காலில் மிதிபட்டு கிடக்கிறதே இனியும் ஏன் பொறுமை என மனம் சஞ்சலத்தோடு வினா எழுப்புகிறது .. மாபெரும் புரட்சியை மக்களை திரட்டி இந்த மானுடம்காக்க களம் செய்யவேண்டும் என எண்ணுகிறது .. தமிழனை தமிழை இழிவுபடுத்தும் ஆரிய கூட்டத்தை கொட்டத்தை அடக்க அகிம்சை வழி பயனில்லை இனியும் பொறுப்பது காலம்கடந்த செயல் .. ஆனாலும் ஜனநாயத்தின் மிச்சமிருக்கிற உயிர்ப்பை நம்பி அறம் எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கையில் திராவிட சித்தாந்ததமே மானுடத்தின் மேம்பாட்டிற்கானது என்ற நம்பிக்கையில் .. தளபதி எனும் போர்வீரன் .. மகத்தான மக்கள் இயக்கத்தின் முடிசூடா மன்னன், மக்களின் விழிகளில் காணும் ஏக்கம் நிறைந்த பார்வை நல்லவை நடக்கும் நடந்தேறும் .. தமிழகம் மீட்கபடும்,.. இந்தியாவை மீட்க வேண்டிய பயணத்தின் முதல் படியை தமிழகம் துவங்கும் என்ற நம்பிக்கை ..
..
சமரசமில்லாத கொள்கை .. பேராசானும் பேரறிஞரும் பேரருளாளனும் வகுத்துதந்த கோட்பாட்டிலிருந்து பிறழாமை.. சமூகநீதியை காத்துநின்று எப்போதும் எந்நிலையிலும் மாறாத தெளிவோடு அரசியலில் திராவிட இயக்கத்தின் எழுச்சியை நான்காம் தலைமுறை கடந்து நிலைத்து நின்றிட ஓய்வின்றி உழைக்கும் உன்னத தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
தலைகனமில்லா தலைவனே ..
தன்னிகரில்லா உழைப்பே..
தரணி போற்றும் நன்னெறியே.
தமிழகத்தின் எதிர்பார்ப்பே..
உன்னதமே,உயர்வே,உண்மையே
உள்ளமெல்லாம் பூரிப்பு துள்ளியெழ
மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம் ..
வாழிய பல்லாண்டு..
தமிழகம் காத்து தமிழ்போல் உயர்ந்து
முதல்வராய் ..அதிலும்
முதன்மையாய்
இந்திய துணைகண்டமே போற்றும் பெருவாழ்வு வாழ்க..
Leader of Tamil Nadu
..
வாழ்த்துகள்..
No comments:
Post a Comment