"நீங்கள் வழக்குப் போடாமல் இருந்தால் ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான். அதுவே விசாரணை ஆணையத்தின் தீர்ப்பாக இருக்கும்"..
அமைச்சர் ஆர் பி உதயகுமார் ..
தி இந்து தமிழ் இதழில்..
..
உண்மையில் இவர்களை எண்ணி கவலை கொள்ளவேண்டியிருக்கிறது .. தமிழகம் எவ்வளவு சிறந்த மனிதர்களை பொதுவாழ்வில் தந்திருக்கிறது கொள்கை முரணெனினும் தங்கள் ஆளுமைகளை நிரூபிக்க தவறியதில்லை ..ஜனநாயக பண்புகளோடு மாற்றான் தோட்டத்து மலரிலும் வாசம் உண்டென்பதை உணர்ந்தவர்கள் .. அரசியல் சூழ்ச்சி சதுரங்கம் என ஆடிதீர்த்தாலும் எதிரணியை குறைவாய் மதிப்பிட்டதில்லை மூதறிஞரென்றும் பேரறிஞரென்றும் காலம் புகழ்ந்தது .. அரசியல் அறிந்தவர்களாக அறம் தெரிந்தவர்களாக ..அரசியல் பகை தாண்டி துளியும் கயமையற்ற நட்போடு பழகியவர்கள் .. எதிரெதிர் களமெனினும் கடுமையான கருத்து மோதல் எனினும் எதிராளர்களை குறைத்து மதிப்பிட்டதில்லை.. தங்கள் கொள்கை எதுவென்று அறிந்து செயல்பட்டார்கள் ..
ஜனநாயகத்திற்கு தீங்கென்ற போது, தமிழ் சமூகத்திற்கு கேடுவருமெனில் ஒருமித்து நின்றார்கள்
நல்ல தலைவர்களை அமைச்சர்களாக கண்ட தமிழகம்
இன்று அரைகுறைகளை அறிவிலிகளை தந்து அவமானத்தில் கூனிகுறுகி நிற்கிறது ..
..
"கூவத்தூரில் ஊத்தி கொடுத்தவன் தானே அவன்"என நிதானத்தில் பேசுகிறார் சட்ட அமைச்சர் .. ஊழலில் கொழுத்தவர்கள் சுகமேறி கூட்டிவந்தவரை கழுத்தறுத்து உழைத்து முன்னேறியதாய் புழுகுகிறார்கள் .. அண்ணாவிற்கு அப்புறம் அதிகம் படித்தவர் ..கடைசியாக படித்த புத்தகம் எதுவென்றால் வீட்டில் இருக்கிறதென்கிறார் .. ஒருவர் திருக்குறளை எழுதிய ஔவையார் .. பலூனை உடைத்துவிளையாடும் கிறுக்குப்பிள்ளை .. தெர்மாகூல் போட்டு அணை நீரை மூடிய அறிவொழுகும் அமைச்சர் .. தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என அதிகாரமில்லாத முதல்வர் .. வடநாட்டு தலைவர்கள் காலில் விழுந்து முதுகெழும்பு உடைந்த ஆன்மையற்ற பன்னீர்கள் .. ஒருத்தர் கூடவா கொஞ்சம் அறிவோடு பேசி பார்த்ததில்லை .. என்ன கொடுமை .. காசிற்காக சாதிக்காக மதத்திற்காக வாக்கை விற்றால் இந்த இழிநிலைதான் நேரிடும் ..
..
எதிர்கருத்தாளர்களெனிலும் காமராஜர் பக்தவச்சலம்
ராஜாஜி சி.எஸ்,.. ஆர்.வி,..அனந்தநாயகி.. மடைமாறிய
இரா.செழியன்,..நாவலர்.. சம்பத் ..என அடுக்கிக்கொண்டே போகலாம் ..நல்ல சிந்தனையாளர்களாய் வலம் வந்தார்கள் பேரறிஞர் அண்ணா, பேரருளாளன் கலைஞர் ..பேராசிரியர் தொடங்கி இன்றைய இளம் தலைவர்கள் வரை தங்கள் தனித்திறமையை பறைசாற்றி தமிழகம் நல்விதைகளை தரும் கழனி என பெயர் தந்தார்கள் ..ஆனால் மகோரா எனும் மடையனின் மோகமுள் குத்த தொடங்கி காலம் அறிவில் விரிசல் விழுந்தநிலைக்கு போனது .. சட்டபைக்கு வரவே அஞ்சியதும் ..
எதிர்க்கட்சித்தலைவர் கலைஞரை சந்தித்தாலே கட்டம் கட்டி ஒதுக்கிவைத்ததும் .. கருத்தை எதிர்கொள்ள பயத்து ஒளிந்ததும் நடந்தது.. பொய்யும் புரட்டும் பேசி பேசி அதையே நம்பவைக்க ஒரு கூட்டம் தொடர்ந்து கூச்சலிட்டு திராவிடத்தின் ஆட்சி வந்தால் எங்கே நமது அதிகாரம் பறிபோகுமென்று பார்பன ஊடகங்கள் திமுகவை ஊழல்கட்சியென சொல்லி கடைசிவரை நிருபிக்க முடியாமல் போனது ..ஆனாலும் ஊழலில் தண்டனைபெற்றாலும் அதற்கும் துணை போவொமென ஆரிய கூட்டம் தொடர்ந்து இந்த கூமுட்டைகளை கைபாவையாக்கி ஆட்சி செலுத்துகிறது .. ஜெயலலிதா எனும் பயந்தாகொள்ளியை சிங்கபெண் என ஊடகபிம்பம் அமைத்து கடைசிவரை காப்பாற்றியதும் .. அவரை தொழ வைத்து அடிமைகளாய் பொறுக்கி அமைச்சராக்கியதும் இந்நிலைக்கு காரணம் ..
..
வழக்கை சந்திக்க பயந்து தொடர்ந்து வாய்தா வாங்கி
வழக்கை இவர்தான் விசாரிக்கவேண்டுமென்றெல்லாம் அடம்பிடித்து .. கடைசியில் நீதியின் பிடி இறுகியபோது..
சப்தநாடியும் அடங்கி அழுதபடி நான் நோயாளி கருணை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் கெஞ்சியவர் தான் .. அரசு பதவியை முறைகேடாய் பயன்படுத்தி கொள்ளையடித்து ஆடாதஆட்டமெல்லாம் ஆடி எனை எதிர்ப்பதற்கு யாருமில்லை என ஆணவத்தோடு பேசி தன் கட்சிகாரனை சுயமரியாதையற்ற கழுதையாக எண்ணி,அதிகார திமிரில் பாசிசபார்பன காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்தான் ஜெயலலிதா.. விதைத்ததுதான் விளையும்
என அறியாமல் போனார்.. ஆளுமை வீரமங்கை சிங்கப்பெண் என்பதெல்லாம் கட்டிசமைத்தது .. அடாவடி ஆளுமையாகாது எதிர்கொள்ள அஞ்சுதல் வீரமாகாது ..
..
தீதும் நன்றும் பிறர்தர வாரா..
..
No comments:
Post a Comment