நபிகள் தன் வாழ்நாளில் பொய் பேசியதில்லை
வாக்குறுதி மாறியதில்லை,#தனக்குதுன்பம்இழைத்தவர்களைபழிவாங்கியதில்லை, ஏழைகள் அனாதைகளுக்காக இரக்கமட்டார் கோபம் பொறாமை பேராசை புறம்பேசுதல் கூடாதென்றார் ..
கலைஞர் கருணாநிதி..
..
இறைதூதர் நபிகளைப் பற்றி கல்யாணராமன் கக்கிய விசம் பெரும் கண்டனத்திற்குரியது தண்டனைக்குரியது இது போன்ற செயல்களை ஆர்எஸ்எஸ் சித்தாந்திகள் மிக எளிதாக செய்து உணர்ச்சியை தூண்டி ஒரு கலவரத்தை நடத்திட முடியுமா என நினைப்பார்கள் காந்தியை கொன்ற கோட்சே கூட இஸ்மாயில் என பச்சை குத்தி பெரும் கலவரத்தை நடத்த திட்டமிட்டிருந்தது பெரியார் வானொலியில் கதைத்து தடுக்கபட்டது .. உத்தமரை கொன்றது உதாரி பாப்பான் என முரசொலி தலைப்பு செய்தியை வெளியிட்டது .. முஸ்லிம்களை கலவரகாரர்களாக மாற்ற தொடர்ந்து சங்கிகள் முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்றுக்கொண்டிரு்கிறார்கள் ஆனாலும் இது தொடர்கிறது ..
..
இதுபோன்ற ஆசாமிகளுக்காக போராட தேவையில்லை இவன் இல்லையென்றால் மற்றொருவனை ஆர்எஸ்எஸ் உருவாக்கும் நாம் செய்யவேண்டியது சட்டத்தின் முன் நிறுத்துவதும் தொடர் நடவடிக்கை மூலம் தண்டனை பெற்று தருவதும் தான் .. நபிகள் மீது பேரன்பு கொண்ட சமூகம் உயிரின் மேலாய் மதிக்கிறது என்பதெல்லாம் சரி அதற்காக கல்யாணராமனை உயரத்திற்கு கொண்டு செல்ல காரணியாக தேவையில்லை ..
வெட்டுவேன் தலையை எடுப்பேன் என பேதுவதால் பயனி்ல்லை .. சமூகம் இளைஞர்களை நல்வழிபடுத்த கல்வியில் வேலைவாய்ப்பில் தனக்கான அங்கீகாரத்கை பெற அரசியலில் பங்காற்ற ஜனநாயக முறையில் முயற்சிக்க வேண்டும் உச்சசுருதியில் பேசுகிறவன் தலைவன் என்கிற நிலையை மாற்றி தனித்தன்மையோ கூடிய அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைவனை கண்டெத்தினால் ஒழிய சமூகம் மேம்பாடடைய முடியாது ..
..
சுஹைல் பின் அம்ரு என்கிற கவிஞன் நபிகளாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பிக்கொண்டிருந்தான்..அரபுலகம் கவிஞர்களை கொண்டாடிய காலம் அது.. (கவிஞர்கள் பொய்யர்கள் என்று பிறகுதான் குர்ஆன் வசனம் வந்தது )..
வெகுண்டெழுந்த உமர் அவர்கள் உத்தரவிடுங்கள் அவன் கீழ்பற்களை உடைத்துவிடுகிறேன் என்ற போது ..நாளை மறுமையில் என் முகத்தை இறைவன் சிதைத்துவிடுவானே என பதிலளித்தார் நபிகள் பெருமகன்..
யாரையும் சிறிதளவில் கூட பழிவாங்க முயற்சித்ததில்லை .. நபிகளை இழிவாக பேசிவிட்டான் என்பதால் இரத்தம் கொதிக்கிறது என்ன நீ இப்படி பேசுகிறாய் என நினைத்தாலும் கவலையில்லை
முஸ்லிம்கள் அரசியலில் தெளிவு பெறாதவரை இதுபோன்ற சற்றென்று உணர்ச்சியை தூண்டுகிற செயல்களை செய்துக்கொண்டே இருப்பார்கள்
..
ஆளுக்கொரு கட்சி ஆளுக்கு இரண்டு இடங்களை வெவ்வேறு எதிரெதிர் அணிகளில் பெற்று அவரை இவரும் இவரும் அவரும் இகழ்ந்து பேசி கடைசியில் இரண்டும் போய் பிரதிநிதிகள் அற்ற சமூகமாய் நிற்கும் அவலம் .. யார் சரியானவர் என்பதில் கூட தெளிவற்ற சுயநலம் கண்ணை மறைக்கிற அவலம் .. தொடர்ந்து இத்தனை காலம் இருந்தோம் என்ன பயன் என எதிர்கேள்வி கேட்பதும் இஸ்லாமிய இயக்கங்கள் பிரித்ததுயாரென புலம்புவதும் என்ன செய்துவிட்டதென கைபிசைந்து நிற்பதை தவிர்த்து ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளாதவரை தொடரும் .. கல்வியை தாருங்கள் அரசு வேலைகளில் பணியமர்த்த முயற்சி செய்யுங்கள் வெளிநாடு மோகத்தை விரட்டிவிட்டு உள்நாட்டில் தொழில் தொடங்க முயலுங்கள்.. உயர்பதவிகளை அடைவதற்கு இப்போதிலிருந்து உங்கள் குழந்தைகளை தயார் செய்யுங்கள் ..
உயர்படிப்புகள், ஆய்வுகளுக்கு குழந்கைகளை ஊக்கபடுத்துங்கள்
கண்டவனும் கண்டதை பேசி திரிந்தால் செவிகொடுக்காதீர்கள் .. வணக்கம் வழிபாடு மார்க்கம் கோட்பாடுகளை உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துக்கொள்ளுங்கள். பொது அரசியலை வாருங்கள்அரசியல் பயிலுங்கள் செயல்படுங்கள் இவையனைத்திறேகும் முன்பாக ஒற்றை தலைமையை கண்டெத்துங்கள் ..
..
No comments:
Post a Comment