#கண்டா_வரச்சொல்லுங்க..
இப்படியொரு தலைவனை அரசியல் வரலாற்றில் கண்டதில்லை ..எல்லா தலைவர்களும் கொண்டாடபடுகிறார்கள் .. வாழும் போதெல்லாம் வஞ்சித்தவர்கள் புரிதலற்று மாய மோகத்தில் நின்று தயங்கி தயங்கி வாய்ப்பை தந்தவர்கள்.. இருக்கும் போது தேட மறந்தவர்கள் .. ஏமாற்றுகாரர்களை நம்பி மோசம் போய் ..நடுவொடிந்து நிற்கும் போது தேடுகிறார்கள் ..
#கண்டா_வரச்_சொல்லுங்க..
..
எதிலும் தொலைநோக்கு .. கொள்கை பிறழாமல் மக்கள் பணி, தீட்டும் திட்டங்களால் மக்கள் காலம்கடந்து பயனளிக்க வேண்டுமென்ற நோக்கு .. விளிம்பிநிலை மக்களை உயர்த்தி தாழ்ந்துபோகாமல் காத்துநின்ற சாமி.. இருண்டுகிடந்த தமிழ்சமூகத்தை விளக்கேற்றி ஒளிரும் தமிழகமாய் பெருந்தொண்டர் .. கல்வியே கரைசேர்க்குமென்ற நம்பிக்கையையூட்டி ஒருகிலோமீட்டர் இடைவெளியில் ஆரம்பகல்வியை துவக்கியவர் .. உயர்கல்வி கனவை எளிதாக்கி அனைவரும் உயர அரும்பாடுபட்டவர்.. கல்வி கட்டமைப்பை சீராக்கி சமச்சீராய் கல்வி கிடைக்க வழிவகுத்த வள்ளல் ..நோயற்ற சமுதாயமே குறைவற்ற வாழ்வை தரும் என வரும் முன் காத்துநின்ற குலசாமி..
மருத்துவ வசதி எட்டாகனி என்ற நிலைமாற்றி காப்பீடு கொள்கை வகுத்த கருணையாளன்.. மனிதனை மனிதனே இழுப்பதா எனக் கேட்டு கைரிக்ஷா ஒழித்தவர்.. குடிசையில்லா தமிழகம் கனவு .. வீட்டுவசதி வாரியம் கண்டவர் ..
#கண்டா_வரச்_சொல்லுங்க
..
பார்பனர்கள் கையிலிருந்த மின்சாரத்தை ஒழித்து தமிழ்நாடு மின்சாரவாரியம் கண்டு தமிழகத்தில் எல்லா கிராமத்திலும் மின்சார தந்து தமிழகத்தை ஒளிர செய்தவர் . நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்து பெரும்நிலக்கிழாரிடமிருந்து 83 ஆயிரம் ஏக்கரை மீட்டெடுத்து நிலமற்றவர்களுக்கு வழங்கியவர்
இந்தியாவிலேயே விவசாயிக்கு இலவச மின்சாரம் தந்து புதுமை செய்தவர்.. விவசாய கடன் ₹7000 கோடியை ரத்து செய்து புரட்சி செய்த பெருமகன்..
நுழைவு தேர்வை கொண்டுவந்த எம்ஜிஆரின் செயலை கண்டித்து அதை ரத்து செய்து மாணவர்களின் கல்விகனவை நிறைவேற்ற துணைபுரிந்தவர்.. முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வி .. அரசு பணியில் 30% விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கியவர் .. காவல்துறையில் பெண்களை கொண்டுவந்த சீர்திருத்தவாதி..மகளிர் சுயஉதவிக் குழு கண்டு பெண்களை சுயமரியாதையோடு வாழ வழிவகுத்தவர்..
பெண்களுக்கு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு .. சிறுபான்மையினருக்கும் அருந்ததியினருக்கும் உள்இடஒதுக்கீடு தந்து வாழ்வில் ஒளியேற்ற தலைவர்..
#கண்டா_வரச்_சொல்லுங்க ..
..
வாழும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போதும்
தமிழ்,தமிழர் நலன், மொழிகாப்பு இனப்பற்று என வாழ்ந்த பெருமையாளன் .. எதிர்ப்போரும் இவன் தமிழ்க் கண்டு இளகிதான் போனார்கள் ..அறத்தோடு எதிர்க்க துணிவின்றி வீண்பழி சுமத்தினார்கள் .. பொய்யையும் புரட்டையும் நம்பி ஒரு கூட்டம் இவரை இழிவுபடுத்தியது .. கூடயிருந்தே கோடாளியை வீசியவர்கள் புன்னகைத்து புதைக்குழியில் தள்ளியவர் ஏராளம் ஆனாலும் வீறுக்கொண்டு எழுந்து வந்தவர் ..
இவரின் அரசியலே சமகால இந்திய அரசியலின் இலக்கணம் .. ஜனநாயமாண்பாளர் எதிரிக்கும் வாய்ப்பளிக்கும் பண்பாளர் ..வாழ்வளிக்கும் பேரருளாளர் .. சிந்தனை செயல் அனைத்தும் ஒடுக்கபட்ட பிற்படுத்தபட்ட மறுக்கபட்டவருக்காகவே இருந்தது.. அனைத்து தரப்பினரையும் சமநீதியோடு ஆண்டவர் .. அன்பாளர் பேரன்பு கொடையாளர் .. மனிதாபிமானமிக்க பண்பாளர்..
#அரசியல்ஆசான்_கலைஞர் ..
#கண்டா_வரச்_சொல்லுங்க ..
..
No comments:
Post a Comment