சக்கரநாற்காலி..
அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்.. அதற்கு உழைக்கும் எண்ணம் வேண்டும் .. தன் இனத்தின் மீது தீராத காதல் வேண்டும் மொழியின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் பற்றுவேண்டும், மக்களை நேசிக்கும் பெரும்குணம் வேண்டும் அவர்கள் படும் அல்லல்கண்டு கலங்கும் மனம் வேண்டும் .. பள்ளத்தில் கிடப்போரை தூக்கிவிடும் எண்ணம் வேண்டும் .. கொள்கையில் தெளிவும் உயர் சிந்தனையையும்.. மக்கள் மீது தீராத அன்பும் வேண்டும்.. தொலைநோக்கு பார்வை வேண்டும் தொய்வில்லா உழைப்பு வேண்டும் ..
மக்கள் நேசிக்கிற மக்களை நேசிக்கிற தலைவனாக வேண்டும்.. எதற்கும் அஞ்சா துணிவு வேண்டும் .. எதிரிகள் குலைநடுங்க வைக்கும் திறன் வேண்டும் .. இவனைப்போல் எவனுமில்லை என்ற நிலை வேண்டும் ..
..
குருடர்களே யாரை பேசுகிறீர் தெரியுமா ..
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காக உழைத்தவரை, வாய்ப்பு வந்தபோதெல்லாம் மக்கள் தரம் உயர நினைத்தவரை, உலகமே வியக்கும் வண்ணம் சாதனை புரிந்தும் அலட்டிக்கொள்ளாத பேரருளாளரை, இந்தியாவின் அரசியலில் யாராலும் எழுதமுடியாத வரலாற்றை எழுதியவரை, யாரும் தொடாத உச்சத்தை அடைந்தும் கொஞ்சமும் கர்வம்கொள்ளாத மாமனிதரை.. எளியவருக்காக என்றும் சிந்தித்த நவீன தமிழகத்தின் சிற்பியை, இந்தியாவை தமிழகத்தை போல் அடையாளம் காட்ட இரண்டுபத்தாண்டுகள் ஆகும் அந்தளவு கட்டமைப்பை உருவாக்கியவரை .. கல்வியை கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தவரை பேசுகிறீர்.. சில்லரைக்காக வேசம் கட்டி நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளும்.. சாந்துபூசி நாயகனானால் நல்லவன் ஆகமுடியாது .. தலைவனாக வேண்டுமெனில் முதலில் தன்னடக்கம் வேண்டும் .. அரசியல் அறிவு வேண்டும் மக்களின் மனம் அறியவேண்டும் .. கேளிக்கைவரியில் கூட ஏய்க்கும் இவர்.. சரியான வருமானத்தை கூட சொல்லமறுக்கும் நடிகர்.. யோக்கியன் வேடம் தரித்து வருகிறார்.. இளம் வயதில் அரசியலுக்கு வந்ததை போல ..
உளறுகிறார்.. வயதாகி
நடித்தபடங்கள் விலைபோகாமல் பெட்டியில் கிடக்கும் நிலைவந்தபிறகு மக்கள் மீது பாசம் வந்தவனை போல நடுக்கவந்தவருக்கு 14 வயதில் திருவாரூர் வீதியில் தமிழ்கொடியோடு போராட்ட களத்திறேகு வந்தவரை பேச கூட தகுதி கிடையாது ..
..
இந்த சக்கர நாற்காலி தான் சனாதனத்தை அண்டவிடாமல் காத்தது பார்பனீயத்தை குலைநடுங்க வைத்தது .. மறுக்கபட்ட நீதியை போராடி பெற்று தந்தது
கட்டைவிரல் காணிக்கை கேட்டால் பட்டை உரியும் என்றது .. குலக்கல்வி கொள்கையை குப்பை போட்டு சமச்சீராய் அறிவு தந்தது.. மிசா கண்டு இந்தியாவே அஞ்சியபோது தமிழகத்தை அஞ்சாமல் நிற்கவைத்தது
ஜனநாயக கெடாமல் காத்தது .. கேலி பேசுவோரும் வஞ்சகரும் வாய்கிழிய புரளிபேசுவோரையும் வழிநெடுக துரோகமிழைத்தோரும், பொய் சொல்லி வீண்பழி சுமத்தி சேற்றை வாரியிறைத்தோரும் வரிசைகட்டி நின்றபோதும் சலைக்காமல் சூரையாடியது
எதிர்களை நிலைகுலைய செய்து இங்கே இனப்பகை கொண்டு எவனும் வரமுடியாதென கல்வெட்டாய் செதுக்கிவைத்தது ..
..
இன்றும் பேரை கேட்டாலே கதறுகிறார்களே புரிகிறதா .. பெரியாரின் பெரும்சீடர் அண்ணாவின் தம்பி கொள்கைமாறா பற்றாளர் .. கலைஞர் ..
ஒரு படம் வெளியிட முடியாமல் போனதற்கே நாட்டைவிட்டு ஓடிப்போவேன் என்ற நடுவொடிந்த நாதாரிகள்.. எதற்கும் அஞ்சா போர்வீரனை பார்த்து கதறுகிறார்..கால் தூசிக்கு கூட சமமாக மாட்டீர் குறைமதியாளரே.. யாரை பேசுறீர் தெரியுமா.. ஒப்பற்ற தலைவனை .. தன்னிகரில்லா தமிழ் தலைவனை தமிழகமே கண்டா வரச் சொல்லுங்க என புகழ்மாலை செலுத்தும் பேரருளாளனை, உள்ளொன்றும் புறமொன்றும் பேசாத உன்னதரை, அரசியல் இலக்கணம் சமைத்த அறிவாசானை, கிண்டல் செய்கிறீர்.. முதுமை சிலருக்குசாபம் சிலருக்கு வரம் ..
#தலைவர்கலைஞர் தமிழகம் செய்த தவம் .. தமிழர்களின் வரம்..
..
திடீரென தோன்றி மறையும் மின்னல் அல்ல.. உலகிற்கே ஒளிதரும் சூரியன் .. #கலைஞர்
..
No comments:
Post a Comment