Saturday, February 13, 2021

ஸ்டாலின் தான் வராரு

அன்பின் மழையில் ..
ஒரு தலைவன் கொண்டாடபடுகிறான் .. இத்தனை காலம் காத்திருந்த காதலை மக்கள் வெளிபடுத்துகிறார்கள் .. சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள், வயதில் முதிர்ந்தோர் என பாகுபாடின்றி வாரியணைத்து நிற்கிறார்கள்.. தமிழகம் தன் ஏக்கபெருமூச்சை அன்பில் நனைத்து தருகிறது ..இத்தனைக்கும் ஆள்வோராய் இல்லை ..நீண்டநெடிய அரசியல் பயணத்தில் நிறைய தோல்விகளும் படிப்பினைகளும் நல்ல வெற்றியும் மாறிமாறி தந்த மக்களை எப்போதும் நன்றியோடு உணர்ந்தே சேவகம் செய்தவர்.. மக்களை மட்டுமே நம்புகிற அறநெறியாளர் .. சிறிய ஆசைகாட்டி பெரும் பதவியை சிலரை பிரித்து விலைக்கோ பதவிவோ தந்து பெற்றிருக்கலாம் .. வெற்றி தோல்வி எதுவாகினும் அது மக்கள் தந்ததாக இருக்கவேண்டுமென்ற உயர்நோக்கம் 
அரசியலில் இப்படியொரு தலைவன் தமிழகத்தில் காலம் தந்திருக்கிறது .. அரசியலில் இலக்கணம் சமைத்த கலைஞரின் நேரடி பயிற்சியும் இனமானத்திடம் கற்ற அரசியலும் மாபெரும் தலைவராய் இன்று தமிழகமே கொண்டாடுகிற உயரத்தில் தளபதி..
..
சின்ன குழந்தை கையில் முகத்தை அள்ளி முத்தமிடுகிறது .. வயது முதிர்ந்த பழம் வாழ்த்துகிறது .. மக்கள் முகத்தில் பெரும் மகிழ்ச்சி .. தங்கள் அண்ணன் வருகிறான் தம்பி வருகிறான் மகன் வருகிறான் என தங்கள் குடும்பத்தில் ஒருவரை காண்பதை போல காத்திருந்து மகிழ்கிறார்கள் .. வருபவர் தங்களின் குறைகளை தீர்ப்பார் இவரை தவிர யாராலும் நம்மை காக்க இயலாது .. கொஞ்சம் கொஞ்சம் செல்லரிக்க தொடங்கிய தமிழர் வாழ்வை மீட்டெடுக்க கண்களில் ஏக்கத்தோடு மக்கள் பெருவெளியில் காத்துநிற்கிறார்கள் .. தங்கள் குலதெய்வத்திடம் நல்லதை செய் என வேண்டி நிற்கிறார்கள்.. எம் மண்ணை காக்கும் எங்கள் எல்லைசாமி இவர்தான் என பெரும் நம்பிக்கையோடு நிற்கிறார்கள் ..  
..
கவிஞர்கள் புகழ்பாடும் சபையல்ல, ஆன்றோர்கள் அறம்பாடும் சபையல்ல.. சாமானியர்கள் தங்கள் காவலனிடம் தங்கள் இயலாமையை தங்கள் நெருக்கடியை தங்கள் எதிர்கால தேவைகளை .. தாங்கள் இந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து சுரண்டபடுவதை .. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடபடுவதை கண்ணீரோடு எடுத்தியம்புகிறார்கள் ..ஆம் இது மக்கள் சபை கூட்டம் நேரடியாக மன்னனிடம் குறை சொல்லி அதற்கான நிவாரணத்தை தங்களால் மட்டுமே தரமுடியும் ..தங்களை அறியணையேற்றுகிறோம் இதுவெல்லாம் வேண்டும் என பெரும்பட்டியலோடு காத்துநின்று கதைக்கும் மக்கள் சபை ..தலைவனுக்கும் மக்களுக்கும் இடைவெளியில்லை தரகரில்லாத அதிகாரவர்க்கம் தலையிடாத நேரடியாய் குறைச்சொல்லும் தேவைகளை பட்டியலிடும் மக்கள் சபை ..
..
நீண்ட பெருமூச்சோடு காத்திருந்து காலம் கனியும் என மக்கள் தலைவனை காண்கிறார்கள் .. அள்ளி அணைப்பதும் கிள்ளி அன்பை தருவதும் கண்ணத்தை தடவி பாசத்தை தருவதும், மக்களின் அன்பில் பாசத்தில் நனைத்துநிற்கிறார் தளபதி .. காலம் செதுக்கிய தலைவர் .. காலம் அருளிய மக்கள் சேவகன் .. நம்பிக்கையின் ஒளி.. தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர செய்ய,  தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் நம்பிக்கை ஒலியாய் காதுகளில் கேட்கிறது ..
#ஸ்டாலின்தான்_வராரு_விடியலைதரப்_போராரு..
..
மக்களோடு தொடர்பில்லாதவன் .. மக்களை சந்திக்காதவன் சிறந்த தலைவனாக முடியாது ..அதேபோல் மக்கள் கொண்டாடதவனை காலம் கவனித்தில் கொள்ளாது .. தளபதி காலம் செய்த தவம் .. காலம் தந்த பரிசு, காலம் தந்த கொடை,  காத்திருந்த விடியல்.. தமிழகம் செய்த பேறு  தளபதி நல்ல தலைவராய் மக்கள் கொண்டாடும் தலைவராய் அன்பின் மழையில் ..
..
தமிழகம் கண்ட நல்ல தலைவர்களில் காலம் கடந்து புகழ் நிலைக்கும் தலைவர்களில் மக்கள் நன்றியோடு எப்போதும் கொண்டாடும் தலைவர்களில் ஒருவராய் 
தளபதி தலைவர் .. பகையோடு திரிந்தவனை கூட பண்போடு நடத்தும் பேரன்பின் பெட்டகமாய், எதிரிக்கும் நன்மை செய்யும் பண்பின் இலக்கணமாய் .. மக்களின் பேரன்பின் ப புதையலாய் திகழ்கிறார் .. எல்லோரும் தலைவனாக முடியாது 
நல்ல தலைவனை காலமே உருவாக்கும்.. தரும் ..
#தளபதி_காலம்தந்தகொடை 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment