வருகின்ற தேர்தல் பார்பானுக்கும் தமிழனுக்கும் நடக்கும் இனப் போராட்டம்.. ஜனநாயகம் ஷோசலிசம் என்பதெல்லாம் வெறும் புரட்டு..02.02.1971ல் தந்தை பெரியார் சொன்னது ..
..
2021 ல் கூட அதே நிலைதான்.. ஆரியம் மீண்டும் துளிரிவிட தொடங்கியிருக்கிறது அதற்கு தண்ணீர் தெளிக்கும் வேலையை பன்னீர் தொடங்கிவைக்க பழனியும் கூட சேர்த்து மெல்ல பரட துணை போகிறார்கள் .. இன பகை என்றறிந்தும் மெல்ல கொல்லும் விசமென்றாலும் குடிக்கட்டும் என விலைபோகிறார்கள் .. தமிழனத்தின் வளத்தை இல்லாதாக்க பண்பாட்டு தாக்குதலை பாரிப்பனீயம் செய்வதறிந்தும் வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் ..
..
பிறப்பொக்கும் எல்லாஉயிரிக்கும் என்ற தமிழனை
பார்பனாக்க முயற்சிக்கும் மைலாப்பூர் மேன்கள் .. தொடர்ந்து தமிழை இழிவுபடுத்த நீசபாஷை என்ற பார்பன சந்திரசேகரன்கள்கள் (ஜகத்குருவாம்) உலகின் மூத்த மொழியை குறைவாக எண்ணி சமஸ்கிருதம் தேசத்தின் மொழி தமிழ் மாநில மொழியென உளறிவைக்கும் கணேசன்கள் .. தொடர்ந்து பொய்யை மூட்டைகட்டி சுமந்து திரியும் வரலாறு தெரியாத எச்சைகள் .. இதற்கு விலைபோகும் ஊடக முதலாளிகள் .. எல்லோரும் ஒருவகையில் உறுதியாக இருக்கிறார்கள் திமுக வரகூடாது வந்தால் ஆரிய இனம் தமிழகத்தில் எழமுடியாதவாறு ஆழபுதைக்கபடும் என்பதை அறிந்திருக்கிறார்கள்..
..
இந்த தேர்தல் ஆரிய திராவிட போர் ..
ஒரு இனத்தை அழித்தொழிக்க கலாச்சாரபடையை நடத்து என்பார்கள் .. அதை மெனகட்டு செய்கிறது அதிலும் தமிழர்களை கொண்டே அவர்களின் பண்பாட்டை சிதைக்க முயல்கிறார்கள் .. தமிழகம் தொடர்ந்து பார்பனீய எதிர்ப்பை பதிவு செய்துக்கொண்டே இருக்கிறது .. அதிகாரத்தை பகிர்ந்தளி என்பது ஆரியத்திற்கு எதிரான செயல்.. அனைவரும் சமம் என்பது அவர்களது கோட்பாட்டிற்கெதிரானது .. ஏற்றதாழ்வு கொண்டு வர்ண பேதம் பேசி மதம் சடங்கு என பயமுறுத்தி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்பதற்கு எதிராக நிற்பது திமுக மட்டுமே என்பதால் அதை எதிர்க்கிறார்கள் .. எதைவேண்டுமானாலும் செய்வோம் கேள்வியே கேட்காதே என்ற அகங்காரம் தான் பார்பனீயத்தின் குரல் .. நேரடியாக மோதாது கிருஷ்ணசாமிகளை கொண்டு பட்டியிலன இடஒதுக்கீடே தேவையில்லையென பேசவைக்கும்..
சமஸ்கிருத மந்திரத்தை தமிழ்பேசும் பிள்ளைகளை கொண்டு கொண்டாட செய்யும் ..
..
உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது தமிழ்.. அதிலிருந்துதான் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது.. ஆரிய மொழிக்கு மூலமான தமிழை விட சமஸ்கிருதத்தை தூக்கிபிடிக்கிறார்கள்.. தமிழை காக்க வேண்டியதும் தமிழனை தன்மானத்தோடு வாழ வழிசெய்வதற்கும் .. இந்த தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டியது நம் கடமை .. குலக்கல்வியை கொண்டுவர துடிக்கிறார்கள் .. சமஸ்கிருதத்தை தூக்கிபிடித்து தமிழை இழிவுபடுத்த நினைக்கிறார்கள்.. செத்தமொழிக்கு சிங்காரிக்கும் செயலை பெருமையோடு செய்கிறார்கள் .. நெடுநாள்பகையிது நம்மவர்களை கொண்டே நம் இன,மொழி,கலாச்சார,பண்பாட்டுப் போரை தொடங்கியிருக்கிறார்கள் ..
..
இனம் மொழிகாக்க.. மானத்தோடு வாழந்த தமிழ் சமூகத்தை மீட்டெடுக்க .. கயமைத்தனத்தை சூழ்ச்சியை சாணக்கியத்தனமென கதையளக்கும் ஆரியத்தை தமிழகத்திலிருந்து விரட்ட.. அதிமுக அடிமைகளை வைத்து நடத்தும் புறவாசல் அரசியலுக்கு முடிவுகட்டி அறநெறி அரசியலை வெல்ல வைப்பது நமது கடமை அதை இந்த உலக தாய்மொழி நாளில் உறுதியேற்போம்
..
No comments:
Post a Comment