அரசு அதிகாரி அதிலும் காவல்துறை ஆணையர் அவர் தன் மேலதிகாரியால் பாலியல் தொல்லை என உயர் அதிகாரிகளிடம் புகார் செய்கிறார் ..இந்த லட்சணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகமாம் அதையும் இளம் பெண்ணை கொண்டு விளம்பரம் ₹68 கோடியில் வெற்றிநடை போடுகிறதாம் .. இந்த அடிமை அதிமுக அரசு பொள்ளாச்சி அழுகுரல் இன்னும் கேட்கிறதே.. இதுவரை அதிமுககார்கள் கைது செய்யபட்டிருக்கிறார்கள் முக்கிய புள்ளியின் மகனுக்கு தொடர்பிருப்பதாக சொல்லபட்டும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவராமல் காத்தது யார் ..குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டாமா குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு தருவதற்கு பெயர் பாதுகாப்பான தமிழகமா..
..
திமுக ஊழலுக்காக கலைக்கபட்டதாம் நான்குவருட தண்டனை பெற்ற திருடி சசிகலா கூறுகிறார்.. திமுக மிசாவின் போது அடக்குமுறைக்கு அஞ்சாமல் நின்றதும் இந்திராவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கியதும் காரணமே தவிர ஊழல் காரணமல்ல .. இதுவரை திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும் கூறப்பட்ட குற்றசாட்டுகள் ஊழல் வழக்குகளில் ஏதாவது ஒன்றில் கூட ஒருவர் கூட தண்டிக்கபட்டதில்லை ஆனால் அதிமுகவின் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக நீதிமன்றம் சென்றவர் .. நீதிமன்றம் அவரின் அதிகாரபேழையை பறித்து,பிணையை ரத்து செய்து
தண்டித்து சிறைக்கு அனுப்பியது கூடவே கொள்ளை கூட்டாளிகளையும் .. இவர்கள் திமுகவை குற்றம் சுமத்தி தங்களை நல்லவர்களாக காட்டபார்க்கிறார்கள் ..உலகிலேயே குற்றவாளிக்கு அதிலும் தண்டனைபெற்று இருமுறை முதல்வர் பதவியை இழந்தவருக்கு .. நீதிமன்றத்தில் டான்சி வழக்கில் சொத்தை திருப்பி தருகிறேன் மன்னியுங்கள் என மன்றாடியவருக்கு நினைவுமண்டபம் தமிழகத்தின் சாபகேடு ..
..
சிறையிலிருந்து வந்தவரை சந்திக்க சில பிரபலங்கள் வாய்பிழந்து நிற்போர் வருகிறார்கள் .. ஆளுமையென்று வக்காலத்து வாங்குகிறார்கள் .. சந்திப்பது அவரவர் விருப்பம் ஆனால் கொள்ளையடிப்பதை ஆளுமையென்றோ கன்னக்கோல் வைப்பதை திறமையென்றோ சொல்லது தான் சகிக்கல.. சாதிபாசம் இனபாசம் மொழி என வரிந்துக்கட்டும் சிலர் .. ஒட்டுமொத்த சாதியையும் இனத்தையும் அசிங்கபடுத்துகிறார்கள் .. குற்றபரம்பரையென்ற முத்திரையை மாற்றி பொதுவெளியில் மானத்தோடு வாழவகை செய்த திராவிட இயக்கங்கள் .. கல்வி மட்டுமே ஒருவரை உயர்த்தும் இனத்தை காக்குமென படிக்கவைத்த திராவிடம்.. ஒரு சில கயவர்களுக்காக தமிழினத்தையே அசிங்கபடுத்தாதீர்கள்.. ஒப்பற்ற தலைவர்களை உருவாக்கிய இனம் இன்று சாதிபாசத்தில் தடுமாறுகிறது ..திரையில் சாதித்தவர்கள் பொதுமக்கள் முன் முகம் கலைய தொடங்கியிருக்கிறார்கள் சாயம் வெளுக்கும் ..
..
ஜெயலலிதா பிறந்தநாளில் நம்பர் 2 வை சிலர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள் .. பிச்சைபாத்திரமேந்தி ஊழலுக்கெதிராக போராடுவதாக தங்களை சொல்லிக்கொள்வோரும் உண்டு .. நாணயமானவர்கள் சில்லரைக்காக வாய்பிளந்து நிற்கிறார்கள் தமிழகம் இவ்வளவு இழிவானவர்களையும் சுமந்துநிற்கிறது .. வெட்கமே இல்லாமல் வீரதமிழச்சியென கூப்பாடுபோடுவதும்,
தமிழீழம் பெற தமிழச்சி தலைமையில் அணிவகுப்போம் போர் போர் வெற்றிவேல் என புறப்பட தயாராகும் மூளைவளர்ச்சி குறைவான தம்பிகளும் ஜெயலலிதாவை திருடாதே பாப்பா திருடாதே என பாடலோடு புகழ்மாலை செலுத்தும் அதிமுக அறிவிலிகளும் .. நல்லநாள்..
..
No comments:
Post a Comment