கனிமொழி கருணாநிதி
மிக சிறந்த களப்பணியாளராக,களமறிந்து படையோட்டம் நடத்தும் போர்வீரராக,தலைமைக்கு வலுசேர்க்கும் முதன்மை தொண்டராக மிகசரியான நேரத்தில் சரியாக செயல்படும் மகளிரணி தலைவி ..
உண்மையில் பெண்கள் மத்தியில் திமுகவின் தேவையை கொண்டு சேர்த்ததில் வெற்றிபெற்றிருக்கிறார் .. தலைவர் தளபதிக்கு வலுசேர்க்க பெரிய முயற்சியை மிக சாதாரணமாக செய்துக்கொண்டிருக்கிறார் ..
..
பெண்கள் வரும் தேர்தலில் பெரும்பங்கு வகிப்பார்கள்
மிகப்பெரியளவில் மாற்றத்தை பெண்களின் வாக்குகளே தீர்மானிக்கும் .. இந்த அரசின் கையாலாகாதத்தனத்தால் பெரும் பாதிப்படைந்தவர்கள் பெண்கள் .. தன் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு மறுக்கபட்டு யாரோ வடஇந்தியர் சொகுசாக வந்தமற வழிவகுத்த பன்னீர் .. தன் குழந்தையின் கவ்விக்கு வேட்டுவைத்த பழனியும் ..கொஞ்சம் கொஞ்சமாக கலாச்சாரப்படையெடுப்பை கண்டுக்கொள்ளாமல் விட்டு நாட்டை நாசமாக்கிய நயவஞ்சகர்கள் மேல் சினங்கொண்டிருக்கிறார்கள் .. முக்கிய தேவைக்கான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது .. தமிழகத்தை சுரண்டும் பனியா கூட்டத்திற்கு வெண்சாமரம் வீசும்
இந்த கேடுகெட்டவர்கள்மீது கடும் கோபத்தோடு இருக்கிறார்கள் .. பொய்யும் பித்தலாட்டமும் சொன்னதை செய்யாமல் ஏமாற்றுவதும் தங்கள் உரிமைகளை பலிகொடுப்பதும் தங்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய அடிமைக்கூட்டத்தை விரட்டியடிக்க நேரம் பார்த்து காத்திருப்பது அவர்களிஅ கண்களில் தெரிகிறது ..
..
கனிமொழியை தங்கள் வீட்டு இளையமகள், சகோதரி, அக்கா,அத்தை, பிரியமான தோழி என பார்க்கிறார்கள் ..பெருவெள்ளத்திலும் புன்னகையோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள் ..எளிதில் கவர்ந்துவிடும் இயற்கையைப்போல நேசிக்கிறார்கள் தங்களில் ஒருத்தியாய் எண்ணி மகிழ்கிறார்கள் ..அண்ணனுக்கு பரிவட்டம் கட்ட தங்கையின் படையோட்டம் கண்டு மகிழ்கிறார்கள் தமிழினத்தின் மீது படிந்த பாசிசத்தை கறையை கழுவ .. மானத்தோடு வாழ்ந்த சமூகத்தை மீட்டெடுக்க, சுயநலத்திற்காக மண்டியிட்ட கொடியவர்களால் இழந்த மானத்தை வென்றெடுக்க சரியான நேரத்தில் கிடைத்த நல்வாய்ப்பாய் திமுகவை பார்க்கிறார்கள் .. நல்லதொரு விடியலுக்காக தமிழகம் காத்திருப்பது அவர்கள் கண்களில் தெரிகிறது ..
..
நாட்டை மட்டுமல்ல வீட்டை நாசமாக்கும் கயவர்களை
ஊரை கொள்ளையடித்து உலையில் போடுவோரை தியாகசெம்மல்களாக பேசும் பெரும் கொள்ளைக்கூட்டத்தை ஒன்றிணைந்து கொள்ளையடிக்க வழியுண்டா என காத்துநிற்கும் கள்ளபேர்வழிகளை தமிழக அரசியலிலிருந்தே அப்புறபடுத்த மக்கள் எழுச்சியோடு தயாராகயிருக்கிறார்கள் ..
அறம் வெல்லும் ..
..
No comments:
Post a Comment