பச்சைகிளிகள் இரண்டு
பறந்துவந்து ..
குசலம் விசாரித்தது
மைனா குருவி
வீட்டு கொள்ளைப்புறம்
பாடி வரவேற்றது ..
சின்னஞ்சிறு குருவிகள்
பலகுரலில் கூவி கும்மாளமிட்டது ..
மண் வாசனை
மூக்கை துளைத்து
மூளையில் ஏதோ செய்தது
அணிகள் மின்சார மீட்டர் பெட்டியில் தனக்கான
கூட்டை கட்ட
குப்பையை சேகரித்திருந்தது
நான் நட்ட மரங்கள்
நீண்டநாள் காத்திருந்த
ஏக்கத்தோடு
காற்றில் தலையசைத்தது ..
இரையிட்ட ஒரேநாளில்
கோழிகுஞ்சுகள்
காலை சுற்றிநின்று
ஏதோ சொல்லவருகிறது ..
மாடி தோட்டம்
கேட்பாற்று கிடந்தது..
..
குடமுருட்டி ஆறு
பழைய கதை பேசியது ..
சன்னமாய் காதோடு
காதல் மொழியில் நினைவுகளை கிளறியது
இளங்கார்குடி செல்லும் வழியில் மயில்தோகை விரித்து ஆட்டம் போட்டது .. கொள்ளபுறத்தமர்ந்து
வயல்காற்றை வாங்கியபோது
தவக்கள காலில் வந்தமர்ந்து
கூத்தாட்டம் போட்டது ..
இத்தனை இன்பங்கள்
எம் மண்ணில் ..
..
கலைஞர் நாட்டில்
கால் வைத்தது முதல்
நெஞ்சில் பேரின்பயோசை
காதலும் கனிவும்
உரிமையும் கோபமும்
கலந்த உறவின் பாசமழை
வேறன்ன வேண்டும்
நீண்ட வரிசையில்
பேரன்பு அழைப்புகள்
அலைபேசியில்
காத்திருந்தது
ஒவ்வொன்றாய்
அழைத்து அகமகிழ்ந்தது
யாம் பெற்ற பேறு ..
..
யாவும் நலம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment