Friday, July 29, 2022

பானு இக்பால் மறைந்தார் ..
நெஞ்சம் பதறுகிறது ..
முற்போக்கு சிந்தனையாளர் ,சிறந்த பேச்சாளர் .. யதார்த்தமாக எழுதும் ஆற்றலுடையவர் பழகுவதற்கு எளிமையாகவும் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவர் .. கல்வி ஒன்றே ஆக சிறந்த பாதை என அடிக்கடி சொல்வார் .. திராவிட இயக்கத்தின்பால் மாறாத பற்றக்கொண்டவர் ..
..
அவரோடான முதல் சந்திப்பே வியப்பை தந்தது ..நண்பர் சித்தார்த்தன் நூலக நிகழ்வில் கலந்துக்கொள்ள வைக்கவேண்டுமென ஆசான் செல்லபெருமாள் அவர்களிடமும் என்னிடமும் சொன்னார் .. உடன் தொடர்புக்கொண்டு உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக நிகழ்விற்காக பேசியதிலிருந்து ஏற்பட்ட நட்பு சில தினங்களுக்கு முன் முடியவில்லை தோழர் என்கிற வரை உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாய் இருந்தது ..
ஒரு முறை முழுக்க பெண்களை கொண்டே மணியம்மையார் நூற்றாண்டு தொடர் நிகழ்வு ஒன்று பங்கேற்ற செய்தோம் .. சொல்ல நினைப்பதை துணிவோடு  சொல்வார் 
குவைத் திமுக வின் நிகழ்வுகளில் அவரில்லாமல் இல்லை என்கிற நிலை உருவாக்கினார் .. இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் அரசியல் பேசுவது ஆபூர்வங்களில் ஆபூர்வமான நிகழ்வு ..
மிக தெளிவாக தன் கருத்தை சொல்வதிலும் 
"இஸ்லாமிய ரோஜா"  என்ற வட்டத்தில் சுருங்கிவிடாமல் இருந்தவர்
கடவுள் மறுப்பு மேடையாக இருந்தபோதும் சொல்ல நினைப்பதை சொல்ல தயங்குவதில்லை .. பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாட்சியாய் நின்றவர் ..
..
கேன்சர் தன்னை பாதித்தபோது அதை துணிவோடு எதிர்க்கொண்டு  அது குறித்த விழிப்புணர்வு தரும் வகையில் "மனப்பொழிவின் மாயவாசனை"புத்தகம் எழுதினார் .. கடும் அவதிக்குள்ளான போதும் எதிர்கொண்ட பெண்மணி..
இயற்கையின் மாயவலைகள் ..
..
தன்னை சமூகசீர்த்திருத்தவாதியாக நிலைநிறுத்தி தன் செயல்களை வடிவமைத்தவர் பானு ..
இன்று நம்மிடையே இல்லை அவரின் லட்சியங்கள், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றகாண வேண்டும் தற்சார்போடு நிற்க வேண்டும்.. யாருக்காவும் எதற்காகவும் தங்கள் இலக்கிலிருந்து பின்மாற கூடாது .. சாதிக்க வேண்டுமென்ற வெறி .. கல்வி மட்டுமே துணை நிற்கும் அதற்கான தடைகள் மதம் சமுதாயம் சமூகம் ஆணாதிக்கம் பேதம் எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறு ..
எல்லாம் வசபடும் என வாழ்ந்துகாட்டிய பெண்மணி ..
..
நல்ல தோழியை இழந்திருக்கிறேன்.. 
சக செயல்பாட்டாளரை, 
ஒரே சிந்தனை கொண்டவரை 
இழந்திருக்கிறேன் .. 
அவரது இறுதி பயணத்தில் கலந்துக்கொண்டு 
அவரை மண் மூடும் போது கரைந்துபோனேன் .. நண்பர் 
அப்பாஸ் தான் என்னை கரம்பிடித்து அழைத்துச் சென்று இறுதியாக பார்க்க வைத்தார் ..
அடக்கம் செய்ய குளிப்பாட்டி கபனிட்டபிறகு பிற ஆண்களை அனுமதிப்பதில்லை நானறிவேன் .. ஆனால் என்னை  பார்க்க அனுமதித்தார்கள் .. சடங்கு சம்பிரதாயங்களை களைந்த பெண்மணியின் இறுதி ஊர்வலத்தில் எண்ணற்றவர்கள் கலந்துக்கொண்டனர் .. "பட்டாளத்தார் மகள்" புத்திசாலி மட்டுமல்ல தைரியசாலி என பேசுவதை கேட்க முடிந்தது ..
அவரின் புகழ் நிலைத்து நிற்கும்
..
போய்வாரும் தோழர் கண்ணீரோடு விடைதருகிறோம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment