அதிமுக..
அநாகரீகம் அசிங்கம் அபத்தம்
அறிவிலிகூட்டம் ..
நாகரீக அரசியல் அவர்களுக்கு தெரியாது வராது .. சட்டமன்றத்திலேயே சேலையை கிழித்துக்கொண்டு நாடகமாடிய நடிகையின் வார்ப்புகள் இன்று தெருவில் அடித்துக்கொள்கின்றன
..
யார் கரம் உயர்ந்தது என்பதற்காக கோடிகளில் விலைப்பேசல் .. ஏற்றிவிட்டவரை கொடுவாளைக் கொண்டு வெட்டிவீழ்த்தும் நயவஞ்சகமும், கூட இருந்தே குழிபறிக்கும் சூதும், அதிமுகவின் அடிப்படை சித்தாந்தம்.. அவர்களுக்கென்று கொள்கை கிடையாது.. திமுக எதிர்ப்பு அதைதவிர வேறெதும் இல்லாத அரசியல் நகர்வு.. மக்கள் நலன் எல்லாம் அவர்கள் அறியாதது .. ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை .. இதயதெய்வமாவது மண்ணாகட்டியாவது பணம் கொடுத்தால் பன்றியோடு சேர்ந்து உழலுவோம் ..
..
மகோரா எனும் துரோகத்தின் நிழல் இன்றும் தொடர்கிறது .. ஜெயலலிதா எனும் பாசிசத்தில் காலடியில் கிடந்த கயமைகள் இன்று தங்களுக்குள் கழுத்தறுத்துக் கொள்கிறார்கள் ..
நிறைய துரோகிகள் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது ..
சினிமா மோகம், நடிப்பு ,பாசிசத்தின் கரிசனம், ஊடகங்களின் மெல்லிய புன்னகை, திராவிட எதிர்பார்ப்பாளர்களின் நம்பிக்கை இவைதான் இதுவரை காத்தது .. இத்தனை ஆண்டு நிலைத்து நின்றதே பொய்யை பூதாகாரமாக்கி குளிர்காய்ந்ததும் அதை பாசிச பார்ப்பன சிந்தனையாளர்கள் தூக்கிபிடித்ததும் தான் காரணம் ..
ஜெயலலிதா வழக்கு உயிரோடு இருக்கும் போதே தீர்ப்பு கிடைத்திருக்குமேயானால் நிலைமையே வேறு .. இப்போதும் மக்கள் பாசிசத்தின் வேர் ஊடுறுவ கூடாதென்பதற்காக நேரடியாக சனியனை சுமக்க வேண்டாமென்பதற்காக மென்மையான போக்கை கொண்ட
அதிமுகவை கடிவாளமிடலாம் என்ற நம்பிக்கையோடு அதிமுக வேண்டுமென்கிறார்கள் ..
..
ஒபிஎஸ் இபிஎஸ் இருவருமே நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் யார் அதிகம் நம்பிக்கை துரோகம் செய்கிறார் என்பதில் அவர்களின் வெற்றி தெரிகிறது ..சூழ்ச்சி, பணம், ஊழல், இவையோடு அதிமுகவை விழுங்க பார்க்கும் திமிங்கலத்தின் பாசம் இன்றைய நிலைக்கு காரணம் ..
எம்ஜிஆரை மட்டுமே தெரிந்த சினிமா ரசிகனுக்கு, கருணாநிதி/திமுக எதிர்ப்பை சொல்லி சொல்லி வளர்ந்த பாமரனுக்கு, சாதி அரசியலை முன்னெடுத்தவனுக்கு, காலை கண்டால் விழுந்து கும்பிடும் அடிமைகளுக்கு இவையெல்லாம் பெரிய விடயமில்லை .. நாலுகாசு பார்க்க முடியுமா கொள்ளையடித்த கோடிகளில் பங்கு கிடைத்தால் போதும் .. ஊழல் கொலை வழக்குகளிலிருந்து தப்ப வேறு மார்க்கமில்லை ஆதனால் கூட நிற்கிறார் ..
..
இந்த ஆட்டத்தின் கயிறு கூத்துகாரனின் கையில் .. தலையாட்ட மட்டுமே இவர்களுக்கு அதிகாரம் .. கூத்தாடி கண்ட கட்சியின் கூத்துகள் காலங்கடந்த ரசனைகள் .. மக்கள் மௌனமாய் ரசிக்கிறார்கள் .. அவர்களே யாரை ஏற்கவேண்டுமென தீர்ப்பு சொல்லும் எஜமானர்கள் .. அதிமுக அழிவை எதிர் சிந்தனையாளர்கள் கூட விரும்பவில்லை .. கோமாளிகளின் நாடகம் முடிவுக்கு வரும் ..
..
கூத்து ரசிக்கும்படி இல்லை..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment