Tuesday, July 26, 2022

திருக்குவளை..
நீண்டநாட்களாக போக வேண்டுமென நினைத்து நேரம் அமையாமல் தள்ளிப்போனது .. நீண்ட இடைவெளிக்கு பிறகு 26.07.22 அன்று வாய்ப்பு கிட்டியது.. தோழர் மன்னை ரபீக் Mannai Rafik 
அவர்களை சந்திக்க மன்னார்குடி சென்றபோது திருக்குவளை செல்ல வேண்டுமென தீர்மானித்து காலை கிளம்ப தயாரான போது பெரும்மழை ..
விடுவதாயில்லை நானும் போயே தீரவேண்டுமென .. கடைசியில் மழை விட டூவிலரில் தொடங்கியது பயணம் .. 
மாங்குடி வழியே சென்ற போது இருபுறமும் இயற்கை எழில் மலைநாட்டில் பயணிப்பதைப்போல அத்தனை எழில்.. இத்தனை காலம் அருகிலிருந்தும் அகரமாங்குடி- திருக்கருக்காவூர் சாலையில் செல்லாமல் போனது வியப்பு ..
..
கலைஞர் இல்லம் நிறைய மாற்றங்களோடு முன்பு வீட்டின் முன் இருந்த தென்னை இல்லை 
செல்லும் சாலைகள் தரத்தோடு இருக்கிறது .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் .. தமிழகத்தின் சாலைகள் தரத்துடனும் எங்கும் செல்ல எளிமையாக சின்ன சின்ன பாதைகள் கொண்ட சாலைகள் கூட சிறந்ததாய் விளங்குகிறது 
கச்சனம் - மன்னார்குடி குறுக்குவழி ஆற்றங்கரை சாலை கூட முன்பெல்லாம் செல்லவே முடியாதவாறு இருக்கும் இப்போது தார் சாலை .. சிலதினம் முன்பு கல்லணை சென்றபோது கூட  இளகுவாக பயணிக்கமுடிந்தது ..
..
கலைஞர் இல்லத்தில் அஞ்சுகதம்மையார் சிலை.. அதன் வரலாறு சுவராஸ்யமானது .. தஞ்சை அப்பர் ஸ்டுடியோவிலும் பின் சினிமா துறையிலும் பணிபுரிந்த ஒரத்தநாடு பாப்பா ஸ்டுடியோ  உரிமையாளர் 
V.  கோவிந்தராஜ் அவர்கள் ஒரத்தநாடு பாப்பா தியாகராஜன் Thiyagarajan Pappa 
தந்தையார்
ஒருமுறை திருக்குவளை சென்றபோது அஞ்சுகம் அம்மையாரை காலை நீட்டி வெற்றிலையை இடிப்பதை போட்டோ பிடித்தார் .. அது சிலகாலத்திற்கு பிறகு கலைஞருக்கு தெரியவர ஒரத்தநாடு பாப்பா கோவிந்தராஜை அழைத்து அந்த போட்டோ கொண்டுவாயா பார்ப்போம் என்க அதன்படி கலைஞரிடம் தர அது பிடித்துபோக அதுவே அம்மையாரின் நினைவுசின்னமானது .. இன்று கலைஞரின் கோபாலபுரத்திலும் திருக்குவளையிலும் அந்த நிழற்படம் சிற்பமாய் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ..
..
கலைஞர் வாழ்ந்த இல்லம் புதுபொழிவோடு இருப்பதும் அருகில் கார்களை நிறுத்த வசதியும்,எதிரே பூங்கா என சிறப்புபெறுகிறது .. தமிழகத்தில் நிறைய நினைவு இல்லங்கள் அரசே ஏற்று நடத்தினாலும் இது அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது .. நீண்டதூரம் பயணித்து வருகிறவர்கள் அது பூட்டிகிடந்தால் வருந்த நேரிடும் அதற்கு காலநேர அட்டவணையை வெளியே எழுதி பூட்டியிருந்தால் யாரை தொடர்பு கொள்ளவேண்டுமென அவர் பெயர் தொலைபேசி எண்ணை எழுதி வைத்தால் பயன்படும் 
அறங்காவலர்கள் குழுவில் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi 
இதில் கவனம் செலுத்தவேண்டும்..
..
மாபெரும் தலைவர் இந்திய ஒன்றியத்தையே தன்னை சுற்றி பேச வைத்த, ஆரியத்தை ஆட்டுவைத்த, அரசியல் இலக்கணமாய் , உலகின் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாய்  இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாய் என்பதாண்டுகால பொதுவாழ்வு நாயகனாய், பள்ளத்தில் கிடந்தோரை கைதூக்கி உயரத்தை வசபடுத்தி தந்த சமூகநீதி காவலனாய், "வல்லோர்கள்" வகுத்த நீதியை உடைத்து சமநீதி சமைத்த பேரறிவாசன் சீடனாய் 
திராவிடமாடலின் முன் முகமாய், முத்தமிழறிஞராய், மூடம் நீக்கி பகுத்தறிவு துணைக்கொண்டு பாடம் நடத்திய ஆசானாய்  திகழ்ந்த கலைஞர் பிறந்த இல்லம் நீண்டநாள்களுக்கு பிறகு கண்டதில் மகிழ்ச்சி!..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment