Thursday, July 14, 2022

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மாபெரும் மக்கள் சபையில் "ஊழல்" என்று பேசகூடாதாம் .. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பறிக்கபடுகிற தேசத்தின் ஆட்சியாளர்கள் வீழ்ந்ததாகதான் வரலாறு சொல்கிறது ..
..
கருத்தை எதிர்க்கொள்ள துணிவின்றி எதிர்க்கட்சிகளுக்கு பயந்து ஒரு ஆட்சியாளர் இருப்பதை இப்போதுதான் உலகம் காண்கிறது .. எட்டுவருடமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத "56 இன்ச் " என தன்னை பெருமைபேசியவர் இன்று குரலுக்கு பயபடுகிறார் ..
தெனாலியில் கமல் சொல்வதை போல கண்டால் பயம் நின்றால் பயம் ... 
..
சர்வாதிகாரம் சர்வாதிகாரி இரட்டைவேடம், அவமானம், வெட்ககேடு, ஒட்டுகேட்பு, நாடகம், திறமையற்றவர், முட்டாள்தனம் .. இன்னும் நீண்டுகொண்டு போகிறது .. இவையெல்லாம் மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.. பொருளாதார வீழ்ச்சி கீழ்நோக்கி செல்வதும் ₹40 க்கு பெட்ரோல் விலையை கொண்டுவருவோம் என்றவர்கள் ஆனால் ₹80 தாண்டுகிறது ..ஊழலை ஒழிப்போம்  என்றவர்களை பணமதிப்பிழப்பிலும்,PMCAREலும் கண்டோம் ₹300 கோடி கண்டெய்னரில் வந்ததும் ஊழல் வழக்கில் தண்டிக்கபட்ட A1 ஜெயலலிதாவை அமைச்சர்களே சந்தித்து பேரம் பேசியதும் தீர்ப்பை தள்ளிபோட்டதும் இவர்கள் ஊழலுக்கெதிரானவர்கள் என்பதை நாடும் நாட்டு மக்களும் புரிந்துக்கொண்டோம் ..
..
நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் நின்று பதில் கூற வக்கற்றவர்களிடம்  வேறெதை எதிர்பார்க்க முடியும்.. நாடாளுமன்ற செயலகம் பட்டியிலிட்டிருக்க வார்த்தைகள் ஆபாசமோ ,அருவருப்போ, வன்மமோ, கொச்சைபடுத்துதலோ இல்லை ஆட்சியாளர்களின் இயலாமையை உணர்த்தும் வார்த்தைகள் .. நேர்மை பேசி திரியும் மதமேறிய மூடர்கள்  .. புராணம் புரட்டை கதைபேசி திரியும் அறிவிலிகள் நாட்டை நாசமாக்குகிற கும்பல் கருத்தை எதிரிக்கொள்ள தயங்குவதில் வியப்பில்லை ..
..
நீதிமன்றங்கள் "மநு நீதி" யாகி போன நாட்டில் குரல்வளையை இரும்புகரத்தால் திருகிட நினைக்கும் பாசிச சிந்தனையாளர்கள் , மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை விலைபேசும் கயமை, குறுக்குவழியில் அதிகாரத்தை அடைதல், ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளையும் காலில் போட்டு மிதிப்போம் .. அரசின் சாரநாத் சின்னம்  சிங்கத்தின் கோரபற்களோடு நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார்கள் .. எதிர்க்கட்சிகளை இல்லாதாக்குவோம், அப்படி எதிர்த்தால் ஆளுநரை கொண்டு அரசில் நலத்திட்டங்களை முடக்குவோம்.. அடங்கியொடுங்கி அடிமையாக நின்றால் மெல்ல தின்று பசியாறுவோம் .. என ஆட்சியாளர்கள் எண்ணுவது அவர்களின் இயலாமை..பயம் 
..
இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல  தமிழர்கள் .. எப்படி பேச வேண்டுமென தெரியும்.. நாடு கேட்கிறார் என்றபோது இந்தியா நாடே அல்ல பலமொழி பேசும் பல்வேறு இனமக்கள் வாழும் துணைக் கண்டமென பதிலடி தந்தவர் பேரறிஞர் அண்ணா .. 
இந்திய தேசிய மொழியாக இருக்க ஹிந்திக்கு தகுதியில்லை அதற்கு தகுதியான மொழி தமிழ்தான் என நாடாளுமன்றத்தையே அலறவிட்டவர் காயிதெமில்லத் ..
இவர்கள் வரிசையில் இரா.செழியன், நாஞ்சிலார், மாறன், வைகோ.. என நீண்ட வரிசை படைத்தளபதிகள் வாய்வீச்சில் செயலிழந்து நின்ற ஆட்சியாளர்களை அறிவோம் .. இப்போதும் பாலு ராசா மாறன் கனிமொழி தமிழச்சி.. என பெரும்படை உண்டு .. எப்படி பேசுவதென தெரியும் .. அவசரநிலை காலத்தில் எப்படி எழுதுவது பேசுவதென பாடம் நடத்தியிருக்கிறார் எங்கள் தலைவர் கலைஞர் .. வழக்கு, நீக்கம், சிறை, இவைக்கஞ்சா நெஞ்சுரம் கொண்டவர்கள் திராவிடத்தலைவர்கள் .. 
தொடைநடுங்கிகளே களத்தில் சந்திப்போம் .. 
நாடாளுமன்றத்தில் சொற்போரால் ஆட்சியாளர்களின் அவலத்தை தோலுரிப்போம்.. இந்தியா கண்ட மோசமான பிரதமரையும் ஆட்சியையும் நாடறிய செய்வோம் ..
வாருங்கள் 
சந்திப்போம் கோழைகளே..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment