கலைஞருக்கு நினைவுச்சின்னம்
..
வழக்கம் போல மயிலாப்பூர் கதறுகிறது .. கடற்கரையில் இடம் தரகூடாது என பகிரங்கமாக பேசிய குருமூர்த்தி வகையறாவிற்கு எரிகிறது .. வீண்விரயமென நடுநிலைநாய்கள் ஊளையிடுகிறது இவர்களெல்லாம் ₹3000 கோடியில் படேலுக்கு சிலைவைத்தபோதும் கிரிமினல் A1 குற்றவாளி (தண்டிக்கபட்டவர்) ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்க ₹140 கோடி செலவு செய்தபோதும் எல்லா பொந்தையும் பொத்திக்கொண்டிருந்தவர்கள்
..
யார் இந்த கருணாநிதி(கலைஞர்)
இந்திய அரசியலின் ஒப்பற்ற தவைவர்.. இந்தியா சனாதனப்பிடியில் சிக்கி சீரழிந்தது கண்டு அதை செப்பனிட முனைந்தவர் .. ஒடுக்கபட்ட மக்களின் உயர்வே சமநீதியின் அச்சாரமென தொடர்ந்து பேசியும் வாய்ப்பு வந்தபோதெல்லாம் அவர்களை உயர்த்தியும் இந்திய துணைக்கண்டத்தில் தொலைநோக்கு சிந்தனையோடு தமிழ்நாட்டை கொண்டு சென்றவர் .. இந்திய ஒன்றியம் இப்போது பேசும் "முன்னேற்ற பாதை"யை 70 களிலேயே செய்துகாட்டியவர் .. உண்மையான பொதுவுடமைவாதி .. இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலன், அவசரநிலையை துணிந்து எதிர்த்து இந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் நின்றவர் .. சமூகநீதி காவலன், பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கி இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாய் திகழ்ந்தவர் .. முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணமில்லை என உத்தரவிட்டு லட்சகணக்கானவர்களை "கரைசேர்த்தவர்"
..
இந்திய அரசியலின் இலக்கணம் .. எதிர்க்கும் போதும் உறவின் போதும் நியாயத்தின் பக்கம் நின்று அரசியல் செய்தவர் .. தொடர்ந்து இனப்பகைவரால் பழி சுமத்தபட்டபோதும் "அறம்வெல்லும்" என நம்பியவர்.. எண்ணற்ற துரோகிகள், எதிரிகள், பகைவர்கள் அனைவருக்கும் அரசியல் வாழ்வளித்த "சூரியன் "..
80ஆண்டு பொதுவாழ்வில் ஏற்றம் இறக்கம் என கண்டாலும் மக்கள் பணியில் சளைக்காமல் தொண்டாற்றியவர் .. இவர் எழுத்து புதிய நடையை தமிழுக்கு தந்தது .. வடமொழிக் கலப்பை தமிழென்று நம்மீது திணித்த பார்ப்பனர்கள் நாள்/வார ஏடுகளில் கூட அவா பாஷையை முன்னெடுத்தபோது, திரையில் சமஸ்கிருதம் தாண்டவமாடிய காலகட்டத்தில் 'அம்பாள் எந்தகாலத்திலடா பேசினாள் " கேள்வி எழுப்பி செந்தமிழால் அழகு செய்தவர் ..
..
எதிரிகள் கூட இவர் எழுத்தை ரசித்தார்கள்.. அரசியலை விமர்சித்தவர்கள் கூட இவர் எழுத்தில் மயங்கி நின்றார்கள்.
"எண்ணல்லவோ எழுத்தல்லவோ, எழுதாத பண்ணல்லவோ, என விளித்திட்ட வார்த்தைகள் அருவி மலர்ச்சோலை அழகு மலர்க்கூட்டமென சங்கத்தமிழ் பாட முடிந்தது .. "நல்லவனுக்கோ நீதி இங்கே வல்லவனுக்கே நீதி" என அரசியல் பேச முடிந்தது ..
எழுத்தில் மயக்கும் வித்தை அறிந்தவர் .. ஒவ்வொரு சொல்லிலும் தன் சார்ந்த சிந்தாந்தத்தின் பொருள் பதிந்திருக்கும் ..
..
மூடம் பேசாதா பேனா அது .. அவரது பேனா தலைகுனிந்த போதெல்லாம்
தமிழன் தலைநிமிர்ந்தான்..
அவன் பேனா காலையில் என்ன செய்தியோடு வரும் என எதிரிகள் பதற்றத்தோடுதான் கண்விழித்தான் ..
இந்திய அரசியலின் போக்கை இந்த பேனா தான் வடிவமைத்து இயக்கியது .. இந்த பேனா தான் லட்சக்கணக்கான குடும்பங்களை பட்டதாரி குடும்பமாக்கியது .. அறம் பேசிய பேனா ..சிலநேரம் அதிர்ந்தும் பேசும் .. பகைவர் குலைநடுங்க வைக்கும், பேசாமடைந்தையாக்கும் எளியவரின் குரலாய் ஒலிக்கும் சமத்தும் பேசும் சமூகநீதியை பறைசாற்றும் .. பொங்கிவரும் ஆற்றின் தண்ணீரைப்போல் வாடிய பயிர்காக்கும் .. தன்மானம் பேசிய பேனா அது தமிழர் வீரம் பேசியது ..தமிழனின் கலையை பண்பாட்டை உலகுக்குணர்த்தியது .. தமிழர்க்கு அரணாய் நின்ற பேனா ..
ஆரியத்தை ஆட்டிவைத்த பேனா
அந்த பேனா தான் நினைவு சின்னமாய் .. வழக்கம் போல் பகைவர் பதறுவர் ஆரிய அடிவருடிகள் புலம்புவர் ஆனாலும்
தமிழர் வாழ்வை வளமாக்கிய இந்த பேனாவை
நினைவாய் அருங்காட்சி படுத்துவோம்
ஏனெனில் அது
#முத்துவேல்கருணாநிதி க்கு நாம் செலுத்தும்
#நன்றிக்கடன்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment