Friday, June 24, 2022

25.6.1975...
#கறுப்புதினம்

இன்றைய இளைய சமூகம் அதிகம் அறிந்திராத நாள்...
அவசரநிலைபிரகடனம். எமர்ஜென்ஸி. மிசா... MISA - Maintenance of internal Security Act...
..
இந்திய சட்ட செயலாக்க பிரிவினருக்கு அதிகாரம் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு தனிநபரையும் கைது செய்யலாம். அவரது செயல்பாடுகளை  முடக்கலாம். அவரது உடமைகளை பறிமுதல் செய்யலாம். இச்சட்டம் அதிகளவில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டது...

இந்தியாவின் இரும்பு பெண்மணி என அறியப்பட்ட இந்திராகாந்தி செய்த மாபெரும்  #வரலாற்றுப்பிழை...

நாடெங்கும் ஜனநாயகவாதிகள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. பத்திரிக்கைகள் சென்சார் (தணிக்கை) செய்து வெளிவந்தது...
தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டதும் இந்த மிசா காலத்தில் தான்...

மகோரா (எம்ஜிஆர்) போன்ற ஜால்ராக்கள் இந்திராவின் நடவடிக்கையை எதிர்க்க அஞ்சி வாய்மூடியாய் இருந்தனர்...
காமராஜரைக் கைது செய்யவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்த கலைஞர், ஆட்சி போனாலும் பரவாயில்லையென காமராஜரை கைது செய்ய மறுத்தார்...

மிசாவில் திமுகவினர் அதிகளவில் சிறைச்சென்றனர். மாறன் தளபதி  உள்ளிட்டோர் ஒருவருடம் கொடும்சிறையில்... ஆனால் அப்போது வெளியே ம.கோ.ரா(எம்ஜிஆர்) டூயட் பாடிக்கொண்டிருந்தார். இவரையெல்லாம் புரட்சிதலைவனாக்கிய தமிழகம் செய்த மாபெரும் தவறு ஜனநாயகத்தின் ஆணிவேரையை அசைக்க தொடங்கியது எனலாம்...

மிசாவில் கூட கலைஞர் தன் எழுத்தை நிறுத்தவில்லை மாறாக உடன்பிறப்புகளுக்கு புரிகிறமாதிரிதான்  எழுதிக்கொண்டிருந்தார்.. 
யாரெல்லாம்  அண்ணா நினைவிடத்திற்கு வரவில்லையென எதிர்மறையாக எழுதினார்.. படிக்கிறவர்களுக்கு கலைஞர் எழுத்தை புரிகிறவர்களுக்கு புரியும்..  கலைஞர் முரசொலி இதழை அச்சிட்டு  மவுண்ட்ரோட்டில் (அண்ணாசாலை) மக்களுக்கு வழங்கிய வரலாறெல்லாம் நடந்தது .. அன்று முன்தினம் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்  நடுரோட்டில்
பத்திரிக்கை விநியோகம் செய்துக்கொண்டிருந்தார் .. மக்களிடம் தன் கருத்து/செய்தி  செல்லவேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டார் .. என் எதிராளி என்றிருந்தும் சோவிற்கு துக்ளக்கை அச்சடித்து தந்தார் .. கூட இருந்த கோமாளிகள் சிறைக்கஞ்சி ஓடியொளிந்த போதும், அஞ்சாது அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்தவர் .. தன் மகனை
M. K. Stalin 
கைது செய்து அழைத்து சென்ற போதும் 
சமரசம் செய்துக்கொள்ளவில்லை .. எதிர்ப்பதில் மூர்க்கமாகவும் அணைப்பதில் அன்போடும் வாழ்ந்த மாபெரும் தலைவன் 
இப்படியொரு தலைவரை இந்திய ஒன்றியம் கண்டதில்லை
நடுரோட்டில் கலைஞரை காரையோட்டிய துரோகி பண்ரூட்டி ராமசந்திரன் நிறுத்திவிட்டு ஓடியதும் அந்த காரை கண்ணப்பன் ஓட்டிவந்ததும் அதனால் காரோட்டி கண்ணப்பன் என அழைக்கபட்டதும் இன்றைய தலைமுறை அறியவேண்டும்
..
இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தை காத்து நின்ற போர்வீரன் .. வடஇந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பான இடமாக  தமிழ்நாடு இருந்ததில் கலைஞரின் நாட்டின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் ஜனநாயகத்தை காக்க வேண்டுமென்ற உறுதியும் தெரியும்..
ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் சிலர் கலைஞரின் நெஞ்சுறுதியை கண்டு படிக்கலாம் ..
..
மிசா இந்திய ஜனநாயகத்தில் கரும்புள்ளியாக இருந்தது...

25.6.1975 - கறுப்புதினம்...
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment