பள்ளி கல்வித்துறை ..
மாணவ மாணவியரின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களின் பாதுகாப்பு ஒழுக்கம் ஆசிரியர்கள் நடத்தை ஒழுங்கு தனியார் பள்ளிகளில் ஏற்படும் விரும்பதகாத செயல்கள் குற்றங்கள் இவைகள் கண்காணிக்கபடவேண்டும் ..
பள்ளியில் புகுந்துள்ள சாதி மத அரசியல், சாதீய மத வெறியை தேசபக்தி என்ற பெயரில் நுழைக்கும் நாட்டின் தீய சக்திகளை இனங்கண்டு ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.. அமைச்சர் சின்னவர் "புகழ்" பாடுவதை குறைத்துக்கொண்டு துறையில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் ..
..
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து நடந்தேறிய சம்பவங்கள் திட்டமிடபட்டவை என சந்தேகம் வலுக்கிறது .. பள்ளி வளாகத்தில் தடயங்களை எரிக்க வேண்டுமென்றே கலவரம் செய்திருப்பதும் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பஸ் எரிக்கபட்டிருப்பதும்
வகுப்பறைகளை கொளுத்தபட்டிருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது .. கலவரம் நடத்துவதற்கு முன்பு வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல் பறிமாறபட்டிருப்பதும் விசாரிக்கபடவேண்டும்.. PSBB பள்ளியில் விருப்பதகாத சம்பவங்கள் நடந்தபோது அமைதி காத்தவர்கள் இன்று கலவரத்தில் ஈடுபடுவதின் பின்னணி என்ன.. இதுகுறித்தெல்லாம் விரிவான விரைந்து விசாரணை வேண்டும்
..
தமிழகத்தை கலவரபூமியாக்க காரணத்தை தேடிக்கொண்டிருக்கும் மதவாத சக்திகளும் பாஜகவும் இதன் பின்னில் இருப்பதற்கான குறியீடுகள் தெரிகிறது .. "ஆர்எஸ்எஸ் சாகா " பள்ளியில் பயிற்சியளிக்கபட்டிருக்கிறது
பள்ளி நிறுவனர் "சங்கி" யாக தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்வதும், பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மிக மோசமான நிர்வாகம் என கூறியிருப்பதும் நடந்த கலவரம் திட்டமிடபட்டதா..? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது ..
..
நல்லரசாய் இருத்தல் நலம் .. ஆயினும் சிலநேரம் கம்பை சுழற்றவேண்டியதும் அதைவிட முக்கியம்.. எல்லோருக்கும் நல்லதை செய்திட முடியாது தீயவர்கள் கயவர்கள் கொடுமதியாளர்கள்,மதவெறியை தூண்டுவோர் மக்களை பீதியில் நிறுத்தி குளிர்காய நினைப்போர் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் .. இனி எவனும் கலவரம் செய்ய மனதால் கூட நினைக்க கூடாது
மென்மையான போக்கு சிலநேரம் பலன்தராது ..
மெட்ரிக் பள்ளிகள் அரசு எச்சரிக்கையை மீறி அடைத்திருப்பது அரசு ஒன்று செய்யாது என்ற "மென்மைபோக்கே " காரணம்..
கடும் நடவடிக்கை தேவை
..
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை" ..(குறள்)
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்..
மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைப்பது அவசியம் அது விரைந்து கிடைப்பதும் சம்பந்தபட்டவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எத்தனை பாதுகாப்போடு இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment