Saturday, July 9, 2022

அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு அறிவுரை கூறலாம் .. பொய்யும் புரட்டும் மலிவான விளம்பரம் தேடுவோர் பற்றி 
I Dont Care ..
..
 மதங்களை வைத்து அரசியல் செய்வது ஏதோ இவர்கள் தான் தேசபக்தர்கள் மற்றவர்கள் விரோதிகளைப்போல பேசுவதும் ஜெய் ஹிந்த் சொல் இல்லையென்றால் நாட்டுபற்றில்லாதவன் என புலம்புவதும் இங்கே எடுபடாது .. யார் சொல்கிறார் பாருங்கள் நேற்றுவரை ரௌடியாக மக்கள் மிரட்டி பணம் வசூல் செய்யும் கந்துவட்டிக்காரன் தேடபடும் குற்றவாளி என நாட்டின் நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு பாடமெடுக்கிறார்கள் .. காளி வாயில் சிகரெட்டா என கொந்தளிக்கிறார்கள் மதுவும் புகையும் தான் காளிக்கு படைப்பதில் விருப்பமானது .. முஸ்லிம் என்றால் கார் ஏற்றி கொல் யாரும் கேட்க மாட்டார்கள் .. குஜராத் கலவரம் அதுகுறித்து செய்தி வெளியிட்டால் சிறை பாதிக்கபட்ட மக்களுக்காக வாதிட்டவருக்கு சிறை .. தன்னை 108 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் சாமியாரென பெண் வழக்கு தொடுக்கிறார் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து 10 நீதிபதிகள்.. பின்மாறுகிறார்கள் சாமி பிராமணராம் .. என்ன கூத்து என யாரும் கேட்கவில்லை..
..
தலித் எம்பி ஆகலாம் ஆனால் நாட்டின் முதல் குடிமகன் கோவிலுக்குள் நுழைய முடியாது .. என்ன நாடு இது யாவரும் சமமென சொல்லும் சட்டத்தில் இதற்கெல்லாம் இடமில்லை .. ஆனால் பரமேஸ்வரன் என்ற பட்டியலினத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கியது தமிழ்நாடு..
..
நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து போனாலும மக்கள் மீது வரிவிதிப்பை சுமத்தி சுரண்டுவோம் உயிர்க்கு ஆபத்தான நிலையில் ICU  ல் இருந்தாலும் வரி உண்டு
  பிணமாகி விழுந்தாலும் விடுவதில்லை GST போடுவோம் என்ன கொடுமை ₹430 க்கு போராடியவர்கள் திடுக்கிடவைக்கிறது என்றவர்கள் கேஸ்விலை ₹ ஆயிரம் கடந்த பின்னும் மக்கள் கிளர்ச்சி இல்லை அதை சப்பைகட்டி விவாதம் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் ..
..
அண்டை நாட்டில் ஆண்டவன் அலறியடித்து ஓடுவதை ரசிக்கிற மனம், நம் நாட்டின் ஏதோச்சிய அதிகாரத்தை கேள்வி கேட்பதில்லை .. விலைப்பேசலாம், 
துரோகிகளை வாங்கி ஆட்சியை கலைக்கலாம், அடிமைகளை உருவாக்கி சீர்குலைக்கலாம் கட்சியை களேபரம் செய்யலாம் .. வாக்கு இயந்திரமும் பார்பனீய நீதியும் இருக்கும் வரை ஆடலாம்.. 
நீதிகேட்பவர்க்கு எதிராக அட்டர்னிஜெனரலே வாதிடலாம் இவையும் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தி நேரிடும் ..
..
திராவிடன் ஆளும் தமிழ்நாட்டில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்.. நிலத்தடி நீரை எடுக்க ₹10,000 கட்டு என ஒன்றியம் சொன்னால் அது தமிழ்நாட்டிற்கு பொருந்ததாது..
பொறியியல் கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு - 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பாடப்பிரிவுகள் செயல்பட அனுமதி இல்லை 
ஒன்றிய அரசின் அனுமதி நமக்கு தேவையில்லை
ஜிஎஸ்டி கூட்டம் வட மாநிலங்களில் நடத்தப்படும் தமிழ் நாட்டில் நடத்த வேண்டும் ..
..
வீணர்கள் விவரங்கெட்டவர்கள் மூளை கூட சுமையென திரிவோர் நாட்டின் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தரங்கெட்டவர்களை கண்டு நமக்கு கவலை இல்லை
I Dont Care .. எனச் சொல்வோம் 
..
நமக்கு நல்ல தலைவன் வலுவான அஞ்சாத நேர்மையோடு வழிநடத்தும் திராவிடத் தலைவன்  இருக்கிறார் .. 
The LEADER OF DRAVIDIAN SOIL 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin is More Dangerous 🔥
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment