Wednesday, July 6, 2022

இசை 
மௌனமாகிறது..
போர்களத்தில் 
புல்லாங்குழல் 
என்ன செய்யும்
பைத்தியங்களின் 
கையில் 
புல்லாங்குழல் எதற்கு
அரசியல்
கோமாளிகளின் 
அபத்தத்திற்கு
இசையமைக்க 
இசை அரசன் எதற்கு..
..
பாடகனின் 
குரல் 
நசுக்கபடுகிறது 
சனாதனம் பேசி
தன்னையே 
தாழ்த்திக்கொள்ளும் 
கானக்குயிலுக்கு
தகரத்தில் மகுடம் 
..
இசைஞானி எனும்
வைர மகுடத்தைவிட 
பூக்களால் ஆன தலைப்பாகை
பெருமை தராது 
இசையால் 
உலகாண்டவனுக்கு
மக்களிசையாய்
கட்டிபோட்டவனுக்கு
கடிவாளம் ..
..
நியமனங்களில்
ஜால்ரா சத்தம் 
கேட்பது வாடிக்கை
ஜால்ராவிக்கே
நியமனம் தந்தது வேடிக்கை
இவரின்
இசைக்கு தராமல்
இசைவுக்கு தந்ததால் 
அதில் புகழில்லை
ஆனால் 
இவன்
இசையில் 
எப்போதும் 
பழுதில்லை
..
சனாதன இசைக்கு
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment