Monday, July 4, 2022

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம் தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
.. 
தென்னகத்தில் பாஜக வளர பெரும் முயற்சியில் இருப்பதும் அதற்காக நிறைய செலவு செய்து பட்டியிலின மக்களை தேர்வு செய்து பிரதான பதவி ஆசையைகாட்டி புதைக்குழியில் தள்ளுகிறது .. 
ரௌடிகள், கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தபட்ட சமூகவிரோதிகள், மோசடிபேர்வழிகள் என நாட்டின்  தேடபடும்
"முக்கியமானவர்கள்" சேர்த்து பலம்காண்கிறது .. பிற்படுத்தபட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி சாதிவெறியை தலைக்கேற்றி ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது ..
..
கேரளம் தமிழகம் தெலுங்கு தேசம்  இம்மூன்றிலும் எப்பாடுபட்டாயினும் எந்த வழியிலேயினும் அதிகாரத்தை அடையவேண்டும் அல்லது அதிகாரம் செய்பவர்கள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டுமென நாக்பூர்  நினைக்கிறது .. சித்பவ பிராமணர்களின் கட்டுபாட்டில் இந்திய ஒன்றியம் இருக்கவேண்டும் அதற்காக எந்த நிலைவரையிலும் செல்ல தயார் 
புராணம்  புரட்டுகதைகள் நம்பிக்கை என்ற பெயரில் மக்கள் மனநிலையில் மந்தத்தை தொடர்ந்து வைத்திருந்தால் போதும், சோறு உடைமை இரண்டிற்காக அவனை எதிர்பார்ப்போடு வைத்திருக்கவேண்டும்.. கல்வியறிவு தவறியேனும் அவன் பெற்றுவிட கூடாது விழிப்புணர்வு பெற்றால் ஏன் எதற்கென கேள்வி கேட்பான் என தெளிவாக இருக்கிறார்கள் .. தமிழ்நாடு கேரளா போன்று விழிப்புணர்வும் சுயமரியாதையும் கொண்ட மாநிலங்களில் பணத்தாசை பதவி ஆசை வழக்கு கைது என மிரட்டி சிலரை கைப்பாவையாக்கி செயல்படுகிறார்கள் .. அடித்தளம் பலமாக இல்லாத எதுவும் வீழ்ந்துவிடும்..
..
தமிழ்நாட்டில் அதிமுகவினரின் நிலை கவலைதருவதாக இருப்பது காங்கிரஸ் மெல்ல கரைய தொடங்கியிருப்பதும் நாக்பூருக்கு மகிழ்வு தரும் விடயம் ..  "நமக்கு அமைந்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்" என்பதைப்போல மூன்று பிரிவாக (தினகரன், பன்னீர்,பழநி) பிரிந்திருந்தாலும் மூவருமே பாஜகவிற்கு ஆதரவு தரும் நிலைபாடு யார் சிறந்த அடிமை என்ற போட்டிபோடும் நிலை கேவலமாக இருக்கிறது ..
..
மராட்டியத்தில் சித்பவ பிராமணரான தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக விடாமல் ஏக்நாத் சிண்டே முதல்ராக்கியதற்கு புனே பிராமணர் சங்கம் பாஜக ஆதரவை திரும்ப பெற்றிருக்கிறது எங்கே நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்ற மோடியின் அச்சம் தெளிவாக தெரிகிறது இதிலிருந்து நமக்கு சில உண்மைகள் தெரியும் .. பிராமணர்களுக்கு பதவியை விட அதிகாரம் செலுத்தும் ஆட்டிபடைக்கும் இடத்தில் இருக்கவேண்டும் ..என்ன நினைக்கிறோமோ அது நடக்கவேண்டும் ..இது பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட,ஒடுக்கபட்ட சமூகத்திற்கு புரியாது.. பணம் பதவி அது சுயமரியாதை இழந்து நின்றாலும் பரவாயில்லை கிடைக்கவேண்டும் .. நாடும் நாட்டு மக்களும் எக்கேடுகெட்டால் என்ன..? நமது உரிமைகள் பறிபோனால் என்ன..? காரியம் நடக்கவேண்டுமெனில் காலிலும் விழுவோம் வளைந்து கும்பிடுபோடுவோம் மகா கேவலம் ..
..
எச்சரிக்கை
தமிழ்நாட்டை
ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற நினைக்கும் திராவிடமாடல்
தமிழ்நாட்டை வடநாட்டைப்போல ஏழ்மை வறுமை அறிவின்மை என
நாசமாக்க நினைக்கும் நாக்பூர் மாடல் ..
..
எதுவேண்டும்  யார் வேண்டும் நமக்கு 
நாக்பூரின் அடிமைகளா..
அல்லது 
சுயமரியாதை பெண்ணுரிமை கல்வி வேலைவாய்ப்பு அதிகாரத்தில் சமநீதி சமத்துவநீதி எதிலும் வெளிப்படைத்தன்மை,
நேர்மை , நெஞ்சுறுதி என அஞ்சாது பணியாற்றி மக்கள் தலைவனா..
நாம் தளபதியை பின் துணைப்போம் திராவிட மாடல் தலைவன் 
M. K. Stalin அவர்களை
கொண்டாடுவோம் ..
திராவிடமே தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்து தேவை 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment