#பழையகிறுக்கல்கள்
..
புரிகிறதா.
என் பேசும் விழியின்
பேசாமொழி..
உனக்கு புரிகிறதா..
கண்களில் காணும்
காதல் பொய்..
கடைவிழி தேடும்..
காமம் பொய்..
காந்த விழிசொல்லும்
கவிதை பொய்..
கள்ளத்தனமாய்..
நீ..
மெல்ல சொல்லும்..
எல்லாம் பொய்..
..
அன்பு வேண்டுமா..
ஆசை வார்த்தையை குறை
அடுக்கடுக்காய்
மாயமொழியின்
உளறலை விடு..
கண்ணி வைத்து
எனை கவிழ்க்கும்
கடைவழியை அடை..
..
அன்பு..
இதயத்தில்
கனிந்ததாய் வேண்டும்
இதழ் வழி வரும்
காய்ந்த மலராய் அல்ல..
..
காதல்..
காதலாய் வேண்டும்..
***************************
நியாயமா
பேசவந்ததை
பேசாமலே
போகிறாய்..
..
உன் உதடுவரை
வந்த வார்த்தை
மொழியாய் விழாமல்
மௌனிதமாய்
போனதேன்..
..
ஏதேனும்
எதைப்பற்றியேனும்..
எதுவாகினும்..
அல்லது
பொய்யேனும்
பேசியிருக்கலாம்..
..
இதமாய்
இல்லையெனினும்
கொஞ்சம்
கடுத்தவரிகளிலாயினும்
ஏதேனும்
சொல்லி இருக்கலாம்....
..
எனக்கு
பிடிக்காத ..
பொய்யர்கள் மொழியில்
புராணமாவது..
சொல்லியிருக்கலாம்..
..
ஏதேனும்...
அருகில் அமர்ந்து
ஆசைமொழி..பேசி
அர்த்தமற்ற சிரிப்பை
அழகாக தந்திருக்கலாம் ..
..
//
என்ன இருக்கிறது
பேசயென்கிறாய்..
அதுவும் சரிதான்..
..
நீயும் நானும்
தனிமையிலெனில்..
பேச என்ன இருக்கிறது..
..
இதயம்
பேசும் மொழி..
வார்த்தையாய்
வந்தால்..
#மெய்யிழக்கும்..
*****************************
..
நான் கவியல்ல,
நீங்கள் விலாசம் மாறி வந்துவிட்டீர் ..
நான் எழதுவது
இலக்கியமில்லை,
இலக்கணம்
சுத்தமாயில்லை
கிறுக்கலோ,
கிறுக்குதனமோ
கொஞ்சமுமில்லை,
புரியாத வார்த்தையில்
புனைவதில்லை,
அடுக்கடுக்காய்
பொய்யில்லை,
புரிந்தும், புரியாமல்
நான் பின்னுவதில்லை
எதிர் வீட்டுக்காரனும்,
பக்கத்து வீட்டுக்காரனும்
மெளனமாய் என்னிடம்
பேசியதை..
உரக்க ..
ஊரறிய ..
சொல்கிறேன்
எழுத்தில்
சிலநேரம்
பூவாசம்..
சிலவேளை,
பிணவாசம்
உயர்வைவிட
உண்மையை,
சொல்ல வருகிறேன்..
மூடம் உடைக்க
முகமூடியின்றி
வருவேன்,
பெரியோரை தருவேன்
பெரியாரையும் தருவேன்
இலக்கணம் உடைத்து
இலக்கியம் தவிர்த்து
இயல்பைச் சொல்ல
இனிதாய் வருவேன்.
தமிழ்..பேச
தானாய்,
யாரும் அழைக்காமல்
வருவேன்..
நான் கவியல்ல..
விலாசம் மாறி
வந்துவிட்டீர் .
கிழவனின் கைதடியாய்.
கிறுக்கர்களை,
ஜாதி மத கிறுக்கர்களை
விரட்ட..
வருவேன்..
பெண்களை
கேலி பேசும்..
பித்தரை கண்டால்
காரி உமிழ்வேன்..
.
இறுதியாய்
ஒருவாசகம்..
#நான்_போலியல்ல.
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment