Wednesday, June 8, 2022

#நாதியற்றுபோனதா..?

நீண்ட இடைவெளிக்கு பிறகு பால்யகால சிநேகிதனை சந்தித்தேன்.. தேநீர் அருந்திக்கொண்டே "நாதியற்று போய்விட்டோமா" என்றபோது அதிர்ந்து நிமிர்ந்தேன்" நாதியற்ற சமூகமாக போய்விட்டதா" என்றார் ..
..
சிறிது மௌனம் பேச்சு விடுதலை இந்தியா தொடங்கி இன்றைய அவலநிலை வரை நீடித்தது .. இந்தியவிடுதலையில் பிரதான பங்கு வகித்த இஸ்லாமிய சமூகம் பிரிவினையை கையிலெடுத்த போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்கதையாகி இன்றுவரை அழுத்தபடும் சமுதாயமாக  நிற்கிறது .. ஒருங்கிணைந்த இந்தியாவை பார்ப்பனர்கள் விரும்பவில்லை ஒருங்கிணைந்திருந்தால் இன்றைய பாகிஸ்தான்,வங்கத்திலிருந்து 100க்கு மேற்பட்டவர்கள் எம்பிக்களாக வருவார்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 80/90 பேர் வரலாம் பெரும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சி பிரிவினைக்கு நாக்பூர் வித்திட்டதும் அதை கையிலெடுத்து ஆடியவர்கள் பிரிவினையில் உறுதியோடு நின்றார்கள்.. இந்தியாவே எமது நாடென இருந்தவர்கள் நிறைய இன்னல்களுக்கு ஆளானார்கள் ..
வேலைவாய்ப்புகள் கூட கிடைக்காமல் போனது .. "நிக்நேம்" வைத்துக்கொள்ளும் பழக்கம் அப்போது அதிகமானது ராஜப்பா, துரை,செல்லப்பா என்றெல்லாம் பெயரை மாற்றிக்கொண்டு வேலை செய்த வரலாறு உண்டு
..
தமிழக முஸ்லிம்கள் கல்வியில் வெகு பின்னில் இருந்தார்கள் .. முஸ்லிம்களுக்கென்று அவர்கள் நிதியில் உருவான முகமடன் கல்லூரியை ராஜகோபாலச்சாரி அரசுடமை ஆக்கினார் .. பெரும்போராட்டத்திற்கு பிறகு  செவிடன் காதில் ஊதிய சங்கானதால் மீண்டும் சமுதாய மக்களிடத்தில் கையேந்தி பலநாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நிதியில் உருவானது "நீயூ காலேஜ் " நிறைய கல்வியாளர்கள் உருவாக்கியது அன்று ஒரு நல்ல தலைவர் தன்னலம் கருதாத தலைவர் கண்ணியத்திற்குரியவராக இருந்தார் .. 
இன்று இஸ்லாமியர் நடத்தும் கல்லூரிகள்
வணிக நிறுவனங்களாக இருப்பது மிக பெரிய சோகம் .. 
..
70/80 களில் அரபுநாடுகளில் வேலைவாய்ப்பு வந்தவுடன் பள்ளிபடிப்போடு பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் சென்றார்கள் .. கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக மாறியது .. கல்வி ஒன்றே கரை சேர்க்கும் என்ற யதார்த்தம் புரியும் போது வழிநடத்த நல்ல தலைவரோ பணத்தை குறிக்கோளாக கொள்ளாத சிறந்த கல்வியாளர்களோ இல்லாமல் போனார்கள் .. 
..
இப்போது வருவோம் 
நாதியற்று போய்விட்டோமா  என்ற கேள்வி வேட்டையாட தொடங்கியதெப்போது.. எல்லோரும் தலைவனாக ஆசைபட்டார்களே ஏன் .. பிறர் முதுகில் சவாரி செய்தே பழக்கபட்டார்களே ஏன்..? ஒரு எம்பி சீட்டிற்காக சக தோழனை பகைக்கொண்டு பார்க்க தொடங்கியதேன்..? பொது அரசியலை பேசாமல், மத அரசியலை கையிலெடுத்து தங்களை வளபடுத்திக்கொள்ள நினைத்தவர்கள் சமுதாய இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டம் வன்முறை என சிறைக்கு அனுப்பிவிட்டு ராஜபோக வாழ்கை வாழ்கிறார்கள் ..  உணர்ச்சி பிழம்பில் சமுதாயத்தை நிறுத்தி சமூக அரசியலில் விழிப்புணர்வற்ற இளைஞர்களை 
கொடுங்காற்றில் நிற்கவைத்தது யார்.. அதிகார போதை தான், தான் மட்டுமே சமுதாயத்தில் பேசபட வேண்டியவன் பின்பற்ற வேண்டியவன் என அகங்காரம் இனியொரு சதாப்தம் ஆனாலும் நல்ல தலைவனை உருவாக்கமுடியுமா ..உருவாக விடுவார்களா.. முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவு அரசியல் கட்சிகளை விட நாக்பூர் விரும்புகிறதென்பது தானே உண்மை .. ஒன்றுபட்டுநின்றால் உரிய விகிதம் தர அரசியல் கட்சி முன்நிற்குமே.. தமிழகம் என்றில்லை எங்கெல்லாம்  முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கிறார்களோ அங்கே நாக்பூரின் கைக்கூலிகள் படைவரிசை காட்டுகிறார்கள் ..
..
சமுதாய ஒற்றுமையும் ஆளுமைமிக்க தலைமையின் வழிகாட்டுதலும், தன்னலமற்ற சேவை செய்யும் மனபான்மைக் கொண்ட இளைஞர்களும்,கல்வியில் இந்திய ஒன்றிய மாநில அரசு பணிகளில் அதிகளவில் இடம்பெற முயற்சியும் தேவை .. அரசு இயந்திரத்தில் மிக சொற்மாகவே இஸ்லாமியர்கள் படித்துவிட்டு (இடஒதுக்கீடு மெரிட்) வெளிநாடு மோகத்தை தவிர்த்து அரசாங்க பணிகளில் சேருவதற்கு முன்வரவேண்டும்.. நிறைய கல்வி நிலையங்களும் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக முயற்சிக்கவேண்டும் .. இவையாவையும் ஒருங்கிணைக்க வழிநடத்த கண்ணியத்திற்குரிய
"காயிதெமில்லத் " போன்ற தலைவர் கிடைக்கும் வரை 
"நாதியற்ற" நிலைதான் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment