Thursday, June 16, 2022

புல்டோசர்..
குற்றம் நிறுபிக்கப்படாத நிலையில் அதில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிற நபர்களின் வீடுகள் தரைமட்டம் ஆக்கப்படுகிறது .. நாட்டின் தலைமையமைச்சர் 
மோடி  வாய்திறக்க மறுத்து மௌனம் காக்கிறார் .. இத்தனை நாட்களாகியும் மௌனம் கலைந்தபாடில்லை .. நாட்டின் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் வேட்டையாடபடுகிறார்கள் .. மசூதிகளில் "லிங்கத்திற்காக" அலைகிறார்கள் .. ஆனால்  எதிர்ப்பாய் பல்வேறு குரல்கள் கேட்க தொடங்கிய பிறகும் வாய்திறக்காமல் இருப்பது உண்மையில் கவலைதருகிறது 
.. 
இந்திய அரசிலமைப்பு உயர்ந்த பதவியை தந்திருந்தாலும் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பின் தலைவராக இருந்தாலும் வந்த வழி  நமக்கு நிறைய போதிக்கிறது 
2002 ஆம் ஆண்டு  மறக்க முடியாத வரலாறாக பதிவாகியிருக்கிறது 
மோடி  என்கிற நபர் பிரபலமானதும் அப்போதுதான்
அவரது ஆட்சியில் குஜராத்தில் நடைபெற்ற #இனகருவறுத்தலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.. அப்போது மோடி அவர்கள்  என்ன பேசினார் என்பதும் அன்று  பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள்  "அரசதர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்களென அறிவுரை சொன்னது நினைவிற்கு வருகிறது
 இன்று வரைக்கும் அவர் அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளவில்லை என்பது சங்கடத்தை தருகிறது ..
..
அன்று குஜராத்தில் தொடங்கிவைத்தது இன்று இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியலை சர்வசாதாரணமாக பாஜகவினர் கையிலெடுக்கிறார்கள் ..மோடி பிரதமரானதிலிருந்து 110  இஸ்லாமியர்கள் கொல்லபட்டிரு க்கிறார்கள் அதில் 40 குழந்தைகள் வெட்கி தலைகுனிய வேண்டிய பிரதமர் நாளொரு வேசத்தில் நாடகமாடிக்கொண்டிருக்கிறது "தொப்பி" போட்டு முஸ்லீமாக நடிக்கவில்லை மற்ற எல்லா வேடமும் போட்டிருக்கிறார் ..
அவதார புருஷர் என்று நம்பியவர்களே இவர் "அவதார புருஷர் அல்ல அரிதார புருஷர்" என 
புரிந்துக் கொண்டார்கள்..
..
நாட்டை வளபடுத்துவார் பலபடுத்துவார் என நம்பியவர்களே இன்று அகல பாதாளத்திலிருந்து கதறுகிறார்கள் நாட்டின் வீழ்ச்சி எங்கு கொண்டு நிறுத்துமோ தெரியவில்லை .. மதமும் ஜாதியும் மூத்திரமும் ஊறுகாயும் நாட்டை வலுவான நிலைக்கு கொண்டு செல்லாது .. உலகரங்களில் இந்தியாவின் முகம் கருமைபடர தொடங்கியிருக்கிறது .. பொருளாதாரத்தில் விழும் போதெல்லாம் மோடியை காக்க முஸ்லிம்களின் கறி தேவைபடுகிறது..  ஊடகங்கள் கேள்வி கேட்குமோ என அஞ்சி 
OH MY GOD என ஓட்டம் பிடிக்கிற நிலை .. தொடர்ந்து தப்பிக்க முடியாது.. நீதி வலியது திருப்பி கணக்கு கேட்கும் .. 
..
சட்டத்திற்கு புறம்பாக ஆக்ரமித்து கட்டபட்டிருந்தாலும் இடிப்பதற்கு முன் நோடீஸ் நீதிமனற அனுமதி என எதையும் கணக்கில் கொள்ளாமல் போராடினால் வீடு இடிக்கபடுமென புதிய விதி எழுதியது யார்.. நீதிமன்றம் இந்திய சட்டம் இதற்கெல்லாம் மதிப்பில்லையா ..  பத்திரிக்கையாளன் கைதானவுடன் ஒப்பாரி வைத்ததும் உச்சநீதிமன்றம்  தலையிட வேண்டும் என கதறும் போது உடனே செவி சாய்த்த நீதிமன்றம் இப்போது ஏன் அமைதி காக்கிறது.. உ.பி.அரசின் அராஜக போக்கை ஏன் கண்டிக்கவில்லை .. கேள்விகள் ஆயிரம் பதில்தான் இல்லை ..
..
போராடினால் அத்துமீறி போராடினால் புல்டோசர் வருமென்றால் இது நாடா ..? 
முஸ்லிம்களுக்கெதிராக துப்பாக்கியோடு பகிரங்கமாக வந்தவன் வீடு இதுபோல் இடிக்கபட்டதா ..?  இங்கே நீதி சமமில்லையா .. 
ஆடுங்கள் ..
ஆட்டம் நிற்கும் போது எழவே முடியாதளவிற்கு புதைக்குழியில் விழுவீர்கள்..
..
அறம் பிழைத்தால்..
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment