Thursday, June 23, 2022

OPS..
எங்கு தோற்றார் ..
அரசியல்வாதியின் அடிப்படை தகுதிக்கு கூட தன்னை தயார்படுத்திக்கொள்ளாதவராகவே வலம் வருவதும் எடுப்பார்கைப்பிள்ளையாகவே இருப்பதும் பின்னடைவை தந்திருக்கிறது ..
..
சசிகலா தன்னை பதவி விலக சொன்ன போது விலகி சில நாட்களில் "கேட்பார்" பேச்சை கேட்டு தர்மயுத்தம் இருந்தபோதே அவரின் சரிவு தொடங்கிவிட்டது.. குருமூர்த்தியின் சூழ்ச்சி இரையானது தெரியாமல் நாடகமாட "அத்தாட்சி" வேறொரு முடிவெடுக்க அது தவறென்றாலும் கீழ்நோக்கி பயணிக்க தொடங்கினார் பன்னீர் ..
பழனிசாமி காரியம் ஆகும்வரை காலை பிடித்துவிட்டு பின் வாரிவிட "அத்தாச்சியும் "  அரசியல் அபலையாக நிற்க வேண்டிவந்தது 
..
அதிமுகவை காப்பாற்றுவதாக எண்ணி பழனிசாமியோடு கைகோர்த்ததும் "மோடி" சொன்னதால் துணை முதல்வரானேனென பொதுவெளியில் உளறி தன்னை ஒரு பலவீனமானவராக காட்டிக்கொண்டார் .. கட்சிபதவி அல்லது அரசு பதவி இரண்டில் ஒன்றை தந்தால் இணைய தயாரென அன்றைக்கு காய்நகர்த்தியிருந்தால் இன்று கட்சியின் மிக முக்கியமானவராக தெரிந்திருப்பார் .. பன்னீரை பலிகேடாக்கி பாஜக மிக சாதூர்யமாக தனக்கு இசைவான ஒரு ஆட்சியை கொண்டு தமிழகத்தின் வளர்ச்சி நலன் உரிமைகளை பறித்து மெல்ல மெல்ல வடவருக்கு வாசல் திறந்து தனித்துவமாக இருந்த தமிழகத்தில் கலப்படம் செய்து காரியம் சாதித்துக்கொண்டது .. நீட் விடயத்தில் யாரையும் கலந்தாலோசிக்காமல் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு மானங்கெட்ட பாண்டியராஜனை கொண்டு கையெழுத்திட வைத்ததும், தமிழகத்தின் வேலைவாய்ப்பில் தமிழருக்கான உரிமையை காவு கொடுத்ததும், காவித்தனம் குடியேற வழிவகுத்ததும், தகுதியற்ற அடிமைகளால் தமிழகம் இழந்தவைகள் .. இன்னும் நிறைய..
..
பொதுக்குழுவில் தனக்கு ஆதரவில்லை என்பதை உணர்ந்து வெளிநடப்பு நடத்தி சிக்கலாக்கியிருப்பது தற்காலிக தீர்வு தான் .. பன்னீரை கை கழுவ தயாராகி வருகிறது பழனி தரப்பு .. வலுவான தலைவரல்ல எனினும் சரியாக காய்நகர்த்தி அதிமுகவை 
கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறார் .. தொடர்ந்து விட்டு கொடுத்தே பழகியப்போன பன்னீர் இன்று கையேறுநிலையில் .. இந்த கூடாரம் சிறுக சிறுக உடைத்தெறிய வேண்டும் என்பதில் பாஜக அதிகம் கவனம் செலுத்துகிறது .. தொடர்ந்து இருசாராரும் எதிரெதிராய் நின்றால் பாஜக வலுபெற உதவும்.. 
பிரதமர் சொன்னதால்  துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்ற சுயபுத்தியில்லாமல் செயல்படும் பன்னீரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் ..
..
பன்னீர் பழனி
இருவருமே பாஜகவின் ஆடுகள் .. எப்போது யாரை பலி கொடுப்பதென முடிவு செய்யும் அதிகாரம் எஜமானருக்கே உண்டு அடிமைகள் தலையசைத்தே தீரவேண்டும்.. அதிமுக பலவீனபடுத்துவதைவிட 
கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற நாக்பூரின் திட்டம் அது செயலாக்க தொடங்கியிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.. அன்றைக்கு பன்னீரையும் பழனியை கைக்கோர்த்துவிட்டவர்கள் இன்று வெளியில் இருந்து கவனிப்பதிலேயே ஆடும் ஆட்டத்தின் சூழ்ச்சி புரியும்..
முதல் ஆடு பலியாகிறது 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment