இந்தியா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அரபுநாடுகள் குரல் உயர்த்தியிருக்கிறது .. அதற்கு பதிலளித்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி பாஜக கேட்கவேண்டுமே தவிர ஏன் இந்தியா கேட்கவேண்டும் என்கிறது .. மேலோட்டமாக பார்த்தால் பாஜக என்ற கட்சி மீது பழியைப் போட்டு நழுவபார்க்கிறார்கள் ..
..
உண்மையில் பாஜக அதிகாரத்தை கைப்பற்றியதில் தொடங்கியது இந்த இஸ்லாம் வெறுப்பு .. சமூக வலைதளங்கள் பத்திரிக்கை, தொலைகாட்சிகள் என வரிசைகட்டி குறிப்பாக அதுவரை வெளியே தலைகாட்டாத பார்ப்பனர்கள் சமூக ஆர்வலர்களாக ,தேசபிமானிகளாக வலம் வர மெல்ல மெல்ல விசத்தை கக்கிக்கொண்டிருந்தார்கள் .. முஸ்லிம் மீது வன்மம் அவர்கள் உடையில் உணவில் கல்வியில் என தொடர்ந்து தடைபோட்டும் பொது சமூகம் முன் அவர்களை வந்தேறிகள் போன்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் போன்றும் சித்தரித்தார்கள் .. துறவிகளுக்கு கூட முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து இடத்தை வாங்கி பள்ளிவாசல் கட்டுகிறார்கள் என பேசும் துணிவும் வந்தது ..
..
குறிப்பாக இடைசாதி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அடியாட்களாக்கி கலவரம், அடித்தமர்த்தல் காரியங்களில் ஈடுபட செய்து அதற்கு அரசே பாதுகாப்பு செய்திட்ட கொடூரம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் நடந்தது.. மாட்டுக்கறிக்காக மனிதனை வேட்டையாடிய கும்பல் தேசபக்தியாளனாக காட்டபட்டதும் பசுவிற்கு உயிர்வளி (ஆக்சிஸன்) தந்தவர்கள் சிசுவுக்கு தந்தவனை அவன் முஸ்லிம் என்பதால் தேசதுரோக வழக்கு பதிவு செய்ததும் இந்த பொதுசமூகம் வாய்மூடிதானே இருந்தது.. மீண்டும் அவர்களை வெற்றி பெற செய்தவுடன் ஆட்டம் அதிகமாகி கடைசியில் அரபுலகம் மன்னிப்பு கேட்க சொல்லும் நிலைக்கு வந்துநிற்கிறோம் ..
..
முஸ்லிமாக வாழ்வதற்கே இந்திய தேசத்தில் ஒவ்வொரு நாளும், நொடியும் அவன் தேச பற்றாளனாய் நிரூபிக்க வேண்டிய சூழலை உருவாக்கியது யார்.. இன்று எல்லா சமயத்தை ஒன்றாக பார்ப்பதாக அறிக்கை விடும் விஷமிகள் தானே.. தொடங்கி வைத்தது இன்று திருப்பி தாக்க தொடங்கியவுடன் இந்தியா பன்முகதன்மையோடு வாழும் நாடு என நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது .. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி, ஒரே பண்பாடு என வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டுவைக்க பார்த்தவர்கள் இன்று அறிக்கைவிடுகிறார்கள் ..
..
நிபுர் சர்மாவிற்கு 6 கோடி பிராமணர்கள் ஒன்று சேர்ந்து துணைநிற்க வேண்டும் என பதறுகிறார்கள் குறித்துக்கொள்ளுங்கள் 3% விழுக்காடிற்கு குறைவான ஒரு சமூகம் பிரதமரை ஜோக்கர் என்கிறது .. இங்கே அந்த மூன்று விழுக்காட்டிற்காக இந்தியா அவமான படலாம் ..97% விழுக்காடு அடங்கியிருக்க வேண்டும் என நினைப்பதற்கு பெயர் தான் பாசிசம் ..பிரதமரே ஆனாலும் எங்கள் முன் ஜோக்கர் தான் என்று சொல்வதிலிருந்து இந்த நாடு இந்த அரசு பார்பனர்களுக்கு மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் .. ஆர்எஸ்எஸ் எண்ணத்தை செயல் திட்டத்தை இங்கே அமல்படுத்த பிரதமர் ஒரு கருவியாக செயல்பட வேண்டும்
..
சர்வதேச சமூகம் முன் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.. வெறுப்பு அரசியல், பொய் பித்தலாட்டம், வரலாற்றை மாற்ற முயலுதல், தொடர்ந்து வன்மம் கொண்டு சிறுபான்மையினரை வேட்டையாடுதல், கல்வியில் மதத்தை நுழைத்தல், என தொடர்ந்து மனித குலத்திற்கு தீங்கிழைக்கும் ஆர்எஸ்எஸும், அதன் அரசியல் வடிவமான பாஜகவும் நாட்டிற்கு கேடு ..
இங்கே பிராமணீயம் ஒடுக்கபட்டால் மட்டுமே நல்ல சமுதாயம் நல்லிணக்க சமுதாயம் பிறக்கும் ..
..
இந்தியா எவன் தந்தை வீட்டு சொத்து அல்ல நம்மோடது ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment