இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக இரண்டு செய்தித் தொடர்பாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கும் பிஜேபி..
அனைத்து மதங்களையும் மதிப்பதாக விளக்கம் அளித்து பூச பார்க்கிறது .. நுபுர் சர்மா நிபந்தனையின்றி கருத்தை பின் வாங்குவதாக அறிக்கை வெளியிடுகிறார் ..
..
வளைகுடா நாடுகள் தங்கள் இறைதூதரை இழிவாக பேசியதற்காக கண்டனத்தை பதிவு செய்கிறது .. குப்பைத் தொட்டியில் மோடியின் படம் முகத்தில் பூட்ஸ் கால் அச்சு .. இந்தியாவில் மெல்ல படரிய நச்சுவிதையால் இன்று இந்தியா தலைகுனிகிறது.. வெறுப்பு அரசியலை விதைத்தவர்கள் அறுவடைக்கு அஞ்சுகிறார்கள் .. இந்திய துணை ஜனாதிபதி கத்தர் சென்றிருக்கும் போதே தூதரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்கிறது ..
இந்தியர்களை வெளியேற்ற வேண்டுமென்ற குரல் ஒலிக்க தொடங்கியிருப்பது ஆபத்தானது ..
அரபு நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது..
..
இவையாவும் பாஜகவின் வெறுப்பு அரசியல் காரணம் .. குறிப்பாக இஸ்லாமியர்களை இரண்டாம் பிரஜைப்போல நடத்துவதும் மதவெறியை உயர்த்தி பிடித்ததின் விளைவு.. சமானத்தோடு வாழ்ந்த மக்களிடையே அதிகார போதையில் பிரிவினையை மனங்களில் விதைத்ததால் இன்று எதை பேசுகிறோமென தெரியாமல் இந்திய இறையாண்மைக்கும் மதநல்லிணக்கதிற்கும் வேட்டுவைக்கிறார்கள் .. வளைகுடாவில் கசப்புணர்வு படர தொடங்கியிருப்பது நல்லதில்லை.. இங்கே இந்தியர்கள் மீதான நன்மதிப்பை சீரழிக்க பாசிச வெறியர்கள் முனைவு ஆபத்தானது ..
கட்சியிலிருந்து இடை நீக்கம், மன்னிப்பு என தற்காலிக தீர்வு சரிசெய்யாது .. பாஜக தொடர்ந்து பரப்பும் விசத்தை, வெறுப்புணர்வை நிறுத்த வேண்டும் இல்லையெனில் விலைகொடுக்க வேண்டி வரும் ..
..
சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் முகம் சிதைக்கபடுகிறது ..
இந்தியர்கள் மீது கொண்ட நன்மதிப்பு பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மிகவும் மோசமடைந்திருக்கிறது ..
..
எச்சரிக்கை ஒலிகேட்கிறது கவனம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment