Wednesday, June 22, 2022

திரவுபதி முர்மு..
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் .. பழங்குடியினத்தவர் 
முன்னாள் ஜார்கண்ட் ஆளுநர் ..
பாஜக பெண்ணை நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா.. அதிலும் பட்டியிலினம் என சிலர் பேச அரைகுறை மனதோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்
..
அதிகாரமிக்க பதவிகளில் பட்டியலினத்தவரை கொண்டுவருவோமா .. கடந்தகால அனுபவங்கள் இன்றைய குடியரசு தலைவர் கோவிலின் வெளியே நிறுத்தினோமே .. குடியரசு தலைவருக்கு இந்த கதியா என யாரும் வாய்திறக்கவில்லையே.. 
அதிகாரமிக்க பதவிகளில் யார் இருக்கிறார்கள் அல்லது அவர்களை இயக்குபவர்கள் யார் 
அவர்கள் வரைவதுதான் திட்டம் அவர்களின் எண்ணங்கள் தான் சட்டம் ..
திரவுபதி வைத்து ஆடுவதெல்லாம் அவர்களுக்கு பழக்கமானதுதான் ..
..
அப்துல்கலாமை அமர்த்தியபோது  சிறுபான்மையின் அலங்காரமென பேசியதும் அவர் இந்துத்துவாவின் மெல்லிய ரேகை படர்ந்த ஆமாம் எனும் ஆசாமி என்பதும் நாடு கண்டதுதான்.. யார் வந்தாலும் நாக்பூரின் சொல்லுக்கு ஆடும் தலையாட்டி தான்.. பொம்மலாட்டத்தில் எந்த பொம்மையாய் இருந்தாலென்ன..? கயிறு ஆட்டுபவன் கையில் ..
..
எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கிற 
யஷ்வந்த் சின்கா .. பலகட்சிகளில் வலம் வந்து கடைசியில் மம்தா கட்சியிலிருந்து விலகி இப்போது பொது வேட்பாளர்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி எனக்கு அளித்த மரியாதைக்கும் அன்புக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி, அதேசமயம் அதிகமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த முடிவை மம்தா பானர்ஜி ஏற்பார் என நான் நம்புகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்..
..
இன்னும் சில கட்சிகள் முடிவை அறிவிக்கவில்லை மராட்டியத்தில் ஆளும் அரசு ஆட்டம் காண்கிறது .. பொது வேட்பாளர் மெச்ச தகுந்தவரா என்றால் பதில் இல்லை எனினும் வேறு வழியில்லை என்பதே யதார்த்தம் .. வெற்றியை நோக்கி செல்ல சில படிகளே உண்டு ஆனால் 
வெற்றி வாய்ப்பு உச்சியில் 
பொறுத்திருப்போம் .. இது எதிர்க்கட்சிளின் ஒருங்கிணைப்பிற்கு தொடக்கமாக இருக்கட்டும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment