இந்தியா எரிகிறது..
இந்தியா ஒளிர்கிறது போய்
இந்தியா பற்றி எரிகிறது..
#அக்னிபாத் ..
..
உலகின் மிகப்பெரிய ராணுவம் நாட்டின் சேவர்கள்களை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு பெயர் அக்னிபாத் .. 25% விழுக்காடு வேலை நாலுவருடம் முடிந்ததும் வெளியேறி வேறு பணிகளுக்கு செல்லலாம் .. கடந்த இரண்டர வருடமாக ராணுவ வீரர்கள் தேர்வு நிறுத்தபட்டதும் பின் தனியார் பயிற்சி என்பதும் திட்டமிடலே .. நாட்டின் பாதுகாப்பில் அக்கறையற்ற செயலாகவே காண்கிறோம்..
..
ஆர்எஸ்எஸிக்கு ஆள் எடுக்க அரசு செலவில் பயிற்சி தர ஒரு ஏற்பாடே தவிர வேறொன்றும் இல்லை .. வடமாநில இளைஞர்கள் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் ராணுவத்தில் சேருவதை குறிக்கோளாக கொண்டவர்கள் மிகப்பெரியளவில் கலவரம் செய்கிறார்கள் இதற்கு போராட்டம் என பெயர் .. அமைதியாக போராடினால் கலவரகாரன் என வீடு இடிக்கபடும் .. இதுதான் இப்போதைய புதிய இந்தியா ..
..
₹200 கோடி அரசு சொத்துகள் தீக்கிரையாகின.. அரசு சொத்தை சேதபடுத்தினால் அது கலவரகாரரிடமிருந்தே வசூலிக்கபடும் என உ.பி.அரசு சொன்னது ஞாபகம் வருகிறது .. அரசு அதிகாரத்தை
நல்லவர்கள் நாட்டின் மீது தீராத பற்றுடையோர் மக்கள் மீது பேரன்பும் நம்பிக்கையையும் உடையவர்களிடம் கொடுக்காமல் வியாபாரிகளிடம் கொடுத்தால் இப்படிதான் நாசமாகும் .. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சொந்தமாக விமானம் இல்லை விமான நிலையங்கள் தனியாரிடம், பொது சொத்துக்களை தனியாருக்கு கொடுத்துவிட்டு மூளை கூட சுமையானவர்கள் நாட்டை குட்டிசுவராக்குகிறார்கள் ..
..
கிழக்கிந்திய கம்பெனியிடம் அடிமைபட்டு கிடந்த நாம் இன்று குஜராத் மார்வாடிகள் கம்பெனிகளிடம் அடகுவைக்கிறோம் .. ஏர்இந்தியாவை நடத்தமுடியவில்லையென திருப்பி தந்ததைப்போல செய்யாமல் இருந்தால் சரி .. எந்தவொரு திட்டமாவது மக்கள் நலன் சார்ந்திருக்கிறதா .. கல்விகூட மதசாயம் பூசி கொள்கிறது .. எங்கும் எதிலும் மதத்தை புகுத்தும் அயோக்கியத்தனம் அதை ரசிக்கும் நடுநிலைவாதம்,எதிர்க்கிறவன் குரல்வளையை கடிக்க துடிக்கும் ஓநாய்கள்.. நீதியை விலைபேசும் கொடூரம் .. எதிரணியை பலவீனபடுத்தி, அதற்காக பலஆண்டுகாலம் காத்திருந்து கோடாரிகளைக் கொண்டே சாய்க்கும் சூழ்ச்சி .. இவையாவும் தற்காலம் பலன் தரும் .. ஆனால் காலம் வலியது திருப்பி பார்க்கும் போது அழிவு தேடிவரும்
..
17 வயது இளைஞர்களை ராணுவ பயிற்சிக்காக தேர்வு செய்வார்கள் என மநு பேசும் ஆளுநர் சொல்கிறார்.. 17 வயதில் கல்வியை தர வேண்டுமே தவிர ஆயுதத்தை அல்ல.. கற்கும் வயதில் சீர்மிகு கல்வி மறுக்கபடுவது எதிர்காலத்தில் இப்படியே வைத்திருந்தால் தான் தாங்கள் நினைப்பதை நடத்தமுடியும் எப்போதும் உயரத்தில் நிற்க முடியுமென்ற "தர்மம்" காக்க நினைக்கிறார்கள் .. பரவலாக போராட்டம் வலுக்கிறது .. ஒரு வேளை இரும்புகரம் கொண்டு அடக்கபடலாம் ஆனால் பாதுகாப்பில் விரிசல் வரும் ..
முன்னாள் மேஜர் ஜெனரல் டி.பக்ஸி
இத்திட்டத்தை கேட்டு திடுக்கிட்டு போனதாக "ப்ரண்ட்லைன்"க்கு பேட்டியளிக்கிறார்.. தயவு கூர்ந்து செயல்படுத்தாதீர்கள்
for god's sake please don't to it.. என அச்சத்தை வெளிபடுத்தியிருக்கிறார் ..
நாட்டுமக்களுக்கு என்ன தேவை என பிரதமருக்கு தெரியவில்லையென ராகுல் சொல்கிறார் .. தமிழ்நாட்டின் முதல்வர் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியிருப்பதும் இடதுசாரிகள் எதிர்ப்பதும் கருத்தில் கொள்ளவேண்டும்
..
அறிவாளிகளை வழங்கிய நாடு இன்று மூடர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறதே.. உலகமே கொண்டாடிய தேசம் இன்று மதவெறியின் பிடியில் ..
..
நாட்டை கெடுக்கும்
நாசக்காரர்களே
மக்களின் நீண்டமௌனம்
ஆழ புதைத்துவிடும் ..
சிறு சிலிர்ப்பு போதும்
கரையேற முடியாமல் அமுங்கிபோவீர் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment