முன்பெல்லாம் அரசியல்வாதிகளிடத்தில் அடிப்படை நாகரீகம், அரசியலைப்பற்றிய புரிதல், கொஞ்சம் ஞானம் இருந்தது.. பொய் பேசுகிறோம் என்றாலும் அதில் எல்லை கடந்துவிடவில்லை அதை நியாயபடுத்த காரணங்களை கொண்டு நடந்தார்கள் .. திரும்ப திரும்ப மறுக்கபட்டதை,அல்லது தெளிவில்லாததை பேசினாலும் அதை ஊடகங்களில் வந்ததென சொல்லி சமாளித்தார்கள் .. கேவலமான செயல்களை செய்ததில்லை தனிநபரை விமர்சனத்தை கீழ்நிலை அரசியல்வாதிகளைக் கொண்டு அரங்கேற்றினாலும் அது கிண்டல் கணக்கில் வரவுவைத்தார்கள் ..
ஒரளவு அரசியல் தெரிந்தும் நெடிய வரலாற்றின் சில பக்கங்களையாவது வாசித்திருந்தார்கள் .. சொல்கிற அளவில் அவர்களுக்கான அரசியல் தொடர்பிருந்தது ..
..
ஆனால் இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறது .. அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள் பொதுவாழ்வில் உயர் பதவி அதிகாரத்தில் வந்தமர்ந்தார்கள் .. சேக்கிழார் எழுதிய கம்பராமயணம் என உளறிக் கொட்டி அண்ணாவிற்கு பிறகு அதிகம் நூலகளை படித்தவனென வாய் உளறி கடைசியாக படித்தநூல் எதுவென்ற ஞாபகமில்லை என விழிக்கிறார்கள் .. ஆற்காட்டார் மறைந்தாரென பேச முடிகிறது ..
கட்சியின் தலைவரின் பெயரை கூட சொல்லதெரியவில்லை ஒருவேளை அவரை கட்சியின் தலைவராக எண்ணவில்லையோ என்னவோ.. கூமுட்டைகளால் தமிழகத்தில் அரசியல் அழுக்காகிறது ..
..
சாணக்கியென அவர்களால் நம்பபட்ட ராஜகோபாலச்சாரியார்
தமிழ் நாடு என்கிறார்கள் ஜாக்கிரதை என்றபோது ஆம் இந்தியா நாடே அல்ல அது துணைக்கண்டமென நாடாளுமன்றத்திலேயே அழுத்தமாக சொன்ன பேரறிஞர் ..
தமிழைத்தவிர வேறெதற்கும் தேசிய மொழிக்கான தகுதியில்லை என முழங்கிய காயிதெமில்லத், எப்படி எதிர்க்கட்சியாக இருக்கவேண்டுமென தெரிந்துக்கொள்ளுங்களென பக்தவச்லம் சொன்னபோது அடுத்த முறை எதிர்க்கட்சியாக வந்து எங்களுக்கு உணர்த்துங்கள் என்ற கலைஞர் இப்படி நல்ல விவாதங்களால் அரசியல் செய்தவர்கள் தமிழர்கள் ..ஆனால் இன்றோ வரலாறு தெரியாதவர்களால் அவமானபட வேண்டியிருக்கிறது .. எதையாவது உளறுவது அதன் மூலம் வெளிச்சம் பெறுவதும் அதை மீடியாக்கள் கொண்டாடவதும் அபத்தம் ..
..
தமிழ்நாட்டில்
,அறிவுசார் இயக்கம் கண்ட நாட்டில், சிலர் மதம் சாதிய சகதியில் சிக்கி தங்கள் முகத்தை இழந்து முகவரிக்காக எதையாவது பேசி தமிழர்களை தலைகுனிய வைக்கிறார்கள் .. பதவிக்காக காலில் விழுந்து கிடந்தவர்கள் மக்கள் தந்த அதிகாரத்தில் ஆட்சி செய்பவரை சந்தடிசாக்கில் வந்துவிட்டதாக சொல்வது வேடிக்கை.. இந்திரா சாவும் எம்ஜிஆர் நோவும் ராஜீவ் படுகொலையும் அதிமுகவை கரைசேர்த்தது .. 2ஜி எனும் இமாலய கற்பனையை ஊதிபெருக்கி இடையிடையே பார்ப்பன ஊடகங்கள் கட்டுகதைகள் திமுகவை வரவிடாமல் தடுத்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் தெளிந்து புரிந்தறிந்து ஆட்சியில் அமர்த்துகிறார்கள் .. காலில் விழுந்தோ,தலை கவிழ்ந்தோ,
கட்சியை உடைத்தோ வாக்கு இயந்திரத்தை நம்பியோ, வெற்றிபெற்ற மாற்றுக்கட்சி மாடுகளை விலைக்கு வாங்கியோ அறியணை ஏறவில்லை..மக்கள் தந்த வெற்றி .. இனியும் விட்டால் இந்த கோழைகள் வடவனுக்கு தாரைவார்த்துவிடுவார்கள் அடிமைகள் தமிழ்நாட்டை அலங்கோலபடுத்திவிடுவார்களென சிந்தித்து திமுகவிற்கு வாக்களித்து வெற்றிபெற செய்திருக்கிறார்கள் ..
..
திமுகவிற்கு எதிரியாக இருக்க கூட தகுதி வேண்டும் .. தயைகூர்ந்து தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் .. கடந்தகால வரலாற்றை, இப்போதைய நிகழ்வுகளை கூர்ந்து கவனியுங்கள் .. எதையாவது உளறி தமிழனின் மானத்தை கெடுக்காதீர்கள் .. பொய்யும் புரட்டும் புராண கதாபாத்திரங்களும் அரசியலில் நீண்டநாட்கள் தாக்குபிடிக்காது .. உண்மையும்,உழைப்பும், நெறிதவறாத செயலும்,மக்கள் மீதான கனிவும்,மண்ணை நேசிக்கும் உணர்வும், பகைவர்க்கு அஞ்சாமையும், விமர்சனத்தை ஏற்கும் பக்குவமும், நிதானமும்,
துணிந்து செயல்படும் நெஞ்சுரமும்
உயரத்தை நோக்கி செல்லும்போதும் எத்தியபிறகும் பணிவும் இருந்தால் அதிகாரம் கிடைக்கும் அதைவிட மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கும்
..
நல்லவைகள் காலம்கடந்தும் பேசபடும், நல்ல தலைவர்களை காலம் கொண்டாடும், அரசியல் கழிவுகளை, அவசரத்தில் வந்தவர்களை பொய்யர்களை மக்கள் புறக்கணிப்பதோடு காலமும் மறந்து போகும் .. முதிர்வற்ற அரசியல் விடலைகள் நா நாக்க வேண்டும் .. முதலில் அரசியலை தெரிந்து இந்த மண்ணின் மனம் நுகர்ந்து, இனத்தை பண்பாடு கலைசாரத்தை அறிந்து அரசியல் செய்ய வாருங்கள் .. பொழுதுபோக்கிற்காக, பொழுதுபோகாததால் வந்தவர்கள் அடக்கிவாசித்தால் நல்லது
மானம் காக்கபடும்..
..
தளபதிக்கு M. K. Stalin
எதிராக அரசியல் செய்ய..
எதிரிகளே..
பகைவர்களே..
உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment