Tuesday, May 31, 2022

கலைஞர் ..
நினைக்கிற போதெல்லாம் நெஞ்சில் ரீங்காரமிடும் தமிழ் ..
கொள்கை உறுதி, பகைக்கஞ்சா வீரம், எதற்கும் அசராமல், பகையை பதறவைக்கும் விவேகம் .. ஒவ்வொரு நொடியும் தன்னைச் சுற்றியே இந்திய அரசியலை இயங்கவைத்த பேராளுமை..
இத்தனை வல்லமை படைத்த தலைவன்  வேறு இனத்தில் உண்டா.. கொண்டாடி கொண்டாடி தீர்க்கவேண்டிய கடன் நமக்கு உண்டு .. அரசியல்,கலை, இலக்கியம் பேச்சு என தொட்டதெல்லாம் சுவைமிகுந்ததாய் தர வாய்க்கபெற்றவர் யாரேனும் உண்டோ, 
அறிவாண்மை கொண்ட
செங்கோன்மை தவறாத  தலைவனை வேறெங்கும் கண்டதுண்டா
இவ்வையகத்தில்..
எத்தனை எத்தனை வர்ண கோலங்கள் சொல்லிலா பொருளிலா சுவை கூடியதென திகைப்பே மிஞ்சும்..  வார்த்தைக்கட்டி விளையாடினால் மயங்கி நிற்குமே தமிழ்ச்சமூகம் 
எதிரிகளும் இனப் பகைவரும் கூட நாவின் தமிழிசையில் சொக்கிபோய் நின்றனரே..
..
தலைவனாய் எதையும் நேர்நின்று திமிரோடும் துணிவோடும் எதிர்கொள்ளும் பேரழகு இங்கே வேறு எவரிடமும் காணேன் .. எதிரிகளை ஒவ்வொரு நாளும் கதறவிடல் கலைஞருக்கு மட்டுமே சாத்தியமானதெப்படி ..  எதிலும் தெளிவு, எதையும் ஆய்ந்தறிந்து செயலாக்கும் ஆற்றல், நல்லதை நினைத்து நன்மைபயக்குமா என எண்ணி, துணிந்து தொலைநோக்கோடு சமரசமின்றி 
யாரெல்லாம்  எதிர்ப்பார்கள் இதனால் யாருக்கு பயன் தரும் என துள்ளியமாக கணக்கிட்டு எளியவன் மீது அக்கறையோடு, செய்து முடிக்கும் பேராற்றல் இந்திய தலைவர்களிடம் யாருக்காவதுண்டா..?
..
வந்து விழும் வார்த்தைகளில் நேர்மை, அரசியலில் அறமெனும் சொல்லிற்கு இலக்கணம், பொதுவாழ்விற்கு வர நினைப்போருக்கு பாடமாய் இருக்கும் ஒரே தலைவன்.., விளிம்புநிலை மக்களின் குரலாய், பள்ளத்தில் நிற்போருக்கு ஏணியாய், அடக்குமுறைக்கு ஆளாவோருக்கு அரணாய், ஒடுக்கபடுவோருக்கு உறுதுணையாய், ஒரு தலைவன் ..
வளர்த்துவிட்டவன் வேலேந்தி புறம்நின்று குத்துகிறான் .. எதிர்நிற்க துணிவின்றி என்றறிந்தும் புன்முகத்தோடு களம்கண்ட தலைவன் .. 
இனப் பகைவர்கள் அறிந்தளவு இனத்தவன் தம்மை அறிந்திருக்கவில்லை என அறிந்தும் உழைப்பது தம் கடமை என்றேனும்
ஒருநாள் உணர்வான் என ஓயாதுழைத்த நிகரில்லா பெருந்தலைவன் ..
பலமுனையில் நின்று பகைவரும், எதிரியும் துரோகிகளும் துளைத்தெடுத்தபோதும்  கண்ணுயராமல் பெருஞ்சுவராய் இனத்தை
நம்மை காத்துநின்ற பேரருளாளன் .. இவரைப்போல் யாருண்டு
..
வியந்து நிற்கிறேன் ..
இவன் பேரழகு கண்டு ..
சொல்லெடுத்து ஆடினால் தேனுண்ட வண்டுபோல் மயக்கம் வரும்..
எதிரியை வீழ்த்த 
இலக்கியத்தை துணைக்கழைத்த பேரறிவு கண்டு..
தூற்றும் போதும் தூயத்தமிழ்ச் சொல்லி தீப்பிழம்பாய் சுட்டெறிக்கும் ஆற்றல் கண்டு ..
எளியவரிடம் கருணையோடும் 
இயலாதோரிடம் அக்கறையோடும் 
பகைவரோடு அஞ்சாமையோடும் 
பெரும்படையோட்டம் கண்ட பேராசான் துணையோடு 
என்பதாண்டு பொதுப்பணியில் 
சீரோடு வாழ்ந்த எம்மான் ..
கலைஞரை எண்ணி வியக்கிறேன் 
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் .. அவரோடு இணங்கிநின்றேன் ..கைகாட்டிய திசையில் பெரும்படையில் சிப்பாயாய் நின்றேன் என எண்ணும் போது உள்ளம் துள்ளி மகிழ்கிறது .. இப்போதும் உன் பெயரை உச்சரித்தால் பகைவர்கள் குலைநடுங்குகிறார்கள் தலைவா..
நீ.. சமைத்ததுதான்  எல்லாம் 
நவீன தமிழகத்தின் சிற்பியே
உம்மை கொண்டாடி மகிழ்கிறோம் 
..
தலைவா..
வற்றாத நதியாய்..
தமிழர் நெஞ்சில்
நிலைத்து நிற்கும் 
பேரருளாளனே..
திராவிடப் பெருஞ்சுவராய் 
இனத்தை காத்த நின்ற 
திராவிடப் பேரரசனே..
..
ஜூன் 3 ..
99 வது அகவை தினம் 
வாழும் நின் புகழ் 
வையகம் உள்ளவரை 
..
கலைஞருக்கு
புகழ்வணக்கம் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment