பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு நீட் விலக்கு வேண்டும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக தரவேண்டும் ஒன்றிய வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மற்ற மாநிலங்களை விட அதிகம் ஆனால் தரவேண்டியதை தர மறுப்பது ஏன் .. இந்த மாநிலம் சமத்துவத்தை போதிக்கும் சமூகநீதியின் அடித்தளம் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பேசினார் .. இவர்தான் தைரியமான முதலமைச்சர்.. முன்பு அடிமைகளை கண்டவர்கள் இப்போது சரியான ஆளுமையை பார்க்கிறார்கள் ..
பிரதமரின் முகம் காண ரசிக்கதக்கதாய் இருந்து🤣..
..
பிரதமரைPAM வரவேற்ற தமிழகம்
மோடியை வைத்து செய்தது .. GOBACKMODI டிரெண்ட்னானது ..
இதற்கு பின்னால் தேசவிரோதிகள் என எல்.முருகன் சொல்வதை கேட்க சிரிப்பு வருகிறது.. ஆம் இந்துத்துவ தேசவிரோதிகள் .. முருகன் முதல்வர் பெயரை உச்சரித்தபோது ஏற்பட்ட ஆரவாரம் அடங்க நேரம் பிடித்தது.. இது இயல்பாக வரவேண்டும் வலுகட்டாயமாக வரவழைக்க முடியாது .. மோடியின் பெயரை, ஆர்.என்.ரவியின் பெயரை உச்சரித்த போது வராத கரவொலியொசை தளபதி பெயரை சொன்னவுடன் எழுகிறதே.. அதுதான் உழைப்பவனுக்கு உண்மையானவருக்கு நல்ல தலைவனுக்கு கிடைக்கும் மரியாதை..
..
நெஞ்சில் கனமில்லை அதனால் பயமில்லை .. பொய்ச்சொல்லி அரசியல் செய்வில்லை.. வாயால் வடை சுடவில்லை .. ஏமாற்றவில்லை .. 56 இன்ச் என விடைக்கவில்லை .. எதுவெல்லாம் இயலும் என ஆய்ந்து மக்களுக்கு எது தேவை என உணர்ந்து நாட்டின் நிலை மக்களின் பரிதவிப்பு, அவர்களின் இன்னல்களை களைய எதை செய்யவேண்டும் எதை அவசரமாக செய்யவேண்டும் என ஆட்சி நடத்துகிறார் முத்துவேலர் பெயரன் கலைஞரின் மகன் .. அதனால்தான் மக்கள் கொண்டாடுகிறார்கள்..
..
மக்கள் அவதியுரும் போது கொஞ்சமும் சஞ்சலபடாமல் லிங்கத்தை தூக்கிகொண்டு அழுகிய அரசியல் செய்வோருக்கு எப்படி மக்களாட்சி செய்யவேண்டும் என பாடம் நடத்தியிருக்கிறார் .. தகுதியற்றவர்களை அமைச்சராக்கி நாட்டை புதைக்குழிக்கு கொண்டு செல்லும் மதமேறியமடையர்களுக்கு திராவிடமாடல்" குறித்து வகுப்பெடுத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்..
..
திராவிட மாடல் என்றால் என்ன..? நல்ல வகுப்பெடுத்தார் .. இங்கே பேதமில்லை, என்ன ஆடை உடுத்தவேண்டுமென கட்டாயமில்லை, விருப்பான உணவை உண் யாரும் தடுக்கவோ தடைபோடவோ மாட்டார்கள் .. சமத்துவம் சமூகநீதி பிரதானம் .. ஹிஜாப் அணிந்தும் பரிட்சை எழுதலாம், பெண்கள் கல்வி மிக முக்கியம் இரண்டு மீட்டர் கூடுதல் துணிக்காக 20,000 பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை போடமாட்டோம், இங்கே எல்லோரும் சமம் .. பள்ளத்தை இருப்போரை உயரத்திற்கு கொண்டுவர பகுத்தறிவுத் துணைக்கொண்டு உழைப்போம், கல்வி கட்டமைப்பை உலகம் வியக்குமளவு உயர்த்திகாட்டுவோம், மதவெறிக்கு இங்கே இடமில்லை அண்ணன் தம்பி மாமன் மச்சானாய் மகிழ்ந்து வாழ்வதே திராவிடம் சமைத்தது என பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லாமல் சொன்னார் ..
..
இவர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி ..
பெருமைக் கொள்கிறது தமிழ்நாடு
அண்ணனை,தம்பியை,அடுத்தவீட்டுகாரனை அறியணையேற்றியதைப்போல கொண்டாடுகிறது தமிழ்நாடு ..
தளபதி தமிழர்கள் தவம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment