மடாதிபதிகள் எப்போதிலிருந்து "இந்துத்துவா "வை கையிலெடுத்தார்கள் .. துறவறம் அன்பு அகிம்சை என வாழ்ந்த பீடங்கள் இன்று ஹிம்சை செய்கிறது
..
தருமபுரம் மடாதிபதி 1962 ம் ஆண்டு இந்த வருடம் மட்டும் அனுமதியுங்கள் அடுத்தவருடம் முதல் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு இடம்பெறாதென தவத்திரு குன்றக்குடி அடிகளார் திராவிட கழக எதிர்ப்பை தொடர்ந்து பெரியார் சந்தித்தது கேட்டுக்கொண்டார் அதைப்போல் 1963 ல் பல்லக்கு சவாரி நிறுத்தபட்டது .. இப்போது வந்துள்ள பண்டார சன்னதி திருப்பனந்தாளில் திராவிட கழக எதிர்ப்பை தொடர்ந்து 12.02.22 அன்று நடந்தே சென்றார் ..திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பவும் பல்லக்கு என பிரச்சனை செய்கிறார்கள் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக இப்போது பாஜக ஆதரவோடு முயற்சிக்கிறார்கள் ..
மூன்று மாதங்களுக்கு முன் எடுக்கபட்ட முடிவை மாற்றிக்கொண்டதின் பின்னணி குறித்து விசாரிக்கபடவேண்டும்..
..
மன்னார்குடி ஜீயர் அமைச்சர் பெருமக்கள் தெருவில் நடமாட முடியாதென பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார் .. எங்கே கைது செய்யபட்டுவிடுமோ என கருப்பு கொடி காட்டுவதை தான் அப்படி சொன்னேன் என பல்டி அடிக்கிறார்
மதுரை மடாதிபதியோ நானே வருவேன் என்கிறார் திடீரென உயிருக்கு ஆபத்தென புலம்புகிறார் .. பாஜக தலைவர் நானே தூக்குவேன் .. திட்டமிட்டு கலவரத்தை நிகழ்த்த முயற்சிக்கிறார்கள் .. ஆரம்பத்திலேயே இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் Chief Minister of Tamil Nadu தனிகவனம் செலுத்தி கலவரத்தை தூண்ட நினைப்போரை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் காவிகட்டினால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் நடத்தாலாம் என எண்ணுவோருக்கு இது உத்திரபிரதேசம் அல்ல தமிழ்நாடு என புரியவைக்கவேண்டும்
..
இப்போதெல்லாம் மதகுருமார்கள் துறவிகள் குளுகுளு அறைகளில் சுகவாசம் வாழ்கிறார்கள் .. ஆயிரம்கணக்கான ஏக்கர்களில் சொத்துகள், கணக்கின்றி வருவாய் கேள்வி எழுப்பினால் மதத்தை போர்வையாக்கி ஒளிந்து கொள்ளுதல் .. அதைவிட கேவலமாக அதிமுக அடிமைகள் பல்லுக்கு சுமப்பதை மரியாதை குறைவாக எண்ணகூடாதென எடப்பாடி சொல்வதை கேட்டு உண்மையில் வருத்தம் வரவில்லை மானசோரம் கெட்டு காலில் விழுகிறவர்களிடம்
"மானமொன்றே பெரிதென கொண்டு வாழ்ந்ததெங்கள் இனம் " என சொன்னால் புரியவா போகிறது ..
பல்லக்குத் தூக்குபவரின்
தோள்வலியும், உடல்வலியும்.....
பல்லக்கில் அமர்ந்து பவனி வருபவனுக்கு தெரியாது.. என்பார் இனமான பேராசிரியர் .. உண்மையில் பாஜகவின் முகமாகதான் அதிமுக செயல்படுகிறது ..
அதிமுக பாஜக தவிர்த்து எல்லா கட்சிகளும் பல்லக்கு தூக்குவதை எதிர்க்கிறார்கள் .. வேண்டுமென்றே கலவரம் செய்வதற்காக பாஜக தூண்டுதலில் நடப்பதாக தமிழக கட்சிகள் சொல்கின்றன
..
தமிழ்நாட்டிற்கு சம்மந்தமில்லாதவை "இந்து" நிகழ்ச்சிகள் என்ற பெயரில் புகுத்தப்பட்டது.அப்படி வந்ததுதான் பட்டின பிரவேசம் என்கிறார்
தமிழ் சைவ பேரவை
கலையரசி நடராஜன் அவர்கள் .. உண்மைதான் ..
பல்லக்கை தூக்குவேன் என்பதிலும் தூக்குமிடத்தில் இருப்பேன் என்பதிலும் இருக்கிறது இவர்களின் இந்துத்துவ தர்மம் .. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது கூட தீண்டாமையை உணர்த்துவதை புரிந்துக்கொள்ளாதவரை துறவிகள் கொகுசு வாழ்க்கைதான் வாழ்வார்கள் ..
ஆரம்பத்திலேயே களைய வேண்டியவைகளை களைகளை பிடிங்கியெறியாமல் போனால் பயிர் நாசமாகும் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment