Welldone mks
நீண்டநாட்களாக நாம் கேட்டுக்கொண்டிருந்த விடயம்
ஏன் இல்லை, எங்கே தொலைத்தோம் ,எப்படி நடந்தது என நாம் யோசிக்க வைத்தது ..
பாசறை இல்லையென்றால் படைவரிசை இல்லை என்றார் நம் அண்ணா ..
..
ஆம் .. தெருமுனையில், திண்ணையில், சிகையலங்கரா நிலையங்களில், பேசுபொருளாக இருந்த திராவிடம் .. இனத்தை மொழியை பண்பாட்டை அசைபோட்டு அடுத்ததலைமுறைக்கும் சேர்த்து பயிற்சி தந்தது .. வெற்றியும் இனி திராவிடத்தை யாரும் எதுவும் செய்திட முடியாதென்ற அசட்டுத்தனமும் கூட வர அயர்ந்து போன நேரத்தில் காத்திருந்த பகை நம் குரல்வலையை கடிக்க நாம் வளர்த்தவர்களை கொண்டு ஏவி விடுகிறது .. மதவெறியை பரப்பி சமூகத்தை பரப்பரப்பாக வைக்க முனைகிறது .. அதற்கு தோதாய் திராவிட பேசிய போலிகளை, அடிமைகள் தோல் உதிர்ந்த கோழியைப்போல நடுநடுங்கி நிற்கிறார்கள் .. பணத்திற்கு சிலர் பிணமாய் கிடக்கிறார்கள் .. விலைக்கு போன வீணர்களால் திராவிடம் பெற்ற உரிமைகள் பறிபோகின்றன ..
அஞ்சாமை எமதுடமை என்ற சமூகம் இன்று கோடாரிகளால் பிளக்கபடுகிறது ..
..
மதவாத நச்சுவிதைகளை தூவிட எத்தனிக்கும் தேசவிரோத சக்திகளையும் அதற்கு துணைப்போகும் அடிமைகளையும்
விலை போகும் வீணர்களையும் அடையாளங்காட்டி அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமுமின்றி பாதுக்காத்திட புதிய பட்டாளத்தை உருவாக்க வேண்டுமென மேதகு முதலமைச்சர் திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது ..குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடம் பெருமளவில் சமூகநல்லிணக்கங்களையும் சமூகநீதியை திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்ததமான எல்லாருக்கும் எல்லாம் எல்லோரும் சமம் என்ற உயர்நோக்கை கொண்டு செல்லவேண்டும்.. அதை முனைப்போடும் வேகத்தோடும் செய்திட மாவட்ட செயலாளர் முனைந்திட வேண்டும்..
..
குறிப்பாக பள்ளி கல்லூரிகளை ஆர்எஸ்எஸ் பயிற்சி களமாக மாற்ற முந்தைய அடிமை அதிமுக அரசு துணைப்போனது அதன் வீக்கம் இப்போது புரிய தொடங்கியிருக்கிறது .. மாணவர் சமூகத்திடையே நல்ல விதைகளை விதைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது .. விஷமேறிய நச்சுத்தன்மையை நீக்கும் நல்லவைகளை இந்த மாநிலம் சமத்துவத்தை ,சகோதரத்துவத்தை வேற்றுமையிலும் இணக்கத்தோடும் செயல்படுவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பும் நமக்கிருக்கிறது ..
..
பதவி பொறுப்பு இதையெல்லாம் கட்சிக்கென்று சில கடமைகள் உண்டு .. திராவிடம் நீர்த்துபேகாமல் காத்திடவேண்டும்..
பகைவர் நன்கு அறிந்து நீண்டநாட்கள் காத்திருந்து அதிகாரம் கைக்கு வந்ததும் ஆட்டம் போடுகிறார்கள் .. நம் உரிமையை நம்மில் முதுகொடிந்து போன கோழைகளை விலைப்போன வேசிகளை கொண்டு பறித்தார்கள் .. நல்வாய்ப்பாய் மக்கள் நம்மிடத்தை அதிகாரத்தை தந்ததால் மிச்சமிருந்தது களவாடாமல் காத்துநின்றோம் .. வரும் தலைமுறை சரியான பாதையில் செல்லவும் .. நல்லிணக்கத்தோடும் நல்லுறவோடும் இந்த சமூகம் வாழவும் காக்கும் கடமையை உணர்ந்தே #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் சரியான முடிவெடுத்து பாசறைக் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகிறார் ..
..
திராவிடமாடல் ஒன்றே மனிதசமூக மேம்பாட்டிற்கு உகந்தது நாட்டிற்கு கேடுவிளைவிக்காமல் மக்கள் நிம்மதியோடு மத சாதி சண்டையில்லாமல் வெறுப்புணர்வில்லாமல் வாழ வகைசெய்யும் அறிந்து இளைஞர்களிடத்தில் வளரும் தலைமுறைய நல்லதாய் கட்டியெழுப்ப தொடங்கியிருக்கிறார்..
பகைவெல்ல படைவரிசை தேவை
அது பாசறையால் உருவாக்க வேண்டும் ..
நல்லதே நடக்கும் என நம்பிக்கை பிறக்கிறது ..
நன்றி M. K. Stalin
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment