நாளுக்கு நாள் மெருகேறுகிறார் மெருகேற்றுகிறார் ..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
நிதானமாக மிக தெளிவாக தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கிய நகர்வு .. சிறந்தவர்களை துறை வல்லுநர்களை கொண்டு ஒவ்வொரு அடியும் உயரத்தை நோக்கியதாக இருக்கவேண்டுமென்று செயல்படுகிறார் .. வீண் செலவுகள் குறைக்கபடுகின்றன, மாநிலத்தில் வருவாய் பெருக்கம், பணவீக்கத்தை இந்திய ஒன்றியம் 8% விழுக்காடு ஆனால் தமிழகம் 5% விழுக்காடாக குறைகிறது பற்றாகுறை 60 ஆயிரத்திலிருந்து40 ஆயிரமாக குறைகிறது ..
எப்படி சாத்தியமானதென மூளை கூட சுமையாக கருதும் சீதாராமன்கள்
வியக்கிறார்கள்..
..
நீங்கள் இடிக்க கற்றுதருகிறீர் நாங்கள் ஆக்க கற்று தருகிறோம் அவ்வளவுதான் .. கல்வியறிவில் சிறந்து விளங்கினால் மக்களிடையே மதமோ சாதியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. படி எனச் சொல்வது தான் இயக்கத்தின் தலையாய பணி ..
அதற்காகதான் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 36 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டிருக்கிறது இந்திய துணைக்கண்டத்தில் எந்த மாநிலமும் ஒதுக்காக தொகையை
ஒதுக்கி கல்வியில் சிறந்த நாடாய் உயர திராவிட மாடல் அரசு முயல்கிறது ..
..
தலைவர் தளபதி.ஸ்டாலின் அவர்கள்
திராவிட மாடல் என்பது
எதையும் இடிக்காது உருவாக்கும்
எதையும் சிதைக்காது
சீர் செய்யும்
யாரையும் பிரிக்காது
ஒன்று சேர்க்கும்
யாரையும்
தாழ்த்தாது சமமாக நடத்தும்
யாரையும் புறக்கணிக்காது
அரவணைக்கும் இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல
ஒரு இனத்தின் ஆட்சி என்றார்
எவ்வளவு தெளிவு ..
நூற்றாண்டு கண்ட இயக்கத்தின் அடிப்படையை, திராவிடப் பெருச்சுவராய் காத்துநின்ற அய்யா அண்ணா கலைஞர் போன்றோரின் உழைப்பில் கட்டமைக்கபட்ட கொள்கையை யாரெல்லாம் திராவிடத்தை நசுக்கிவிடலாம் என பார்த்து ஏமாந்து நிற்போருக்கும் பலநூற்றாண்டு வன்மத்தோடு நம்மை ஏளனம் செய்யும் திமிர்பிடித்த பாசிச கோமாளிகளுக்கு பாடம் எடுத்திருத்திருகிறார்
..
நாங்கள் பிறமத வழிப்பாட்டுதளங்களை இடிப்பவர்கள் அல்ல கல்விசாலைகளை உருவாக்குபவர்கள்.. மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்து நற்குணத்தை சிதைப்பவர்கள் அல்ல எதையும் சீர் செய்து அழகு பார்ப்பவர்கள்.. ஏற்றதாழ்வைச் சொல்லி பிரிப்பவர்கள் அல்ல சமத்துவத்தை சொல்லி சக மனிதனை மானத்தோடும் நேர்மையோடு உரிமையோடும் வாழ வழி செய்பவர்கள் .. கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் அறிவிலி கூட்டமாய் நின்றாலும் முட்டாள்த்தனமாக மூடநம்பிக்கை கொண்டிருந்தாலும் பல்லக்கில் தான் செல்வேன் என அடம்பிடித்தாலும் அரவணைத்து அழைத்துச் செல்லும் சுயம் தெளியும் வரை என சொல்லி திராவிடத் தலைவனாய் தலைநிமிர்ந்து நிற்கிறார் ..
..
இத்தனை பக்குவத்தோடு ஒரு தலைவனை காண பெரும் மகிழ்ச்சி .. நாடு கண்ட நல்ல தலைவர்கள் வரிசையில் முன்னிலை நிற்கிறார் .. பல்துறை வித்தகர்கள் பன்மொழிப்புலமை கொண்டவர்கள் நிர்வாகத்தில் தன்னை சாணக்கியன் என்றவர்கள் சில நேரங்களில் கொள்கையில் கூட சமரசம் செய்தவர்கள் உண்டு .. சிலருக்கு காலம் வாய்ப்பை நீண்டகாலம் தரவில்லை தந்த வாய்ப்பை சில காரணங்களுக்காக தாமதபடுத்தி செயல்படுத்தியவர்கள் உண்டு .. (அண்ணா கலைஞர்) ஆனால் நீண்ட அரசியல் அனுபவம் தளபதி ஸ்டாலின் அவர்களை தெளிவாக செயல்பட வைக்கிறது .. கலைஞரிடம் பயின்ற வித்தைகள்
அவரை மெருகேற்றி மிளிர வைக்கிறது .. நிதானம் பேராயுதம் என்பதை உணர்ந்து எப்போது சுழற்றவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படும் முதலமைச்சர் .. எதிரிகளின் பெருங்கூச்சலும் பகைவரின் பதற்றமும் நமக்கு நல்ல தலைவர் இவரென அடையாளம் காட்டுகிறது முதிர்ந்து தருவைப் போல நிழல் தருகிறார் பலன் தருகிறார்
..
மௌலானா ரூமி அவர்கள் சொன்னதைப்போல
ராஜாளிபோல் முனைப்புக் கொண்டு
அட்டகாசமாய் வேட்டையாடுகிறார்
சிறுத்தை போல் கம்பீரம் கொண்டு எதையும்
போராடி வெற்றி பெறவேண்டும் எண்ணுகிறார்
குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தை வீணடிக்காமல்
ஒன்று வெறும் சத்தம்,
இன்னொன்று வெறும் நிறம்.. என்பதை உணர்ந்து செயல்படுகிறார்..
தளபதி அவர்கள்
செயல், காரியகாரர் நம்பிக்கையாளர், நல்ல தலைவர்
மக்கள் விரும்பும் தலைவர்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment