Wednesday, May 18, 2022

பேரறிவாளன் விடுதலையும் 
தமிழக அரசின் அதிகார வரம்பும் 
இங்கே உறுதியாகியிருக்கிறது 
31 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தூக்குத்தண்டனை ரத்து செய்யபட்டு அது ஆயுள்தண்டனையாக மாறியும் சட்டபோராட்டங்களும் நிறைய வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கிறது இது முக்கியமான வழக்காக வரும் காலங்களில் பேசபடும் இந்த தீர்ப்பு தொடர்ந்து சிறைகளில் வாடும்  எளியவரின் விடுதலைக்கு முன்னுதாரமாக எடுத்துக்கொள்ளபடும் ..
..
ஒரு தாய் தன் மகனுக்காக நீண்ட 
போராட்டம் வரலாற்றில் பேசபடும் ..
அந்த தாய்  அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி  கருணைக் காட்டுங்கள் என தட்டியது வீண்போகவில்லை கதவு திறந்தது .. ஆரம்பகாலங்களில் அவரை சில  ஈழப்பிணந்திண்ணிகள் தவறாக வழிநடத்தியதையும் நாம் பதிவு செய்யவேண்டியிருக்கிறது ..
..
நீண்டநாள்கள் சிறைவாசம் என்பது கொடுமையான தண்டனை .. இந்த தீர்ப்பு சொல்லும் சேதி விசாரணை கைதிகளாக நெடுநாட்கள் சிறையில் கழிப்போருக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது  மாநில அரசின் அதிகாரவரம்பில் குடியரசு தலைவருக்கு  தலையிட அனுமதியில்லை ஆளுநர் தன் அதிகாரவரம்பை மீறகூடாது அவர் கேபினட் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமே தவிர தனியாக கருத்து கூற கூடாதென தீர்ப்பு மாநில சுயாட்சியை வலியுறுத்துவதும் மாநில அரசே நீண்டநாள் சிறைவாசிகளை  விடுதலை செய்யலாம் என சொல்லியிருப்பது பெரும் நம்பிக்கையை விதைக்கிறது 
..
கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி 
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது..
சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.. 
..
ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்..
ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க வேண்டும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர்  முடிவெடுக்க  முடியாது..
ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர்..
..
அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை.. 
குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும்..  அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை கவர்னர் மீறிவிட்டார் .. காந்தியை கொன்ற கோட்சேவின் சகோதரர்
 (ஆயுள்தண்டனைகைதி) 14 ஆண்டுகளில் விடுவிக்கபட்டார் என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார் 
..
இந்தநேரத்தில் நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுளாக குறைத்து தொடக்கம் குறித்த #பேரருளாளன்_கலைஞரை நினைவுகூற வேண்டும் ..
நல்ல ஆட்சியை தந்த மக்களுக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu M. K. Stalin 
 அவர்களுக்கும் நன்றி!..
எழுவர் விடுதலையில்லாமல் எம் இனத்தின் விடுதலை இல்லை 
தொடர்ந்து முயற்சிப்போம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
செய்து முடிப்பார் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment