Tuesday, May 10, 2022

வெந்து தணியட்டும் ..
மக்களின் கோபம்  தீயாய் ..
மக்களின் மீது கவலைக்கொள்ளாமல் ஆட்சியாளன் தனக்காக தன் இனத்திற்காக, தனக்கு வேண்டிய முதலாளிகளுக்காக செயல்படுவானாயின் ..
எரியும் ..
எரிந்து சாம்பலாகும் 
வெந்து தணியும் நாடு..
..
இலங்கை மட்டுமல்ல இதோ இந்தியாவும் புகைந்துக்கொண்டிருக்கிறது .. கொரோனா தாக்கத்திற்கு முன்பு எரிப்பொருள் விலை என்ன இரண்டாண்டில் சதமடித்து சில கணவான்களின் கல்லாவை நிரப்ப ஆட்சியாளர்கள் மௌனமாய் சம்மதிக்க மக்கள் புகைந்துக்கொண்டிருக்கிறார்கள் .. 
பொருளாதாரம் தெரியாத பேதைகளால் நாட்டின்  வளர்ச்சி அகலபாதாளத்தை நோக்கி விரைகிறது.. ஏன் இப்படியென்றால் தயாராக இருக்கும் சாதி,மதம் .. 
மதவெறியில் எதையாவது தூண்டி பேசுபொருளாக்கி மறைக்க பார்க்கிறார்கள்.. 
..
ஒருவித பதற்றத்தோடு நாட்டை மக்களை வைத்திருந்தால் தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் மீறி யாராவது குரலெழுப்பினால் கொலை செய்வோம் நீதி தவறாத கனவான்களை வெட்டி கொல்வோம் மதகலவரத்தை தூண்டி குளிர்காய்வோம் .. பிற்போக்குதனத்தை விதைத்து மக்களை விலைபேசி கொள்ளையர்கள் ரௌடிகள் களவாணிகளை கட்சியில் சேர்த்து புதிய பாரதம் படைப்போம் .. மாநிலங்கள் தங்கள் பங்கை கேட்டால் பிரிவினவாதம் என முழங்குவோம்.. ஆட்சியாளரை கேள்வி கேட்க  மைக்கை நீட்டினால் 
OH MY GOD என ஓட்டம் பிடிப்போம் .. தயாத்து கட்டி எல்லையில்வைத்து பாதுகாப்போம் மீறி கேள்வி எழுந்தால் நேருவை சொல்லி வியக்கவைப்போம் .. நான்கு குஜராத்திகளுக்காக நாட்டை நாசமாக்குவோரே எச்சரிக்கை..
புகைந்துக்கொண்டிருக்கிறது
..
கனவான்களே..
இலங்கை எரிகிறது .. இதுவொரு எச்சரிக்கை
பசியும் பட்டினியும் பொருளாதார சீரழிவால் நாட்டை நாசமாக்கியவர்கள் ஓடி ஒளிய இடமின்றி தவிக்கிறார்கள்  இனத்தைச் சொல்லி பகைமுடித்து பின் மதத்தை சொல்லி கலவரபடுத்தியவர்கள் இன்று மக்களின் தன்னெழுச்சியால் மிரண்டோடுகிறார்கள்.. கொடூர ஆட்சியாளர்கள் விரட்டபட்டும் கொல்லபட்டதாகவும் தான் வரலாறு சொல்கிறது ..சர்வாதிகார தோரணை வீழ்ந்தே போகும் .. மக்கள் பிரிவினைவாதிகளை மதத்தை சொல்லி கலவரம் செய்வோரை சிறுபான்மையினரை சூறையாடுவோரை .. குறிப்பிட்ட மக்களின் வளர்ச்சிக்காக மற்ற அனைவரையும் புறக்கணிப்பதை அவர்களின் வளர்ச்சிக்கு தடைபோடுவோரை விரட்டியடிக்கும் காலம் வரும் .. கைமீறிபோனால் புகைவது எரிய தொடங்கும்  வெந்தே தீரும் ..
#வெந்து_தணியும் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment