Saturday, May 7, 2022

பேரன்பின் மு.க.ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu 

திமுக தலைவராக பார்த்து வியந்த கண்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்ற போது கசிந்த கண்களோடு பதற்றத்தோடும் ஒருவித பரிதவிப்போடும் இக்கட்டான சூழலில் பதவியேற்கிறார் என்ற படபடப்பும் இருந்தது .. மிக சதூர்யமாக நிர்வாக திறனோடு தன் சகாக்களை முடுக்கி தானும் களத்தில் நின்று வென்று இன்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார்
இரண்டாம் ஆண்டு இணையற்றதாக இருக்கும் என்ற இலக்கோடு நகர்வதே மிகப்பெரிய சவால்.. தன்நம்பிக்கையும் கடின உழைப்பும் நிர்வாகதிறனும் திறமையான துறைவல்லுநர்களின் வழிகாட்டலும் நேர்மையும் நிச்சயம் இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை பிறக்கிறது ..
..
தினம் தினம் ஒரு செய்தியோடு பகைவர்கள் காத்திருப்பதும் எப்படியேனும் வீழ மாட்டாரா அதை வைத்து அரசியல் நடத்தலாம் என 
அழுக்கு அரசியலை முன்னெடுப்போர்,  எப்படியேனும் ஒரு கலவரம் மதவெறியோடு இருந்தால் நலம், குறைந்தபட்ச சாதியமோதல் என காத்துகிடக்கும் கயமைகள் .. உள்ளுக்குள்ளே விசத்தை தேக்கிவைத்து காலம் வருமென காத்துகிடக்கிறார்கள் துரோகிகள் .. இனசண்டை மொழிசண்டை மதசண்டை என ஏதாவது நிகழ்த்த முடியாத என பாசிசத்தின் அடிவருடிகள் நப்பாசையோடு தவமிருக்கிறார்கள் .. ஊடகங்கள் அறமின்றி விலைபோனதும், நல்ல செய்திகள் அரசின் நல்லதிட்டங்கள் பேசபடாமல் தவிர்த்து மடைமாற்றுவதும் நடக்கிறது ..ஆனாலும் உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை மக்கள்  
உண்மையின் பக்கம் நிற்கிறார்கள் 
..
நிறைய திருத்தங்கள் வேண்டும் அய்யா .. உதவாகரைகள் அரசிலும் கட்சியிலும் உண்டு .. பதவி புகழ் அவர்களின் கண்களை மறைக்கிறது தன்னடக்கம் உயர்வை தருமென  என போதிக்க வேண்டியிருக்கிறது .. இத்தனை வெற்றிக்கும் பிறகு தன்னடக்கத்தோடு செயல்படும் உங்களை கண்டுபடித்திடவேண்டும் .. தலைமைப்பண்பிற்கு இலக்கணமாய் கலைஞர் இருந்தார் அதன் தொடர்ச்சியாய் தங்களை கண்டு வியக்கிறது நாடு  பதவியை பொறுப்பாய் உணர்ந்து செயல்படும் போது வெற்றியின் படி அருகில் வரும்  என்ற யதார்த்த பாடம் தங்களின் வெற்றி உணர்த்துகிறது.. நல்ல தலைவர்களை மக்கள் பற்றிப்பிடித்துக்கொண்டால் நாடு வளரும் உயரும் வரலாறு பேசும் என்பதின் அடையாளமாய் தங்களின் நல்லாட்சி திகழ்கிறது ..
..
கட்சியிலும் ஆட்சியிலும் புதிய இரத்தம் பாய்ச்சிட வேண்டும் பொறுப்பற்றவர்களை விலக்கி பொறுப்புணர்ந்து செயல்படுவோரை முன்னிறுத்தி பயிற்சி தரவேண்டும் .. கொள்கையில் தெளிவோடு, நெறியோடு, தன்னலமற்ற சேவை செய்யும் இளைஞர்களை பொறுப்பிற்கு கொண்டுவர "பயிற்சிப்பட்டறை " அமைத்திடவேண்டும் .. இன்னும் நூறாண்டுகள் நாம் பாசிசத்தோடு சண்டைபோட வேண்டிவரும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்திடல் வேண்டும்.. பெரியாரை பேரறிஞரை பேரருளாளனை சரியாக படித்துணர்ந்தவர்கள், நாட்டின் மீதும் இனத்தின் மீதும் மொழியின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்கள்,நல்லதை விரும்பி தீமையை உணர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்தோர், கண்டறிந்து களப்பயிற்சி தந்து பாசிசத்தை வீழ்த்தும் தளபதிகளாய் உருவாக்கிடவேண்டும் ..
..
எதுவும் எளிதில் கிடைக்காது கிடைத்தால் நிலைக்காது.. கடின உழைப்பும் நேர்கொண்ட நன்னடையும், திறனோடுகூடிய நிர்வாகவும் நல்ல பண்பும், கொள்கைத் தெளிவும், பொதுவாழ்வில் தூய்மையும்நேர்மையும் நல்லதொரு தொடக்கத்தையே தருமென இளைஞர்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. நல்ல தலைவன் கிடைத்திருக்கிறாரென்ற நிம்மதி மக்களிடத்தில் நிலைத்துநிற்கிறது 
தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சமூகநீதியை, சமதர்மத்தை, கொண்டதாய் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை படைத்திட பெரியார் கண்ட கனவை நினைவாக்கிட ஒன்றியத்திற்கே வழிகாட்டும் "திராவிடமாடல்" என பேர்சொல்லும் .. தமிழகம் ஒன்றியத்தின் முதன்மைமாநிலம் இதற்காக பட்ட துன்பங்களும் ஏசல்களும் கேலிகளும் நம்மை துளைத்துவிடவில்லை மாறாய் செழுமைபடுத்தி நிழல்தரும் "தரு" என உயர்த்தியிருக்கிறது ..
இன்னமும் நமது பணி தொடரவேண்டும் .. நல்லாட்சியில் தமிழகம் மிளிர வேண்டும் ..
வாழ்த்துகள் முதல்வர் அவர்களே எனச் சொல்லி தூரநிற்காமல்
வாழ்த்துகள் தலைவா என அரவணைத்து நிற்கிறோம் ..
இனி ..
தளபதி படையே தமிழகம் ஆளும் 
தமிழகத்தை திராவிடமே ஆளும்
..
என்றும் நன்றியோடு..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment