பத்தாண்டுகள் அதிமுக எப்படி தமிழகத்தை சீரழித்திருக்கிறதென்பதற்கு குறிப்பாக கல்வித்துறையில் நடக்கும் சில விருப்பதகாத விடயங்கள் சாட்சியாகிறது..
இன்னும் தெளிவாக கடந்த நான்காண்டில் அடிமைகளை எப்படி பாசிச சக்திகளால் மிரட்டபட்டு தங்கள் சித்தாந்தவாதிகளை கல்வித்துறை ஊடுறுவ செய்திருக்கிறார்கள் என்பதை படம்பிடித்துகாட்டுவதாக அமைந்தது மதுரை மருத்துவகல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி ..
..
நிறைய களையெடுக்க வேண்டியிருக்கிறது.. சுகாதாரத்துறையில் நீண்டநாட்களாக வெங்கட்ராமனின் பேரன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செயலாளராக பணிபுரிகிறார்கள் அவரை வேறொரு துறைக்கு மாற்றி தமிழக அரசின் கொள்கை சார்ந்தவரை நியமனம் செய்யவேண்டும் .. அதேபோல் உயர்கல்வித்துறை செயலாளர், கல்வி இயக்குரக செயலாளர் என உயர்பதவியில் பாசிச பாஜகவால் பரிந்துரை செய்யபட்டு அடிமைகளால் நியமிக்கபட்டவர்களை கண்டறிந்து காத்திருப்போராக மாற்றவேண்டும்
தமிழக அரசால் அங்கீகரிக்கபடாத உறுதிமொழியை ஏற்றவர்களை முதலாம் ஆண்டு பயில அனுமதிக்ககூடாது .. கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியதோடு நின்றுவிடாமல் புதிய டீன் நியமனம் செய்திட வேண்டும் ..
..
தமிழகத்தில் ABVP யின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செய்தியாளர் சந்திப்பின் பின்னணியை விசாரிக்கவேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் .. சகர மகரிஷியின் உறுதிமொழியை திணிப்பதன் மூலம் சித்தாந்தத்தை திணிக்க முயல்வது வெளிப்படையாக தெரிகிறது அக்னி பிராமணர்கள் மருத்துவர்கள் முன்னிலையில் எனும் போதே சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே கல்வி என்ற பார்பனக் கொள்கையை முன்னெடுக்க முயற்சிப்பது தெரிகிறது கூடவே பார்பனர்களை தூக்கிபிடிக்க நினைப்பதும் அவர்களை உயர்வானர்கள் என காட்டி மற்றவர்களை கீழானவர்கள் என சித்தரிக்கும் சனாதனக்கோட்பாட்டை மாணவர்களிடையே திணிக்க முயல்வதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது .. முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய விசசெடிகள் வளர விடுவது ஆபத்தானது
..
திமுக மாணவர்அணி ,இடது சாரி DYFI SFI முழு வீச்சோடு செயல்படவேண்டும் .. மாணவர்களிடையே மத சிந்தனையை ஏற்றதாழ்வை வெறியை உண்டாக்கும் பிற்போக்கு சக்திகளை விரட்டிட வேண்டியது அவசியம் அவசரமும் கூட.. முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu
தனி கவனம் செலுத்தி கல்வித்துறை புகுந்துள்ள நஞ்சு சக்திகளை வெளியேற்றிடவேண்டும் .. நல்லதொரு சமுதாயம் படைக்க நல்லவைகளை விதைப்போம் .. களைகளை பிடிங்கி எறிவோம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment