Thursday, May 5, 2022

ஓராண்டு ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. 
 திராவிட சித்தாந்தத்தை தூக்கிபிடிக்கிறார் நான் ஏற்றுக்கொண்ட இயக்கத்தை வழிநடத்துகிறார் என்பதையெல்லாம் தாண்டி மக்களின் முதலமைச்சராய் எப்படி இவரால் செயல்பட முடிகிறதென்ற வியப்போடு பார்க்கிறேன்..
.. 
கொள்கையில் தெளிவுண்டு அறிவோம்.. பகைவர் இவரென பிரகடனம் செய்துவிட்டு போர்புரிகிறார் என்பதும் அறிவோம்.. உள்ளும் புறமும்  (இயக்கத்திலும் வெளியிலும்)  எண்ணற்ற வசைபாடல்களும், இழிசொற்களும்,வன்மமும் துரோகமும், குறைகூறலும் உண்டென்பதையும் அறிவோம் .. ஒவ்வொரு நொடியும் இயங்கவிடாமல் தடுக்க பெரும் சக்திகளின் கூடாலோசனையும் காய்நகர்த்தலும் உண்டு ..ஆயினும் ஏற்ற உறுதிமொழிக்கொப்ப பாகுபாடின்றி வாக்களித்தோர் வாக்களிக்காதோர் என்ற  ஏற்றதாழ்வற்ற நேர்நிலையோடு சமசரமற்று ஆட்சிசெய்வதும் எதிரிகள் கதிகலங்குவதும் பகைவர் தினம்தினம் மூக்குடைபடுவதும் காணும் போது திராவிடம் சரியான தலைவனை இனங்காட்டியிருக்கிறது என்பதை எண்ணி வியக்கிறோம் ..
..
பத்தாண்டு பாழ்ப்பட்ட நிலத்தை பதப்படுத்தவே சில ஆண்டுகளாகும்.. ஆனால் ஓராண்டில் எப்படி சாதிக்கமுடிந்தது .. பதிவியேற்றபோது எங்கும் அலறல் சத்தம் எங்கே கூட இருப்பவன் உயிர்போய்விடுமோ குடும்பத்தை தாங்கும் தூண் சரிந்துவிடுமோ ஆதரவற்று போய்விடுவோமோ என மக்களின் அழுகுரல் .. உயிர்வளி ( ஆக்சிஸன்) கிடைக்காமல் மருத்துமனைகளில் இடமில்லை என மக்கள் திண்டாடிய போது பொறுப்பேற்று சிலதினங்களுக்குள்ளாகவே கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து தானே நேர்சென்று ஒவ்வொன்றையும் சரிபடுத்தி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட "கர்த்தனாய்" நின்ற பெருமகன்..
நிர்வாக சீர்கேட்டால் அடிமைகள் குலைத்துபோட்டதை சரிசெய்து வருவாய் இழப்பின்றி நேர்செய்து கல்வியில் புகுத்தபட்ட மடமைகளை களையவும் கல்வி எல்லோருக்கும் கிட்டவேண்டும் இல்லாதோர்க்கு எளிதில் கிட்டவேண்டும் அதற்கு தடையாய் இருக்கும் நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யபடவேண்டும் என சட்டரீதியாக முயற்சியெடுத்து ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் 
.. 
ஒவ்வோரு நாளும் புதிதாய் என்ன செய்யலாம் எப்படி அமைச்சர்களை அதிகாரிகளை விரைந்து செயல்பட வைக்கலாம்  என எதையும் பிழையின்றி செய்ய தனிகவனம் செலுத்தி உழைத்துக்கொண்டிருக்கிறார் .. இவருக்கு சலிப்பே வருவதில்லை நல்லது செய்யவே நேரம் போதவில்லை குறைகூறுபவர்களைப் பற்றி நான் ஏன் கவலைபடவேண்டும் என மிக சரியாக நகர்கிறார் .. நல்ல விமர்சனங்களுக்கு செவிசாய்த்து எப்படி மக்களுக்கு நல்லதை செய்யமுடியும் என செய்துகாட்டி
மக்களிடம் நம்பிக்கை பெற்றிருக்கிறார் ..
..
பொதுமக்கள் நல்ல ஆட்சியென புகழ்வது வெளிப்படையாகவே தெரிகிறது.. குறைகளே இல்லையா என கேள்வி எழும்.. அதிகாரத்தில் இருக்கும் போது தான் அது முள்படுக்கையென புரியும் .. அவசரகதியில் எதையும் செய்துவிடமுடியாது .. கட்சிகாரனின் கோபமும் ஆதங்கமும் எதிரிகளை கையாள்வதில் தயக்கம் இருப்பதை அவர் அறியாமல் இல்லை .. தான் கொண்ட கொள்கைக்கு மாறாகவும் சிலவற்றை செய்யவேண்டி வரும் ஆம் வாக்களிக்காதவர்கள் எதிர்த்தவர்கள் அவர்களுக்கு சேர்த்துதான் ஆட்சி அவர்களின் உரிமையையும் ஆசைகளையும் நம்பிக்கைகளையும் நடத்திகாட்டுவதில் தான் நேர்மை இருக்கிறது.. தனக்கு பிடிக்கவில்லை தவறு என தெரிந்தும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதும் ஆட்சியாளின் கடமை அதுதான் அறம்  அதையும் செய்கிறார் நம் முதலமைச்சர் 
..
எல்லோருக்குமான அரசு இது .. தொழில் வளர்ச்சி தனிநபர் வருமானம் உயர்வு நிம்மதியான வாழ்வு,மதவெறியோ சாதீய தாண்டவமோ தலைதூக்காமல் அதேநேரம்
அனைவரின் உரிமைகளுக்கு மதிப்பளித்து வாழ வகைசெய்யும் அரசு .. கல்வி ஒன்றே வரும் தலைமுறையை மேம்படுத்தும் சமன்செய்யும் சீர்தூக்குமென நிதிநிலை அறிக்கையில் பெரும்பகுதியை ஒதுக்கி இந்திய ஒன்றியத்தில் தலைசிறந்து வழிகாட்டும் மாநிலமாய் தளபதி Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
தலைமையில் அரசு செயல்படுகிறது .. இந்தியாவில் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது 
திராவிட மாடல் ஆட்சி .. ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது 
தமிழ்நாட்டின் நலன் வளர்ச்சி இவைகளில் சமரசம் செய்துக்கொள்வதில்லை என்ற முனைப்போடு எல்லோரையும் அரவணைத்து ஆட்சி செலுத்துகிறார் ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment