Monday, May 31, 2021

கலைஞர்

கலைஞர் ..
ஜூன் மாதம் வந்தாலே வலைதளங்களில் கலைஞரின் புகழ்மாலைகள் வழிந்தோடும்..
சிறு கட்டுரையில் குறுநாவலில் கலைஞர் எனும் மகாநதி தடத்தை அடக்கிவிட முடியாது .. சொல்ல சொல்ல நமக்கே புத்துணர்வை தரும் 
செய்திகள் .. ஒரு மனிதனால் இவ்வளவை சாதித்துவிட முடியுமா என விழி பிதுங்கி நிற்கிறார் பிற மாநில மக்கள்..  இங்கே பிறக்காமல் போனாரே என ஏக்க பெருமூச்சு சத்தமாய் கேட்கிறது .. என்பதாண்டு பொதுவாழ்வில் நான்கில் ஒரு பகுதி அதிகாரத்திலிருந்து.. ஒவ்வொரு நொடியும் சமூகநீதியின் நிழலில் நின்று  திட்டமாய் சட்டமாய் நடப்பிலாக்கி ஒவ்வொரு குடும்பதலிருந்தும் பட்டதாரிகளை உருவாக்கவேண்டுமென்ற நோக்கோடு முதல்பட்டதாரிக்கு இலவச கல்வியை வழங்கி இச்சமூகம் நன்றியோடு நினைவு கூர்கிறதே ..
இந்தியாவிலேயே முதல் சட்ட கல்லூரியை நிறுவி அதற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியதெல்லாம் மகாராஷ்ட்ராவில் கூட நடக்காதது .. ஒவ்வொரு திட்டமும் சமூகநிலையெண்ணி தொலைநோக்கோடு பிற மாநிலங்கள் இருபது முப்பதாண்டு கழித்து யோசனை செய்வதை முன்கூட்டி நடப்பிலாக்கி தமிழகத்தை அறிவுசோலையாய் மாற்றியதில் பெரும்பங்குண்டு ..
..
பெரியாரை பார்பனீயம் இக்கொடூரமாக தாக்கியதில்லை காரணம் அவர் அரசு பதவிகளை வெறுத்தொதுக்கியது அவர்களுக்கு வரமாக தெரிந்தது .. ஆனால் பெரியாரோடு திராவிடத்தை ஓரம்கட்டிவிடலாம் என்று தான் பார்பனீயம் நம்பியது ஆனால் பெரியார் உருவாக்கிய தம்பிகள் இவ்வளவு வீரியத்தோடு முன்னெடுப்பதை கண்டு திமுக மீது அதிலும் கலைஞர் மீது வன்மத்தோடு காய் நகர்த்தினார்கள் .. ஊழல் என்று வடிகட்டிய நிரூபிக்க முடியாத கதைகளை சொல்லி திமுகவை உடைத்து அதன் வலுவை சிதைக்க நினைத்தார்கள் அதிகாரத்தில் திமுக வரகூடாதென்பதற்காக எதுவெல்லாம் சாத்தியமோ அத்தனையும் செய்தார்கள் மீண்டெழுந்து வந்த போதும் அதே சமூகநீதி பேசி ஆட்சி செய்தார் முன்னிலும் அதிகமாய் நலத்திட்டங்கள் வெளிப்படையான அணுகுமுறை தெளிவான தொலைநோக்கு பார்வை .. பொறுக்குமா பாசிசம் புலிகளை காரணம் காட்டி ஆட்சியை மீண்டும் கலைத்தார்கள் .. துவண்டுவிடவில்லை இந்த பெரியாரின் நேரடி சீடன் .. மீண்டுவந்து அதிகாரத்தில் வந்தவுடன் சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு அருத்ததியினர் உள் ஒதுக்கீடென "பணி செய்து கிடப்பதே தன் கடன் " என உழைத்துக்கொண்டிருந்தார் ..
இன்றைக்கும் பெரியார் மீதும் கலைஞர் மீதும் இந்த பாசிச கும்பல் வன்மத்தோடு அலைகிறதே அதிலிருந்து இந்த சமூகத்திற்கு இவர்கள் ஆற்றிய பணி வியப்பில் ஆழ்த்தும் ..
..
இன்றைக்கும் கொஞ்சமேனுெம் மெச்சபட்ட நிலையில் தமிழகம் நி்ற்பதற்கு கலைஞர் காரணம் என்பதை எதிரிகள் மிக தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் அவரால் பயன் அனுபவித்தவன் வசைபாடிக்கொண்டிருக்கிறான் .. விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டபோது அதிகம் பலன் பெறுகிறவர்கள் அதிமுககாரர்கள் என்ற போது நான் அவர்களை விவசாயிகளாக பார்க்கிறேன் என்ற #அறநெறியாளன் .. பட்டியலின மக்களின் மேம்பாடு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியது .. மலைவாழ் மக்களின் கல்விக்கு கால அவகாசம் வழங்கி அவர்களின் கல்வி வேலைவாய்ப்பில் உறுதிசெய்தது .. பிற்படுத்த மக்களின் இடஒதுக்கீட்டை தோழர்.வி.பி.சிங் காலத்தில் மண்டல்கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி அதற்காக பதவி இழந்த வி.பி.சிங்கிற்கு பாராட்டும் நன்றியும் செய்தார் அந்த OBC இடஒதுக்கீட்டை தான் ஒன்றுமில்லாததாக்கி இன்றைய மோடி அரசு பிற்படுத்தபட்ட மக்களின் நெஞ்சில் அவர்களே அறியாமல் வேல்பாய்ச்சுகிறது .. கிழவன் இல்லை என்கிற தைரியத்தில் .. ஆனால்
இத்தனையும் தன் வாழ்நாள் முழுவதும் செய்துகாட்டிய #பேரருளாளன் 
சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு மாநில சுயாட்சி என தனக்கான களத்தில் திராவிட இயக்கம் எதற்காக தொடங்கபட்டதோ அதன் அடிப்படைநோக்கிலிருந்து மாறாமல் கட்சியை வழிநடத்துவது அதுவும் அரைநூற்றாண்டு காலம் தலைவனாய் வீற்றிருப்பது வியக்கவைக்கும் செயல் .. 
..
இந்த கிழவனின் இழப்பை தமிழகம் உணர தொடங்கியிருக்கிறது ஒற்றை மனிதனாய் காவல் காத்து நின்ற பெருஞ்சேவையை கண்ணீரோடு நினைவு கொள்கிறது ..
நிறைய விமர்சனங்கள் அரசியல் முடிவுகளில் தவறுகள்.. நீண்ட தலைமையில் ஏற்படும் சறுக்குகள்.. நண்பனே பகைவனாய் புறம்நின்று தாக்கிய போதும் அரசியல் அறம் வெல்லுமென நம்பி .. தம்மை ஒதுக்கிநின்ற நேரத்திலும் கடமையாற்றி ஒரு அரசியல்வாதியின் இலக்கணம் ..எப்படி பயணிக்கவேண்டும் மக்கள் சேவையில் நின்றாடிய அழகு .. கடைசி வரை கொண்ட கொள்கையில் கிஞ்சுற்றும் மாறாமல் மக்கள் பணி செய்த மாபெரும் தலைவன் ..
தொண்ணூற்றெட்டில்
பிறந்த நாளில் நெஞ்சமெல்லாம் மகிழ நினைவுகூர்வோம்..
..
ஆலஞ்சியார்

Saturday, May 29, 2021

கலைஞர்98
என் தமிழ் ஆசான் #கலைஞர்..
..
இங்கே நிறைய பேருக்கு தமிழாசான் கலைஞர்தான்  எனக்கும் கூடதான் ..
இலக்கிய தமிழில் புதிய தோரணையை கட்டி நடனமாடியவர்.. சினிமா கலையில்  புதிய உக்திகள் சொல்லும் சொல்லின் பொருள் இருபொருள்பட சொல்வார் அது அரசியலையும் முன்னெடுக்கும் கதாபாத்திரத்தையும் பேசும்.. புரிந்துக்கொள்வார்கள்..
..
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.. அறிஞர் அண்ணா எழுதிய வசனத்தில் கூட நேரம் கருதி சிலவார்த்தைகளை நீக்கிவிட்டு படமாக்கிவிடலாம் ஆனால் கலைஞரின் வசனத்தில் ஒரு வார்த்தை நீக்கினால் கூட பொருள்  மாறிவிடும் அவரை கொண்டே மாற்றி எழுத வேண்டும் ..  கலைஞரின் எழுத்து எல்லோரையும் ஈர்க்கும்.. அது கொள்கை வேறுபாடு கொண்டவர்கள் கூட ரசித்து நிற்பர்.. எழுத்தில்/பேச்சில் சிலம்பம்,ஆடுவது அவருக்கு மிக இலகுவாக வரும்.. 
..
சட்டமன்றத்தில் ரகுமான் கான் போலீஸ் மான்ய கோரிக்கையில் .. பேசிக்கொண்டே இருக்கிறார் சபாநாயகர் ராசாராம் அமர சொல்லியும் கேட்கவில்லை.. உன்னை ஆண்டவன்தான் உட்காரவைக்கணும் என்ற போது .. கலைஞர் எழுந்து உட்கார் என்கிறார் 
உடனே அமர்ந்துவிட்டார் ரகுமான்.. கலைஞரை பார்த்து மிக்க நன்றி என்றார் சபாநாயகர்.. உடனே கலைஞர் எழுந்து நீங்கள் தானே ஆண்டவனால் தான் அமரவைக்க முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் .. என்று சிறிது இடைவெளி விட்டு தமிழகத்தை ஆண்டவன்தான் என்ற போது  சபை கைத்தட்டி மகிழ்ந்தது..
கலைஞரோடு சொற்போரில் வென்றவரில்லை.. போராட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பி சட்டமன்றம் வந்தபோது .. அனந்த நாயகி உங்க மாமியார்வீடு (சிறைச்சாலையை) எப்படி இருந்தது என்றார் உடனே.. உங்க தாய்வீடு நலம் என்று வாயடைக்க வைத்தார்..
 கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா?  என்றார் நூர்முகம்மது எம்எல்ஏ.. பதிலளித்த 
கலைஞர் குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது.. (6.5.1989).. என்றார்..
அதேபோல் காமாட்சி என்ற உறுப்பினர் மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்றார் பதிலளித்த 
கலைஞர் மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே!  என்றார்..இப்படி நகைச்சுவை குன்றாமல் நயத்தோடு நாகரீகம் கெடாமல் பதிலளிப்பார் ..
..
கண்ணதாசன் வெளிநாடு செல்லும் போது என்ன வாங்கிவர என்றபோது நல்லபெயரை வாங்கிட்டு வா என பொருட்பட சொன்னார்.. தன் தலையை சீவி விடுவதாக  வடநாட்டு சாமிகள் சொன்னபோது 
என் தலையை நானே சீவி பல நாட்களாகிவிட்டதென சொன்னவர்.. 
இப்போது கூட உடல் நலிவுற்று காவேரியில் இருந்தபோது செவிலிய பெண்ணிடம் உன்பேர் காவேரியா எனகேட்டு இல்லையென்க தண்ணி கேட்ட இவ்வளவு கம்மியாக கொடுக்குறீயே  காவரியான்னு கேட்டேன் என நகைச்சுவையோடு சொன்னவர்..
..
முரசொலி மற்றும்  குங்குமத்தில் தான் குறளோவியமும் சங்கத்தமிழும் தொடராக வரும் .. சங்கத்தமிழில்.. அவர் எழுதிய காதல் கவிதைகள்...பழைய நினைவுகளை கிளறும்..
// கண்ணல்லவோ கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ..என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தை அருவித்தவழ் சோலை அழகுமலர்கூட்டம்...:// சங்கத்தமிழில்..சொக்கிப்போவோம்..
..
தமிழ் அவருக்குமட்டுமே கட்டுப்படும்..
அரசியலில்..
சில நேரம் சிலேடைகளோடு எழுதுவார். எம்ஜிஆர் (மகோரா) பற்றி எழுதுவார்..
எல்லோரும் ராமாயணம் என்றிருப்போம்... புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
// 
#மானமிகு வாலியை
மறைந்து நின்று தாக்கிய 
மான்புமிகு  ராமசந்திரனை
மாவீரன் என மகாகவி கம்பனே ஏற்கவில்லை என்பார்..
..
கலைஞர் தமிழ் முன் இதுவரை யாருமே வென்றதில்லை இறுமாப்போடு சொல்வதில்லை உண்மை அதுதான்..
விதவை என்றெழுதும் போது கூட பொட்டுவைக்க முடியவில்லையென இளங்கவிஞன் விகடனில் கவிதை எழுதி கவலையுற்ற போது #கைம்பெண் என்று தமிழில் எழுது ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாமென பொருட்பட பேசியவர் ..
எம்ஜிஆர் மரணமடைந்தபோது கலைஞர் சிலை சில விசமிகளால் உடைக்கபட்டது ..
அப்போது கூட
"செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் 
அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அது வரை நிம்மதி எனக்கு..  என எழுத கலைஞரால் தான் மட்டுமே முடியும்..
எழுத்தால் பகைவரையும் கட்டிபோட்டவர்..
..
கலைஞர் எழுத்து சொல் செயல் எல்லாம் தமிழோடு இணைந்தது தமிழாய் நின்றது..
கலைஞரின் குரலை நேசித்து தமிழை சுவாசித்து வளர்ந்தவர் நாம்.. அந்த பெருமகனோ வாழ்ந்தோம் என்பதே பெருமைதான்..
..
#தமிழாசான்_கலைஞர்_பிறந்தநாள்_ஜூன்3
..
ஆலஞ்சியார்

Friday, May 28, 2021

பாலியல் வன்முறை மட்டுமல்ல வருமானவரி ஏய்ப்பு ,நிதிமுறைகேடு ஆசிரியர் சம்பள முறைகேடு என பத்மா சேஷாத்திரி பள்ளியில் தொடர்ந்து வரும் செய்திகளால் ஆடிபோன நிர்வாகம் சு.சுவாமியிடம் முறையிட பார்பனப் புத்தி தமிழக அரசை கலைப்போமென பழைய நினைப்பில் உளறிக் கொட்டுகிறார்.. கர்நாடக எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தேர்ந்தெடுக்கபட்ட அரசை இந்திய ஒன்றிய அரசு கலைக்க முடியாதென தெளிவாக சொல்லியிருப்பது தெரிந்தும் சேஷாத்திரி பள்ளிக்கு சங்கடத்தை உண்டுபண்ண நினைக்கிறார்..
தன் பேச்சை பாஜகவில் எவரும் கேட்பதில்லை என்பதும் தன் பதவிகாலம் வரும் ஏப்ரலோடு முடியபோவதும் சு.சுவாமியை உளறவைத்திருக்கிறது.. தன் வழக்கால் தான் ஜெயலலிதா சிறைச்சென்றாரென சொல்லி திரியும் சுவாமி, பேராசிரியர் அன்பழகன் வழக்கே தண்டனையை பெற்று தந்ததை அறிவார்..
மத்தியில் பார்பனர்களுக்கான அரசு இருப்பதால் எதையும் சாதித்துவிட முடியுமென மதுவந்தி வகையறாக்கள் பேசி இப்போது நெளிய தொடங்கியிருக்கிறார்கள்..
..
கடந்த பத்தாண்டாய் ஜெயலலிதாவின் இன பாசத்தில் குற்றங்கள் மறைக்கபட்டும் மீறி வெளிவந்ததெல்லாம் மிரட்டபட்டு,நீர்த்து போக செய்து , முடியாத போது நிரிவாகிகளை பணிஇடைநீக்கம் செய்து தப்பித்தவர்கள் இப்போது செய்வதறியாது கைபிசைந்து நிற்பது தெரிகிறது ..வேண்டபட்ட உயரதிகாரிகள் கூட மௌனம் காப்பதால் எங்கே முழுவதுமாக கைவிட்டு போய்விட்டு என அஞ்சுவதை தெரிகிறது.
..
காமகோடி ஜெயேந்திரர் மீது  பாலியல் குற்றசாட்டு சொன்னபோதும் சங்கர்ராமன் கொலைவழக்கிலும் இந்த பார்பன சமூகம்தான் குற்றசாட்டபட்டவருக்கு பின்னால் நின்றது .. பாதிக்கபடுவது தங்கள் சமூக குழந்தைகள் என்ற போதும் அதை குறித்து கவலைபடுவதில்லை.. மிகப்பெரிய அயோக்கத்தனம் சிறுகுழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.. முறைகேடுகள் விசாரிக்கபடும் அதில் எந்தவித சமசரமும் இல்லை..
..
மிஸ்டர் சுவாமி எங்களுக்கு நிறைய பணி  காத்திருக்கிறது .. போய் சின்மயி விவகாரத்தில் ஏதாவது செய்யமுடியுமா என பழைய "தொழிலை" செய்யலாம்..
எங்களுக்கு நிறைய வேலையிருக்கிறது.. பத்தாண்டாய் பார்பனீய மேலாதிக்கத்தை சரிசெய்ய வேண்டியிருக்கிறது .. வடவருக்கு தாரைவார்த்த வேலைவாய்ப்புகளை எம் மக்களுக்கு திரும்ப கிடைத்திட வேண்டும் கல்வியில் திணிக்கபட்ட வரலாற்று திரிபுகளை சூழ்ச்சிகளால் சேர்க்கபட்ட வன்மங்களை கலைய வேண்டியிருக்கிறது .. கல்வி எம் குழந்தைகளுக்கு திட்டமிட்டு மறுத்கபட்ட வாய்ப்பை திரும்ப பெறவேண்டியிருக்கிறது அடிமைகளை கொண்டு சீர்குலைத்த நிர்வாகத்தை சரிசெய்தல் பாசிச சிந்தனையுடையோரை அதிகாரித்திலிருந்து அகற்ற சமநீதியோடு கூடிய நேர்மையான ஒளிவுமறைவற்ற ஆட்சியை தரவேண்டியிருக்கிறது .. தவறிழைத்தவர்கள் தண்டிக்கபடுவார்கள் .. யாராக இருந்தாலும் எந்த உச்சியில் நின்றாலும் சட்டம்முன் நிறுத்தபடுவார்கள்..  நெஞ்சில் குற்றஉணர்ச்சியில்லையெனில் பதற தேவையில்லை.. இது 
மக்களுக்கான ஆட்சி 
திராவிட இயக்கத்தின் 
நான்காம் தலைமுறையின் ஆட்சி 
நல்லாட்சி.. நன்மை தரும் ஆட்சி  மக்கள் மகிழ்வர்.. 

..
ஆலஞ்சியார்

Wednesday, May 26, 2021

தமிழ் நாடு அரசு தன் செயல்பாடுகளில் ஒளிவுமறைவற்றதன்மையை கடைபிடிக்கிறது இது சிலருக்கு எரிச்சல் தருவதை வலைதளங்களில் பார்க்கமுடிகிறது.. கொரோனா நடவடிக்கைகளில் இத்தனை வேகத்தோடு செயல்பட்ட அரசை இந்திய ஒன்றியத்தில் காண இயலாது.. சட்ட நடவடிக்கைகளை நேர்மையோடு யாருக்கும் அஞ்சியோ இணங்கியோ செயல்படாமல் நேர்மைதிறனோடு செயல்படுவதை கண்டு சிலர் வாயடைத்து நிற்பதும் சிலர் பதைபதைப்பதை காணும் போது இத்தனைநாள் சுகபோகமாக இருந்தவர்கள் லாபி செய்தவர்கள் அதிகாரதிமிரில் ஆட்டம் போட்டவர்கள் உயர்ந்தவனென உல்லாசமடைந்து தற்சுகம் கண்டவர்கள் பதறுவதில் தெரிகிறது கடந்தகால அழிச்சாட்டியங்கள்..
..
கொரோனாவை கடந்த அரசு கையாண்ட விதம் இன்று பெரும்சுமையை தந்தாலும் தொடர்ந்து களப்பணியை முடக்கிவிட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து முதல்வரே நேரடி கண்காணிப்பில் துரிதபடுத்தியதால் இன்று உயிர்வளி கையிருப்பு தட்டுபாடற்றநிலையை அடைந்திருக்கிறோம்..

ஒரு வாரமாக தமிழ்நாடு தடுப்பூசி 
நிலவரம் - முதல் தவணை!
May 19 - 29,338
May 20 - 30,553
May 21 - 32,645
May 22 - 41,689
May 23 - 9,954
May 24 - 73,926
May 25 - 1,60,465
நேற்று 26 ந்தேதி 
2,24000 பேர்
என தொடர்ந்தால் மூன்றே மாதத்தில் தமிழகம் கொரோனாவிலிருந்து விடுபடும் ..
.. 
இடையிடையே சேக்கிழார்கள் வந்து எங்களாட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோமென கதைகள் சொல்வார்கள் .. அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் அலங்கோலத்தை 15 நாட்களில் சரிசெய்வதெல்லாம் எடப்பாடியல்ல மோடிகூட நினைத்து பார்க்கமுடியாதது ..
அடிமை பழநிசாமி ஆட்சியில் தடுப்பூசி இந்திய ஒன்றியத்திலேயே அதிகமாக 13% விழுக்காடு வீணாகியது ஆனால் இப்போது வீணாவது 1% விழுக்காடாக குறைந்திருப்பதெல்லாம் யாராவது எடப்பாடிக்கு சொல்லுங்கள் முதல்வராக இருந்தபோதும் சரி இப்போதும் சரி முட்டாளாகவே இருக்கிறார்..
..
பத்மா சேஷாத்திரி பள்ளியின் பாலியல் லீலைகள் இன்று நன்மதிப்பை கெடுத்துவிட்டதாக பார்பனர்கள் புலம்புகிறார்கள் .. ஆரம்பம் முதலே PSBB பள்ளி நிறைய தவறுகளை தங்களின் பார்ப்பன லாபிகொண்டு மறைத்ததும் ஜெயலலிதா ஆட்சியில் குழந்தையின் நீச்சல்குளம் மரணத்தை ஒன்றுமில்லாது செய்ததும் தொடர்ந்து அடிமைகள் ஆட்சியில் அதிகாரதளத்தில் தங்களின் தப்புகளுக்கு திரைபோட்டதும் இன்று வெளிவர தொடங்கியதும் 
மதுவந்தி திமுக ஆட்சி வந்த போதே தெரியும் இதெல்லாம் நடக்குமென்று என மடைமாற்ற பார்த்து தோற்றுநிற்கிறார்.. 
ஐந்து வருடங்களாக தொடரும் பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளை மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் பாலியல் வன் கொடுமை அரங்கேற்றியதெல்லாம் இப்போது
வெளிவருகிறது .. இந்த ஆட்சி நீதி நிலைநாட்டபடும்  என  பாதிக்கபட்டவர்கள்
நம்புகிறார்கள் புகாரளித்தால் ரகசியம் காக்கபடும் மாணவிகள் பெயர் வெளிவராதென அரசின் அறிவிப்பு அவர்களுக்கு தெம்பை தருகிறது..
..
 "அரங்கேற்றம்" இனத்திற்கு இதெல்லாம் பெரிதாக தெரியவில்லை தன் குழந்தைகள் மிஸஸ் ஒய்ஜிபி யின் மாணவர்கள் என்பது பெருமையென தலையில் ஏற்றி வைத்ததிருக்கிறார்கள் .. பார்பனர்களுக்கு மூளைவலிமை என்பதன் பொருள் எந்த தரங்கெட்ட மானங்கெட்ட செயலை நடத்தியெனும் தங்கள் உயர்வாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது இந்த "திறக்கபடாத கதவுகளில் மடிக்கபடாத விரிப்புகளில்"ஆளுமை செய்கிறவர்களுக்கு கைவந்தகலை.. ஆனால் ஆங்கிலேய காலமில்லை கு.காட்டி பாளையத்தை எழுதிவாங்க.. இப்போது சுயமரியாதைகாரர்கள் 
நேர்மையோடு ஆட்சி செய்பவர்கள் நன்னெறி அரசியலை கையிலெடுத்து அரசு இயந்திரத்தை படையோட்டம் நடத்துகிறவர்கள் இருப்பதால் இவர்கள் குரலில் கலக்கமும் பதைபதைப்பும் தெரிகிறது..
..
கடந்த ஏழாண்டாய் இந்திய ஒன்றியம் கயவர்கள் கையிலும் , கடந்த பத்தாண்டாய் தமிழகம் முட்டாள்அடிமைகள் கையிலும் சிக்கி சீரழிந்ததை மீட்கும் தொடக்கமாய் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய பாதை வகுத்து செயல்பட துவங்கியிருக்கிறது .. மாநில சுயாட்சி சமநீதி, சாதிசமயமற்ற நேர்மையான ஆட்சி எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் என தெளிவான பயணத்தை தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாய் செயல்பட தொடங்கியிருக்கும் 
நாம் முதல்வரின் கரங்களை பற்றிக்கொள்வோம்..
..
ஆலஞ்சியார்

Friday, May 21, 2021

நல்லகாலம் பிறந்திடுச்சு..
நல்லவர் கையில் நாடும் மக்களும் நிம்மதியாக.. இதனை இதனால் இவன் முடிக்கும் என மக்கள் அறிந்து அதிகாரத்தை தந்திருக்கிறார்கள்.. ஆட்சியாளின்
தகுதியானது மக்களின் துயரங்களை கண்டு வருந்தி அதை தீர்க்க அரசை விரை‌ந்து செயலாற்ற பணிப்பதும் உடன் இருந்து ஆலோசனை வழங்கி வழிநடத்துவதும்..
முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கடமையாற்றினார்..
..
குரலற்றவர்களின் குரலை கேட்பது அரசருக்கு அழகு.. மக்கள் விடும் சுவாசம் நிம்மதி தருமெனில் அவர்கள் துயரத்தில் நல்ல தலைவன் நமக்காக இருக்கிறாரென எண்ணம் நம்பிக்கை தருமெனில் கவலை மறந்து மக்கள் வாழ வகைசெய்யும் அரசு இருப்பதாய் உணர்ந்தாலே போதும் நல்லாட்சி என உளமாற மக்கள் சொல்வர்.. அடிமைகள் ஆட்சியை பார்த்து மனமுடைந்து போனவர்கள் மானகெட்டவர்களால் இழந்ததெல்லாம் திரும்ப வரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.. மாநிலத்தில் மக்கள் மீது நடத்தபட்ட துப்பாக்கி சூட்டையே தொலைக்காட்சியில் தெரிந்துக்கொண்டேன் என மாநில முதல்வரே ஒப்புதல் அளித்த கொடுமை இந்திய துணைக்கண்டத்தில் வேறெங்கும் கண்டிராதது .. யார் ஆட்சி செய்தார்களென ஒற்றை சம்பவம் நமக்கு சொல்லும்.. திறந்தவெளி பல்கலைகழகத்தில் திணிக்கபட்ட மதவெறி கருத்துகள் சிறுபான்மை சமுதாயத்தை திவிரவாதிகளாக்க மெல்ல விசத்தை பரப்பியதை உயர்கல்வி அமைச்சர் கலைந்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பது இந்த மண் சமூகநீதியில் என்றும் பின்வாங்காது மத,சாதிவெறியை கல்வியில் புகுத்துவதை ஒருகாலும் அனுமதிக்காதென்பதற்கு சான்றுகள்..
..
இரண்டே வாரத்தில் 12678 படுக்கைகளை உருவாக்கி வேறெந்த மாநிலத்தில் இல்லாத 
மருத்துவ வசதியை ஏற்படுத்துவதெல்லாம் வேறலெவல்.. தன் சகாக்களோடு தாமும் இணைந்து களப்பணியாற்றுவதெல்லாம் இந்திய ஒன்றியத்தில் வேறெங்கும் காணமுடியாது .. தான் பேசும் மைக்கை திருப்பி துறைசார்ந்த அமைச்சர்களை விளக்கம் தரவைப்பது ஜனநாயத்தின் மற்றொரு கூறு.. சாமானியர்கள் குரலை செவிமடுத்து உடனுக்குடன் தீர்த்து வைப்பதெல்லாம் திமுகவால் மட்டுமே முடியும்.. வாக்களித்தவர்   வாக்களிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் நீதி வழங்குவது நல்குடியரசின் அழகு..
..
கண்ணீர் விடுவதால் மக்களை ஏமாற்ற நினைப்பதற்கு பெயர் கையாளாகாத்தனம் .. பெருந்தொற்று வேகமாய் பரவும் காலத்தில் பொறுப்பேற்கிறார் அனைத்து அரசு துறைகளும் அடிமை அதிமுகவினரால் அலங்கோலபட்டுகிடக்கிறது .. விரைந்து களம் அமைத்து அமைச்சர்களை முடக்கிவிடுகிறார் பல்வேறு மாவட்டங்களில் war room   கட்டுபாட்டு அறை அமைத்து வெளிப்படையாக மக்கள் அறிந்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறார் ஊரடங்கில் கொண்டகடலை கொடுக்கவில்லை மாறாக ₹4000 இருதவணையாக தந்து ஏழைகளை நிம்மதியடைய செய்கிறார்.. தடுப்பூசியை உலகநாடுகளில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்ய ஆணைபிறப்பிக்கிறார் .. உயிர்வளி கிடைக்காமல் இறப்பென்று இருக்ககூடாதென பல்வேறு மாநிலம் நாடுகளில் இறக்குமதி செய்து தன்னிறவு அடைய செய்கிறார்.. மாவட்டம் தோறும் படுக்கைகள் உயிர்வளி படுக்கைகள் விரைந்து பயன்பாட்டிற்கு வருகிறது.. செவிலியர்கள் தற்காலிகமாக வேலைக்கமர்த்தபடுகிறார்கள் ..
 நான் ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட
கொரேனா தொற்றில்லை என செய்தி வரும் போதுதான் நான் மகிழ்ச்சியடைவேன் என முதல்வர் சொல்கிறார் நம் முதல்வர் ஸ்டாலின் ..
தாடி வளர்த்து நீலக்கண்ணீர் வடித்து மக்களை கொன்று குவிக்கவில்லை உலகின் மோசமான செயல்பாடுகளில் முதல் நபராக இந்திய ஒன்றிய பிரதமர் .. 
..
தமிழகத்தின் நன்கொடையாய் தளபதி.. விரைந்து செயல்படுவதை சதிகள் மூலம் தடுத்திட  தமிழகத்தை பதற்றத்தோடு வைத்திட ஆர்எஸ்எஸ் சதி.. 
4000 பேர் தவறுதலாக பதிவு செய்யபட்டதாக சொல்வதை ஏற்கமுடியாது இதன் பின்னில் உள்ள RSS பிரமுகர்கள் எச்சை போன்றவர்களை விசாரணை வளையத்திற்கு கொண்டுவரவேண்டும்..
medall நிறுவனம் கொல்கத்தாவில் எடுத்த கொரோனா டெஸ்டை கள்ளக்குறிச்சியில் எடுத்ததாக RSS பின்புலமுள்ள இயக்குனர்களை கொண்ட நிறுவனம் சூழ்ச்சி செய்ததை கண்டுபிடித்து உரிமையை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு இது குஜராத் உ.பி.இல்லை என்பதை உணரவேண்டும் .. இதன் பின்புலமாய் செயல்பட்டவர்கள் சட்டத்திமுன் தண்டிக்கபடவேண்டும்
அதே போல் பருப்பு கொள்முதல் கொள்ளையை ஒப்பந்தம் ரத்து செய்தால் மட்டும் போதாது ₹1400 கோடி ஊழல் செய்த எடப்பாடி உள்ளிட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தபடவேண்டும்..
..
நல்ல தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது .. அதேவேளை இந்திய ஒன்றியம் கேடுகெட்டவர்களிடம் .. 60 மாதங்கள் கொடுங்கள் ஏழைகளே இல்லாத  இந்தியாவை வல்லரசாக்கி காட்டுகிறேன் என 2014 ல் சொன்ன மோடி .. ஏழாண்டுகள் கழித்து இன்று மக்களை உயிர்வாழவே போராடுகிற நிலைக்கு தள்ளி போலிக்கண்ணீர் வடிக்கிறார்..
தயவை கூர்ந்து பதவி விலகுங்கள் பிரதமர் அவர்களே.
இந்திய ஒன்றியத்திற்கு ஸ்டாலின் போன்றவர்களே தேவை 
..
ஆலஞ்சியார்

Wednesday, May 19, 2021

நல்ல  ஆட்சியாளனை அழிவுகாலத்தில் அறிவாய் என்றார் சேகுவேரா..
..
ஆம் 
பெருந்தொற்று காலத்தில் 
இந்திய ஒன்றிய அரசின் மதவெறியால் இன்று மக்கள் பெருந்துயரை  சந்திக்கிறார்கள் 
தமிழகத்தில் அதிமுக அடிமைகள் தலையாட்டிகளாய் இருந்து மக்கள் பிரச்சனையில் அவர்கள் இடையூறுகளில் கூட கொள்ளையடிக்க முடியுமா என சிந்தித்ததும் முககவசம் கூட வலைத்துணியில் கொடுத்து காசு பார்த்ததும் அறிவோம் .. இரண்டாவது அலையெல்லாம் வராதென துறை அமைச்சரே சொல்லி இன்று மக்கள் அவதியுறுகிறார்கள்..
அதிமுக ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால்  பிணங்களின் வரிசையை தான் பார்த்திருப்போம் .. 
..
பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் பணியாற்றிட அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு தானே ஒவ்வொரு அசைவையும் கவனித்து குறையென தெரிந்தால் உடன் நிவர்த்திசெய்து ஒரு படை தளபதியாய் தமிழகத்தின்  முதல்வர் செயல்படுவதை  ஏடுகள் பாராட்டுகின்றன.. முதல்நாள் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நின்றதை கண்டு பதபதைத்தோம் .. மறுநாள் இரண்டே ஆம்புலன்ஸ் மட்டுமே காத்திருக்கும் நிலை.. 12464 படுக்கைகளை தமிழகமெங்கும் உருவாக்க  திட்டம் ஒரே வாரத்தில் 5000 பயன்பாடுக்கு  வருகிறது .. ஒரு புறம் செயல்வீரர் அமைச்சர் செந்தில் பாலாஜி.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.,தொழில்துறை அமைச்சர் தங்கம் என விரைந்து செயலாற்றுகிறார்கள்  .. சிங்கப்பூரிலிருந்து 5000 சிலிண்டர்கள் வரவழைத்து விரைவாக விநியோகம் செய்ய ஏற்பாடு.. 30T கொள்கலன் நெதர்லாந்திலிருந்து வரவழைக்கபடுகிறது .. விமானம் மூலம் உயிர்வளி (oxygen) கொண்டுவரப்பட்டு விரைந்து தேவையானவர்களுக்கு வழங்கபடுகிறது .. தேவையில்லாதவர்களை கண்டறிந்து உயிர்வளி  சேமிக்கபடுகிறது .. இப்படியொரு அமைச்சரவை இந்தியாவிலேயே காண்பதறிது ..
..
உலகளாவிய ஒப்பந்தபுள்ளி கோரபடுகிறது 3.5 கோடி தடுப்பூசி இலக்கை முடிவுசெய்து படையோட்டம் நடத்துகிறார்.. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தொழில்துறையை பணிக்கிறார்.. நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கபடும் என்கிறார் .. ஒவ்வொரு மாவட்டத்திலும் warroom கட்டுபாட்டு அறை 15 நிமிடங்களுக்குள்  தீர்வு .. என அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுகிறார்.. இந்த அரசு மக்களுக்கான அரசு  எதுவும் வெளிப்படையாக  இருக்கும் 17 ந்தேதி வரை 59 கோடி நிவாரணம் கிடைத்திருக்கிறது அது கொரோனா நிவாரண பணிகளுக்கு பயன்படும் என  அறிவிக்கிறார்.. ஆனால் PMCARE   பிரதமர் வசூலித்தது எவ்வளவு என கேட்க கூடாதாம் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது .. பணம் எங்கே  போனதென யாருக்கும் தெரியாது .. இவர் ஊழலை  ஒழிக்க வந்தவராம் நம்புங்கள் உலகிலேயே ஒரு அரசின் தலைவர்  நிவாரண தொகையாய் மக்கள் தந்ததை  சொல்லமாட்டாராம்.. எங்கேயும் கண்டதுண்டா .. கொரோனா நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவித்ததுண்டா .. அறிவியல்  துணைக்கொண்டு வெல்ல வேண்டியதை மாட்டுசாணி மூத்திரம் கொண்டு வெல்லலாம் என்கிற அறிவுடைய பிரதமரை நாடு கண்டு அலங்கோலபடுகிறது..
..
50 நாட்கள் தாருங்கள் இல்லையெனில் என்னை எரியுங்கள் என்றார் ஒன்றிய பிரதமர்..  தவறியதால் இன்று பிணங்கள் எரிய வரிசை கட்டிநிற்கிறது ..இந்திய ஒன்றியம் கண்ட மிக மோசமான பிரதமர் இவர்தான் .. படித்தபடிப்பு பொய், சொல்லும் செயலும் பொய், இவரை ஆட்டுவித்தவர்களே காரியம் முடிந்ததென கதைசொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் ..இந்த நாடு இந்த சீரழிவை சந்திக்க காரணமான ஆர்எஸ்எஸ் அமைப்பை,   அரச நிர்வாகத்தில் அதன் ஆதிக்கத்தை ஒழித்தால் ஒழிய இந்திய ஒன்றியம் சொல்லண்ணா  துயரையே காணும்.. தமிழகம் மட்டும் தனியாக  இருந்திருக்குமேயானால் உலகின் 26 வது பொருளாதாரத்தில் நிறைவுபெற்ற நாடாகியிருக்கும் என வல்லுநர்கள் சொல்வதை கேட்டிருப்போம் ..இதோ திராவிட ஆட்சியில் வேகமான நடவடிக்கைகள் யாரையும் எதிர்பார்க்காமல் பெருந்தொற்றை விரட்ட மக்களை காத்திட தன்னிகரற்ற தளபதியாய் நாடும்  மக்களும் நம்பிக்கை பெருமூச்சும் விடும் தலைவனாய் .. இத்தனை காலம் தவறவிட்டுவிட்டோமே  என எண்ணி வருந்துகிற நிலையை உருவாக்கியிருக்கிறார் ..
தளபதி படையின் படையோட்டம்
வருங்காலங்களில் எதிரிகளே இல்லாத நிலையை எத்தும் 
..
வேகமாய் சுறுசுறுப்போடு
ஒய்வில்லாத உழைப்பை தந்து
விளிக்கும் விளிக்கு செவிமடுத்து சரியான விமர்சனங்களுக்கு  மதிப்பளித்து ஜனநாயகதன்மையோடு ஆட்சி செய்கிறார்.. தொலைநோக்கும் 
சமூகநலனும், அனைவரின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து
திறமையான சகாக்களோடு களம்கண்டு சிறந்த ஆட்சியின் துவக்கமாய் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சாட்சியம் வகிக்கிறது
 ❤️❤️❤️❤️
..
ஆலஞ்சியார்

Sunday, May 16, 2021

மோடி அரசின் ஊழலும் இந்திய ஒன்றிய அரசு செய்த அயோக்கியத்தனமும் வெளிவரபோகிறது ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அதை சிறப்பாக செய்கிறார்.. 
தடுப்பூசிக்கு வெவ்வேறு  விலை நிர்ணயம் செய்து விற்பனையில்  கொள்ளைலாபம் பார்த்த சீரம் அதற்கு துணைப்போன கார்ப்பரேட் அரசு 
மாநிலங்களுக்கு₹400 விலை என்றதும் தனியாருக்கு  விலையை மூன்று மடங்கு உயர்த்தி நெருக்கடியான காலகட்டத்தில் லாபநோக்கோடு செயல்பட அனுமதித்தது ..
ஆனால் 
திமுக  அரசு பதவியேற்றவுடன் உலகளாவிய ஒப்பந்தம்கோரி விரைந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்ததும் பிற மாநிலங்கள்  இப்படியொரு வழியிருக்கிறதா என வியக்கின்றன .. உலகில் பைஸர் ஆக்ஸ்போர்ட் என பல நிறுவனங்கள்  குறைந்தவிலையில் தான் விற்கின்றன நேரடியாக கொள்முதல் செய்யும் போது அதன் விலைவிகிதம் குறையும் 
தடுப்பூசியில் மத்திய ஒன்றிய அரசு முதலுடைமைகளுக்கு சாதமகமான போக்கை கொண்டிருந்ததும் பெரும் கொள்ளை நடப்பதும் தமிழ்நாடு அரசின் இறக்குமதி கொள்கையால் வெளிவரும்..
..
அவசரகாலமாக கருதி அமைச்சர் பெருமக்கள் உழைக்கிறார்கள் நெதர்லாந்திலிருந்து உயிர்வளி
(  oxyzen)  கொள்கலன் 30T  இறக்குமதி செய்து விரைந்து பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்கிறார்கள் சிங்கப்பூரிலிரிந்து முதல்கட்டமாக 462 காலி சிலிண்டர் வரவழைத்து பகிர்தளிப்பதை விரைந்து செய்கிறார்கள்  மூடபட்டிருக்கும் ஆலைகளை திறந்து  விடுமுறையில் சென்றிருக்கும் நிபுணர்கள் வரவழைக்கபட்டு உயிர்வளி உற்பத்தி அதிகரிக்கபடுகிறது 
இரண்டேநாளில் தட்டுபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிக்கிறார்.. பதவியேற்ற பத்துநாளில் இதெல்லாம் நடக்கிறது .. நேற்று 100  ஆம்புலன்ஸ்கள் படுக்கைக்காக காத்திருந்த நிலை ஆனால் இன்றோ இரண்டு ஆம்புலன்ஸ் மட்டுமே நிற்கிறது தமிழகமெங்கும் 12463 படுக்கைகள் தயாராகிறது .. நோயின் வேகம் அதிகரித்திருக்கும் நிலையில்  வேகமாக அரசு நிர்வாகம் செயல்படுகிறது   war room கட்டுபாட்டு அறைக்கு முதல்வரே வந்து கண்காணிக்கிறார் மக்களுக்கு நம்பிக்கை தருகிறார்.. இதெல்லாம் பார்க்கிற போது பிறமாநிலங்கள் வியந்து பார்க்கிறது .. இந்திய அரசு கைகட்டி  கள்ளமௌனம் காத்துநிற்கும் வேலையில் பல்வேறு ஏற்பாடுகளில் வெளிநாடு உள்நாட்டிலிருந்து 
தேவைக்கேற்ப வரவழைத்து  மக்கள் உயிர்காக்கும் அரசாயாய் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைமையிலான மக்களுக்கான அரசு செயல்படுகிறது..
..
வெளிப்படையான சிறந்த நிர்வாகத்தை நேர்மையான அதிகாரிகளை கொண்டு திறம்பட  ஆட்சி செய்கிறார்.. பத்துநாட்களிலேயே நிலைமையை சீர்செய்ய முடியுமெனில் 7 ஆண்டுகளாய் களிமண் மூளைக்காரர்கள் இந்திய திருநாட்டை குட்டிசுவராக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.. 
அறிவியலை துணைக்கழைக்காமல் கைதட்டவும், விளக்குபிடிக்கவும் சொல்லி மடைத்தனமான ஆட்சி செய்ததன் விளைவு உலகில் முதல் நிலையை  நோக்கி தள்ளபட்டியிருக்கிறது .. கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்தும் கும்பமேளாவை தடுத்து நிறுத்த சாமியார்களிடம் கெஞ்சுகிற பிரதமர் .. பிரதமர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என சாமியார்கள் .. விதைத்தது தானே வளரும், மதத்தை கையிலெடுத்து மகுடம் சூடியவர்கள் இன்று மதமே வெறியாட்டம் ஆடுவதை தடுத்திட  முடியாமல் திணறுகிறார்கள் .. உயிர்வளி oxygen உதவியோடு உயிருக்கு  போராடியவனை அனுமான் புகழ்பாடச் சொல்லி கொன்றே விட்டார்கள் .. தமிழகத்தில் ஆவிபிடிக்க சொல்லி அறிவிலிக்கூட்டம் முயற்சிக்கிறது ..பலபேர் ஆவி பிடித்தால் கொரோனா பரவல்தான் வரும் தமிம்நாடு முதல்வர் உடனடியாக அதை தடுத்திட வேண்டும்.. 
..
மக்களாட்சி ஜனநாயக மாண்புகளை காத்து மக்களுக்கு இடர்  வருகிறபோது இணைந்து  செயலாற்ற வேண்டியது அவசியம் .. எதிர்கட்சி தலைவர் என்ன மருத்துவரா என கேள்வி கேட்காமல் அனைத்து கட்சியினர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து செயல்படுகிறது தமிழ்நாடு அரசு.. மத்திய ஒன்றிய  அரசின் பிரதமரை  காணோம் என அச்சிட்டு  தலைநகரில் ஒட்டபடுகிற அவலம் ..உள்துறை அமைச்சரை வெளியில் காணோம் .. சாணி பூசிக்கொள்ளவும் மூத்திரம் குடிக்கவும் மக்களிடம் சொல்லிவிட்டு தனக்கு வரும் போது எய்ம்ஸ் மருத்துவமனையில் தஞ்சமடையும் பேர்வழிகள் ..
நஸ்ரூதின் ஷாவின் வரிகள்  
நகரம் எரிகிறது என கேட்பதைவிட பைத்தியக்காரன் கையில் தீக்குச்சியை தந்தது யார்..
ஆம் பைத்தியக்காரர்கள் கையில் நாட்டை கொடுத்துவிட்டு முழிக்கிறோம்..
..
நாட்டிற்கு தேவை மோடிகள் அல்ல..
ஸ்டாலின்கள்..
ஆம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Thursday, May 13, 2021

ஒரு  அரசு செயல்படுவதற்கு  அவகாசம் தராமலேயே சிலர் குறை கிடைக்குமா என பார்க்கிறார்கள்..
இரண்டாவது அலை மோசமாகும் எனத் தெரிந்தும் முந்தைய அரசின் பொறுப்பின்மையே இன்றைய இக்கட்டான சூழலுக்கு காரணம் என்பதை மறைத்து சில சொரிந்து கொள்கிறார்கள் .. ஆட்சி பொறுப்பேற்றபோது  இருந்த நிலை தொடர்ந்திருக்குமேயானால் இன்னும் அதிக இழப்பை கண்டிருப்போம் 12600 படுக்கை வசதி என்ற இலக்கை நிர்ணயம் செய்துஒரே வாரத்தில் 5000 படுக்கைகளை கட்டமைத்திருக்கிறார்கள் .. இதற்கு முன் இருந்த  அமைச்சரும் செயலாளரும் யார் மீது பழிபோடலாமென எண்ணி சிங்கிள்சோர்ஸ்  என வக்கரத்தோடு பேசி  தங்கள் தோல்வியை மறைத்துதான் நடந்தது ..  இப்போது அமைச்சர் மா.சு அவர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார் .. பல்வேறு பகுதிகளாக பிரித்து அதற்கு அமைச்சர்களை நியமனம் செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் பணித்திருக்கிறார்.. அமைச்சர் செந்தில்பாலாஜி சேலத்தில் 500  படுக்கை கொண்ட கட்டுமைப்பை விரைந்து உருவாக்க போர்கால அடிப்படையில் வேலை நடக்கவேண்டுமென்கிறார்.. 
..
முதல் அலையில் அதிகபட்சமாக 12000 தொற்றுதான் பதிவானது ஆனால் இப்போது 30000 என பதிவாகிறது முதல் அலையைவிட இப்போது உயிர்வளி(ஆக்ஸிசன்) தேவை அதிகரித்திருக்கிறது .. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்கிறது விரைந்து  பகிர்ந்தளிக்க ஏதுவாக.. தடுப்பூசி அனைவருக்கும் விரைந்து கிடைக்க வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசே இறக்குமதி செய்கிறது .. 
..
ஆட்சிக்கு வந்து எழுநாட்களிலேயே கேள்வி எழுப்பும் ஊடகம் (சிலவைமட்டும்) எழு வருடங்களாக வாய்பந்தல் போடும் மோடியின் நிர்வாகதிறமையின்மையை ஏன் கேள்வி கேட்கவில்லை இரண்டாம் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தும் கும்பமேளாவை தடுக்க தவறியதும்  தேர்தல் பேரணியில் பிசியாக இருந்ததும் எரிகிற பிணத்தின் வாடையில் மதம் பெருமைபேசுவதையும், முட்டாளத்தனமாக  மாட்டுசாணியையும் மூத்திரத்தையும் புரமோட் செய்வதையும் கேட்க வக்கில்லை .. மோடியை காணவில்லை என  சில பத்திரிக்கைகள் மெல்ல தூக்கம் கலைந்து எழ  தொடங்கியிருக்கிறது .. பத்திரிக்கைகளை சந்திக்க தைரியமற்ற 52 இன்ச் மார்பழகன் எங்கு போனார் .. நாடே எரிகிறதே என உச்சநீதிமன்றம் கவலைபட்டும் வாய் திறக்க மறுப்பதேன் .. உ.பி.யை உலக சுகாதார மையம் பாராட்டுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பொய்பேசுகிறாரே எவ்வளவு கேவலம் கொரோனாவை விரட்ட யாகம் செய்யுங்களென பாஜக எம்பி சொல்கிற அளவில் அவர்களின் அறிவு இருக்கிறது.. 
..
வாக்கு கேட்கமட்டும் மக்களை சந்திக்க முடிகிற மோடி அமித்ஷாவிற்கு பேரிடர்காலத்தில்   மக்களை சந்திக்க முடியவில்லை.. ஊடகங்களை சந்தித்து பதில்தர முடியவில்லை இன்றைய  நிலைக்கு இந்திய ஒன்றிய அரசின் அலட்சியபோக்கும் அடிமை அதிமுக அரசின் திறமையற்ற நிர்வாகமுமே காரணம் ..
..
உயிர்காக்கும் நடவடிக்கை!
சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள அவசர ஊர்தி திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் பிரப்தீப் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அமைச்சர்  பெருமக்கள் சுழன்று பணியாற்றுகிறார்கள்.. நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிர்வாகத்தை விரைந்து  செயல்பட வைத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் .. பதவியேற்றவுடனே  war room  அமைத்து மக்களுக்கு  எளிதாக எங்கே படுக்கை வசதி உண்டென கண்டெறிய  முடிகிறது.. 12000 மேற்பட்ட உயிர்வளி  படுக்கைகளை போர்கால அடிப்படையில் உருவாகிறது.. படுக்கை எண்ணிக்கையை கூட்டுவது அவ்வளவு எளிதல்ல அதற்காக மருத்துவர் செவிலியர்கள்,மருத்துவ பணியாட்கள், கட்டமைப்பு  என அனைத்தும் இவ்வளவு விரைவில்  இந்தியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் செயல்படுத்துகிறார் மாண்பிமை தமிழ் நாட்டின் முதல்வர் ..
விமர்சனம் என்ற பெயரில் குப்பையை கொட்டாதீர்கள் .. 
மக்களிடம் நிவாரணம் உதவி கேட்டவுடன் மக்கள் நம்பிக்கையோடு   வாரிவழங்குகிறார்கள் .. இவர் நிச்சயம் நல்லது செய்வார் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே காரணம் .. பிரதமர் நிதியை போல எங்கே போனதென யாரும் கேட்க முடியாமல் இருக்காது எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறார் .. நம் முதல்வர்..
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதியாரோடு கைகோர்ப்போம்..
வென்றுகாட்டுவோம்..
..
ஆலஞ்சியார்

Tuesday, May 11, 2021

நல்லவர்கள் கையில் நாடு வந்தால் நன்மையே விளையும் என்பதற்கு  மற்றுமொரு சான்று #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் அவர்களின் அரசுநிர்வாகம்.. 
முட்டாள்கள் கையில் நாடு கிடைத்தால் என்னாகும் என்பதற்கு உ.பி.யும் மற்றும் மாயாஜால வித்தைகாரர் மோடியும்  நல்ல உதாரணம்..
..
கங்கை நதிக்கரையில் பிணங்கள்.. எரிக்ககூட  முடியாத நிலையில் வீசியெறிந்துவிட்டு செல்வதாக சில ஊடகங்கள் மௌனம் கலைத்து மெல்ல பேசுகிறது.. கண்ணாடியை கழட்டிவிட்டு பாரும் என ராகுல்காந்தி சொல்கிறார்.. தயவு செய்து பதவி விலகுங்கள் என அருந்ததிராய் போன்றோர் மோடிக்கு நேரே குரல் உயர்த்துகிறார்கள் .. நிர்வாகமே தெரியவில்லையென இந்திய ஒன்றிய நிதியமைச்சரின் கணவரே சொல்கிறார்.. உலக நாடுகள்  மோடியின் கையாலாகாததனத்தை சொல்லி  இந்தியாவின் முகம் ஏன் இப்படி மாறியதென கேட்கிறது .. இப்போதும்  இந்தியாவை காப்பாற்றுவது  நேருவும்,இந்திராவும் கட்டியமைத்துதான் என காங்கிரஸோடு நெடும்பகை கொண்ட மும்பை முதல்வர் உத்தவ் தாக்ரே உண்மையை பேசுகிறார்..
பேரிடர் காலத்திலும் பொய்பேசி திரியும் மதவெறி மூடர்களை நாடு கண்டுவேதனைக்கொள்கிறது.
..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
பதவியேற்றதிலிருந்து அவர் காட்டும் வேகம்,சொல் செயல் இரண்டிலும் தூய்மையாக,
நிதானமாக  அதே நேரத்தில் உறுதியாக , தன் அமைச்சர் பெருமக்களோடு  கலந்து செயலாற்றும் விதம் ஊரே மெச்சுகிறது.. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் அவகாசம் தந்து  ஊரடங்கில் உணவுபொருட்களை  குறிப்பிட்ட நேரத்தில் வியாபாரம் செய்யலாம் என்று அறிவித்து புலால் உண்போரையும் கணக்கில் கொண்டு,  விரைந்து மருத்துவசேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து இந்தியாவே திரும்பி பார்க்கவைக்கிறார்.. ஐந்தே நாளில் 12500 படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்து, மருத்துவமனை உட்புற நோயாளிக்கு மூன்றுவேளை உணவு,  தடுப்பூசி 5   இடங்களில் கிடைக்க ஏற்பாடு .. கர்ப்பணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா பணியிலிருந்து விடுவித்து .. ஊடரங்கில்  மக்கள் அவதிபட கூடாதென  முதல் தவணையாக ₹2000 அளித்து.. எப்படி ஒரு முதல்வர் செயல்பட வேண்டுமென பாடமெடுக்கிறார்..
..
தன் பள்ளிகட்டிதத்தை கட்டிதர 7 வயது சிறுமி கடிதம் எழுதுகிறார் உடன் நடவடிக்கை,அமைச்சர்கள் தொலைப்பேசியில் அழைத்து வாட்ஸ்ஆப் பில் தேவையை  சொன்னால் உடன் தீர்வு, அமைச்சர்கள் காவல்துறையோடு மோதல்/ மிரட்டல்  கூடாது  எதுவாகியினும் என்னிடமே சொல்லவேண்டும், என முதல்வர் கண்டித்து உத்தரவிடுகிறார்.. இதெல்லாம் கடந்த பத்தாண்டாய் கண்டிராதது குற்றவாளி, குற்றவாளி கைக்காட்டியவர் முதல்வர் என்றால் வேறெப்படி நிர்வாகம் இருக்கும்.. தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகள் கொரோனா தடுப்பிற்காக உபகரணங்கள் நிவாரணங்கள் அளிக்கிறார்கள்  இதற்கு  முன் இருந்த அரசை இவர்கள் நம்பவில்லை கொடுத்தால் சுருட்டிகொண்டு ஓடிவிடுவார்கள் பொருளாக கொடுத்தால் கள்ளசந்தைக்கு  வந்துவிடும் என அறிவார்கள்  அதனால் தான் காத்திருந்து நல்லவர் நேர்மையானவர் நிர்வாக திறன் கொண்டவர் ஆட்சிக்கு  வந்தவுடன் கொடைகளை தருகிறார்கள்..
..
புதிய கல்விக்  கொள்கை தமிழகத்தில் சாத்தியமில்லை  ஒரே நாடு ஒரே ரேசன்  தமிழகத்தில் இல்லை ஜீயரை கூட தேர்வு செய்யவேண்டும், ஒவ்வொரு அடியும்  மிக  தெளிவாக எடுத்துவைக்கிறார் தமிழக  முதல்வர்..
ஆனால் 
இந்திய  பிரதமர் திடீரென  பணமதிப்பிழப்பென்பார் ஊடரங்கென்பார்,  மான்கிபாத்  என பொய்சொல்ல தற்பெருமைபேசுவார்.. பத்திரிக்கையாளர்களை கண்டால்  காததூரம் ஓடுவார் ..
தெளிவின்மை நேர்மையில்லை, தகுதியில்லை கூட இருப்போருக்கு துறைசார்ந்த  அனுபவமோ வல்லமையோ இல்லை நூல் இருக்கிறது ஆர்எஸ்எஸ் நிழல்விழுகிறதா, மாட்டை புனிதமென பீற்றதெரிகிறதா, பிறமதத்தை வெறிக்கொண்டு கருத்துரைக்க முடிகிறதா, மதத்திற்காக மனிதனை  கொல்ல  தெரியுமா போதும் அமைச்சராகலாம் அதிகார பதவி பெறலாம் நாடும் நாட்டுமக்களும் எக்கேடு கெட்டால் என்ன..? ஒரே தேசம் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என உதவாததை கையிலெடுத்து மூடர்கள் திரிகிறாக்கள் ..
பன்முகதன்மையும் எதிரியையும்  மதிக்கும் பண்பையும் இவர்கள் பெறவே மாட்டார்கள்..
ஆனால் திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கியவர்கள் எதிர்கருத்துடையோரையும் மதிப்பார்கள்  அதற்கொரு எடுத்துகாட்டு  அம்மா உணவகம் செயல்படும் ..
..
"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்"..

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்..  என்றான் எம் பாட்டன் வள்ளுவன்..
..
திமுக அரசு தரும் நல்லாட்சி குடிமக்களுக்கானது 
..
ஆலஞ்சியார்

Sunday, May 9, 2021

அமைச்சர் என்பது யாதெனில் மக்கள் விளிக்கு செவிசாய்திடல் வேண்டும்..
ஊட்டிக்கு செல்ல தன் இரு குழந்தைகளுடன்  பேருந்துநிலையத்தில்.. அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை சரியான பதிலில்லை பழைய  ஆட்சியென்று இருந்திருப்பார்கள் அவர்  வலைதளத்தில் அமைச்சரின் கைப்பேசி எண்ணை பார்த்து அழைக்கிறார்  அமைச்சரே பேசுகிறார் நீண்டநேரமாகியும் ஒருபதிலுமில்லை என்றவுடன் அழைப்பு துண்டிக்கபடுகிறது .. உயரதிகாரிகளை அழைத்து பேசுகிறார் இரவு முழுதும் தூங்கமாட்டேன் என்கிறார் அமைச்சர் .. பத்துநிமிடங்களில் அந்த பெண்ணே அமைச்சரை அழைத்து அதிகாரிகள் வந்து  பேசினார்கள் நன்றி  என்கிறார்..
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள்..
..
அவசரசிகிச்சை தேவை என அமைச்சரை அழைக்கிறார்  பதில்லில்லை மீண்டும் அழைக்கிறார் அமைச்சர் முதல்வரின் அமைச்சரவை  கூட்டத்தில் இருக்கிறாரென தெரிகிறது .. சிறுதுநேரம் கழித்து அமைச்சரே விளிக்கிறார் .. பொறுமையாக கேட்டு முழுவிபரத்தையும் வாட்ச்ஆப்பில் அனுப்புங்கள் என்கிறார்  அனுப்பிவிட்டதாக சொன்னதும் சிலமணிதுளிகளில் அவருக்கு படுக்கை ஓதுக்கபடுகிறது ..
செயலாய் மா.சு..
#104சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்.!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
..
ஓவ்வொரு அமைச்சரும் விரைந்து அதேநேரம் தெளிவாக பயணிக்கிறார்கள் .. பொய்யுரையோ புகழுரையோ தேவையில்லை  உண்மையை நேருக்குநேர் சந்திக்க விரும்புகிறேன் என்ற முதல்வர் கிடைத்திருக்கிறார்.. WAR ROOM கொரோனா கட்டுபாட்டு அறை திறக்கபட்டு அதிகாரிகள் நியமிக்கபடுகிறார்கள் சில தினங்களில் எத்தனை படுக்கைகள்  காலியாக இருக்கிறதென்று மக்களே தெரிந்துக்கொள்ளலாம் ..வெளிப்படையான அரசு இதென்பதற்கு  சான்று ..

அரசு எப்படி செயல்படவேண்டுமெனில்..

தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யவேண்டும்..
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.. ஆக்சிஜன் விரயமாவதை ஏற்கமுடியாது.. என அமைச்சர்கள் கூட்டத்தில் பேசி அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்கிறார் 
#தமிழ்நாட்டின்முதல்வர்..
..
சென்னை மாநகராட்சியில் Mask என்ற பெயரில் filter வழங்கிய பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அதிரடி இடமாற்றம் நேர்மையான  இடர்காலங்களில்  சிறப்பாக பணியாற்றிய சுகன்திப் சிங் நியமிக்கபடுகிறார்.. திறமையான அமைச்சர்கள் நேர்மையான  அதிகாரிகள் என சிறப்பாக செயல்படுகிறார்..
அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக இருப்போம் திமுக ஆட்சியென்றால் கடுமையாக உழைக்கவேண்டும் என  முன்பு  ஒரு உயரதிகாரி சொன்னது  ஞாபகம் வருகிறது..
..
இது திமுக  ஆட்சி அல்ல எல்லா மக்களுக்குமான ஆட்சி நான்  முதல்வரிசை பணியாளன் என மக்களுக்கு   நம்பிக்கை ஊட்டுகிறார் மாண்பிமை முதல்வர்.. நற்றமிழ் நாட்டின் மாபெரும் தலைவராய் தங்கதளபதி..
..
இனி தமிழ்நாடு வழிகாட்டும்..

👌👌♥♥ 
..
ஆலஞ்சியார்

Saturday, May 8, 2021


பதவியேற்றவுடன் மிகசரியான பாதையில் விரைந்து செயலாற்றுகிறார்  முதல்வர் 
பெண்களுக்கு  கட்டணமில்லா பயணம் அதேபோல் திருநங்கைகளுக்கும் தரலாமே என ஒருவர் ட்விட் செய்கிறார்.. அவர்கள் நலனின் எப்போதும் திமுக அரசு அக்கறை கொள்ளும் என்பதோடு  நிறுத்தாமல் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என்கிறார்.. அதற்கு பதலுரைத்தவர் இத்தனை காலம்  முதல்வராகாதது தங்களின் இழப்பில்லை எங்களின் இழப்பென்கிறார்..

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு..

என்றான்  வள்ளுவன் 

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்..
..
பெண்களுக்கு  கட்டணமில்லை என்பதை மிகப்பெரிய புரட்சியை செய்திருக்கிறது  குறைவான  சம்பளம் பெறுவோர், அன்றாடம் சிறுவியாபாரம் செய்வோர் வாயைகட்டி சேகரிக்கும் நிலைமாறும், பெரும் ஆசுவாசம் 
பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது..
..
சுகாதாரத்துறை அமைச்சர் பாதுகாப்போடு நோயாளிகளை சந்திக்கிறார்.. 15ந்தேதிக்குள் 12500  ஆக்சிஸன் படுக்கை தயாராகும்,  எங்கே படுக்கை இருக்கிறதென்பதை வலைதளத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம்,ரெம்டிசிவிர் மருந்தை இனி சென்னை மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் பெற முடியும்.
வெளிப்படையான அரசு ..
..
ஒவ்வொரு துறைசார்ந்த அமைச்சர்கள் மிக விரைந்து தெளிவான தளபதியின் ஆலோசனையோடு பயணிக்கிறார்கள் .. கல்வி தொலைக்காட்சி இன்னும் புதுமைகளோடு செயல்படும்.. சென்ற அரசின் நிதிநிலை செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை தரப்படும்  10ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரருக்கு  ₹2000 வழங்கபடும் .. இடைவிடாது  பணியாற்றுகிறார்கள்.. 
மத்திய அரசிடம் ஆக்சிஸன்கேட்டவுடன் கிடைக்கிறது..
..
பத்தாண்டாய் பாழ்பட்ட  தமிழகத்தை சீரமைக்க இத்தனை வேகம் தேவைபடுகிறது .. தளபதி முதல்வரானது நமது வரம்..
நல்ல தலைமை கிடைத்தால் நாடு மிளிரும்.. முழுஊரடங்கால் வெளியூர் செல்லும் பயணிகளிடத்தில் அதிகதொகை  வசூலித்தால் ₹10000 அபராதம், வழக்கும் வரும் 6மாதம் சிறை
உண்மையில் மக்களுக்கான ஆட்சி..
..
"ஸ்டாலின் பஸ் " நல்லசேவை
..
ஆலஞ்சியார்

Monday, May 3, 2021

இரு ஊடகவியலாளர்கள்.. சிராஜூல் ஹசன், அதியமான் இருவரும் போகிறபோக்கில் எதையாவது சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள் .. கருத்துசுதந்தரம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணி உண்மையை திரித்தோ அல்லது மறைத்து புழுதிவாரி இறைக்கிறார்கள் ..
..
சிராஜூல்ஹசன் 
தமிழக சட்டமன்றத்தில் பாஜக  நுழைந்துவிட்டு அவர்களை எதிர்கொள்ள SDPI இல்லாமல் போனதென்று பொதுவாக கருத்தை சொல்கிறார் .. இஸ்லாமியர் மீதான விமர்சனத்தையோ விஷமத்தையோ இங்கே எளிதில் செய்திட முடியாது அப்படி முயற்சித்தால் திமுக விசிக மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் "இந்து" உறுப்பினர்களே பார்த்துக்கொள்வார்கள்.. திமுகவை சேர்ந்த மூன்று பேர்,விசிகவின் ஆளூரார்,காங்கிரஸ் ஹசன், மமகவின் இருவர் இவர்களெல்லாம் பேசமாட்டார்களா/ எதிர்க்கமாட்டார்களா.. ஏதோ SDPI
மட்டும் தான் இஸ்லாமியர்களின் பிரதிநிதி  போல சித்தரிக்க முயல்கிறார் ..  பேராசிரியர் ஜாஹிருல்லா போன்றோர் களப்பணியாளர்களாக வெற்றிக்கண்டவர்கள் தானே.. 
வாணியம்பாடியில் முஸ்லிம்லீக் வெற்றியை தடுத்த உவைசியின் AIMIM கட்சி 1700 வாக்குகளுக்கு மேல் பெற்று சக முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தபோது
ஏன் வாய்திறக்கவில்லை   SDPI தமிழக தேர்தலில் நின்றதால் சாதித்ததென்ன ..?  வாக்கை  பிரிக்க முடிந்தது அது பெருவாரியான வித்தியாச வெற்றியை தடுத்ததை தவிர வேறொன்றும் நடக்கவில்லை ..
SDPI கட்சி தமிழக முஸ்லிம்களின் முகம் அல்ல..
..
அதியமான் ..
யாரோ ஒரு தொழிலதிபர் திமுக  ஆட்சிக்கு  வந்துவிட்டதால் தன் ₹1.75 கோடி சொத்தை ₹1.50 கோடிக்கு விற்க முயல்கிறாராம் இல்லையெனில்  கட்டபஞ்சாயத்து வந்து மேலும் குறையகூடுமாம்.. போகிறபோக்கில் திமுகவை குறைச்சொல்கிறார் .. தவறான கருத்தை விசமத்தனத்தை பரப்ப  முயல்வோரை சட்டரீதியாக அணுகுவது எப்படி தவறாகும் .. கருத்து சுதந்தரம் என்பது  என் மூக்குவரை கைநீட்டுவதே தவிர என் மூக்கை தொடுவதல்ல.. குற்றசாட்டில் உண்மையிருந்தால்   ஏன் பயபடவேண்டும் .. சில நடுநிலைகள் வக்காலத்து  வாங்குவது  வேதனையாக இருக்கிறது .. தொடர்ந்து அவதூறை பரப்பவதை எப்படி நியாயபடுத்த முடியும் திமுகவிற்கு பாகிஸ்தானோடு தொடர்பு என்பான் ஒருவன் அதை அப்படியே உளறுகிறான் என விட்டுவிட்டால் காலபோக்கில் திமுக தேசவிரோதகட்சி என பிரச்சாரம் செய்வார்கள்  .. விமர்சிக்க எல்லா உரிமையும் உண்டு அதற்கு  பதில் தர தயாராகதான் இருக்கிறோம் அதற்காக பொய்யைச்  சொல்லி அவபெயரை உண்டாக்க நினைத்தால் நீதிமன்றம் மூலம் தடுத்துநிறுத்துவது தான் வழி .. சட்டம் தன் கடமையை செய்யட்டுமே.. 
..
ஊடகம் என்பது அறம் சார்ந்து நிற்பது, தவறை  சுட்டிக்காட்டுவதோடு கொட்டி திருத்துவது, மக்களின் கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வழிநடத்துவது .. ஊடகம் இன்று  அற்பர்கள் கையில்.. பணத்திற்காக எதையும் எழுதவும், அரசின் தவறுகளை மறைப்பதும் அநீதிகண்டும் மௌனம் காப்பதும் சாமானியனின் குரலை நெறிப்பதும் தான் நடக்கிறது .. பொய்களை பரப்பி தனிநபர்களை தாக்கி கருத்துசுதந்திரம் என்ற பெயரில் விசமத்தனம் செய்வது  கண்டிக்கதக்கது..
..
அறம் சார்ந்து நிற்போம்
தவறெனில் குரலை உயர்த்துவோம் 
செவிசாய்க்கமறுத்தால் கண்டிப்போம்..
..
ஆலஞ்சியார்


Sunday, May 2, 2021

அறம் வென்றது

#அறம்வென்றது 
வெற்றி..
கழகம் வெற்றிபெற்றிருக்கிறது
தனியொருவராய் தமிழகத்தை தளபதி கரை சேர்த்திருக்கிறார் பத்தாண்டுகளில் அதிலும் கடந்த நான்காண்டுகளில் பாசிசத்தின் ஊடுறுவல் வலுபெற்ற நேரத்தில் நச்சு படர தொடங்கி எங்கே முழுவதுமாக  நம்மை அரித்துவிடுமோ என கவலைக்  கொள்ள செய்தது .. மாபெரும் சுமையோடு பகை முடித்து இன்று வெற்றி வீரராய் தளபதி
வாழ்த்துகள்..
.. 
நாம் எதிர்பார்த்ததை விட குறைவென்றாலும் இன்னமும் நாம் கொங்கு மண்டலத்தை உழைக்க வேண்டியிருக்கிறதென்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது .. நிறைய தெருமுனை கருத்தியல் பரப்புரைகள் ,பகுத்தறிவு சொற்பொழிவுகள், சாதியரீதியாக பிழைகளை சுட்டிகாட்டி பாசிசத்தின் நிழல் படிய தொடங்கியிருக்கிறதென்ற அபாயத்தை உணர்த்தி, சமத்துவமும் சமூகநீதியும் மட்டும் உயர்நோக்கு சிந்தனையை வளர்க்கும் சனாதனமும் பாசிசமும் கெடுதியே தரும் என்று விளக்கும் நீண்ட பணி  நமக்கிருக்கிறது.. கோவையில் அண்ணா  நூலகம் போன்று மிகப்பெரிய நூலகம் அமைத்து திராவிடத்தின் பெருமையை, அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் .. மதமோ சாதியோ இறுதியில் பேரழிவை தரும் ..வீரமும்,மானமும் நிறைந்த மண் கொங்கு நிறைய கதைகள் சொல்லும்.. இன்றைக்கு தமிழர் வாழ்வாதாரத்தை வடவருக்கு  அளித்துவிட்டு நிற்பது கவலைக்குரிய விடயம் .. நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது..
..
அதிமுக குறைவான இடங்களில் மட்டும் வென்றிருக்குமேயானால் அதை  பாசிச பாஜக  விழுங்கிவிடும்.. இங்கே திராவிடமும் அதன் நிழலும் மட்டுமே போதும் என புரிந்து  மக்கள் வாக்களித்திருப்பதாக உணர்கிறேன் .. அதை அதிமுகவும் அதன் தலைமையும் உணர்ந்தால் நலம் ..பாஜக இல்லாத சட்டமன்றம் 2026ல் வேண்டும் அதற்காக இப்போதிலிருந்தே திமுக உழைத்திட வேண்டும் பெரியாரிய கருத்தியலே இங்கே வெல்லும் அது சமநீதிக்கானதாக  இருத்தலும் சமூகநீதியை  பின்பற்றுதலுமாக  அமைதல் அவசியம் இழந்ததை  மீட்க நாம் பெரும்பயணம் செய்ய வேண்டியிருக்கிறது  அதிமுகவின் பின்னால் நின்று பாசிசம் செய்த தீங்குகளை சரிசெய்யும் பணி காத்திருக்கிறது..
..
தலைவர் நெருக்கடியான காலகட்டத்தில்  பெரும் சவால்களோடு அறியணை ஏறுகிறார்.. கொரோனா தொற்று நம் வாழ்வாதாரத்தை நசுக்கியிருக்கிறது அதைவிட  கொடுமையாய் பாசிச பாஜக அரசின் கையாளாகாததனத்தால் சிறு தொழில்கள் நலிந்து கிடக்கிறது ,முட்டாள்கள் அடிமைகளின் ஆட்சியால் பொருளாதாரம் கீழே கிடக்கிறது,  அனைத்துதுறைகளையும் அடிமைகள் சீரழித்திருக்கிறார்கள்,  கல்வி வேலைவாய்ப்பில் நம்மவர்கள் புறக்கணிக்கபட்டிருக்கிற  சூழல் 
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்போடு மக்கள்  #இவன்_முடிபபான் என்று பொறுப்பை தந்திருக்கிறார்கள்..
..
ஆரூடத்தை நம்பாதே உழைப்பை நம்பு.. மக்களோடு செல்  மக்களோடு  பழகு மக்களை  புரிந்துக்கொள், வாய்ப்பு தரும் வரை காத்திரு.. நேர்மை  அரசியலை  முன்னெடு .. காலம் உன்னை உயர்த்தும் யாரும் தொடாத உச்சத்தை அடைய பாதை அமைக்கும் .. 
தெளிவான கொள்கையோடு புரிதலோடு கடமையாற்ற வருகிறார் எமது தளபதி..
தமிழகத்தின் தளபதி
..
இனி தளபதிபடையே தமிழகம் ஆளும்
..
அறம் வென்றது

ஆலஞ்சியார்