Wednesday, March 31, 2021

தோற்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை .. ஒரு அமைச்சர் 
நாங்களெல்லாம் தாயில்லா பிள்ளைகள் மற்றொருவர்.. என்தாயை பழித்துவிட்டார்கள் ஓட்டு போடுங்கள்.. சுகர் இருக்கு பி.பி.இருக்கு ஓட்டு போடுங்கள் .. 
குறுக்குவழியில் உதயநிதி வரபார்க்கிறார் ..இந்திய ஒன்றியத்தின் பிரதமர்.. கோவையில் யோகி  சமஸ்கிருதத்தில் பேச கடைகளை அடைக்கச் சொல்லி ரகளை.. இடஒதுக்கீடு தற்காலிக ஏற்பாடென பன்னீர் இல்லையில்லை நிரந்தரம் என மரம்வெட்டி ராமதாஸ் .. 
எவரும் சாதனையைச் சொல்லி ஓட்டுகேட்கவில்லை ..
..
இவர்கள் யார் ..
மிக ஆபத்தானவர்கள் தஷ்ணபிரதேசமென  போஸ்டர் அடிக்கிற அளவிற்கு எங்கிருந்து திமிர்வந்தது .. இங்கே ஊழலில் திளைந்து உண்டுகொழுத்த பெருச்சாளிகள் உண்டு அவர்களை மிரட்டி பாஜகவை வளர்க்க பெரும்பாடுபடுகிறார்கள் .. எதைச் சொன்னாலும் மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டி பொம்மைகளாய் பன்னீரும் பழனியும்.. அதிகாரத்தை வைத்து மிரட்டியும் ரெய்டு சிறை என பயமுறுத்தி இந்த கேடுகெட்ட அடிமைஅதிமுகவினரை அடிபணிய வைத்து ஒவ்வொன்றாய் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.. இந்த நான்காண்டு காலத்தில் தமிழகம் இழந்தது ஏராளம் .. கல்வியில் நீட்டை கொண்டுவந்து சாமானியரின் பிள்ளைகளை கூலிதொழிலாளியாக்க தமிழகத்தை உத்திரபிரதேசத்தை போல ஆக்கியே தீருவதென கங்கணம் கட்டி செயல்படுகிறார்கள்..  கல்விக்கான கட்டமைப்பை கண்டு மிரண்டு போய் இத்தனை வசதிகளோடு கல்வியை வேறெந்த மாநிலத்திலும் கிடைக்க வழியில்லையே அதனால்தான் தமிழ்பிள்ளைகள் உயர்கல்வியில் மின்னுகிறார்களென்ற எரிச்சல்
எப்படியேனும் தடுத்துநிறுத்த நீட் என்ற தடுப்பை தந்தார்கள் அதிலும் மத்திய அரசு பாடத்தில் தான் கேள்வி என்ற நிபந்தனையோடு பரிட்சை எழுத வரும் குழந்தைகளை சோதனை என்ற பெயரில் மனஅழுத்ததை தருவது என கல்வியை எட்டாகனியாக்க பார்பனீயம் பெரும் வேலை செய்கிறது..
வேலை வாய்ப்பை தமிழரல்லாதோருக்கு வழங்க எங்குமே இல்லாத மத்தியரசிற்கு இணையான சம்பளம் அதை குறிவைத்து தமிழர்களை அரசு வேலையில் இருந்து முற்றிலுமாக துடைத்தெறிய இந்தி பேசும் மக்கள் தமிழ் தேர்வில் வென்றதாக காட்டும் கொடுமை ..உயர்நீதிமன்றமே சந்தேகத்தை எழுப்பியும் மானங்கெட்ட அடிமை பழநி பன்னீர் வகையறாக்கள் வாய் திறப்பதே இல்லை..
..
தமிழகத்தின் வளங்களை கொள்ளையடிக்க மார்வாடிகளுக்கு தாரைவார்க்க இந்த பாஜகவோடு கூட்டணி  மதவெறியை தூண்டும் பேச்சுகள்.. ராமநாதபுரத்தை கோவையாக்குவோமென மிரட்டல் .. இந்தியை திணிக்க பெரும் முயற்சி.. தமிழ்கலாச்சாரத்தையே பாரத கலாச்சாரமென பேசும் மூடன்.. தமிழுக்கென்று தனியாக கலாச்சாரமில்லை என இங்கே பாண்டியராஜன்களால் பேச முடிகிறதென்றால் மத்திய அரசின் தயவு உண்டென்ற திமிர் .. உண்மையில் இம்முறை தமிழர்கள் தரும் தோல்வி பாஜக பெயரை உச்சரிக்க கூட தமிழக கட்சிகளுக்கு துணிவு வரகூடாது .. அதிமுக எனும் அழுக்கை துடைத்தெறிய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழகம் தள்ளபட்டிருக்கிறது  234 தொகுதிகளிலும் அதிமுக பாஜக பாமக கூட்டணி மதவெறி சாதிவெறி அடிமைகள் கூட்டணி வரலாறு காணாத தோல்வியை தழுவும்..
..
யோகியின் வரவிற்காக கடைகளை அடைக்க சொல்லும் சங்கிகள் ,கலவரத்தை செய்தாவது வெற்றிபெற எண்ணுகிறார்கள் ..
அவர்கள் எண்ணம் ஈடேறாது.. 
உத்திரபிரதேசத்தில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களுக்கு உபி அரசின் சார்பில் மனைகள் வாங்கி வீடு கட்டித்தரப்படும் என்கிறார் யோகி.. இந்த பேச்சொன்றே போதும்..
வானதியின் கட்டுபணம் கிடைக்காமல் போகும்..இவர்கள் செயல்களால் வடவர்களை விரட்ட வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.. அதிமுகவின் தோல்வியை மோடியும் யோகியும் வரலாற்று தோல்வியாக்கி உறுதி செய்திருக்கிறார்கள்..
..
நல்லகாலம் பொறக்குது..
ஸ்டாலின் எனும் நான்.. ஒலிக்கும் 
தளபதி படை தரணி ஆளும்..
..
ஆலஞ்சியார்

Tuesday, March 30, 2021

வைரமுத்து தாயை வேசி என்ற
எச்.ராசாவை ஏன் இன்னும் கட்சியில் வைத்திருக்கிறீர்கள் .. பிரதமர் அவர்களே.. அதுசரி..
கர்ப்பணி பெண்ணின் வயிற்றை கிழித்த கொடுமையெல்லாம் உங்கள் ஆட்சியில் தானே நடந்தது.. அவள் பெண் இல்லையா பிரதமர் அவர்களே..
சிறுமியை கற்பழித்தவர்களுக்கு தேசிய கொடியோடு வரவேற்பு செய்கிற கட்சியின் பிரதமர் தானே நீங்கள்..
..
பெண்களை மதிக்க நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்.. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டதென்ற அருளுரை வழங்கிய காமகோடி ஸ்ரீசங்கராச்சாரியை கொண்டாடுகிற கூட்டத்தின் கடைநிலை ஊழியன் நீங்கள் பேச தகுதி வேண்டாமா.. பெண்களை மதிக்க தெரிந்தவர்கள் நாங்கள்.. சொல்லாத சொல்லை எடுத்து பழி சுமத்தினால் நம்ப நாங்கள் 
வடவர்கள் அல்ல தமிழர்கள்..


Sunday, March 28, 2021

தான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளபட்டதெனினும் முதல்வர் கண்களங்கினார் என்றவுடன் மனம்திறந்து மன்னிப்பு கேட்கிறேன் என்ற ராசா உண்மையில் உயர்ந்துநிற்கிறார்.. வந்து விழும் வார்த்தைகளில் கவனம் தேவை என தலைவர் கண்டித்ததும் பெண்களை எக்காரணம் கொண்டும் கிண்டல் செய்வதையோ கேலிபொருளாக்குவதையோ ஏற்கமுடியாதென்ற கனிமொழி உண்மையில் மேன்மக்களே..
..
அதேவேளை அடிக்கடி தன்னை கருணாநிதியின் மகன் என்கிறாரே ஏதேனும் சந்தேகமா என கேட்டு ஹா ஹா.. என சிரித்த எடப்பாடி அவர்களே எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்.. என் தாயை பழித்துவிட்டாரென கண்ணீர் சிந்தி மக்கள் முன் நடிக்க தெரிந்த நீங்கள் அடுத்தவரை பிறப்பையே எள்ளிநகைத்தீரே 
அவரும் தாய் தானே .. ஆனால் ஸ்டாலின் உங்களைப்போல பெற்றதாயை வைத்து அரசியல் செய்யவில்லை.. 
ஒன்றா இரண்டா எடப்பாடி..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டும் ஆதாரமிருக்கிறதா என கேட்க  கள்நெஞ்சம் வேண்டும் .. அவர்களும் பெண்கள் தானே .. அதற்காக எப்போது மன்னிப்பு கேட்க போகிறீர்.. ஆனால் உங்களைப்போல வதைக்கபட்ட பெண்களை வைத்து அரசியல் செய்யாமல் அவர்களுக்கு நீதி பெற்றுதரப்படுமென சொல்கிறது திமுக..
..
சாத்தான் குளத்தில் அப்பனையும் மகனையும் லாக்கப்பில் அடித்தே கொன்றார்களே.. அவர்களுக்கும் மனைவி மக்களுண்டே.. அவர்களுக்காக எப்போது மன்னிப்பு கேட்பீர் எடப்பாடி பழனிசாமி அவர்களே..
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நான் தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என்றீரே..அப்படியெனில் காவல்துறை உமது கட்டுபாட்டில் இல்லையா .. இல்லையென்று உமது மொழி கூறுகிறது அப்படியெனில் முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்றுதானே பொருள்.. அன்று 18 வயது குழந்தையின் வாயில் சுட்டார்களே படுபாவிகள் அவளும் பெண்தானே அவளுக்கும் குடும்பம் உண்டே அவர்கள் கண்ணீருக்காக வருந்தியதுண்டா மன்னிப்பு கேட்டதுண்டா..
..
ஊடகத்துறையில் பெண்கள் படுக்கையை பகிர்ந்துக்கொண்டால்தான் செய்திவாசிக்கவே முடியுமென ஒரு பொறம்போக்கு சொல்லிவிட்டு அண்ணி தலைமைசெயலர் என்ற இறுமாப்பில் இருந்தானே அவனை கைதுசெய்தீரா அல்லது கண்டித்தீரா.. அவர்கள் பெண்கள் தானே அவர்களுக்கும் கணவன் குழந்தைகள் உண்டே .. ஒட்டுமொத்தமாக பெண்களை கேலிசெய்தவனை எல்லோரும் "அவர்களை" போல இருப்பார்களென எண்ணி பேசியவனை கண்டித்ததுண்டா எடப்பாடி அவர்களே.. ஒட்டுமொத்தமாக அதிமுககாரர்களையே impotent
என்றாரே அரசியல் தரகர் குரூமூர்த்தி அதற்காக கோபபட்டதுண்டா.. எதிர்ப்பையாவது சொன்னதுண்டா.. உங்கள் பெற்றவளை கலங்கம் சுமத்துகிறான் என பொங்கியதுண்டா..
சசிகலாவை சாக்கடை என்ற போது எங்கே போனீர்கள்  .. ஆனால் ராசா உவமைக்கு சொன்னதை 
என் ஆத்தாளை கேவலமாக பேசிவிட்டார்கள் என அழுது அரசியல் செய்வதற்கு பதில் வேறெதாவது செய்யலாம்.. அதிமுக வரலாறு அனுதாப அரசியல் தான் .. ஜானகி மோரில் விசம் கலந்து எம்ஜிஆரை கொல்லபார்த்தார் .. சென்னாரெட்டி கையைபிடித்து இழுத்தார்.. இதானே அதிமுக வரலாறு .. பொய்சொல்லாமல் சாதனைகளைச் சொல்லி  வாக்கு கேட்க துணிவின்றி தோல்வி பயம் எங்கே சிறை களியென கண்முன்னே வர அழுது நடிக்கிறார்.. ஆனால் உங்களி எண்ணம் ஈடேறாது எடப்பாடி பழனிசாமி அவர்களே..
..
ராசா பேசியதை வெட்டி ஒட்டி அதைவைத்து ஆதாயம் தேடலாமென்ற "நூல்புத்தி"யை கையிலெடுக்க வரிந்துகட்டிக் கொண்டு சிலர் நடுநிலை வகுப்பெடுத்தார்கள் ..ஆனால் ராசா மனம் வருந்துவதாக சொல்லிவிட்டார்.. அதே போல் எடப்பாடியும் ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்க சொல்வார்களா.. கனிமொழியை தவறாக பேசிய எச்சையை மன்னிப்பு கேட்க சொல்வார்களா.. ஊடகத்துறையில் பெண்களை 
படுக்கையை பகிர்ந்தே முன்னுக்கு வருகிறார்களென 
பேசிய எஸ்விசேகரை மன்னிப்பு கேட்க சொல்வார்களா..
ராசாவின் கொடும்பாவியை எரித்த முற்போக்காளர்கள்..?
வேலைக்கு போகும் பெண்கள் விபச்சாரிகள் என்ற ஜகத்குரு சரஸ்வதி சுவாமிகளின் அருளுரையை தீயிட்டு கொளுத்துவார்களா .. 
காலகாலமாக எங்களை சூத்தரன் (விபச்சாரி மகன்) எனும் வர்ணாசரத்தை, சாஸ்திரத்தை, சனாதனத்தை, எரிக்க சொல்வார்களா..  
..
ராசாவின் பெருந்தன்மை தம்மால் தேர்தல் நேரத்தில் எந்த இடையூறும் வரகூடாதென்பதற்காக ..
திராவிட இயக்கம் பெண்களை மதிக்கும் சிறிய தவறெனினும் அவர்கள் மனம் புண்படுமேயானால் வருந்தும் .. பண்பட்ட அரசியலை பயின்றவர் 
அவர் ஏன் தொடர்ந்து வேட்டையாடபடுகிறாரென எல்லோருக்கும் தெரியும்..  எனக்கு தெரிந்து அம்பத்கருக்கு பிறகு சனாதனம் அஞ்சிய ஒரு தலித்திய தலைவர் .. நிறைய தலித்திய தலைவர்கள் வந்தார்கள் இவரளவிற்கு எதிர்ப்பை பதிவு செய்ததில்லை சமரசமற்ற போராளி.. அறிவுநிகர் பண்பாளர் படிப்பாளி .. கொண்ட கொள்கையின் உறுதியாளர்.. அதைவிட பெரியாரின் பேரன்.. இது போதாதா ஆரிய கும்பல் வயிறெறிய.. 
ராசா முதல்வர் வருந்தினார் என்றவுடன் மனம்வருந்தினாரே அங்கே உயர்ந்துநிற்கிறார்..
..
உருவம் குள்ளம்தான் 
ஆனால்
உயர்ந்த உள்ளம் எங்கள் ராசா
..
ஆலஞ்சியார்

Saturday, March 27, 2021

மிக கேவலமான அரசியல்வாதியாக அன்புமணி ராமதாஸ் வலம் வருகிறார்கள் .. கொஞ்சம் கூட வெட்கமின்றி நேற்று நடந்ததென்ன இன்றைக்கு இப்படி மாற்றி பேசுகிறோமே .. மக்கள் என்னநினைப்பார்கள் .. குறைந்தபட்ச ஒழுக்கமற்ற அரசியலை செய்வதால் ஏதேனும் பலனுண்டா.. எதைப்பற்றியும் கவலை கிடையாது .. பணம் பதவிக்காக யார் எக்கேடுகெட்டால் என்ன என்று மிக மட்டமாக நடந்துக்கொள்கிறார்கள்..
..
அதிமுக சிறந்த ஆட்சியாம் .. ஆளுநரை சந்தித்து ஊழல்பட்டியலை தந்தபோது அதிமுக கொள்ளையடிக்கிற கட்சி.. மானங்கெட்டு டயர்நக்கி பிழைப்பவர்.. நிர்வாகமென்றால் என்னவென்று தெரியுமா என்றெல்லாம் பேசிவிட்டு அப்பனும் மகனும் அழைத்து விருந்து வைத்தது ஏன்.. எம்பி சீட்டிற்காக டயர்நக்கிகளின் காலை நக்கியது ஏன்..  தமிழகம் கண்ட அரசியல் தலைவர்களிலேயே மிக அயோக்கியர்கள் இவர்கள் தான் பொய் சொல்வது அறிந்தது தான் மற்றவர்களை மகாமட்டமாக பேசிவிட்டு உடனே அதை மறுப்பதும் .. அதைபற்றி கவலைபடாமல் காசு ஓன்றே குறிக்கோளாய் இருப்பதும் தொடர்ந்து பாமகவை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதும்
சமுதாய மக்களைப் பற்றி கவலைக்கொள்ளாமல் விலைபேசுவதும் சகிக்கவில்லை..
..
உதயநிதிஸ்டாலினை எதிரித்து பிரச்சாரம் செய்யும் போது மன்னர் பரம்பரையா என கேட்கிறார் ..வாரிசு அரசியலை பேசி தனக்கு தானே இழிவை தேடிக்கொள்கிறார்.. மிக தெளிவாக வாரிசு என்று மக்கள் நினைத்தால் தோற்கடிக்கட்டும் என பேசும் தைரியம் வேண்டும்..வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து சொல்லபடும் குற்றசாட்டு ஆனால் மக்கள் அங்கீகாரமில்லாமல் கொள்ளைப்புற வழியில் எம்பி ஆகவில்லை .. மக்கள் தர்மபுரியில் தோற்கடித்தார்களே  உடனே மாநிலங்களவைக்கு சென்றதேன் .. இந்த தேர்தலில் அதே தர்மபுரியில் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றிருக்கலாமே .. அதெல்லாம் செய்யமாட்டார்.. ஆனால் மற்றவரை குறைச் சொல்வார்.. அவரை தவிர மற்றவர்களுக்கு தகுதியில்லையென்று நினைப்பு.. தர்மபுரியில் சொல்லி தோற்கடித்ததை மறந்து போனார்.. மாறி மாறி சவாரி செய்ததை தடுத்து பாமகவை தோற்கடிப்பதென முடிவோடு களமிறங்கி வெற்றிகண்டவர் முன்பு தாமரைச் செல்வனை வெற்றிபெற வைத்து பாமகவை வலுவிழக்க செய்தவர் தளபதி..
பிறகு திராவிடக்கட்சிகளே வேண்டாம் மாற்றம் முன்னேற்றமென சொல்லி மக்கள் செவிட்டில் அறைந்தாற்போல அன்புமணியின் அலப்பறையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்..
வேறுவழியின்றி அதிமுகவோடு சேர்ந்து கொடுப்பதை கொடு கூடவே பிஸ்கட் பாக்கெட் வேண்டுமென கரன்சிகளில் கரைந்து போனது பாமக..
..
இன்றைக்கு யாருக்கு வேண்டாத கட்சி.. வன்னியர்களுக்காக என்ற முழக்கத்தோடு உருவாகி அன்புமணிக்காக என்று சுருங்கியதுதான் நடந்தது..
அரசியலில் பிழை இவர்கள் .. வாய்க்கு வந்ததை பேசி திரிபவர்கள்.. இன்று வன்னிய பெருசமூகமே இவர்களை புறக்கணிக்கிற நிலைதான்.. நாகரீகமற்ற செயல்கள், பொய் பித்தலாட்டம், மற்றவர்களை தரம்குறைத்து மதிப்பிடுவது தனக்கே எல்லாம் தெரியுமென்கிற முட்டாள் 
..
சில அரசியல் கட்சிகளிடத்தில் சமூக அக்கறை வற்றிப்போய்விட்டதோ என எண்ண தோன்றுகிறது.. சாதிய வெறியூட்டல், மதத்தை முன்னெடுத்தல், குறிப்பிட்ட பிரிவினரை தரந்தாழ்த்துதல், தனிநபர் தாக்குதல் கொஞ்சமும் கூச்சமின்றி செய்தல்,  பெண்களை இழிவாக பேசுதல் 
பொய்களை கொஞ்சமும் அஞ்சமின்றி பரப்புதல், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்து  எதற்கும் ஒரு விலையுண்டென அகந்காரத்தோடு நடத்தல், ஊழல் செய்து தண்டிக்கபட்டாலும் உத்தமர் வேடமிடுதல்.. ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டால் போதும் ஒழுக்ககேட்டையும் உயர்த்தி பிடிக்கும்..  அறமற்ற அரசியலை இழிவானவர்களே மேற்கொள்வர்.. வெட்டி ஒட்டிதான் அரசியல் செய்யும் பலவீனமானவர்கள்.. 
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்தவர்கள் எதற்கும் துணிந்து மரபுகளை மீறி வெறியாட்டமாடுகிறார்கள்..
மக்கள் மீதான நம்பிக்கை எப்போதும் பொய்க்காதென அறிவிலிகள் அறியார்..
.. 
கண்ணியம் முதன்மை அம்சமாக இருக்கவேண்டுமென்று தளபதி அறிவிப்பு அவர் தரத்தை காட்டுகிறது.. திமுகவை குறைகூறுபவர்கள் தங்களின் தரத்தை முதலில் நினைத்துக்கொள்ளட்டும்..  ராமதாஸ் எல்லாம் அதிமுகவோடு கூட்டணி தாயோடு  ...சமம் என்ற யோக்கிய சிகாமணிதான் .. காடுவெட்டி குரு இவர் முன்னிலையிலேயே ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதெல்லாம் மறந்துவிட்டாரா.. ராசா பேசியதை வெட்டி ஒட்டி அதை நம்பி அறிக்கை விடுகிறார்.
ராசா தவறாக பேசிவிட்டதாக சொல்கிறார்..  வாய் திறந்தாலேயே அப்பனும் மகனும் பொய் பேசி தரங்குறைந்த வார்த்தைகளை பேசுகிறவர்கள் .. ராசாவை பேச ஒரு தகுதி வேண்டும் அது ராமதாஸ் அன்புமணிக்கு இல்லை
..
தமிழக அரசியலில் தரங்கெட்டவர்கள் ராமதாஸ் அன்புமணி..
..
ஆலஞ்சியார்

Friday, March 26, 2021

கருத்துகணிப்புகள் ஊக்கம் தந்தாலும் வாக்குகளே வெற்றி தரும்.. தலைவர் தளபதி..
..
வரும் கணிப்புகள் மகிழ்ச்சியை தந்தாலும் உழைப்பு உயர்வை தருமென்ற உண்மையை விளங்கியவராய் நிமிர்கிறார்.. களப்பணி மிக நேர்த்தியாக வடிவமைத்து யார்யாரெல்லாம் முன்னிறுத்தி செயலாற்றவேண்டுமென்று அறிந்து தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு உழைத்துவரும் தளபதியின் பேச்சை கவனமாக கேட்டு உழைத்திட வேண்டும்..
..
எதிரிகள் நம் இனபகைவர்களோடு கைகோர்த்து தமிழை அழிக்க தமிழர்தன் வாழ்வாதாரத்தை இல்லாதாக்க பெரும்முயற்சி செய்கிறார்கள்.. தமிழ் எழுத்துகளை அழித்து சமஸ்கிருத ஒலிவடிவ எழுத்துகளை எழுத துணிவுவந்திருக்கிறது .. இவையெல்லாம் தடுத்துநிறுத்தபடவேண்டும்.. திமுக ஆட்சிக்குவந்தவுடன் தமிழ் எழுத்துக்களுக்காக புதிய அரிச்சுவடியை/அகராதியை  உருவாக்கிட வேண்டும் தமிழ் எழுத்துக்களில் கலந்துள்ள சமஸ்கிருத எழுத்துக்களை கலைந்து ஆரம்பப்பள்ளிகளில் கொண்டுவர வேண்டும் (ஜ,ஹ,ஸ) போன்ற எழுத்துக்களை நீக்கி புதியதொரு தொடக்கத்தை தொடக்கப்பள்ளியிலிருந்து துவங்கவேண்டும்.. தமிழின் சிறப்பை சிதைக்க நினைக்கிற ஆரியர்களை அவர்தம் அடிவருடிகளை அதிகாரத்திலிருந்து துரத்துவதே 
நமக்கான நம் இனத்திற்கான பாதுகாப்பு..
..
இந்த தேர்தலில் திமுகவின் வெற்றியை எதிரிகள் அறிந்தே இருக்கிறார்கள்.. பாஜக வேட்பாளர்கள் கூட மோடியின் படத்தோடு கூடிய துண்டறிக்கை கூட வெளிவராமல் கவனமாக இருக்கிறார்கள்.. மோடி தமிழகம் வந்தால் கட்டிவச்சகாசு (டெபாசிட்) கூட கிடைக்காமல் போகுமென அதிமுககாரர்கள் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர்.. அமைச்சரே மோடி வரவேண்டாமென எடப்பாடிக்கு கடிதமெழுதுகிறார் இதுதான் இன்றையநிலை.. செல்லுமிடமெல்லாம் மக்கள் "சிறப்பு" செய்கிறார்கள்.. பத்தாண்டு பாழாய் போனதால் மக்களின் கோபம் பெரும்மூச்சாய் சுட்டெரிக்கிறது.. 
அதிமுகவிற்கு அளிக்கும் வாக்கு அது பாஜகவிற்கே ஆரிய சமூகத்திற்கு பலனளிக்கும் .. தமிழர்களின் வேலைவாய்ப்பை இல்லாதாக்கும் வடவருக்கு வீடு தருவதாக சொல்வதொன்றே போதும் அவர்களின் நோக்கமெது.. அவர்கள் நம் மீது ஏன் இத்தனை வன்மத்தோடு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.. இந்த மண்ணை எவ்வளவு முயற்சித்தும் மதகலவரத்தை ஏற்படுத்த குளிர்காய முடியவில்லை என்ற கோபம் அவர்களின் செயல்களில் தெரிகிறது .. சிறுபான்மை மக்களின் உணர்வுகளை தூண்டி கலவரபூமியாக்க முயற்சித்து தோற்றுநிற்கிறார்கள் .. இந்த அடிமைகளால் இனி பலனில்லை என்பதை அறிந்து  அதிமுக என்ற கட்சியை விழுங்கி பாஜகவாக உருமாற்ற செய்ய முயல்வார்கள்.. எச்சரிக்கை இவர்கள் ஆபத்தானவர்கள்..
..
அதிமுக பாஜகவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கம்.. இன்று பாஜக "நட்சத்திர" வேட்பாளர்கள் கூட மோடி படத்தை அச்சிட்டால் மக்களின் கோவத்திற்கு ஆளாவோமென அஞ்சுகிறார்கள் என்றால் "பெருங்கிழவன் பற்றற்ற தொண்டு" கிழவன் செப்பனிட்ட பாதை ..இங்கே கயமைகளை அழிந்து போகும் .. பொய்யுரைத்தால் அந்தநிமிடமே முகம்கருவிபோவீர்கள் என்ற நிலை .. மதமோ சாதியோ கைகொடுக்காதென்பதை பாஜக பாமக கட்சிகளை மக்கள் எங்கே நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்..  சாந்து பூசி நடித்தால் "கேளிக்கையாய்" மனிதர்கள் வாக்களிப்பார்களென நம்புவதெல்லாம் மலையேறிவிட்டது ..  உழைப்பவனை, உண்மையானவனை, உன்னதனை மக்கள் அறிந்திருக்கிறார்கள்.. ஓயாது உழைப்பவர் .. கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர் யார்.. நம்மை காப்பவர் யாரென மக்கள் தெளிவாக இருக்கிறார்.. சில விஷமிகளின் சூழ்ச்சியை முறியடித்து நல்லவரை நமக்காவரை நானிலம் போற்றும் தளபதியை அறியணையேற்றும் வரை ஓய்வின்றி உழைப்போம்..
மு.க.ஸ்டாலின் எனும் நான்.. 
தமிழகம் ஆவலோடு கேட்க தயாராகிறது..
..
ஆலஞ்சியார்

Wednesday, March 24, 2021

பொய்கள் உலா வருகின்றன..
மக்களின் தன்னெழுச்சி கண்டு இந்த முறை எழவே முடியாதென உணர்ந்து பொய்களை அவிழ்த்துவிட தொடங்கியிருக்கிறார்கள்.. தென் தமிழகத்தில் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு பெருத்த எதிர்ப்பு வரவும் இது தற்காலிக ஏற்பாடென அமைச்சர் சொல்கிறார்.. தினம் தினம் அறிக்கைகளில் பொய் சொன்னவர்கள் அதையே மக்கள் முன் அவிழ்த்துவிட மக்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள் .. கேனசிரிப்போடு சமாளிக்கிற நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது.. பன்னீரை வைத்து காய்நகர்த்தி பாஜக தமிழகத்தில் ஊன்ற காரணமானது இன்று எதிர்வினையாற்றுகிறது.. "பட்டைசோத்துக்கே செஞ்சுருவோம் " என்ற இனப்பெருமையை பேசி தனக்கு  முதல்வர் பதவிவரை தந்தவருக்கு துரோகமிழைத்ததை "சமூகபார்வை" கேள்வி எழுப்புகிறது.. பாவம் தொகுதிக்குள் நடமாட முடியாத நிலை வருமோ என அச்சம் கொள்கிறார்.. 
..
வரும் செய்திகள் அதிமுகவின் அந்திமத்தை எழுதுவதாக அறிந்து "கொடுக்கவேண்டியதை"அமுக்கநினைக்கிறார்களென மூத்தவர்கள் புலம்புவதும் கேட்கிறது ..அதிமுககாரர்களே பன்னீர் எடப்பாடி இருவரின் துரோகங்களுக்கு படிப்பினை தரவேண்டுமென எண்ணுகிறார்கள் .. அதிமுகவை விழுங்க நினைக்கும் பாஜகவை தகர்த்தெறிய அதிமுகவின் தோல்வி அவசியமென நம்புகிறார்கள்.. கட்சியிருந்தால்் போதும் இன்றைய நிலை நீடித்தால் திமுக பாஜக என்ற நிலை வந்துவிடும் அதிமுகவை கரைத்துவிடுவார்கள் எம்ஜிஆர் கட்டியெழுப்பிய கோட்டை தகர்க்கபடும் எனவே அதிமுகவின் தோல்வி மட்டுமே அதிமுக மீளுருவாக்க முடியுமென நம்புவது தெரிகிறது ..
காமராஜரை கலாமை சொல்லிதான் வளர்த்தார்களாம் எங்கே வளர்த்தார்கள் குழந்தை தொழிலாளியாக திரைக்கு அனுப்பினார்கள்.. பொய் சொல்வதென்று முடிவெடுத்துவிட்ட பிறகு எதைப்பற்றியும் கவலைபடகூடாது.. பார்ப்பன குடும்பங்களில் ராமானுஜரை போல வரவேண்டும் என்பார்களே தவிர காமராஜரை மேற்கோள் காட்டமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் காமராஜரையே கொல்ல துணிந்த கூட்டம்.. அண்டங்காக்கையை டெல்லயிலேயே முடித்துவிடவேண்டுமென கு.கா.பாளையம் ராஜகோபால் (ராஜாஜி) சொன்னதெல்லாம் வரலாறு .. கமல் பிரபலமாகி வளர தொடங்கிய காலத்தில் கலாமை யாருக்கும் தெரியாது .. குஜராத் கலவரத்தின் தாக்கத்தை மறைக்க குடியரசுதலைவராக்கபட்டவர் கலாம்.. அடிப்படை அரசியல் அறிவற்று பிரசாரங்களில் எதையாவது உளறிக்கொட்டிவைப்பது .. தமிழகத்தில் பொய்யுரைகள் பலிக்காது.. உடனே தோலுரிக்கபடும் .. எப்போது நடந்ததென "பூர்வஜென்மம்" குழிதோண்டியெடுத்து சொல்லிவிடுவார்கள்.. பேராசான் பெரியார் அப்படிதான் திராவிடத்தை கட்டமைத்திருக்கிறார்.. யார் சொன்னாலும் யோசி உன் அறிவேற்காததை ஏற்காதே என தெளிவுபடுத்தியிருக்கிறார்.. 
அதனால் தான் இன்னமும் கோபத்தோடு களமாடுகிறார்கள்..
"தொலைநோக்கு" என்பதை கூட "கொம்புசுழி" போட்டு எந்த வளைத்தளத்திலும் இல்லாததை பெரியார் சீர்த்திருத்தம் செய்தார்  என்பதற்காக மாற்ற முயற்சிக்கிறார்கள் பாவம்..
கணினிக்கு இன்று உதவுகிறது 
சீர்த்திருத்தத் தமிழ் எழுத்துகள் 
நினைத்தாலும் முடியாது அதைப்போல சென்னையை பிரித்து தமிழ்நாட்டிற்கு பெயர்மாற்றுவோம் எனச் சொல்லிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் பின்வாங்குவது இவர்களுக்கு பழக்கமானதுதான்..
..
பொய்யர்கள் உலா வருதல் கண்டு விழிப்போடு தமிழகம் உற்றுநோக்கி.. கயமையை சுட்டெரிக்கும் உதயசூரியனை எதிர்நோக்கி காத்திருக்கிறது..
பாசிசத்தை  முதுகில் சுமந்து சவாரி செய்யும் அடிமைகளை விரட்ட தயாரென்பதை நாளுக்குநாள் வரும் செய்திகள் உறுதி செய்கின்றன..
..
தமிழகம் விடியலை நோக்கி ..
..
ஆலஞ்சியார் 

Monday, March 22, 2021

கருத்துக்கணிப்புகளும் திணிப்புகளும்..
பல்வேறு தொலைக்காட்சிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் ஆளுக்கொரு கருத்தை பதிவிட்டு ஐந்து சட்டமன்ற தேர்தல் களத்தைை சூடாக்கியிருக்கிறார்கள் .. தமிழகத்தைை பொறுத்தவரைை திமுக வெல்லும் என தொடர்ந்து ஏறக்குறைய எல்லா கணிப்புகளும் சொன்னாலும் சில ஆரியபாசத்தில் அதிமுக விஸ்வரூபமெடுக்கும் என திசை திருப்ப புதிய உக்தியை கையிலெடுத்திருக்கிறார்கள் .. 
..
அமுமுக வாக்கை பிரிக்கும் மய்யம் பிரிக்குமென தங்களுக்கு சமாதானம் செய்துக்கொள்கிறார்கள் .. களநிலவரத்தை யாரும் உணரவோ அல்லது அதை செய்தியாக்கி தரவோ முயவில்லை.. அதிமுக அமைச்சர்கள் தொகுதியிலேயே முடங்கி கிடப்பதும், சிலரை ஊர்மக்கள் உள்ளே விட மறுப்பதும் செய்திகள் ஆவதில்லை .. ஒபிஎஸ் சில இடங்களில் எதிர்ப்பின் காரணம் திருப்பியதெல்லாம் சமூகவலைத்தளங்களில் சிரிக்கிறது ..  மாநிலத்தின் முதல்வர் பேசுவதை கூட நின்று கேட்க மனமில்லை.. ஆம் முதல்வரை போல பேசாமல் திமுககாரர்கள் குண்டாக இருக்கிறார்களென பேசுகிறார்..தன்னை விவசாயி என்பவர் மக்கள் முன் எட்டுவழிச்சாலை பற்றி பேசவேண்டியதுதானே.. 
ஆனால் மக்கள் மௌனப்புரட்சி செய்வதாக சொல்கிறார்கள் .. ஆளும்கட்சிக்கு பெரிய எதிர்ப்பலை இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயன்று தோற்று நிற்பது வேடிக்கை..
..
அதிமுகவின் அழிவு அதிமுக ஆட்சியின் இறக்கம் பாஜகவோடு கைக்கோர்த்ததில் தொடங்கியது .. பாஜக பெயரைச் சொன்னாலே கோபடும் தமிழர்களிடத்தில் (நோட்டாவிற்குகீழே) காலடியில் வைத்திருந்தவர்கள் இன்று அதிமுக அதற்கு களம் அமைத்து தந்தது அதற்கு பின்னடவையே தரும் ..  வேட்பாளர் தேர்வில் தொடங்கி யார் கை ஓங்கவேண்டுமென்பதுவரை முதுகில் குத்தும் போர் நடந்துதான் வருகிறது இதில் வல்லவரான எடப்பாடி சற்று முன்னில் ..பன்னீரின் அரசியலை முடிவிற்கு கொண்டுவர பெரும்பாடுபடுவதும் தெரிகிறது..
..
அமுமுக அதிமுகவின் வாக்குவங்கி என கருதபடும் சாதிய வாக்குகளை கூறுபோடுகிறது கூடவே பன்னீரின் துரோகமும் தொடர்ந்து அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் இன்று திமுகவை ஆதரிக்கிறார்கள் அதிமுக கரைவேட்டியைை கூட மாற்றாமல் தாங்கள் திமுகவிற்கு வாக்களிக்க போவதாக ஸ்டாலின் நிறைய மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பாரென நம்புவது அவர்களின் பேச்சில் தெரிகிறது.. மய்யத்தை எல்லாம் பொருட்டாக கருத தேவையில்லை சுயநலம் அவரது பேச்சிலும் செயலிலும் அப்பட்டமாக தெரிகிறது கல்விக்கொள்கை மொழிக்கொள்கையில் அவரின் கருத்தே அவரை தமிழகம் புறந்தள்ள போதுமானது.. இந்தமுறை பொய்களால் ஆன பிம்பம் நாதக உடைத்தெறியபடும் சீமானின் புளுகுகை கேட்டு சிரிக்கிறார்கள்
..
கருத்துக்கணிப்புகள் திமுக வெல்லும் அதிலும் அபார வெற்றிபெறும்,என வந்தவுடன் உளவுத்துறை அதை உறுதி செய்தது அதிமுக முந்துவதை போல செய்திவெளியிட ஆதரவு ஊடகங்கள் பணிக்கபட்டு செய்திகள் வருவதாக மூத்த அதிகாரி சொல்லிச் சிரிக்கிறார்..
மக்கள் மிக தெளிவாக தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பன்னீர் எடப்பாடி பாண்டியராஜன் போன்றவர்களை வைத்து ஆர்எஸ்எஸ் கேள்விக்குறியாக்கிவிடும்.. கல்வி எட்டாக்கனியாக்கிவிடுவார்கள் சமஸ்கிருதம் படிக்காமல் தமிழர்கள் ரௌடிகளாக மாறுவதாக திமிரில் ஒருவன் பேசுகிறானென்றால் எவ்வளவு திமிர் வேண்டும் .. எழவே முடியாமல் புதைக்க தயாராகிவிட்டனர் .. இனி பொறுப்பதற்கு ஒன்றுமில்லை தமிழகம் அதிமுக அடிமைகளை விரட்ட தயாராகிவிட்டது..
..
முன்பு திமுக காலத்தின் கட்டாயம் இப்போது திமுகவை தோற்கபடிப்பது காலத்தின் தேவையென கமல் சொல்கிறார்.. இன்னும் ஏன் இடஒதுக்கீடென உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்தை சொல்கிறார்களே அதை தடுக்கும்வரை வேண்டும்.. சமஸ்கிருதத்தை மூத்தமொழியென பொய்யைை திரித்து தமிழை தாழ்த்த எண்ணி +12 பாடத்தில் சேர்ப்பதை அழிக்க திமுக வேண்டும்.. கீழடி தமிழர் பண்பாட்டை தமிழனின் பெருமையை தமிழரின் நாகரீகத்தை பாரத நாகரீகமென தமிழ்வளர்ச்சி துறைக்கொண்டே சொல்ல வைப்பதை தடுக்க திமுக வேண்டும்.. தமிழ் குழந்தைகளின் உயர்க்கல்வி கனவை சிதைக்கும் பாசிச திமிரை ஒடுக்க திமுக வேண்டும்.. தமிழை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளை விரட்டிட திமுக வேண்டும்.. இம்மண்ணில்
பார்பனீயம் ஒழிக்கபடும்வரை திமுக தேவைபடும்.. சனாதனம் வர்ணகோட்பாடு சாதிமதவெறி ஒழிக்கபடும்வரை திமுக தேவைபடும்.. இந்தியாவிற்கு வழிகாட்டுவதற்கு திமுகவின் தேவை அவசியம்.. நிறைய அரசியல்வாதிகள் ராஜாஜி தொடங்கி பார்த்தாயிற்று .. பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தோற்றுவித்ததின் நோக்கம் நிறைவேறும் வரை திராவிட இயக்கம் உயிர்ப்போடே இருக்கும்.. 
திமுக தமிழகத்தின் தேவை 
திமுக தமிழகத்தின் வளர்ச்சி
நம்பிக்கை எதிர்பார்ப்பு .. அதைதான் கருத்துகணிப்புகள் காட்டுகிறது..
..
ஆலஞ்சியார்



Saturday, March 20, 2021



புரிதலற்ற போனது இஸ்லாமிய சமூதாயம்..
பி.டி.ஆர் வாக்குசேகரிக்க சென்ற போது "சிலர்" இஸ்லாமியர்களின் வாக்கு இஸ்லாமியர்களுக்கே என கோஷம் போட்டார்களாம்.. அவர் அமைதியாக என் வாழ்நாளில் நான் சந்தித்த ஒரே வழக்கு CAA NRC க்கு எதிராக நான் பேசியதற்காக ..
யாருக்கு வாக்களிப்பதென்பதுஉங்கள் உரிமை என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.. அந்தந்த சமூகமும் தன் சமூகம் சார்ந்தவருக்கு தான் போடுவோமென்றால் அதைவிட அரசியல் தெரியாதநிலை வேறொன்றும் இல்லை..
இதற்கெல்லாம் தங்களை இஸ்லாத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ள நினைக்கும் அறிவிலிகளே காரணமே தவிர முஸ்லிம் சமூகம் அல்ல.. சமுதாய இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை அரசியல் என்னவென்றே தெரியாமல் மதத்தோடு இணைத்து அரசியலை முன்னெடுக்க வைத்த அரைவேக்காட்டுத்தனம் 
இன்று இதுபோன்ற விசமிகளால் நிகழ்கிறது..
..
ஆளூர் ஷாநவாஸ் 
அவரை சிலர் முன்பு இஸ்லாமிய பெண் வேறுமதத்தவரை திருமணம் முடித்ததற்கு "மார்க்கஅறிஞர்"  கூட்டம் பத்வா வழங்கியதை எதிர்த்து அதையே ஆண் செய்கிற போது ஏன் தருவதில்லை என்ற கேள்வி எழுப்பினார் உடனே வானுக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் .. அதில் குவைத் உலமா அமைப்புகள் கண்டன கூட்டமே நடத்தியது.. இது விவேகமற்ற செயலென அப்போதே சொன்னோம் ..இன்று அதை முன்னெடுத்து முஸ்லிம்களின் "நவீன காவலர்கள்" பொங்குகிறார்கள்..
கோவிலில் பரிவட்டம் கட்டியதை எப்படி ஏற்கலாமென்றெல்லாம் கத்துகிறார்கள்.. 
பரிவட்டமென்பது முதல்மரியாதை அவ்வளவுதான் எனக்கு தெரிந்து இன்னமும் சில கோவில்களில் முஸ்லிம் சகோதரர்களுக்கு முதல்மரியாதை செய்வது ‌நடக்கிறது .. முன்பெல்லாம் துண்டும் மாலையும் வைத்து கோவிலில் இருந்து மரியாதை வரும் .. இதெல்லாம் இந்த பரதேசிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
கலீபா உமர்(ரஹ்)  காலத்தில்  கலிபா உமர் அவர்களே தேவாலயம் சென்று மரியாதையை ஏற்றுவாங்கியதெல்லாம் வரலாறு சொல்லும் இதெல்லாம் இந்த சமுதாய கிறுக்கனுக்களுக்கு தெரியாதா..?
..
முதலில் நீங்கள் தமிழக இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அல்ல.. .
தலைவனற்ற சமுதாயமாக ஆளாளுக்கு ஒரு வழி அதிலும் நான் செல்வதுதான் சிறந்தவழி அது நேராக சொர்க்கவாசலை அடையுமென சொல்லி திரிபவர்களின் இணையர்களே(மனைவியர்கள்) அதை நம்பமாட்டார்கள் அதுதான் உண்மை இவர்கள் லட்சணம் இதுதான் .. அரசியல் வேறு ஆன்மீகபாதை வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள் .. இரண்டு சீட்டு திமுக தந்திருந்தால் திமுக  இவர்கள் பார்வையில் தூய்மையடைந்திருக்கும்  உண்மையில் இவர்களை போன்றவர்களை கொள்கையற்ற ஆன்மீக கோமாளிகளை சேர்க்காதது தான் தூய்மையான அரசியல் ..
..
முஸ்லிம் சீமானை, SDPI அமுமுக போன்ற அமைப்புகளை நம்புவது வீண்.. இவர்கள் ஒழுக்கமற்ற அரசியலை முன்னெடுப்பவர்கள் பொய்யர்கள் பாசிசத்திற்கு ஒருவகையில் துணைகும் கூட்டம்..  அரசியலில் எதிர்ப்பை காட்ட வாக்குசீட்டு பயன்படுத்த வேண்டுமே தவிர தனிநபரை விமர்சிப்பதோ வாக்குகேட்க விட மறுப்பதோ சரியான அணுகுமுறையல்ல..  உனக்கு யார் தலைவனென்றே தேர்ந்தெடுக்க தெரியாமல் பேச தெரிந்தவன் மதம் சொல்லி மூளைச்சலவை செய்பவனை பின்பற்றி நிற்கும் போது .. இதுபோன்றுதான் தாக்க தோன்றும் .. பொது அரசியலோடு பழகுங்கள் ..மதம் சார்ந்த விடயங்களை அரசியலில் நுழைக்காதீர் .. என் இனத்தவனுக்குதான் என் சாதிகாரனுக்குதான் என் மதத்தை சேர்ந்தவனுக்குதான் என்பதுகூட  பாசிசம் தான் .. 
யாரை முன்னுறுத்துவதென்றும் தெரியவில்லை யாரை பின்துணைப்பதென்றுமே புரியவில்லை.. இந்த சமூகம் சீரழிகிறது.. நூற்றாண்டு அரசியலுக்கு சொந்தகாரர்கள் சிலரின் ஈனபுத்தியால் செல்வாக்கிழந்து வலுவிழந்து நிற்பது காலக்கொடுமை..
..
இப்போதும் நேரமிருக்கிறது..
உங்கள் முன் பாசிசத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோகிறவர்கள்.. நேர்மையோடு எதிர்த்துநிற்பவர்கள்.. யார் தேவையென்பதை யோசித்து முடிவெடுங்கள்.. நீங்கள் செய்யும் தவறின் பலன் உங்கள் எதிர்காலத்தை உங்கள் சந்ததியின் எதிர்காலத்தை பாதிக்கும்.. பொய்யர்களும் புரட்டுபேசி திரியும் புளுகர்களும்,
வாய்சவடால் வீரர்களும் .. மதம் சாதி பிரிவினை பேசி திரியும் மடையர்களும் உங்களை மூளைச்சலவை செய்ய வருகின்றனர் அவர்களை புறந்தள்ளுங்கள்..   
நேர்மையானவர்களை சமுகத்தின் பாதுகாவலர்களை நாட்டின் நலன்விரும்புவோரை தேர்வு செய்யுங்கள்..
விடியும் ..
விடிந்துதானே ஆகவேண்டும்
உதயசூரியன்..
..
ஆலஞ்சியார்

Tuesday, March 16, 2021

பிரித்தாளும் சூழ்ச்சி..
பாஜக மிக நேர்த்தியாக வாக்குகளை பிரிக்க முயற்சிக்கிறது.. மதரீதியாக முஸ்லிம் வாக்குகளை பிரிக்க SDPI நம்புகிறது ..அதே போல கிருஸ்துவர்களின் வாக்குகளை பிரிக்க சகாயம் முயல்வார்.. சாதிய கூட்டணிகள்(ராமதாஸ் கிருஷ்ணசாமி) வாக்கை பிரிக்கலாம் .. அதிமுகவின் வாக்குவங்கி சிதலமடைய செய்து வலுவிழந்த நிலையில் நிறுத்தினால் அந்த இடம் தமக்கு கிடைக்கலாமென நம்பி பல்வேறு முன்னெடுப்புகள்.. கமல் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற பிம்பத்தை கொண்டுவர பணிக்கபட்டிருக்கிறார்..
ஒன்று தெளிவாக தெரிகிறது அதிமுக கரைய தொடங்கியிருக்கிறது..
வலுவற்ற தலைமை அடிமைத்தனம் அடித்த கொள்ளையால் பிடிப்பட்டு வழக்கு சிறையென காலம்கழியுமோ என அஞ்சி எதைச் சொன்னாலும் செய்யும் கூட்டம் .. இந்த தேர்தல் விசித்திரங்கள் நிறைந்தது..
..
இஸ்லாமியர்கள் தெளிவற்ற பார்வை .. யாராண்டால் என்ன.. நாம் தொடர்ந்து பேசுபொருளாக வேண்டும், போராட்டம் அதைவைத்து தம்மை முன்னிலைபடுத்தி "சமுதாயகாவலன்" என்று ஊர்பேசவேண்டும் அவ்வளவுதான் தீர்வைநோக்கிய பயணம் தேவையில்லாதது அப்புறம் சோத்துக்கு என்ன செய்வது .. கொள்ளையடித்து சிறைச்சென்றவர் "தியாகி" என புகழ ஒருவேளை "அர்சில்" எழுதபட்டிருக்கலாம் .. கேவலமான நிலைபாட்டை எடுக்க சமுதாய மக்கள் மீது தனிபாசம் வேண்டும் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்ற தைரியம் வேண்டும்....
..
சாதிய வாக்குவங்கியை நம்பி 
இனி தமிழகத்தில் காலம் தள்ளமுடியாது .. சொந்த சமூகத்தை இந்தளவு விலைபேசியவர்கள் யாருமிருக்க முடியாது..  தமிழகத்தில் சமூகநீதி பேசினால் தான் காலூன்ற முடியுமென அறிந்து போராளி வேசம்கட்டி அது வேலைக்காகாது என அறிந்து குடிசை எரித்தும், கௌரவ கொலைகளை தூண்டியும் சாதி எரியூட்டி குளிர்காய்ந்தவர்கள் கொழுத்து வளர்ந்தபின் தன் நலன் மட்டுமே பார்த்து அரசியல் செய்தது கடைசியில் கேவலபட்டுநிற்கிறது.. தன் உயர்ஜாதிகாரனாய் அடையாளபடுத்த எண்ணி கடைசியில் வேண்டாத பொருளைபோல குப்பைதொட்டில் கிடக்கும் அவலம்..
..
நேர்மையானவரென நம்பவைத்து அதிமுக ஆட்சியின் ஊழலை கொள்ளையை கேள்வி கேட்காமல் தன் மதத்தவர் அதிகமிருக்கும் தொகுதிகளை கண்டு ஆட்களை நிறுத்தும் யோக்கியர்.. பாஜகவை சகாயம் செய்ய,திமுகவின் வெற்றியை தடுக்க பாசிச பாஜக களமிறக்கிய "புதிய வார்ப்பு " அரிதாரம் கைகொடுக்காத நேரத்தில் யோக்கியன் வருகிறேன் நாட்டை சுத்தபடுத்த என வாங்குகிற சம்பளத்தை கருப்பில் பாதி வாங்கும் "உத்தமன் " இவர்களோடு ₹1000 மாத வருமானத்தில் 200 கடாவெட்டி விருந்து போட்டு பிரபாகரனுக்கே "மொட்டை" போடும் எளிய பிள்ளைகள்.. 
..
இவையெல்லாம் திமுகவிற்கு செல்லும் வாக்கை பிரிக்க முடியுமா என்ற நப்பாசையில் உருவானவைகள் .. 
வெற்று விளம்பரங்களால் 
வெற்றி வருமென நம்பும் மூடர்கள் .. உண்மையில் வேடிக்கையாய் ..
..
தோல்வி என்று தெரிந்தும் சிலர் வீம்பு பேசுகிறார்கள் .. 10 ஆண்டுகள் பாழாய் போனதால் தமிழகம் இழந்தவைகளை பட்டியலிட்டால் தலைசுற்றும் .. ஓபிஎஸ்  செய்த அயோக்கியத்தனம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்ததென்றால்.. பாண்டிராஜன் நம் குழந்தைகளின் கல்விகனவை சிதைத்து ஆர்எஸ்எஸ் கனவை செயல்படுத்திய மகாபாவி.. இவர்களின் தோல்வி சரித்திரநிகழ்வாக வேண்டும் .. எதற்கெடுத்தாலும் தலையாட்டி தமிழகத்திற்கு தீராத களங்கத்தை தந்த  எடப்பாடி மத்திய அரசு கொண்டுவந்த அனைத்து பார்பனர் நலனுக்காக திட்டங்களை கண் மூடி ஆதரித்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து CAA சட்டமாக வாக்களித்துவிட்டு இன்று அழுத்தம் தருவோமென புளுகும் அயோக்கியர்கள் .. இந்த கேடுகெட்டவர்களை எழ முடியாதவாறு தோல்வியை தருவோம் ..
..
பிரித்தாளும் சூழ்ச்சியை அறிந்து, இப்போதைய நிலையில் திமுக கூட்டணியின் வெற்றி வரலாற்று சிறப்பிற்குரியதாக இருத்தல் வேண்டும்.. நமது கசப்புகள் குறைகள் எல்லாம் தூரவைத்துவிட்டு விசபாம்புகளை அடித்து துவைப்போம்.. நமது உரிமைகள் தேவைகளை திமுக செய்யும் ..சில சில குறைநிறைகள் இருக்கலாம் அதை நாமே சரிசெய்து கொள்ளகூடியவைகள் தான் ..ஆனால் நம்மை அழிக்க அடிமைபடுத்த சுயமரியாதையை சுட்டெரிக்க நினைக்கும் பாசிச பார்பனீய கூட்டத்தின், ஆர்எஸ்எஸ் எனும் தேசவிரோத கும்பலின் கைப்பாவையாய் தலையாட்டியாய் அடிமைகளாய் இருக்கும் இந்த கேடுகெட்ட அயோக்கிய அடிமை அதிமுகவை அதிகாரத்திலிருந்து விரட்ட திமுக கூட்டணியை வரலாறு காணாத வகையில் வெற்றிபெற செய்வோம்..
..
தளபதி.ஸ்டாலின் தமிழர்களின் நம்பிக்கை .. தமிழகத்தின் எதிர்பா்ப்பு .. நாளைய விடியல் ..
வைகறை வெளுக்கும் 
உதயசூரியன் மெல்லென சிரிப்பான்..
..
ஆலஞ்சியார்





Monday, March 15, 2021

நல்ல மேய்ப்பன் 
திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல தலைமைத்துவத்தோடு செயல்படுகிறார் .. நம்பிக்கையானவர்கள் யார் யாரெல்லாம் தாவி குதிப்பார்கள் என்றறிந்து தன் செயல்படுகிறார்..சிலரை ஏன் புறக்கணிக்கிறாரென எண்ணியதுண்டு .. அது அவர்களுக்கான பரிட்சைகாலம் நல்ல நிர்வாகி கடைசியில் நிற்பவனை கூட கவனித்துக்கொண்டிருப்பான் ..
..
திமுக தலைவர் நல்ல நிர்வாகியாக மிளிர்கிறார்.. திமுக கூட்டணியை முன்னெடுத்ததில் பெரிதும் வெற்றிபெற்றிருக்கிறார் .. ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் எண்ணிக்கையில் திடமாயிருந்து வெற்றியின் இலக்கை எளிதாக்கியிருக்கிறார்.. உட்கட்சியில் சில புல்லுறுவிகளை முதலிலேயே இனங்கண்டு வாய்ப்பை மறுத்து தான் சிறந்த தலைவர் என்று ஊருக்கு சொல்லியிருக்கிறார்.. மாபெரும் ஜனநாயக இயக்கத்தின் தலைமை என்பது சவால்கள் நிறைந்தது.. பல்வேறு கருத்துபரிமாற்றங்கள் பிணக்குகள் சோர்வுகள் காணப்படும் அவையனைத்தையும் கண்டு களைந்து அனைவரையும் அரவணைத்து செல்லுதல் மிகப்பெரிய காரியம் ..
உனக்கான வாய்ப்பு வரும் அதுவரை காத்திரு என்ற அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி "என் கவனத்தில் " நீ இருக்கிறாய் என நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.. 
..
மிக மோசமான காலகட்டத்தில் பகைவர்கள் அடிமைகளை கொண்டு தமிழர்களின் கழுத்தறுக்கும் வேளையில்,பலம்கொண்டு நம் முன் நிற்கும் போதும் கொஞ்சமும் சஞ்சலப்படாமல் தெளிவான பாதையை வகுத்து களம் காணும் தளபதி..  உழைப்பின் சோர்வு முகத்தில் தெரிகிறது ஆயினும் தமிழன் வாழ்வு சீரழிந்துவிடகூடாதென உழைத்துக்கொண்டிருக்கிறார் ..
மிகச்சரியான தேர்வுகளை செய்து தன் படைவீரர்களை நிறுத்தியிருக்கிறார்.. எதுவெல்லாம் தமிழினத்தின் மீது வலுகட்டாயமாக திணிக்கபடுகிறதோ அதையெல்லாம் எதிர்த்தும் எது தேவையென அறிந்து அது மறுக்கபடுமேயானால் அதை பெற்றுதருவதற்கும் தமிழ்நாடு மிகவும் நம்புவது தளபதியை தான்
.. 
தேர்தல் அறிக்கையில் CAA சட்டத்திற்கெதிராக எதுவும் இல்லையென சிறுபான்மை சமூகம் கவலையடைந்ததை கண்டு அறிக்கையில் திருத்தம் செய்து திமுக காவலனாய் விளங்குமென முஸ்லிம்களிடையே பெரும்நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.. நாடாளுமன்றத்திலேயே எதிர்த்தவர்கள் .. சட்டமன்றத்தில்
தீர்மான போட வலுயுறுத்தியவர்கள் என்பதை நாடறியும் ..திமுக ஆட்சியில் தமிழகத்தில் CAA சட்டத்தைை செயல்படுத்தாது .. ஆனால் அதிமுக அறிக்கையில் CAA க்கெதிராக அழுத்தம் தருவோம் என சொன்னதை பாசிச எஜமானின் பணியாள் அதெல்லாம் முடியாதென சொல்கிறார் அதற்கு எடப்பாடி பதில் தராமல் நழுவுகிறார் ..இந்த ஆட்சியே பாசிச பாஜகவின் பினாமி ஆட்சிதான் இங்கே வேரூன்ற முடியாதென்பதால் அதிமுக அடிமைகளை அவர்களின் ஊழலை அடித்த கொள்ளையை காரணம் காட்டி மிரட்டி பணியவைத்து காரியத்தை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள்.. இல்லையென்றால் நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு  20 சீட் தந்து சுமப்பார்களா..?
..
நமக்கு கிட்டிய வாய்ப்பு ..
நல்லவர் தெளிவான சிந்தனையோடு பாசிசத்தை வேரறுக்க,பகட்டில்லாமல்,பொய் புரட்டு பித்தலாட்டமில்லாமல் இதை செய்வேன் இதை தவிர்ப்பேன் என வெளிப்படையாக பேசி, குறுக்குவழியில் பதவி சுகம் தேடாமல் எதையும் மக்கள் தந்ததாக இருக்கவேண்டும் என்ற உயர்நோக்கு அறத்தோடு உண்மையாய் உழைப்பதற்கு நமக்காக ஓய்வில்லாமல் உழைப்
பவர் உரிமையோடு கேட்கிறார்..
வாய்ப்பை தருவோம் ..
நாடும் நாமும் நலம் பெறுவோம்
ஸ்டாலின் தான் வராரூ 
விடியல் தரப்போறாரூ..
..
ஆலஞ்சியார்
 

Saturday, March 13, 2021

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை 
#DMK2021manifesto

சொன்னதைச் செய்வோம்
செய்வதை சொல்வோம்
..
அமையவிருக்கும் புதிய அரசு மக்கள் நலனுக்கானதென்பதை உணர்த்தும் தேர்தல் அறிக்கை .. கல்விக்கான முக்கியத்துவம் உணர்ந்து ஏழைகளும் இல்லாதோரும் மருத்துவபடிப்பை தொடர நீட்தேர்வெனும் தடையை உடைத்தெறிய சட்டம் இயற்றப்படும் .. விவசாய கடன் தள்ளுபடி சிறுகுறுதொழில் தொடங்க கடன்.. படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க ₹20 லட்சம் வரை கடன் 
மகளிருக்கு உள்ளூர் பேருந்தில் இலவசபயணம் பேறுகால விடுமுறை 12மாதம் ..அயகல அமைச்சகம், அனைத்துசாதியினரும் அர்ச்சகர், அரசுபணிகளில் பெண்களுக்கு 40% விழுக்காடு.. கொரோனா நிவாரணம்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும்
ஆவின் பால் லிட்டர் 3 ரூபாய் குறைக்கப்படும். 
பெட்ரோல் 5, டீசல் 4 குறைக்கப்படும். 
சிலிண்டர் ரூபாய் 100 மானியம் வழங்கப்படும். கலைஞர் உணவகம் அமைக்கப்படும். 
ரேஷனில் உளுந்து வழங்கப்படும் 
 மாதம் தோரும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் - மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி 
மசூதி.. தேவாலயங்கள் சீரமைக்க 200 கோடி...  கோயில்களை சீரமைக்க 1000 கோடி ரூபாய் 
பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் 
மகளிர் பேறுகால உதவி 24000 
தொழில் நிறுவனங்களில் 75 % தமிழர்களுக்கு வழங்கப்படும். 
முதல் கூட்ட தொடரிலேயே நீட் தேர்வு ரத்து 

கல்வி துறை மாநில பட்டியலில் கொண்டு வர நடவடிக்கை 
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் 
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 
தனியார் துறையில் இட ஒதுக்கீடு 
ஆன்மீக சுற்றுலா செல்ல நிதி 
பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும் 
மீனவர்களுக்கு இரண்டு லட்சம் வீடுகள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு ..
..
இதில் முத்தாய்ப்பாய் பொங்கல் தமிழ் தேசிய விழாவாக(பண்பாட்டு திருவிழா) கொண்டாடபடும்.. எட்டாவது வரை மத்திய மாநில அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாயம் .. வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 75% விழுக்காடு..
தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு .. அமைச்சர்கள் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம்.. சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும்.. 
மாதாமாதம் மின்கட்டணம் என்பது நிறைய சேமிப்பை குடும்பத்திற்கு தரும்..
திட்டங்களை செயலாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக "திட்ட செயலாக்க அமைச்சகம்" 
..
பிற கட்சிகள் தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதம்.. 
திமுக அறிக்கை சட்டம் .. இவ்வளவுதான் வேறுபாடு
ஒரே வரியில் அடி தூள் 💕

#திமுகதேர்தல்அறிக்கை2021😍
..
ஆலஞ்சியார்

Friday, March 12, 2021

திமுக கதாநாயகர்கள்

திமுக வேட்பாளர் பட்டியல்..
எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கை "கதாநாயகன் " என்பார்கள் இந்தமுறை வேட்பாளர் பட்டியலே கதாநாயகனாக இருக்கிறது .. மிக தெளிவான யாரை எங்கே நிறுத்துவது என சரியான தேர்வாய் வந்திருக்கிறது ..எங்கள் தொகுதியை கூட்டணிக்கு கொடுத்துவிட்டார்களே என்று வருத்தத்தில் இருந்தவர்கள் கூட வேட்பாளர் பட்டியல் வந்தவுடன் புத்துணர்ச்சியோடு வலம் வருகிறார்கள் ..
இத்தனை நாள் பட்டதுயர் துடைக்க வரும் படைவீரர்கள் 
தனியொருவராய் தளபதி நாட்டின் நலிவு நீங்கிட உழைக்கிறார்.. திராவிடத்தின் இறுதியை எழுதிவிடுமோன்றவர்களை செவிட்டில் அறைந்து எழுச்சியோடு தூக்கி நிறுத்தி திமுக இன்னும் நூற்றாண்டிற்கு தமிழகத்திற்கு தேவை என கடும் உழைப்பை தருகிறார்.. அவரின் படைவீரர்கள் யார் என்பதை எல்லாம் பார்க்காமல் உழைப்போம்
ஒவ்வொருவரும் தளபதியின் வீரர்கள் ..அவர் கைகாட்டும் திசையில் படையோட்டம் நடத்துவார்கள் .. வெற்றியை தளபதியின் தருவார்கள் ..
..
கலைஞரே நிற்கிறார்.. தளபதியே களம்காண்கிறார் என்ற ஒற்றை சிந்தனையோடு நாம் பணிசெய்வோம் .. 
நல்லதொரு தேர்வாய், அனைத்துதரப்பினரும் ஏற்கும் களப்பணியாளர்களாய் நம் வேட்பாளர்கள் .. குறிப்பாக அமைச்சர்களை எதிர்த்து நிறுத்தியவர்கள் "வாள்வீச்சில் கெட்டிகாரர்கள்" எதிரிகள் தலைபோகும்.. இப்போதே கண்ணில் பீதியோடு நிற்கிறார்கள் நம் எதிரிகள் ..  ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கும் நேரம் வந்துவிட்டதென அறிவார்கள் ..பாசிசத்தின் கரம்பற்றி தமிழகத்தை வஞ்சித்த கூட்டத்தை சாய்க்க செம்மார்ந்த வீரர்கள் .. கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து தலைவர் சொன்னதைப்போல 234 தொகுதியிலும் வெற்றியை பறித்து தலைவர் கரங்களில் தருவோம் .. கலைஞரின் போர்படைவீரர்கள் தளபதியின் தலைமையில் வெல்லபோகும் வெற்றியை சரித்திரம் குறித்து கொள்ளும் .. வெல்ல எவனுமில்லை என புகழ்பாடும்..
..
தலைவர் கலைஞருக்கு பிறகு நாம் காணும் தேர்தல்.. அவர் இல்லாத குறையின்றி உறையிலிருந்து புறபட்ட வாளைப்போல தளபதி சுழன்றடிக்கிறார்.. பகைவர்கள் யார் .. இனத்தின் பகைவர்கள் பல வேசம் கட்டி வருகிறார்கள் சூழ்ச்சிகளால் நம் வெற்றியை தடுத்திட முடியுமா என பேராசை கொண்டு பல்லிளித்து நிற்கிறார்கள்.. பாசம்காட்டி மோசம் செய்திட முடியுமா என பார்க்கிறார்கள் .. நல்லவன் வேடம் கட்டி "அரிதாரமோகத்தால்" கவர்ந்திட முடியுமா என நினைக்கிறார்கள்.. பொய்யும் புளுகும் சுமந்து புராணம் பேசும் கூட்டமும் விபூதியடிக்க பார்க்கிறது .. ஆமைகதைகளை சொல்லி தேர்தல் குளத்தில் அள்ளியேனும் குடிக்க முடியுமா என பார்க்கிறார்கள் .. கயமைத்தனம் துரோகம் அடிமைசாசனம் என கடைசிவரை சுரண்டிவிட்டு பொய்யாய் வாக்குறுதியை தந்து மீண்டும் வரமுடியுமா என கனவோடு நிற்கிறார்கள்.. ஆனால் தளபதிபடை வீறுகொண்டு வரலாறு படைக்க வருகிறது ..
காஞ்சிதலைவனின் அருகில் துயில் கொள்ளும் பாசத்தலைவனிடம் வெற்றி ஓலையை வைத்திட 
புறப்பட்ட புறநானூற்றுப் படை.. இது ..
 வெல்லும் சரித்திரம் இனி சொல்லும்
இதுபோல் வெற்றி இனியில்லையென 
உழைப்பு..உயர்வு ..நேர்மை ..இதுதான்  தளபதி..

“செருமுக நோக்கிச் செல்கென விடுமே!”
..
ஆலஞ்சியார்

Thursday, March 11, 2021

Sdpi

அல்லாஹ்வுடைய அர்ச்சில் எழுதபட்டிருக்கிறது நெல்லை முபாரக்..
சென்ற முறை தேர்தல் பரப்புரையின் போது சொன்னது தியாக தலைவி சின்னம்மா, தியாக செம்மல் தினகரன் தலைமையில் என்றெல்லாம் பேசினார்கள்.. மய்யத்தோடு கூட்டணி என்று செய்தி வந்தன.. 18 இடங்கள் என்றார்கள் .. சமுதாய அரசியல் அறிஞர்கள் ஹூதைபிய்யா உடன்படிக்கை என புகழ்மாலை பாடி முடிப்பதற்குள் தினகரனோடு மீண்டும் இணைந்தார்கள் .. நல்ல சவாரி.. ஆறு இடங்களோடு மனம் ஆற இனிதே முடிந்தது தேவையில்லாமல் திமுகவின் கதவை தட்டியிருக்கவேண்டாம் .. மய்யத்தோடு உடன்படிக்கை செய்திருக்கவேண்டாம் .. கடந்த நாடாளுமன்ற தேர்தலைபோல ஜனாப் தினகரனோடு நின்று "நாங்கள்" நம்பிக்கையானவர்கள் என்றாவது பெயரெடுத்திருக்கலாம்..
..
உண்மையில் இஸ்லாமிய அமைப்புகளின் நிலை சொல்லும்படி இல்லை .. தெளிவற்ற பயணம்.. மெத்தபடித்தவர்கள் மேதாவிகள் நல்ல சிந்தனையாளர்கள் நற்பண்பினர்,கல்வியாளர்கள், கருணையாளர்கள் கொண்ட சமூகம் இன்று அரசியல்
புரிதலின்றி அல்லோலப்படுகிறது .. 
தனிநபர் பகை, பதவி மோகம் பிறரை புறம் சொல்லி வீழ்ந்துநிற்கிறது .. ஆரம்பம் முதலே திமுகவின் மீது தேவையற்ற வெறுப்பை பகிர்ந்தே வந்திருக்கிறார்கள் .. முஸ்லிம்லீக் திமுகவின் கைப்பாவை எனச் சொல்லி சொல்லி பிரிவினையை சுலபமாக செய்து தங்கள் நலனை கொண்டாடியிருக்கிறார்கள் .. எதை செய்யகூடாதென்ற புரிதல் இல்லை .. அனைவரும் ஒருங்கிணைந்து ஒருகுடையின் கீழ் தனித்து நின்று (234 தொகுதிகளிலும்) எத்தனை விழுக்காடு வாக்குவங்கி என்பதை உறுதி செய்திருந்தால் இன்று தொங்கோட்டம் ஓட தேவையிருந்திருக்காது .. திமுகவே தேடி வந்து உங்களுக்கு தொகுதிகளை பகிர்ந்திருக்கும்  0.16 விழுக்காடு வாக்கை வைத்துக்கொண்டு நீங்கள் இத்தனை சீட் வேண்டுமென்று பேரம் பேசி தொடங்கியிருக்க கூடாது.. பல்வேறு பிரிவுகளாய் போய்நின்றால் தங்களோடு தொடர்ந்து பயணிப்பவருக்குதான் முன்னுரிமை வழங்குவார்கள்..
நிலையற்ற தன்மை ஒரே இரவில் வேறொரு கட்சி யோடும் பேசும் நம்பகதன்மை..? இவ்வளவு பலவீனமாகவா இருப்பது .. 
..
நேற்றுவரை வேறொரு கூட்டணியில் சவாரி செய்துவிட்டு கடைசி நேரத்தில் திமுகவின் தட்டுவதும் 
திமுக மரியாதை தரவில்லையென முனகுவதும் எந்தவிதத்தில் நியாயம்.. லீக் இருந்தால் வரமாட்டேன் மமக இருந்தால் சரிபடாது என்பது தனிநபர் சுயநலமே தவிர சமுதாய நலனில்லை .. 
2011 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 5.81 % இஸ்லாமியர்கள்  அதன் தாக்கம் தொகுதி/வேட்பாளர் பங்கில் தெரியும் ..ஒன்றுபடாமல் பல கட்சிகளாய் நின்றால் ஒன்றோ இரண்டோ தான் கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம் .. தற்போதைய சூழலில் திமுக ஒன்று மட்டும் தான் பாஜகவின் ஆட்டத்தை அடக்க சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது .. வேறுயாருக்கு வாக்களித்தாலும் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் விழலுக்கு இறைத்த நீரைப்போல பயனற்றதாகும்.. நமக்கான கோரிக்கைகள் தேவைகள் நிறைய உண்டு, திமுக தந்தது மிக குறைவாக கூட இருக்கலாம் இன்னும் சரியான பகிர்ந்தளிக்காமல் இருக்கலாம் ஆனாலும் இன்றைக்கு நம்பிக்கை தரும் கட்சியாய் பாசிசத்திற்கு சிம்ம சொப்பனமாய் இருப்பது திமுக மட்டுமே .. நமது தேவைகளுக்காக தொடர்ந்து உரிமையோடு குரலெழுப்புவோம் .. பாசிசத்தை வேரறுக்க திமுகவை வெற்றிபெற செய்வோம் 
..
ஆலஞ்சியார்

Tuesday, March 9, 2021

தளபதி..

சொந்த புத்தி எப்போதிருந்தது..
ஜெயலலிதாவிற்கே இருந்ததில்லை .. இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று கலைஞர் சொன்னபோது முடியுமா என்றார் ..கலைஞர் அதை ஒருரூபாய் ஆக்கியபோது வாய்பிளந்து நின்று பிறகு இலவசம் என்றார்.. வண்ண தொலைக்காட்சி தருவதாக சொன்னபோதும் எள்ளிநகையாடியவர்கள் பிறகு மிக்சி கிரைண்டர் என தேர்தல் அறிக்கை தந்ததுநடந்தது ..
இப்போது பொருளாதார வல்லநர்கள் கலந்து முடியும் என அறிந்து குடும்பதலைவிக்கு உரிமை தொகை ₹1000 அறிவித்ததும் எங்கள் திட்டம் கசிந்ததென உளறுகிறார் பாஜகவின் அடிமை பழனிசாமி.. 
..
திமுகவின் அறிவிப்புகள் சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு தூக்கம் போனது தான் மிச்சம்.. முடியாதென்பதை செய்துகாட்டி வரலாறு படைப்பது திமுகவிற்கே சொந்தம் .. அறிவின் நிழலில் கொள்கை பேசுபவர்கள் எதையும் மக்களுக்காக சமூகநீதியை நிலைநாட்டி தொண்டாற்றும் இயக்கம் .. விவரகேடுகள் சிலர் வயிறெரிகிறார்கள் .. துக்ளக் 
அறிவுஜீவிகூட்டம் பதறுகிறது.. தாங்கள் நினைத்தது நடக்காதென்பதை விட கையிருப்பும் போகும் எழமுடியாத நிலையாகும் என அச்சபடுவது அவர்கள் நடவடிக்கையில் தெரிகிறது .. மனித கழிவை மனிதனே அகற்றும் முறை முற்றிலுமாக மாற்றபடும் என்றவுடன் ஏன் இதுவரை செய்யவில்லையென சில அறிவாளிகள் கேட்கிறார்கள் .. தளபதி உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது முன்னோட்டமாக செயல்படுத்தினார் தொடர்ந்து வந்தவர்கள் அதை செய்யவில்லை .. மனிதகழிவை மனிதனே அள்ளும் முறையை மாற்றபடும் என்ற ஒற்றை அறிவிப்பிற்காகவே மானிட சமூகம் வணங்கி மகிழவேண்டும் .. 
கைரிக்சா அவலத்தை ஒழித்த கலைஞரை இந்தியாவே இப்போதும் திரும்பி பார்க்கிறதே அதே போல மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமையை நீக்கும் தளபதியை வரலாறு போற்றும்..
..
இந்த முறை அதிமுக அணியில் மனிதகுல விரோதிகள் ஒன்றுகூடி நிற்கிறார்கள் .. சாதிவெறியர்கள் மதத்தை கையிலெடுத்து மக்களை கலவரத்தோடு நிறுத்துகிறவர்கள் பொய்யர்கள் துரோகத்தனத்தை கொஞ்சம் கூட கூச்சமின்றி செய்பவர்கள் .. நம்பிக்கை துரோகிகள், நாட்டை கெடுத்தவர்கள் நயவஞ்சகர்கள் இனத்தின் கலாச்சாரத்தை காவுகொடுத்தவர்கள், பதவிக்காக தமிழகத்தையே விற்க துணிந்து, தமிழர்களை வஞ்சிக்கும் அடிமைகள் ...என ஒன்றுகூடி நிற்கிறார்கள்.. நமக்கு சிரமமில்லாமல் அவர்களை ஒரே இடத்தில் நிற்கிறார்கள் அவர்களுக்கு தகுந்தபாடம் தருவோம் .. தமிழக உரிமைகளை தமிழ் குழந்தைகளின் கல்வி வேலைவாய்ப்பென அவர்கள் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த கயவர்களை இனியும் அனுமதித்தால் உள்ளதும் போகும் என விழிப்புணர்வோடு தோற்கடிப்போம்..
..
நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார்.. அறம் பேசும் தலைமை.. நேர்மையோடு அரசியல் செய்கிறார் .. எதிலும் தொலைநோக்கு பார்வை .. இளகிமனம் இல்லாதோருக்காக உதவும் குணம், தெளிவான பார்வை, ஓயாத உழைப்பு, உடனிருப்போரின் நம்பிக்கை, இயக்கத்தின் எதிர்காலம், தமிழகத்தின் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தின் விடியலுக்கான குரல்,  
திமுகவின் வெற்றி ஓன்றே நிம்மதி தரும்..
..
நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழகமும் தமிழர்களும் ..
..
ஆலஞ்சியார்

Sunday, March 7, 2021

தளபதி ..

வெல்லும்..
மிக சரியாக காய்நகர்த்துகிறார்.. தலைவர் தளபதி
சில வீணர்களின் எதிர்ப்பார்புகள் சூழ்ச்சிகளை இடதுகையால் தள்ளி தனிபாதையில் வெற்றிநடைபோடுகிறார் .. எப்படியேனும் திமுக கூட்டணியை பிரித்துவிடவேண்டுமென சிலர் கண்விழித்து முயற்சித்தார்கள் .. உடன்பாடு கண்டபின்பும் தம்பி வா என்றெழைத்து இதுதான் சமூகநீதியா என கதறினார்கள் .. வெல்லபோவது யார் எத்தனை இடம் வெல்வோமென அறிந்து தோற்று கட்டிவைத்த காசும் (டெபாசிட்) பறிபோகாமல் வீரர்களாய் சட்டமன்றம் செல்வதே சமூகநீதியின் வெற்றி அடங்கியிருக்கிறதென கிராஸ்பெல்ட்களுக்கு தெரியாது..பாவம் நாக்பூர் கட்டளை நிறைவேற்ற நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் ..
..
நடப்பது யுத்தமென அறிந்து பார்ப்பனீயம் சவபெட்டியில் கிடத்த தனியொருவனாய் தமிழகத்தின் தளபதியாய் மிக சாதூர்யமாக நகர்கிறார் ..அலறல்கள் கேட்கின்றன.. எதையாவது செய்திட முடியாதயென காத்திருந்தவர்கள் .. நடுநிலைபேர்வழிகளை (போலிகள்) கொண்டு ஆங்காங்கே கதறுகிறார்கள்.. இத்தனை தானா இதற்கு தனித்தே நின்றிருக்கலாமே மானத்தை அடகுவைத்துவிட்டு திமுகவோடு போகவேண்டுமா என சிலர் ரத்தகொதிப்பில் உளறுகிறார்கள்.. 
நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு இருபது அதிகமில்லையா என எவரும் கேட்கவில்லை ஆனால் 25 ல் ஒதுக்கினார்கள் என போலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்

உண்மையில் தமிழனின் தன்மானம் காக்க ஓரணியில் இணைகிறார்கள் என நாக்பூரில் கால் நக்கிகளுக்கு சொல்வோம் .. பார்பனரை தவிர பிற இந்துக்களின் உரிமைகளை காவு கேட்பது இந்த நாதாரிகளுக்கு தெரிந்தும் தன் குடும்பம் பலன் பெற்றால் போதுமென சமுதாயத்தையே அடகுவைத்து விட்டு 2000 ஏக்கர் விலைபேசி வாங்க முயற்சிக்கும் "மர" மண்டைகளுக்கு சமூகநீதி காசுபார்க்கும் யுக்தி  ..
சொந்த சமுதாயத்தையே காட்டிகொடுக்கும் கயமை.. இளைஞர்களை வழிகெடுக்கும்  கோடாரி.. தமிழகத்தின் சாதிவெறியூட்டி கலவரத்தை செய்ய துடிக்கும் பாசிச பார்பனீயத்தின் செல்லப்பிள்ளை இவர்கள் எழ முடியாதவாறு புதைக்கபடவேண்டும் ..
..
இஸ்லாமிய கட்சிகள் ஐந்துக்குள் ஒதுக்கபட்டதாக "தீன்"பரப்பிகள் சற்று சுரம்குறைந்து பாடுகிறார்கள் .. 
முஸ்லிமை அமைச்சராக்கி அழகுபார்த்தது திமுக என்பதும் அதிகளவில் முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் நுழைந்தது திராவிட முன்னேற்ற கழகத்தால் என்றும் அரசியல் அறிவற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. பிற்படுத்தபட்டோராக்கி அதிலும் உள்ஒதுக்கீடு தந்தது திமுகதான் ..ஆனாலும் நாங்கள் கதறுவோம் ஏனெனில் அப்படிதான் டிசைன் செய்யபட்டிருக்கிறோம் .. இன்னும் நிறைய தேவையிருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களின் உரிமைகள் பறிக்கபட்டும் கொடுக்கபடாமலும் இருப்பதென்னவோ உண்மைதான் தொடர்ந்து திமுக ஆட்சியில் இல்லாததும் சில பிரிவுகள் தடைபோடுவதும் அதை மிக சமத்தாக கைகாரியம் செய்யவேண்டியுள்ளது .. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல எல்லாமாநிலங்களும் இந்த இந்துத்துவா அரசிடம் சிக்கி சீரழிகிறது ..மனிதனாய் பிறப்பதற்கு பதில் மாடாய் பிறந்திருக்கலாம் இந்த "குரங்குபடை"யிடம் தப்பித்திருக்கலாமென நினைக்கிறார்கள் .. உண்மையில் ஒருங்கிணைந்த இந்தியா கண்ணீரில்..
..
இந்தியாவே எதிர்நோக்கும் தேர்தல் தமிழகத்தை உற்றுநோக்கிறார்கள்.. சனாதனவாதிகளுக்கு சவபெட்டியை தமிழகம் தயார் செய்யவ்ண்டுமென காத்திருக்கிறது இந்தியா .. வந்தேறிகள் வளம் பெற்று வாழ்ந்தவனை குடிமகனை தூரநிறுத்த பார்க்கிறார்கள் .. கைகட்டி நில்  தொடும்தூரத்தில் நிற்காதே என சட்டம்போடாமல் அமல்படுத்துகிறார்கள் .. உரிமைகளை உடமைகளை கல்வியை உழைப்பை பறித்து நாட்டுகாரனை நாடோடியாக்க கைபர்வழி வந்த நாடோடிகள் முயற்சிக்கிறார்கள்.. இவர்கள் விரட்டபடவேண்டியவர்கள் இவர்களின் தலையாட்டியாய் போன பொம்மைகளை உடைத்தெறிய வேண்டும் இனி எப்போதுமே எவரும் தமிழகத்தில் தான்தோன்றித்தோடு செயல்பட அஞ்சும் நிலையை உருவாக்கிட வேண்டும் .. இழந்த உரிமைகள் கல்வி வேலைவாய்ப்பில் தமிழர்கள் நிரப்பபட திமுக அணியின் வெற்றி சரித்திரம் சொல்லும் விதமாய் வேண்டும்..
..
இன்றைய தளபதியின் அறிவிப்புகள் சரித்திரம் பேசும் .. விடியலுக்கான நேரம்
தளபதியின் அறிவிப்புகளில் முத்தாய்ப்பாய் மனிதகழிவை மனிதனே அள்ளும் நிலையை மாற்றுவோம்  என்பது வணங்கி மகிழவேண்டும்..
..
ஸ்டாலின்தான் வராரு..
விடியல் தரப் போறாரு..
..
ஆலஞ்சியார்

Wednesday, March 3, 2021

தமிழக முஸ்லிம்கள் நிலை

தமிழக அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை..
தேர்தல் வந்தவுடன் வரிந்துகட்டிக்கொண்டு இயக்க முன்னோடிகள் பாடம் நடத்த தொடங்கியிருக்கிறார்கள்.. மூன்று தொகுதிகள்தானா..அடகு வைத்துவிட்டார்கள் இரண்டு தொகுதி என சமரசம் ஆனார் என நிறைய கேள்விகள் ..
தமிழகத்தின் இஸ்லாமியர்கள் 5.8% விழுக்காடு இப்போது அரை விழுக்காடு கூடியிருக்கலாம் .. அதன்படி 12 முதல்14 வரை இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் ஏன் கிடைக்கவில்லை என யாரும் யோசித்ததாகவே தெரியவில்லை .. முதலில் இந்திய துணைக்கண்டத்தில் வேறெங்கும் இல்லாத அளவில் அமைப்புகளின் எண்ணிக்கை நாற்பதை தாண்டுகிறது அதில் நான்கைந்தை தவிர மற்றவை லெட்டர்பேட் "குப்பைகள் ".. நான்கைந்திலும் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையில்.  சமுதாய நலனை விட தன்நலம் பெரிதென உழைக்கிறார்கள் .. அவர் இருக்குமிடத்தில் நானில்லை என்பதை தங்கள் "குலவழக்கம் " போல் யாரும் விடுவதாயில்லை ..உண்மையில் பரிதாபகரமான சமுதாயமாக இஸ்லாமிய சமூகம் இருப்பது வேதனை..
..
யார் இவர்கள் புரிதலற்ற அரசியல் .. தங்களுக்கு நன்றாக பேசவரும் என்பதற்காக மூளைச்சலவை செய்து சமுதாய இளைஞர்களை வழிகெடுத்து தங்களின் புகழ்பாடவைக்கிறார்கள் .. இப்போதுள்ள தலைவர்களில் பெரும்பாலானோர் புகழ் வேண்டும் அதிகாரம் செலுத்தமிடத்தில் வேண்டும் தனியாக தான் தெரியவேண்டும் கூடவே தியாகசெம்மல்களின் கருணை வேண்டும்,.  யார் ஆட்சிக்கு வந்தால் என்ன நாம் இரண்டு போராட்டத்தை அறிவித்தால் போதும் சமுதாயம் நம்பிவிடுமென்று நினைக்கிறார்கள் .. இஸ்லாமியர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானாலும் சரி.. முஸ்லிம்களை வேட்டையாட தனியாக சட்டமியற்ற ஆதரித்தவன் ஆனாலும் பரவாயில்லை கைநிறைய பணமும் ஒரு சீட்டும் கிடைத்தால் போதும் சட்டமன்றத்தில் தொங்கோட்டம் ஓடலாம் என சில விஷமிகள் காத்திருக்கிறார்கள் .. சிலர் திமுக எதிர்ப்பு என்ற அருத பழசை கையில் தூக்கி நக்கி பிழைக்க தியாக தலைவியின் காலடியில் காத்திருக்கிறார்கள் பணம் போதும் .. சிலர் வீராப்பு பேசி கடைசியில் ஜனாப் நம்மை காப்பாரென நம்பி தொலைந்து போகிறார்கள் ..
..
இன்றைய தேவை என்ன..? யார் வரகூடாது குறிப்பாக அதிமுக எனும் நம்பகதன்மை இல்லாத கட்சி பாசிச பாஜகவிற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே வடவருக்கு விற்க தயங்காமல் அமித்சாவின் கிளிப்பிள்ளையாய்  நிற்கும் பன்னீர் பழநி வகையறாவை விரட்டவேண்டும் என தமிழகமே காத்துநிற்கும் வேளையில் சிறியளவேணும் உதவ மனமில்லையெனினும் கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும்.   சமுதாய மேம்பாடு தானாக நடக்கும்.. இஸ்லாமிய இடஒதுக்கீடு தந்தவர்கள் குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோமென உறுதியளிப்போரை நாம் உயர்த்திபிடிக்கவேண்டும் .. அதற்கு இஸ்லாமிய இளைஞர்கள் அரசியலை கற்க வேண்டும் .. மத அரசியலை விடுத்து பொது அரசியலை முன்னெடுக்க வேண்டும் ..திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பை தரும் அவர்களை வெற்றியடைய செய்ய ஒருங்கிணைந்து பாடுபடுங்கள் .. திமுகவிடம் உரிமையோடு வாதிடமுடியும் உங்கள் குரல் கவனிக்கபடும் .. 
..
இயக்கங்களின் (இயக்கம் என்பது கூட தவறு அமைப்புகள்) தனிநபர் புகழ் வெளிச்சம் பணம் பதவி விடுத்து ஒற்றுமையாய் IUML முஸ்லிம் லீக்கில் சேர்ந்து பயணிக்கலாம் .. கொள்கை கோட்பாடு மதவிடயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சமுதாய மக்களின் உயர்வுக்காகவேனும் ஒற்றுமையோடு வாருங்கள் .. நீங்கள் மதவிடயத்தில் "ஞானபண்டிதனாக" கூட இருக்கலாம் அதெல்லாம் வணக்க வழிபாடுகளோடு உங்கள் வாழ்வியலோடு வைத்துக்கொள்ளுங்கள் .. இன்றைய இந்தியாவில் நிலையை உணருங்கள் தமிழகத்தில் கேடுகெட்டவர்களின் ஆட்சியை பாஜகவின் தலையாட்டிகளை வீட்டுக்கு அனுப்ப உணர்ந்து செயல்படுங்கள் .. 
இனியேனும் அரசியல் பழகுங்கள் .. 
உங்கள் பகை, பதவிமோகம்,புகழ் குழிபறித்தல் தனிநபர் வெறுப்பு , இவையனைத்தும் தூரயெறிந்துவிட்டு சமகால நிலைமையை உணரந்து செயல்படுங்கள்.. 
இல்லையெனில் ....
?????
..
ஆலஞ்சியார்