Sunday, July 31, 2022

முதல்வர் ஸ்டாலின் ..
மிகச் சரியாக கணித்திருக்கிறது பகைமை .. அதனால்தான் stalin is more dangerous than karunanidhi என கதற முடிந்தது ..  மிக துல்லியமாக நுட்பமான அரசியல் செய்கிறார்.. வெறும் வாய்சவடால்கள் இல்லை பகட்டு இல்லை ..ஜாலவித்தைகள் இல்லை ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பாசிசத்தை கதறவைக்கிறது 
..
செஸ் 
சாதாரணமாக இதெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்த முடியுமா என நினைத்தவர்கள் தலைவரின் தனித்திறனால் நிர்வாக திறமையால் எதை எப்படி நேர்த்தியாக செய்யவேண்டுமென்று அனைவரும் வியக்கும் வண்ணம் செய்துகாட்டியதோடு அழைத்துவந்து "எங்கள் பெருமையை பார் " என பாடம் நடத்தி நாங்கள் திராவிடர்கள் அறிவார்ந்த சமூகம் என விளக்கம் தந்து அனுப்பியிருக்கிறார் ..
"மோடி" யின் படமில்லை என்றவர்களுக்கு நீதிமன்றத்தை வைத்தே குட்டுவைத்து .. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமென உணர்த்தியிருக்கிறார்..
..
மோடி வருவதற்கு முன்பே விழா தொடங்கியதும் .. தமிழன் பெருமையை கீழடியாய் தந்ததும், கருப்பை  முன்னிலைபடுத்தியதும் பிரதமர் நமஸ்தே என்ற போது நிசப்தமாய் அரங்கிருந்ததும், கவர்னரை பொம்மையாக்கியதும், கருப்புகாய்களை தந்து திராவிட இனத்தின் நிறத்தை உணர்த்தி வரலாற்று நிகழ்வை நடத்திக்காட்டியிருக்கிறார்..
..
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திராவிட மாடல் குறித்து பிரதமரை வைத்துக்கொண்டே கவர்னருக்கு அறிவுரை கூறி கல்விதான் நமக்கான சொத்து என பொட்டில் அடித்திருக்கிறார்..அதோடு விட்டாரா மலையாள மனோரமா விழாவில் ஒரே மொழி ஒரே தேசம் என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என வெளிச்சம் போட்டுகாட்டி.. ஆளுநரை கொண்டு இரட்டை ஆட்சி நடத்த நினைக்கிறதென 
முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார்..
..
கலைஞர் பதில் சொல்லியே நகர்த்துவார்.. தளபதி பேசுவதில்லை செயல்தான் .. 
சொல்லி அடிப்பது கலைஞர் .. சொல்லாமலேயே அடித்தமர்த்துவது தளபதிக்கு கைவந்தகலை.. எதிரிகள் தீர்மானிப்பதற்கு முன்பு அடிவிழுகிறது.. சிலரை போல வலைதளத்திலோ,கத்திகூச்சலிட்டோ, பெருமைபேசியோ காய்களை நகர்த்துவதில்லை .. ஆனால் தளபதி காய்களை நகர்த்தினால் டெல்லிக்கே ராசாவானாலும் குப்புறவிழ வேண்டியதுதான் .. 
தளபதி ஆடும் "அரசியல் சதுரங்கம்" நவீன கோமாளிக்கு ஒவ்வாமையை தரும் .. 
..
நல்ல தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது .. 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் வலிமையான தலைவர் .. இந்திய ஒன்றியத்தை வழிநடத்தும் ஆற்றலும் திறனும் தகுதியும் மிக்க தலைவர் ..
..
ஆலஞ்சியார்

Friday, July 29, 2022

பானு இக்பால் மறைந்தார் ..
நெஞ்சம் பதறுகிறது ..
முற்போக்கு சிந்தனையாளர் ,சிறந்த பேச்சாளர் .. யதார்த்தமாக எழுதும் ஆற்றலுடையவர் பழகுவதற்கு எளிமையாகவும் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவர் .. கல்வி ஒன்றே ஆக சிறந்த பாதை என அடிக்கடி சொல்வார் .. திராவிட இயக்கத்தின்பால் மாறாத பற்றக்கொண்டவர் ..
..
அவரோடான முதல் சந்திப்பே வியப்பை தந்தது ..நண்பர் சித்தார்த்தன் நூலக நிகழ்வில் கலந்துக்கொள்ள வைக்கவேண்டுமென ஆசான் செல்லபெருமாள் அவர்களிடமும் என்னிடமும் சொன்னார் .. உடன் தொடர்புக்கொண்டு உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக நிகழ்விற்காக பேசியதிலிருந்து ஏற்பட்ட நட்பு சில தினங்களுக்கு முன் முடியவில்லை தோழர் என்கிற வரை உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாய் இருந்தது ..
ஒரு முறை முழுக்க பெண்களை கொண்டே மணியம்மையார் நூற்றாண்டு தொடர் நிகழ்வு ஒன்று பங்கேற்ற செய்தோம் .. சொல்ல நினைப்பதை துணிவோடு  சொல்வார் 
குவைத் திமுக வின் நிகழ்வுகளில் அவரில்லாமல் இல்லை என்கிற நிலை உருவாக்கினார் .. இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் அரசியல் பேசுவது ஆபூர்வங்களில் ஆபூர்வமான நிகழ்வு ..
மிக தெளிவாக தன் கருத்தை சொல்வதிலும் 
"இஸ்லாமிய ரோஜா"  என்ற வட்டத்தில் சுருங்கிவிடாமல் இருந்தவர்
கடவுள் மறுப்பு மேடையாக இருந்தபோதும் சொல்ல நினைப்பதை சொல்ல தயங்குவதில்லை .. பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாட்சியாய் நின்றவர் ..
..
கேன்சர் தன்னை பாதித்தபோது அதை துணிவோடு எதிர்க்கொண்டு  அது குறித்த விழிப்புணர்வு தரும் வகையில் "மனப்பொழிவின் மாயவாசனை"புத்தகம் எழுதினார் .. கடும் அவதிக்குள்ளான போதும் எதிர்கொண்ட பெண்மணி..
இயற்கையின் மாயவலைகள் ..
..
தன்னை சமூகசீர்த்திருத்தவாதியாக நிலைநிறுத்தி தன் செயல்களை வடிவமைத்தவர் பானு ..
இன்று நம்மிடையே இல்லை அவரின் லட்சியங்கள், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றகாண வேண்டும் தற்சார்போடு நிற்க வேண்டும்.. யாருக்காவும் எதற்காகவும் தங்கள் இலக்கிலிருந்து பின்மாற கூடாது .. சாதிக்க வேண்டுமென்ற வெறி .. கல்வி மட்டுமே துணை நிற்கும் அதற்கான தடைகள் மதம் சமுதாயம் சமூகம் ஆணாதிக்கம் பேதம் எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறு ..
எல்லாம் வசபடும் என வாழ்ந்துகாட்டிய பெண்மணி ..
..
நல்ல தோழியை இழந்திருக்கிறேன்.. 
சக செயல்பாட்டாளரை, 
ஒரே சிந்தனை கொண்டவரை 
இழந்திருக்கிறேன் .. 
அவரது இறுதி பயணத்தில் கலந்துக்கொண்டு 
அவரை மண் மூடும் போது கரைந்துபோனேன் .. நண்பர் 
அப்பாஸ் தான் என்னை கரம்பிடித்து அழைத்துச் சென்று இறுதியாக பார்க்க வைத்தார் ..
அடக்கம் செய்ய குளிப்பாட்டி கபனிட்டபிறகு பிற ஆண்களை அனுமதிப்பதில்லை நானறிவேன் .. ஆனால் என்னை  பார்க்க அனுமதித்தார்கள் .. சடங்கு சம்பிரதாயங்களை களைந்த பெண்மணியின் இறுதி ஊர்வலத்தில் எண்ணற்றவர்கள் கலந்துக்கொண்டனர் .. "பட்டாளத்தார் மகள்" புத்திசாலி மட்டுமல்ல தைரியசாலி என பேசுவதை கேட்க முடிந்தது ..
அவரின் புகழ் நிலைத்து நிற்கும்
..
போய்வாரும் தோழர் கண்ணீரோடு விடைதருகிறோம்..
..
ஆலஞ்சியார்

Tuesday, July 26, 2022

திருக்குவளை..
நீண்டநாட்களாக போக வேண்டுமென நினைத்து நேரம் அமையாமல் தள்ளிப்போனது .. நீண்ட இடைவெளிக்கு பிறகு 26.07.22 அன்று வாய்ப்பு கிட்டியது.. தோழர் மன்னை ரபீக் Mannai Rafik 
அவர்களை சந்திக்க மன்னார்குடி சென்றபோது திருக்குவளை செல்ல வேண்டுமென தீர்மானித்து காலை கிளம்ப தயாரான போது பெரும்மழை ..
விடுவதாயில்லை நானும் போயே தீரவேண்டுமென .. கடைசியில் மழை விட டூவிலரில் தொடங்கியது பயணம் .. 
மாங்குடி வழியே சென்ற போது இருபுறமும் இயற்கை எழில் மலைநாட்டில் பயணிப்பதைப்போல அத்தனை எழில்.. இத்தனை காலம் அருகிலிருந்தும் அகரமாங்குடி- திருக்கருக்காவூர் சாலையில் செல்லாமல் போனது வியப்பு ..
..
கலைஞர் இல்லம் நிறைய மாற்றங்களோடு முன்பு வீட்டின் முன் இருந்த தென்னை இல்லை 
செல்லும் சாலைகள் தரத்தோடு இருக்கிறது .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் .. தமிழகத்தின் சாலைகள் தரத்துடனும் எங்கும் செல்ல எளிமையாக சின்ன சின்ன பாதைகள் கொண்ட சாலைகள் கூட சிறந்ததாய் விளங்குகிறது 
கச்சனம் - மன்னார்குடி குறுக்குவழி ஆற்றங்கரை சாலை கூட முன்பெல்லாம் செல்லவே முடியாதவாறு இருக்கும் இப்போது தார் சாலை .. சிலதினம் முன்பு கல்லணை சென்றபோது கூட  இளகுவாக பயணிக்கமுடிந்தது ..
..
கலைஞர் இல்லத்தில் அஞ்சுகதம்மையார் சிலை.. அதன் வரலாறு சுவராஸ்யமானது .. தஞ்சை அப்பர் ஸ்டுடியோவிலும் பின் சினிமா துறையிலும் பணிபுரிந்த ஒரத்தநாடு பாப்பா ஸ்டுடியோ  உரிமையாளர் 
V.  கோவிந்தராஜ் அவர்கள் ஒரத்தநாடு பாப்பா தியாகராஜன் Thiyagarajan Pappa 
தந்தையார்
ஒருமுறை திருக்குவளை சென்றபோது அஞ்சுகம் அம்மையாரை காலை நீட்டி வெற்றிலையை இடிப்பதை போட்டோ பிடித்தார் .. அது சிலகாலத்திற்கு பிறகு கலைஞருக்கு தெரியவர ஒரத்தநாடு பாப்பா கோவிந்தராஜை அழைத்து அந்த போட்டோ கொண்டுவாயா பார்ப்போம் என்க அதன்படி கலைஞரிடம் தர அது பிடித்துபோக அதுவே அம்மையாரின் நினைவுசின்னமானது .. இன்று கலைஞரின் கோபாலபுரத்திலும் திருக்குவளையிலும் அந்த நிழற்படம் சிற்பமாய் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ..
..
கலைஞர் வாழ்ந்த இல்லம் புதுபொழிவோடு இருப்பதும் அருகில் கார்களை நிறுத்த வசதியும்,எதிரே பூங்கா என சிறப்புபெறுகிறது .. தமிழகத்தில் நிறைய நினைவு இல்லங்கள் அரசே ஏற்று நடத்தினாலும் இது அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது .. நீண்டதூரம் பயணித்து வருகிறவர்கள் அது பூட்டிகிடந்தால் வருந்த நேரிடும் அதற்கு காலநேர அட்டவணையை வெளியே எழுதி பூட்டியிருந்தால் யாரை தொடர்பு கொள்ளவேண்டுமென அவர் பெயர் தொலைபேசி எண்ணை எழுதி வைத்தால் பயன்படும் 
அறங்காவலர்கள் குழுவில் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi 
இதில் கவனம் செலுத்தவேண்டும்..
..
மாபெரும் தலைவர் இந்திய ஒன்றியத்தையே தன்னை சுற்றி பேச வைத்த, ஆரியத்தை ஆட்டுவைத்த, அரசியல் இலக்கணமாய் , உலகின் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாய்  இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாய் என்பதாண்டுகால பொதுவாழ்வு நாயகனாய், பள்ளத்தில் கிடந்தோரை கைதூக்கி உயரத்தை வசபடுத்தி தந்த சமூகநீதி காவலனாய், "வல்லோர்கள்" வகுத்த நீதியை உடைத்து சமநீதி சமைத்த பேரறிவாசன் சீடனாய் 
திராவிடமாடலின் முன் முகமாய், முத்தமிழறிஞராய், மூடம் நீக்கி பகுத்தறிவு துணைக்கொண்டு பாடம் நடத்திய ஆசானாய்  திகழ்ந்த கலைஞர் பிறந்த இல்லம் நீண்டநாள்களுக்கு பிறகு கண்டதில் மகிழ்ச்சி!..
..
ஆலஞ்சியார்

Sunday, July 24, 2022

கலைஞருக்கு நினைவுச்சின்னம்
..
வழக்கம் போல மயிலாப்பூர் கதறுகிறது .. கடற்கரையில் இடம் தரகூடாது என பகிரங்கமாக பேசிய குருமூர்த்தி வகையறாவிற்கு எரிகிறது .. வீண்விரயமென நடுநிலைநாய்கள் ஊளையிடுகிறது இவர்களெல்லாம் ₹3000 கோடியில் படேலுக்கு சிலைவைத்தபோதும் கிரிமினல் A1 குற்றவாளி (தண்டிக்கபட்டவர்) ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்க ₹140 கோடி செலவு செய்தபோதும் எல்லா பொந்தையும் பொத்திக்கொண்டிருந்தவர்கள் 
..
யார் இந்த கருணாநிதி(கலைஞர்)
இந்திய அரசியலின் ஒப்பற்ற தவைவர்.. இந்தியா சனாதனப்பிடியில் சிக்கி சீரழிந்தது கண்டு அதை செப்பனிட முனைந்தவர் .. ஒடுக்கபட்ட மக்களின் உயர்வே சமநீதியின் அச்சாரமென தொடர்ந்து பேசியும் வாய்ப்பு வந்தபோதெல்லாம் அவர்களை உயர்த்தியும் இந்திய துணைக்கண்டத்தில் தொலைநோக்கு சிந்தனையோடு தமிழ்நாட்டை கொண்டு சென்றவர் .. இந்திய ஒன்றியம் இப்போது பேசும் "முன்னேற்ற பாதை"யை 70 களிலேயே செய்துகாட்டியவர் .. உண்மையான பொதுவுடமைவாதி ..  இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலன், அவசரநிலையை துணிந்து எதிர்த்து இந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் நின்றவர் .. சமூகநீதி காவலன்,  பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கி இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாய் திகழ்ந்தவர் .. முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணமில்லை என உத்தரவிட்டு லட்சகணக்கானவர்களை "கரைசேர்த்தவர்"
..
இந்திய அரசியலின் இலக்கணம் .. எதிர்க்கும் போதும் உறவின் போதும் நியாயத்தின் பக்கம் நின்று அரசியல் செய்தவர் .. தொடர்ந்து இனப்பகைவரால் பழி சுமத்தபட்டபோதும் "அறம்வெல்லும்" என நம்பியவர்.. எண்ணற்ற துரோகிகள், எதிரிகள், பகைவர்கள் அனைவருக்கும் அரசியல் வாழ்வளித்த "சூரியன் ".. 
80ஆண்டு பொதுவாழ்வில் ஏற்றம் இறக்கம் என கண்டாலும் மக்கள் பணியில் சளைக்காமல் தொண்டாற்றியவர் .. இவர் எழுத்து புதிய நடையை தமிழுக்கு தந்தது .. வடமொழிக் கலப்பை தமிழென்று நம்மீது திணித்த பார்ப்பனர்கள் நாள்/வார ஏடுகளில் கூட அவா பாஷையை முன்னெடுத்தபோது, திரையில் சமஸ்கிருதம் தாண்டவமாடிய காலகட்டத்தில் 'அம்பாள் எந்தகாலத்திலடா பேசினாள் " கேள்வி எழுப்பி செந்தமிழால் அழகு செய்தவர் .. 
..
எதிரிகள் கூட இவர் எழுத்தை ரசித்தார்கள்.. அரசியலை விமர்சித்தவர்கள் கூட இவர் எழுத்தில் மயங்கி நின்றார்கள்.
"எண்ணல்லவோ எழுத்தல்லவோ, எழுதாத பண்ணல்லவோ, என விளித்திட்ட வார்த்தைகள் அருவி மலர்ச்சோலை அழகு மலர்க்கூட்டமென  சங்கத்தமிழ் பாட முடிந்தது .. "நல்லவனுக்கோ நீதி இங்கே வல்லவனுக்கே நீதி" என அரசியல் பேச முடிந்தது ..
எழுத்தில் மயக்கும் வித்தை அறிந்தவர் .. ஒவ்வொரு சொல்லிலும் தன் சார்ந்த சிந்தாந்தத்தின் பொருள் பதிந்திருக்கும் ..
..
மூடம் பேசாதா பேனா அது .. அவரது பேனா தலைகுனிந்த போதெல்லாம் 
தமிழன் தலைநிமிர்ந்தான்..
அவன் பேனா காலையில் என்ன செய்தியோடு வரும் என எதிரிகள் பதற்றத்தோடுதான் கண்விழித்தான் ..
இந்திய அரசியலின் போக்கை இந்த பேனா தான் வடிவமைத்து இயக்கியது .. இந்த பேனா தான் லட்சக்கணக்கான குடும்பங்களை பட்டதாரி குடும்பமாக்கியது .. அறம் பேசிய பேனா ..சிலநேரம் அதிர்ந்தும் பேசும் .. பகைவர் குலைநடுங்க வைக்கும், பேசாமடைந்தையாக்கும் எளியவரின் குரலாய் ஒலிக்கும் சமத்தும் பேசும் சமூகநீதியை பறைசாற்றும் .. பொங்கிவரும் ஆற்றின் தண்ணீரைப்போல் வாடிய பயிர்காக்கும் .. தன்மானம் பேசிய பேனா அது தமிழர் வீரம் பேசியது ..தமிழனின் கலையை பண்பாட்டை உலகுக்குணர்த்தியது .. தமிழர்க்கு அரணாய் நின்ற பேனா ..
ஆரியத்தை ஆட்டிவைத்த பேனா 
அந்த பேனா தான் நினைவு சின்னமாய் .. வழக்கம் போல் பகைவர் பதறுவர் ஆரிய அடிவருடிகள் புலம்புவர் ஆனாலும் 
தமிழர் வாழ்வை வளமாக்கிய இந்த பேனாவை 
நினைவாய் அருங்காட்சி படுத்துவோம் 
ஏனெனில் அது 
#முத்துவேல்கருணாநிதி க்கு நாம் செலுத்தும்
#நன்றிக்கடன்..
..
ஆலஞ்சியார்

Friday, July 22, 2022


#கலைஞர்கருணாநிதி..
..
தமிழகத்தின் தாரக மந்திரம்
எல்லா பண்ணைகளிலும்
விளைச்சல் தரும் வீரியவிதை
எதிரிகளின் ஜீவாதாரம்
உரக்க 
உச்சரிக்கவில்லையெனினும்
உதட்டால்  
முணுமுணுக்கவாவது
செய்கிறார்கள்
மவுனமாய் மனதுக்குள் 
திரும்ப திரும்ப
உச்சரிக்கிறார்கள்
உச்சரித்தால்
சிலருக்கு
சோர்வு போய்
சோறு கிடைக்கிறது..

உரக்க உச்சரித்தவனும்
உள்ளத்தில் பூஜித்தவனும்
கொடூரமாய் கொறித்து
கொட்டியவனும்..
யாராயினும்
சோறு உண்டு ..
..
தமிழகத்தின்
கலை இலக்கியத்தில்
அரசியலில் ..
ஆன்றோர் சபையில்..
கல்வியாளர்கள் ..
கருத்தாளர்கள்..
மறுப்பாளர்கள்..
மதியாளர்கள்..
மகான்மார்..மத்தியில்
இப்பெயர் பிரசித்தம் ..
..
இந்த கிழட்டு சூரியனின்
சுழற்சிதான்..
வக்கற்றவனுக்கு.
அரசியலில்
வக்கற்றவனுக்கும்
வாழ்வு தந்தது
..
எத்தனை அம்புகள்
அத்தனையும்
மாலையாய் கழுத்தில் விழுந்தது
பாவம் எதிரிகள்
சிலர் மூர்ச்சையாகி போனார்கள்
மரித்த பின்னும்
சிலருக்கு நடுக்கம்
இவர் பெயரை கேட்டால் 
..
அரைகுறைகள்..
அறியாதுபோய்..
ஆணியடிக்க நினைக்கிறார்கள்
அடித்தபிறகுதான்..
அவர்களுக்கே புரிகிறது..
தன் கை மாட்டிக்கொண்டது..
பாவம் அறிவிலிகள்
உணர்ச்சியின்..
கொந்தளிப்பில்..
வாய் உளறுகிறார்கள்
..
எங்கிருந்து வந்தது
இவ்வளவும் என்கிறார்கள்
மந்திரிகுமாரியிலேயே..
சில ஆயிரங்களை கண்டவர்..
விமர்சனம் செய்வோர் அறிக
திருட்டுரயிலேறி வந்தாய்
சொல்கிறீர்..
கலைஞரே சொல்கிறார்..
பக்கத்தில் என்னோடு
பயணம் செய்தவன் போல் பேசுகிறார்
பட்டாமிராசு இல்லையென்றாலும்
பரதேசியில்லையென்றார்
போதிய வருவாய் இருந்ததென்றார் 
..
தமிழகம்...
கலைஞர் பெயரை
உச்சரிக்காமல்
விடிவதேயில்லை..
மறைந்ததாய் 
பொய் சொல்கிறார்கள் 
தினம் தினம் 
விடியல் தருவதே 
இவர் தானே
இவர் பெயரைதான் ..
இந்தியாவே உச்சரிக்கிறது ..
தொலைநோக்கோடு தீட்டியதெல்லாம் 
இந்தியாவே கடைபிடிக்கிறது 
அரசியலின் அரிச்சுவடியும் 
அரசியல் இலக்கணமும் இவன்தான்..
புதியதொரு இந்தியாவை 
கட்டமைப்பதாய் சொல்வோரே ..
கலைஞர் 70 களில் கட்டமைத்ததைதான் 
இன்று .. கடைபிடிக்கிறீர்
..
கலைஞரே..
எங்கள் கவியே 
காவியமே ..
எங்கள் மூச்சே 
திராவிடப் பெருவுடையே
நவீன தமிழகத்தின் தந்தையே
சமூகநீதியின் போர்வீரனே..
பெரியாரின் பெருஞ்சீடனே..
பேரறிஞரின் தம்பியே 
எம் தலைவ..
உன்புகழ் நிலைத்துநிற்கும்
உன்னைப்போலொருவனை 
தமிழகம் கண்டதில்லை 
தொட்டதெல்லாம் 
தூயபார்வையும் தொலைநோக்கும்
பகுத்தறிவும் பண்பாட்டு சிறப்பும் 
கருணையும் கருத்தும் 
கண்ணியமும் ஏழைகள்பால் கவலையும் 
விளிம்பில் நிற்போரை காத்துநிற்கும் அரணும் 
கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும் உரிமையென ஓயாது உழைத்தமையும் ..
ஒவ்வொரு தனிமனிதனும் 
உன்னால் உயர்ந்தான் 
உன் உழைப்பால் 
உன் திறனால் 
உன் திட்டத்தால் உயர்ந்தான் 
நீரின்றி உலகில்லையென்றார்
நீ யின்றி தமிழகத்தின் உயர்வில்லை 
பேராற்றலே 
பேரன்பே..
பேரருளே ..
வாழ்க ..நீ..
உன் புகழ் வாழ்க!!
..
ஆலஞ்சியார்

Sunday, July 17, 2022

பள்ளி கல்வித்துறை ..
மாணவ மாணவியரின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களின் பாதுகாப்பு ஒழுக்கம் ஆசிரியர்கள் நடத்தை ஒழுங்கு தனியார் பள்ளிகளில் ஏற்படும் விரும்பதகாத செயல்கள் குற்றங்கள் இவைகள் கண்காணிக்கபடவேண்டும் ..
பள்ளியில் புகுந்துள்ள சாதி மத அரசியல், சாதீய மத வெறியை தேசபக்தி என்ற பெயரில் நுழைக்கும் நாட்டின் தீய சக்திகளை இனங்கண்டு ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.. அமைச்சர் சின்னவர் "புகழ்" பாடுவதை குறைத்துக்கொண்டு துறையில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் ..
..
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து நடந்தேறிய சம்பவங்கள் திட்டமிடபட்டவை என சந்தேகம் வலுக்கிறது .. பள்ளி வளாகத்தில் தடயங்களை எரிக்க வேண்டுமென்றே கலவரம் செய்திருப்பதும்  மாணவியை மருத்துவமனைக்கு  அழைத்து சென்ற பஸ் எரிக்கபட்டிருப்பதும் 
வகுப்பறைகளை கொளுத்தபட்டிருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது .. கலவரம் நடத்துவதற்கு முன்பு வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல் பறிமாறபட்டிருப்பதும் விசாரிக்கபடவேண்டும்.. PSBB பள்ளியில்  விருப்பதகாத சம்பவங்கள் நடந்தபோது அமைதி காத்தவர்கள் இன்று கலவரத்தில் ஈடுபடுவதின் பின்னணி என்ன.. இதுகுறித்தெல்லாம் விரிவான விரைந்து விசாரணை வேண்டும்
..
தமிழகத்தை கலவரபூமியாக்க காரணத்தை தேடிக்கொண்டிருக்கும் மதவாத சக்திகளும் பாஜகவும் இதன் பின்னில் இருப்பதற்கான குறியீடுகள் தெரிகிறது .. "ஆர்எஸ்எஸ் சாகா " பள்ளியில் பயிற்சியளிக்கபட்டிருக்கிறது 
பள்ளி நிறுவனர் "சங்கி" யாக தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்வதும், பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மிக மோசமான நிர்வாகம் என கூறியிருப்பதும் நடந்த கலவரம் திட்டமிடபட்டதா..? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது ..
..
நல்லரசாய் இருத்தல் நலம் .. ஆயினும் சிலநேரம் கம்பை சுழற்றவேண்டியதும் அதைவிட முக்கியம்.. எல்லோருக்கும் நல்லதை செய்திட முடியாது தீயவர்கள் கயவர்கள் கொடுமதியாளர்கள்,மதவெறியை தூண்டுவோர் மக்களை பீதியில் நிறுத்தி குளிர்காய நினைப்போர் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் .. இனி எவனும் கலவரம் செய்ய மனதால் கூட நினைக்க கூடாது 
மென்மையான போக்கு சிலநேரம் பலன்தராது ..
மெட்ரிக் பள்ளிகள் அரசு எச்சரிக்கையை மீறி அடைத்திருப்பது அரசு ஒன்று செய்யாது என்ற "மென்மைபோக்கே " காரணம்.. 
கடும் நடவடிக்கை தேவை 
..
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை" ..(குறள்)

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.. 

மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைப்பது அவசியம் அது விரைந்து கிடைப்பதும் சம்பந்தபட்டவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எத்தனை பாதுகாப்போடு இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும் 
..
ஆலஞ்சியார்

Saturday, July 16, 2022


பேசு..
காற்று 
தென்னங்கீற்றின் 
காதோடு 
கதைப்பதைப்போல..
மலரின் 
இதழில் 
வண்டமர்ந்து 
ரீங்காரமிடுவதைப்போல
மரக்கிளையில் 
தொங்கும் 
மாம்பழத்தை
அணில் கொறிப்பதைப்போல
மெல்லிய ஓசையில் 
பேசு ..
..
காவிரிப் படுகையில் 
மயில் தோகைவிரித்தாட
மேகம் 
தராத மழைப்பொழுதில் 
(இருண்ட வானம்)
தென்னமரத்தில் 
அணில் குதித்தேறும் 
அழகிய தருணம் ..
சின்ன சின்ன குரலில் 
கிளிகளும் குருவிகளும் 
இசைபாட
மெய்மறந்து நான் நிற்கையில் 
பழங்கதைகள் 
நெஞ்சில் நிழலாட 
பூமி அதிராமல் 
நடைபோட்டு வந்து
காதருகில் 
ஏதோ சொன்னாய்..
..
பேசாத மொழியில் 
பேசி தீர்க்க 
எண்ணமெல்லாம் 
வழிந்தோடும்
எண்ணற்ற சொற்கள் 
சுவைகூடிய நளினம் 
அகந்தையற்ற அன்பு
காவிரி பெருவெள்ளத்தில் 
மிதந்துவரும்  
ஒற்றை இலையைப்போல
தனிந்திருந்தேன் 
உன் கரம் ஏந்தாதா என..
பூவரசம்பூ நிறத்தில் 
ஒற்றை ரோசா
உன் கூந்தலுக்கு அழகுதான் 
ஆனால் 
மல்லிகை சரம் 
உன் நெஞ்சில் 
தொங்குமழகுபோலில்லை..
சத்தமில்லா கொலுசு 
எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை 
வருமொசை அறிவிக்காமல் 
அதென்ன ..
..
கரம்கோர்த்து 
கரையோரம் 
நடந்ததெல்லாம் 
கனவாகிப்பேனாலும்
மழை நின்று 
இலை சிந்தும் துளியில்
மரத்தில் சாய்ந்து 
தந்த முத்தம்
நெஞ்சில் 
வரைபடமாய் ..
லோலாக்கின் 
நடனத்தில்
பித்தனைப் போல்
கவிதை பேசியதும்
கைநீட்டி காற்றையளந்து 
விரல்கொண்டு முகத்தில் வரைந்த ஓவியம் 
நதியோரமர்ந்து 
ஓடும் நீரில் 
காலடித்து 
சன்னகுரலில் 
பாடி மகிழ்ந்தது 
எப்போது 
குடமுருட்டி வந்தாலும் 
நிழலாடுகிறதே
..
வா..
வந்து பேசிவிட்டு போ
வேண்டாவெறுப்பாய் 
சிலவார்த்தையெனினும்
அது 
தென்றலைப்போல சுகம்தருமே
உன் குரலில் 
சிலவரிகள் 
அது இசையாகுமே..
புத்தகப்புழு என
கிண்டல் 
செய்ததைையெல்லாம் 
மறு பதிப்பு செய்துவிட்டு போ
காதல் 
எத்தனை இனிமை ..
..
ஆலஞ்சியார்

Thursday, July 14, 2022

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மாபெரும் மக்கள் சபையில் "ஊழல்" என்று பேசகூடாதாம் .. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பறிக்கபடுகிற தேசத்தின் ஆட்சியாளர்கள் வீழ்ந்ததாகதான் வரலாறு சொல்கிறது ..
..
கருத்தை எதிர்க்கொள்ள துணிவின்றி எதிர்க்கட்சிகளுக்கு பயந்து ஒரு ஆட்சியாளர் இருப்பதை இப்போதுதான் உலகம் காண்கிறது .. எட்டுவருடமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத "56 இன்ச் " என தன்னை பெருமைபேசியவர் இன்று குரலுக்கு பயபடுகிறார் ..
தெனாலியில் கமல் சொல்வதை போல கண்டால் பயம் நின்றால் பயம் ... 
..
சர்வாதிகாரம் சர்வாதிகாரி இரட்டைவேடம், அவமானம், வெட்ககேடு, ஒட்டுகேட்பு, நாடகம், திறமையற்றவர், முட்டாள்தனம் .. இன்னும் நீண்டுகொண்டு போகிறது .. இவையெல்லாம் மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.. பொருளாதார வீழ்ச்சி கீழ்நோக்கி செல்வதும் ₹40 க்கு பெட்ரோல் விலையை கொண்டுவருவோம் என்றவர்கள் ஆனால் ₹80 தாண்டுகிறது ..ஊழலை ஒழிப்போம்  என்றவர்களை பணமதிப்பிழப்பிலும்,PMCAREலும் கண்டோம் ₹300 கோடி கண்டெய்னரில் வந்ததும் ஊழல் வழக்கில் தண்டிக்கபட்ட A1 ஜெயலலிதாவை அமைச்சர்களே சந்தித்து பேரம் பேசியதும் தீர்ப்பை தள்ளிபோட்டதும் இவர்கள் ஊழலுக்கெதிரானவர்கள் என்பதை நாடும் நாட்டு மக்களும் புரிந்துக்கொண்டோம் ..
..
நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் நின்று பதில் கூற வக்கற்றவர்களிடம்  வேறெதை எதிர்பார்க்க முடியும்.. நாடாளுமன்ற செயலகம் பட்டியிலிட்டிருக்க வார்த்தைகள் ஆபாசமோ ,அருவருப்போ, வன்மமோ, கொச்சைபடுத்துதலோ இல்லை ஆட்சியாளர்களின் இயலாமையை உணர்த்தும் வார்த்தைகள் .. நேர்மை பேசி திரியும் மதமேறிய மூடர்கள்  .. புராணம் புரட்டை கதைபேசி திரியும் அறிவிலிகள் நாட்டை நாசமாக்குகிற கும்பல் கருத்தை எதிரிக்கொள்ள தயங்குவதில் வியப்பில்லை ..
..
நீதிமன்றங்கள் "மநு நீதி" யாகி போன நாட்டில் குரல்வளையை இரும்புகரத்தால் திருகிட நினைக்கும் பாசிச சிந்தனையாளர்கள் , மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை விலைபேசும் கயமை, குறுக்குவழியில் அதிகாரத்தை அடைதல், ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளையும் காலில் போட்டு மிதிப்போம் .. அரசின் சாரநாத் சின்னம்  சிங்கத்தின் கோரபற்களோடு நாடாளுமன்றத்தில் நிறுவுகிறார்கள் .. எதிர்க்கட்சிகளை இல்லாதாக்குவோம், அப்படி எதிர்த்தால் ஆளுநரை கொண்டு அரசில் நலத்திட்டங்களை முடக்குவோம்.. அடங்கியொடுங்கி அடிமையாக நின்றால் மெல்ல தின்று பசியாறுவோம் .. என ஆட்சியாளர்கள் எண்ணுவது அவர்களின் இயலாமை..பயம் 
..
இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல  தமிழர்கள் .. எப்படி பேச வேண்டுமென தெரியும்.. நாடு கேட்கிறார் என்றபோது இந்தியா நாடே அல்ல பலமொழி பேசும் பல்வேறு இனமக்கள் வாழும் துணைக் கண்டமென பதிலடி தந்தவர் பேரறிஞர் அண்ணா .. 
இந்திய தேசிய மொழியாக இருக்க ஹிந்திக்கு தகுதியில்லை அதற்கு தகுதியான மொழி தமிழ்தான் என நாடாளுமன்றத்தையே அலறவிட்டவர் காயிதெமில்லத் ..
இவர்கள் வரிசையில் இரா.செழியன், நாஞ்சிலார், மாறன், வைகோ.. என நீண்ட வரிசை படைத்தளபதிகள் வாய்வீச்சில் செயலிழந்து நின்ற ஆட்சியாளர்களை அறிவோம் .. இப்போதும் பாலு ராசா மாறன் கனிமொழி தமிழச்சி.. என பெரும்படை உண்டு .. எப்படி பேசுவதென தெரியும் .. அவசரநிலை காலத்தில் எப்படி எழுதுவது பேசுவதென பாடம் நடத்தியிருக்கிறார் எங்கள் தலைவர் கலைஞர் .. வழக்கு, நீக்கம், சிறை, இவைக்கஞ்சா நெஞ்சுரம் கொண்டவர்கள் திராவிடத்தலைவர்கள் .. 
தொடைநடுங்கிகளே களத்தில் சந்திப்போம் .. 
நாடாளுமன்றத்தில் சொற்போரால் ஆட்சியாளர்களின் அவலத்தை தோலுரிப்போம்.. இந்தியா கண்ட மோசமான பிரதமரையும் ஆட்சியையும் நாடறிய செய்வோம் ..
வாருங்கள் 
சந்திப்போம் கோழைகளே..
..
ஆலஞ்சியார்

Monday, July 11, 2022

அதிமுக..
அநாகரீகம் அசிங்கம் அபத்தம் 
அறிவிலிகூட்டம் ..
நாகரீக அரசியல் அவர்களுக்கு தெரியாது வராது .. சட்டமன்றத்திலேயே சேலையை கிழித்துக்கொண்டு நாடகமாடிய நடிகையின் வார்ப்புகள் இன்று தெருவில் அடித்துக்கொள்கின்றன 
..
யார் கரம் உயர்ந்தது என்பதற்காக கோடிகளில் விலைப்பேசல் .. ஏற்றிவிட்டவரை கொடுவாளைக் கொண்டு வெட்டிவீழ்த்தும் நயவஞ்சகமும், கூட இருந்தே குழிபறிக்கும் சூதும், அதிமுகவின் அடிப்படை சித்தாந்தம்.. அவர்களுக்கென்று கொள்கை கிடையாது..  திமுக எதிர்ப்பு அதைதவிர வேறெதும் இல்லாத அரசியல் நகர்வு.. மக்கள் நலன் எல்லாம் அவர்கள் அறியாதது ..  ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை .. இதயதெய்வமாவது மண்ணாகட்டியாவது பணம் கொடுத்தால் பன்றியோடு சேர்ந்து  உழலுவோம் ..
..
மகோரா எனும் துரோகத்தின் நிழல் இன்றும் தொடர்கிறது .. ஜெயலலிதா எனும் பாசிசத்தில் காலடியில் கிடந்த கயமைகள் இன்று தங்களுக்குள் கழுத்தறுத்துக் கொள்கிறார்கள் ..
நிறைய துரோகிகள் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது .. 
சினிமா மோகம், நடிப்பு ,பாசிசத்தின் கரிசனம், ஊடகங்களின் மெல்லிய புன்னகை, திராவிட எதிர்பார்ப்பாளர்களின் நம்பிக்கை இவைதான் இதுவரை காத்தது .. இத்தனை ஆண்டு நிலைத்து நின்றதே பொய்யை பூதாகாரமாக்கி குளிர்காய்ந்ததும் அதை பாசிச பார்ப்பன சிந்தனையாளர்கள் தூக்கிபிடித்ததும் தான் காரணம் ..
ஜெயலலிதா வழக்கு உயிரோடு இருக்கும் போதே தீர்ப்பு கிடைத்திருக்குமேயானால் நிலைமையே வேறு .. இப்போதும் மக்கள் பாசிசத்தின் வேர் ஊடுறுவ கூடாதென்பதற்காக நேரடியாக சனியனை சுமக்க வேண்டாமென்பதற்காக மென்மையான போக்கை கொண்ட
அதிமுகவை கடிவாளமிடலாம் என்ற நம்பிக்கையோடு அதிமுக வேண்டுமென்கிறார்கள் ..
..
ஒபிஎஸ் இபிஎஸ் இருவருமே நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் யார் அதிகம் நம்பிக்கை துரோகம் செய்கிறார் என்பதில் அவர்களின் வெற்றி தெரிகிறது ..சூழ்ச்சி, பணம்,  ஊழல், இவையோடு அதிமுகவை விழுங்க பார்க்கும் திமிங்கலத்தின் பாசம் இன்றைய நிலைக்கு காரணம் ..
எம்ஜிஆரை மட்டுமே தெரிந்த சினிமா ரசிகனுக்கு, கருணாநிதி/திமுக எதிர்ப்பை சொல்லி சொல்லி  வளர்ந்த பாமரனுக்கு, சாதி அரசியலை முன்னெடுத்தவனுக்கு, காலை கண்டால் விழுந்து கும்பிடும் அடிமைகளுக்கு இவையெல்லாம் பெரிய விடயமில்லை .. நாலுகாசு பார்க்க முடியுமா கொள்ளையடித்த கோடிகளில் பங்கு கிடைத்தால் போதும் .. ஊழல் கொலை வழக்குகளிலிருந்து தப்ப வேறு மார்க்கமில்லை ஆதனால் கூட நிற்கிறார் ..
..
இந்த ஆட்டத்தின் கயிறு கூத்துகாரனின் கையில் .. தலையாட்ட மட்டுமே இவர்களுக்கு அதிகாரம் .. கூத்தாடி கண்ட கட்சியின் கூத்துகள் காலங்கடந்த ரசனைகள் .. மக்கள் மௌனமாய் ரசிக்கிறார்கள் .. அவர்களே யாரை ஏற்கவேண்டுமென தீர்ப்பு சொல்லும் எஜமானர்கள் .. அதிமுக அழிவை எதிர் சிந்தனையாளர்கள் கூட விரும்பவில்லை ..  கோமாளிகளின் நாடகம் முடிவுக்கு வரும் ..
..
கூத்து ரசிக்கும்படி இல்லை..
..
ஆலஞ்சியார்

Saturday, July 9, 2022

அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு அறிவுரை கூறலாம் .. பொய்யும் புரட்டும் மலிவான விளம்பரம் தேடுவோர் பற்றி 
I Dont Care ..
..
 மதங்களை வைத்து அரசியல் செய்வது ஏதோ இவர்கள் தான் தேசபக்தர்கள் மற்றவர்கள் விரோதிகளைப்போல பேசுவதும் ஜெய் ஹிந்த் சொல் இல்லையென்றால் நாட்டுபற்றில்லாதவன் என புலம்புவதும் இங்கே எடுபடாது .. யார் சொல்கிறார் பாருங்கள் நேற்றுவரை ரௌடியாக மக்கள் மிரட்டி பணம் வசூல் செய்யும் கந்துவட்டிக்காரன் தேடபடும் குற்றவாளி என நாட்டின் நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நமக்கு பாடமெடுக்கிறார்கள் .. காளி வாயில் சிகரெட்டா என கொந்தளிக்கிறார்கள் மதுவும் புகையும் தான் காளிக்கு படைப்பதில் விருப்பமானது .. முஸ்லிம் என்றால் கார் ஏற்றி கொல் யாரும் கேட்க மாட்டார்கள் .. குஜராத் கலவரம் அதுகுறித்து செய்தி வெளியிட்டால் சிறை பாதிக்கபட்ட மக்களுக்காக வாதிட்டவருக்கு சிறை .. தன்னை 108 முறை பாலியல் பலாத்காரம் செய்தார் சாமியாரென பெண் வழக்கு தொடுக்கிறார் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து 10 நீதிபதிகள்.. பின்மாறுகிறார்கள் சாமி பிராமணராம் .. என்ன கூத்து என யாரும் கேட்கவில்லை..
..
தலித் எம்பி ஆகலாம் ஆனால் நாட்டின் முதல் குடிமகன் கோவிலுக்குள் நுழைய முடியாது .. என்ன நாடு இது யாவரும் சமமென சொல்லும் சட்டத்தில் இதற்கெல்லாம் இடமில்லை .. ஆனால் பரமேஸ்வரன் என்ற பட்டியலினத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக்கியது தமிழ்நாடு..
..
நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்து போனாலும மக்கள் மீது வரிவிதிப்பை சுமத்தி சுரண்டுவோம் உயிர்க்கு ஆபத்தான நிலையில் ICU  ல் இருந்தாலும் வரி உண்டு
  பிணமாகி விழுந்தாலும் விடுவதில்லை GST போடுவோம் என்ன கொடுமை ₹430 க்கு போராடியவர்கள் திடுக்கிடவைக்கிறது என்றவர்கள் கேஸ்விலை ₹ ஆயிரம் கடந்த பின்னும் மக்கள் கிளர்ச்சி இல்லை அதை சப்பைகட்டி விவாதம் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் ..
..
அண்டை நாட்டில் ஆண்டவன் அலறியடித்து ஓடுவதை ரசிக்கிற மனம், நம் நாட்டின் ஏதோச்சிய அதிகாரத்தை கேள்வி கேட்பதில்லை .. விலைப்பேசலாம், 
துரோகிகளை வாங்கி ஆட்சியை கலைக்கலாம், அடிமைகளை உருவாக்கி சீர்குலைக்கலாம் கட்சியை களேபரம் செய்யலாம் .. வாக்கு இயந்திரமும் பார்பனீய நீதியும் இருக்கும் வரை ஆடலாம்.. 
நீதிகேட்பவர்க்கு எதிராக அட்டர்னிஜெனரலே வாதிடலாம் இவையும் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்தி நேரிடும் ..
..
திராவிடன் ஆளும் தமிழ்நாட்டில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டும்.. நிலத்தடி நீரை எடுக்க ₹10,000 கட்டு என ஒன்றியம் சொன்னால் அது தமிழ்நாட்டிற்கு பொருந்ததாது..
பொறியியல் கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு - 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் 
தமிழ் நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது - ஸ்டாலின் அரசு
அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பாடப்பிரிவுகள் செயல்பட அனுமதி இல்லை 
ஒன்றிய அரசின் அனுமதி நமக்கு தேவையில்லை
ஜிஎஸ்டி கூட்டம் வட மாநிலங்களில் நடத்தப்படும் தமிழ் நாட்டில் நடத்த வேண்டும் ..
..
வீணர்கள் விவரங்கெட்டவர்கள் மூளை கூட சுமையென திரிவோர் நாட்டின் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தரங்கெட்டவர்களை கண்டு நமக்கு கவலை இல்லை
I Dont Care .. எனச் சொல்வோம் 
..
நமக்கு நல்ல தலைவன் வலுவான அஞ்சாத நேர்மையோடு வழிநடத்தும் திராவிடத் தலைவன்  இருக்கிறார் .. 
The LEADER OF DRAVIDIAN SOIL 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin is More Dangerous 🔥
..
ஆலஞ்சியார்

Wednesday, July 6, 2022

இசை 
மௌனமாகிறது..
போர்களத்தில் 
புல்லாங்குழல் 
என்ன செய்யும்
பைத்தியங்களின் 
கையில் 
புல்லாங்குழல் எதற்கு
அரசியல்
கோமாளிகளின் 
அபத்தத்திற்கு
இசையமைக்க 
இசை அரசன் எதற்கு..
..
பாடகனின் 
குரல் 
நசுக்கபடுகிறது 
சனாதனம் பேசி
தன்னையே 
தாழ்த்திக்கொள்ளும் 
கானக்குயிலுக்கு
தகரத்தில் மகுடம் 
..
இசைஞானி எனும்
வைர மகுடத்தைவிட 
பூக்களால் ஆன தலைப்பாகை
பெருமை தராது 
இசையால் 
உலகாண்டவனுக்கு
மக்களிசையாய்
கட்டிபோட்டவனுக்கு
கடிவாளம் ..
..
நியமனங்களில்
ஜால்ரா சத்தம் 
கேட்பது வாடிக்கை
ஜால்ராவிக்கே
நியமனம் தந்தது வேடிக்கை
இவரின்
இசைக்கு தராமல்
இசைவுக்கு தந்ததால் 
அதில் புகழில்லை
ஆனால் 
இவன்
இசையில் 
எப்போதும் 
பழுதில்லை
..
சனாதன இசைக்கு
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

Monday, July 4, 2022

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பாஜக சகாப்தம் தான், இனி தென்னிந்தியாவில் பாஜக வளரும், தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
.. 
தென்னகத்தில் பாஜக வளர பெரும் முயற்சியில் இருப்பதும் அதற்காக நிறைய செலவு செய்து பட்டியிலின மக்களை தேர்வு செய்து பிரதான பதவி ஆசையைகாட்டி புதைக்குழியில் தள்ளுகிறது .. 
ரௌடிகள், கொலை கொள்ளை வழக்குகளில் சம்பந்தபட்ட சமூகவிரோதிகள், மோசடிபேர்வழிகள் என நாட்டின்  தேடபடும்
"முக்கியமானவர்கள்" சேர்த்து பலம்காண்கிறது .. பிற்படுத்தபட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி சாதிவெறியை தலைக்கேற்றி ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது ..
..
கேரளம் தமிழகம் தெலுங்கு தேசம்  இம்மூன்றிலும் எப்பாடுபட்டாயினும் எந்த வழியிலேயினும் அதிகாரத்தை அடையவேண்டும் அல்லது அதிகாரம் செய்பவர்கள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கவேண்டுமென நாக்பூர்  நினைக்கிறது .. சித்பவ பிராமணர்களின் கட்டுபாட்டில் இந்திய ஒன்றியம் இருக்கவேண்டும் அதற்காக எந்த நிலைவரையிலும் செல்ல தயார் 
புராணம்  புரட்டுகதைகள் நம்பிக்கை என்ற பெயரில் மக்கள் மனநிலையில் மந்தத்தை தொடர்ந்து வைத்திருந்தால் போதும், சோறு உடைமை இரண்டிற்காக அவனை எதிர்பார்ப்போடு வைத்திருக்கவேண்டும்.. கல்வியறிவு தவறியேனும் அவன் பெற்றுவிட கூடாது விழிப்புணர்வு பெற்றால் ஏன் எதற்கென கேள்வி கேட்பான் என தெளிவாக இருக்கிறார்கள் .. தமிழ்நாடு கேரளா போன்று விழிப்புணர்வும் சுயமரியாதையும் கொண்ட மாநிலங்களில் பணத்தாசை பதவி ஆசை வழக்கு கைது என மிரட்டி சிலரை கைப்பாவையாக்கி செயல்படுகிறார்கள் .. அடித்தளம் பலமாக இல்லாத எதுவும் வீழ்ந்துவிடும்..
..
தமிழ்நாட்டில் அதிமுகவினரின் நிலை கவலைதருவதாக இருப்பது காங்கிரஸ் மெல்ல கரைய தொடங்கியிருப்பதும் நாக்பூருக்கு மகிழ்வு தரும் விடயம் ..  "நமக்கு அமைந்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள்" என்பதைப்போல மூன்று பிரிவாக (தினகரன், பன்னீர்,பழநி) பிரிந்திருந்தாலும் மூவருமே பாஜகவிற்கு ஆதரவு தரும் நிலைபாடு யார் சிறந்த அடிமை என்ற போட்டிபோடும் நிலை கேவலமாக இருக்கிறது ..
..
மராட்டியத்தில் சித்பவ பிராமணரான தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக விடாமல் ஏக்நாத் சிண்டே முதல்ராக்கியதற்கு புனே பிராமணர் சங்கம் பாஜக ஆதரவை திரும்ப பெற்றிருக்கிறது எங்கே நமக்கு போட்டியாக வந்துவிடுவாரோ என்ற மோடியின் அச்சம் தெளிவாக தெரிகிறது இதிலிருந்து நமக்கு சில உண்மைகள் தெரியும் .. பிராமணர்களுக்கு பதவியை விட அதிகாரம் செலுத்தும் ஆட்டிபடைக்கும் இடத்தில் இருக்கவேண்டும் ..என்ன நினைக்கிறோமோ அது நடக்கவேண்டும் ..இது பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட,ஒடுக்கபட்ட சமூகத்திற்கு புரியாது.. பணம் பதவி அது சுயமரியாதை இழந்து நின்றாலும் பரவாயில்லை கிடைக்கவேண்டும் .. நாடும் நாட்டு மக்களும் எக்கேடுகெட்டால் என்ன..? நமது உரிமைகள் பறிபோனால் என்ன..? காரியம் நடக்கவேண்டுமெனில் காலிலும் விழுவோம் வளைந்து கும்பிடுபோடுவோம் மகா கேவலம் ..
..
எச்சரிக்கை
தமிழ்நாட்டை
ஸ்மார்ட் மாநிலமாக மாற்ற நினைக்கும் திராவிடமாடல்
தமிழ்நாட்டை வடநாட்டைப்போல ஏழ்மை வறுமை அறிவின்மை என
நாசமாக்க நினைக்கும் நாக்பூர் மாடல் ..
..
எதுவேண்டும்  யார் வேண்டும் நமக்கு 
நாக்பூரின் அடிமைகளா..
அல்லது 
சுயமரியாதை பெண்ணுரிமை கல்வி வேலைவாய்ப்பு அதிகாரத்தில் சமநீதி சமத்துவநீதி எதிலும் வெளிப்படைத்தன்மை,
நேர்மை , நெஞ்சுறுதி என அஞ்சாது பணியாற்றி மக்கள் தலைவனா..
நாம் தளபதியை பின் துணைப்போம் திராவிட மாடல் தலைவன் 
M. K. Stalin அவர்களை
கொண்டாடுவோம் ..
திராவிடமே தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்து தேவை 
..
ஆலஞ்சியார்

Sunday, July 3, 2022

பச்சைகிளிகள் இரண்டு 
பறந்துவந்து ..
குசலம் விசாரித்தது 
மைனா குருவி 
வீட்டு கொள்ளைப்புறம் 
பாடி வரவேற்றது ..
சின்னஞ்சிறு குருவிகள் 
பலகுரலில் கூவி கும்மாளமிட்டது ..
மண் வாசனை 
மூக்கை துளைத்து 
மூளையில் ஏதோ செய்தது 
அணிகள் மின்சார மீட்டர் பெட்டியில் தனக்கான 
கூட்டை கட்ட 
குப்பையை சேகரித்திருந்தது  
நான் நட்ட மரங்கள் 
நீண்டநாள் காத்திருந்த 
ஏக்கத்தோடு 
காற்றில் தலையசைத்தது ..
இரையிட்ட ஒரேநாளில்
கோழிகுஞ்சுகள் 
காலை சுற்றிநின்று 
ஏதோ சொல்லவருகிறது .. 
மாடி தோட்டம் 
கேட்பாற்று கிடந்தது..
..
குடமுருட்டி ஆறு 
பழைய கதை பேசியது ..
சன்னமாய் காதோடு 
காதல் மொழியில் நினைவுகளை கிளறியது 
இளங்கார்குடி செல்லும் வழியில் மயில்தோகை விரித்து ஆட்டம் போட்டது ..  கொள்ளபுறத்தமர்ந்து 
வயல்காற்றை வாங்கியபோது 
தவக்கள காலில் வந்தமர்ந்து 
கூத்தாட்டம் போட்டது ..
இத்தனை இன்பங்கள் 
எம் மண்ணில் ..
..
கலைஞர் நாட்டில் 
கால் வைத்தது முதல் 
நெஞ்சில் பேரின்பயோசை
காதலும் கனிவும் 
உரிமையும் கோபமும் 
கலந்த உறவின் பாசமழை 
வேறன்ன வேண்டும் 
நீண்ட வரிசையில் 
பேரன்பு அழைப்புகள் 
அலைபேசியில் 
காத்திருந்தது 
 ஒவ்வொன்றாய் 
அழைத்து அகமகிழ்ந்தது 
யாம் பெற்ற பேறு ..
..
யாவும் நலம் ..
..
ஆலஞ்சியார்