Tuesday, May 31, 2022

கலைஞர் ..
நினைக்கிற போதெல்லாம் நெஞ்சில் ரீங்காரமிடும் தமிழ் ..
கொள்கை உறுதி, பகைக்கஞ்சா வீரம், எதற்கும் அசராமல், பகையை பதறவைக்கும் விவேகம் .. ஒவ்வொரு நொடியும் தன்னைச் சுற்றியே இந்திய அரசியலை இயங்கவைத்த பேராளுமை..
இத்தனை வல்லமை படைத்த தலைவன்  வேறு இனத்தில் உண்டா.. கொண்டாடி கொண்டாடி தீர்க்கவேண்டிய கடன் நமக்கு உண்டு .. அரசியல்,கலை, இலக்கியம் பேச்சு என தொட்டதெல்லாம் சுவைமிகுந்ததாய் தர வாய்க்கபெற்றவர் யாரேனும் உண்டோ, 
அறிவாண்மை கொண்ட
செங்கோன்மை தவறாத  தலைவனை வேறெங்கும் கண்டதுண்டா
இவ்வையகத்தில்..
எத்தனை எத்தனை வர்ண கோலங்கள் சொல்லிலா பொருளிலா சுவை கூடியதென திகைப்பே மிஞ்சும்..  வார்த்தைக்கட்டி விளையாடினால் மயங்கி நிற்குமே தமிழ்ச்சமூகம் 
எதிரிகளும் இனப் பகைவரும் கூட நாவின் தமிழிசையில் சொக்கிபோய் நின்றனரே..
..
தலைவனாய் எதையும் நேர்நின்று திமிரோடும் துணிவோடும் எதிர்கொள்ளும் பேரழகு இங்கே வேறு எவரிடமும் காணேன் .. எதிரிகளை ஒவ்வொரு நாளும் கதறவிடல் கலைஞருக்கு மட்டுமே சாத்தியமானதெப்படி ..  எதிலும் தெளிவு, எதையும் ஆய்ந்தறிந்து செயலாக்கும் ஆற்றல், நல்லதை நினைத்து நன்மைபயக்குமா என எண்ணி, துணிந்து தொலைநோக்கோடு சமரசமின்றி 
யாரெல்லாம்  எதிர்ப்பார்கள் இதனால் யாருக்கு பயன் தரும் என துள்ளியமாக கணக்கிட்டு எளியவன் மீது அக்கறையோடு, செய்து முடிக்கும் பேராற்றல் இந்திய தலைவர்களிடம் யாருக்காவதுண்டா..?
..
வந்து விழும் வார்த்தைகளில் நேர்மை, அரசியலில் அறமெனும் சொல்லிற்கு இலக்கணம், பொதுவாழ்விற்கு வர நினைப்போருக்கு பாடமாய் இருக்கும் ஒரே தலைவன்.., விளிம்புநிலை மக்களின் குரலாய், பள்ளத்தில் நிற்போருக்கு ஏணியாய், அடக்குமுறைக்கு ஆளாவோருக்கு அரணாய், ஒடுக்கபடுவோருக்கு உறுதுணையாய், ஒரு தலைவன் ..
வளர்த்துவிட்டவன் வேலேந்தி புறம்நின்று குத்துகிறான் .. எதிர்நிற்க துணிவின்றி என்றறிந்தும் புன்முகத்தோடு களம்கண்ட தலைவன் .. 
இனப் பகைவர்கள் அறிந்தளவு இனத்தவன் தம்மை அறிந்திருக்கவில்லை என அறிந்தும் உழைப்பது தம் கடமை என்றேனும்
ஒருநாள் உணர்வான் என ஓயாதுழைத்த நிகரில்லா பெருந்தலைவன் ..
பலமுனையில் நின்று பகைவரும், எதிரியும் துரோகிகளும் துளைத்தெடுத்தபோதும்  கண்ணுயராமல் பெருஞ்சுவராய் இனத்தை
நம்மை காத்துநின்ற பேரருளாளன் .. இவரைப்போல் யாருண்டு
..
வியந்து நிற்கிறேன் ..
இவன் பேரழகு கண்டு ..
சொல்லெடுத்து ஆடினால் தேனுண்ட வண்டுபோல் மயக்கம் வரும்..
எதிரியை வீழ்த்த 
இலக்கியத்தை துணைக்கழைத்த பேரறிவு கண்டு..
தூற்றும் போதும் தூயத்தமிழ்ச் சொல்லி தீப்பிழம்பாய் சுட்டெறிக்கும் ஆற்றல் கண்டு ..
எளியவரிடம் கருணையோடும் 
இயலாதோரிடம் அக்கறையோடும் 
பகைவரோடு அஞ்சாமையோடும் 
பெரும்படையோட்டம் கண்ட பேராசான் துணையோடு 
என்பதாண்டு பொதுப்பணியில் 
சீரோடு வாழ்ந்த எம்மான் ..
கலைஞரை எண்ணி வியக்கிறேன் 
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் .. அவரோடு இணங்கிநின்றேன் ..கைகாட்டிய திசையில் பெரும்படையில் சிப்பாயாய் நின்றேன் என எண்ணும் போது உள்ளம் துள்ளி மகிழ்கிறது .. இப்போதும் உன் பெயரை உச்சரித்தால் பகைவர்கள் குலைநடுங்குகிறார்கள் தலைவா..
நீ.. சமைத்ததுதான்  எல்லாம் 
நவீன தமிழகத்தின் சிற்பியே
உம்மை கொண்டாடி மகிழ்கிறோம் 
..
தலைவா..
வற்றாத நதியாய்..
தமிழர் நெஞ்சில்
நிலைத்து நிற்கும் 
பேரருளாளனே..
திராவிடப் பெருஞ்சுவராய் 
இனத்தை காத்த நின்ற 
திராவிடப் பேரரசனே..
..
ஜூன் 3 ..
99 வது அகவை தினம் 
வாழும் நின் புகழ் 
வையகம் உள்ளவரை 
..
கலைஞருக்கு
புகழ்வணக்கம் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 28, 2022

Welldone mks 
நீண்டநாட்களாக நாம் கேட்டுக்கொண்டிருந்த விடயம் 
ஏன் இல்லை, எங்கே தொலைத்தோம் ,எப்படி நடந்தது என நாம் யோசிக்க வைத்தது ..
பாசறை இல்லையென்றால் படைவரிசை இல்லை என்றார் நம் அண்ணா ..
..
ஆம் .. தெருமுனையில், திண்ணையில், சிகையலங்கரா நிலையங்களில், பேசுபொருளாக இருந்த திராவிடம் .. இனத்தை மொழியை பண்பாட்டை அசைபோட்டு அடுத்ததலைமுறைக்கும் சேர்த்து பயிற்சி தந்தது .. வெற்றியும் இனி திராவிடத்தை யாரும் எதுவும் செய்திட முடியாதென்ற அசட்டுத்தனமும் கூட வர அயர்ந்து போன நேரத்தில் காத்திருந்த பகை நம் குரல்வலையை கடிக்க நாம் வளர்த்தவர்களை கொண்டு ஏவி விடுகிறது ..  மதவெறியை பரப்பி சமூகத்தை பரப்பரப்பாக வைக்க முனைகிறது .. அதற்கு தோதாய் திராவிட பேசிய போலிகளை, அடிமைகள் தோல் உதிர்ந்த கோழியைப்போல நடுநடுங்கி நிற்கிறார்கள் .. பணத்திற்கு சிலர் பிணமாய் கிடக்கிறார்கள் .. விலைக்கு போன வீணர்களால் திராவிடம் பெற்ற உரிமைகள் பறிபோகின்றன ..
அஞ்சாமை எமதுடமை என்ற சமூகம் இன்று கோடாரிகளால் பிளக்கபடுகிறது ..
..
மதவாத நச்சுவிதைகளை தூவிட எத்தனிக்கும் தேசவிரோத சக்திகளையும் அதற்கு துணைப்போகும் அடிமைகளையும்
விலை போகும் வீணர்களையும்  அடையாளங்காட்டி  அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமுமின்றி பாதுக்காத்திட புதிய பட்டாளத்தை உருவாக்க வேண்டுமென மேதகு முதலமைச்சர் திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது ..குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடம் பெருமளவில் சமூகநல்லிணக்கங்களையும் சமூகநீதியை திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்ததமான எல்லாருக்கும் எல்லாம்  எல்லோரும் சமம்  என்ற உயர்நோக்கை கொண்டு செல்லவேண்டும்.. அதை முனைப்போடும் வேகத்தோடும் செய்திட மாவட்ட செயலாளர் முனைந்திட வேண்டும்..
..
குறிப்பாக பள்ளி கல்லூரிகளை ஆர்எஸ்எஸ் பயிற்சி களமாக மாற்ற முந்தைய அடிமை அதிமுக அரசு துணைப்போனது அதன் வீக்கம் இப்போது புரிய தொடங்கியிருக்கிறது .. மாணவர் சமூகத்திடையே நல்ல விதைகளை விதைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது .. விஷமேறிய நச்சுத்தன்மையை நீக்கும் நல்லவைகளை இந்த மாநிலம் சமத்துவத்தை ,சகோதரத்துவத்தை வேற்றுமையிலும் இணக்கத்தோடும் செயல்படுவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பும் நமக்கிருக்கிறது .. 
..
பதவி பொறுப்பு இதையெல்லாம் கட்சிக்கென்று சில கடமைகள் உண்டு .. திராவிடம் நீர்த்துபேகாமல் காத்திடவேண்டும்..
பகைவர் நன்கு அறிந்து நீண்டநாட்கள் காத்திருந்து அதிகாரம் கைக்கு வந்ததும் ஆட்டம் போடுகிறார்கள் .. நம் உரிமையை நம்மில் முதுகொடிந்து போன கோழைகளை விலைப்போன வேசிகளை கொண்டு பறித்தார்கள் .. நல்வாய்ப்பாய் மக்கள் நம்மிடத்தை அதிகாரத்தை தந்ததால் மிச்சமிருந்தது களவாடாமல் காத்துநின்றோம் .. வரும் தலைமுறை சரியான பாதையில் செல்லவும் .. நல்லிணக்கத்தோடும் நல்லுறவோடும் இந்த சமூகம் வாழவும் காக்கும் கடமையை உணர்ந்தே #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  சரியான முடிவெடுத்து பாசறைக் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகிறார் .. 
..
திராவிடமாடல் ஒன்றே மனிதசமூக மேம்பாட்டிற்கு உகந்தது நாட்டிற்கு கேடுவிளைவிக்காமல் மக்கள் நிம்மதியோடு மத சாதி சண்டையில்லாமல் வெறுப்புணர்வில்லாமல் வாழ வகைசெய்யும் அறிந்து இளைஞர்களிடத்தில் வளரும் தலைமுறைய நல்லதாய் கட்டியெழுப்ப தொடங்கியிருக்கிறார்..
பகைவெல்ல படைவரிசை தேவை 
அது பாசறையால் உருவாக்க வேண்டும் ..
நல்லதே நடக்கும் என நம்பிக்கை பிறக்கிறது ..
நன்றி M. K. Stalin 
..
ஆலஞ்சியார்

Thursday, May 26, 2022

பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு நீட் விலக்கு வேண்டும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக தரவேண்டும் ஒன்றிய வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு  மற்ற மாநிலங்களை விட அதிகம் ஆனால் தரவேண்டியதை தர மறுப்பது ஏன் .. இந்த மாநிலம் சமத்துவத்தை போதிக்கும் சமூகநீதியின் அடித்தளம் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பேசினார் .. இவர்தான் தைரியமான முதலமைச்சர்.. முன்பு அடிமைகளை கண்டவர்கள் இப்போது  சரியான ஆளுமையை பார்க்கிறார்கள் ..
பிரதமரின் முகம்  காண ரசிக்கதக்கதாய் இருந்து🤣..
..
பிரதமரைPAM வரவேற்ற தமிழகம்  
மோடியை வைத்து செய்தது .. GOBACKMODI டிரெண்ட்னானது .. 
இதற்கு பின்னால் தேசவிரோதிகள் என எல்.முருகன் சொல்வதை கேட்க சிரிப்பு வருகிறது.. ஆம் இந்துத்துவ தேசவிரோதிகள் .. முருகன் முதல்வர் பெயரை உச்சரித்தபோது ஏற்பட்ட ஆரவாரம் அடங்க நேரம் பிடித்தது.. இது இயல்பாக வரவேண்டும்  வலுகட்டாயமாக வரவழைக்க முடியாது ..  மோடியின்  பெயரை, ஆர்.என்.ரவியின் பெயரை உச்சரித்த போது வராத கரவொலியொசை தளபதி பெயரை சொன்னவுடன் எழுகிறதே.. அதுதான் உழைப்பவனுக்கு  உண்மையானவருக்கு நல்ல தலைவனுக்கு கிடைக்கும் மரியாதை.. 
..
நெஞ்சில் கனமில்லை அதனால் பயமில்லை .. பொய்ச்சொல்லி அரசியல் செய்வில்லை.. வாயால் வடை சுடவில்லை .. ஏமாற்றவில்லை .. 56 இன்ச் என விடைக்கவில்லை .. எதுவெல்லாம் இயலும் என ஆய்ந்து மக்களுக்கு எது தேவை என உணர்ந்து நாட்டின் நிலை மக்களின் பரிதவிப்பு, அவர்களின் இன்னல்களை களைய எதை செய்யவேண்டும்  எதை  அவசரமாக செய்யவேண்டும் என ஆட்சி நடத்துகிறார் முத்துவேலர் பெயரன் கலைஞரின் மகன் .. அதனால்தான் மக்கள் கொண்டாடுகிறார்கள்..
..
மக்கள் அவதியுரும் போது கொஞ்சமும் சஞ்சலபடாமல் லிங்கத்தை தூக்கிகொண்டு அழுகிய அரசியல் செய்வோருக்கு எப்படி மக்களாட்சி செய்யவேண்டும் என பாடம் நடத்தியிருக்கிறார் .. தகுதியற்றவர்களை அமைச்சராக்கி நாட்டை புதைக்குழிக்கு கொண்டு செல்லும் மதமேறியமடையர்களுக்கு திராவிடமாடல்" குறித்து வகுப்பெடுத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்..
..
திராவிட மாடல் என்றால் என்ன..?  நல்ல வகுப்பெடுத்தார் .. இங்கே பேதமில்லை,  என்ன ஆடை உடுத்தவேண்டுமென கட்டாயமில்லை, விருப்பான உணவை உண் யாரும் தடுக்கவோ தடைபோடவோ மாட்டார்கள் .. சமத்துவம் சமூகநீதி பிரதானம் .. ஹிஜாப் அணிந்தும் பரிட்சை எழுதலாம், பெண்கள் கல்வி மிக முக்கியம் இரண்டு மீட்டர் கூடுதல் துணிக்காக 20,000 பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை போடமாட்டோம், இங்கே எல்லோரும் சமம் .. பள்ளத்தை இருப்போரை உயரத்திற்கு கொண்டுவர பகுத்தறிவுத் துணைக்கொண்டு உழைப்போம், கல்வி கட்டமைப்பை உலகம் வியக்குமளவு உயர்த்திகாட்டுவோம்,  மதவெறிக்கு இங்கே இடமில்லை அண்ணன் தம்பி மாமன் மச்சானாய் மகிழ்ந்து வாழ்வதே திராவிடம் சமைத்தது என பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லாமல் சொன்னார் ..
..
இவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி ..
பெருமைக் கொள்கிறது தமிழ்நாடு 
அண்ணனை,தம்பியை,அடுத்தவீட்டுகாரனை அறியணையேற்றியதைப்போல கொண்டாடுகிறது தமிழ்நாடு ..
தளபதி தமிழர்கள் தவம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, May 24, 2022

நாளுக்கு நாள் மெருகேறுகிறார் மெருகேற்றுகிறார்  ..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
நிதானமாக மிக தெளிவாக தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கிய நகர்வு .. சிறந்தவர்களை துறை வல்லுநர்களை கொண்டு ஒவ்வொரு அடியும் உயரத்தை நோக்கியதாக இருக்கவேண்டுமென்று செயல்படுகிறார் .. வீண் செலவுகள் குறைக்கபடுகின்றன, மாநிலத்தில் வருவாய் பெருக்கம், பணவீக்கத்தை இந்திய ஒன்றியம் 8% விழுக்காடு  ஆனால் தமிழகம் 5% விழுக்காடாக குறைகிறது பற்றாகுறை 60 ஆயிரத்திலிருந்து40 ஆயிரமாக குறைகிறது ..
எப்படி சாத்தியமானதென மூளை கூட சுமையாக கருதும் சீதாராமன்கள் 
வியக்கிறார்கள்..
..
நீங்கள் இடிக்க கற்றுதருகிறீர் நாங்கள் ஆக்க கற்று தருகிறோம் அவ்வளவுதான் .. கல்வியறிவில் சிறந்து விளங்கினால் மக்களிடையே மதமோ சாதியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.  படி எனச் சொல்வது தான் இயக்கத்தின் தலையாய பணி ..
அதற்காகதான் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 36 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டிருக்கிறது இந்திய துணைக்கண்டத்தில் எந்த மாநிலமும் ஒதுக்காக தொகையை 
ஒதுக்கி கல்வியில் சிறந்த நாடாய் உயர திராவிட மாடல் அரசு முயல்கிறது ..
..
தலைவர் தளபதி.ஸ்டாலின் அவர்கள்
திராவிட மாடல் என்பது 
எதையும் இடிக்காது உருவாக்கும் 
எதையும் சிதைக்காது 
சீர் செய்யும்
யாரையும் பிரிக்காது 
ஒன்று சேர்க்கும்
யாரையும்  
தாழ்த்தாது சமமாக நடத்தும்
யாரையும் புறக்கணிக்காது
அரவணைக்கும்  இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல 
ஒரு இனத்தின் ஆட்சி  என்றார் 
எவ்வளவு தெளிவு ..
நூற்றாண்டு கண்ட இயக்கத்தின் அடிப்படையை, திராவிடப் பெருச்சுவராய் காத்துநின்ற அய்யா அண்ணா கலைஞர் போன்றோரின் உழைப்பில் கட்டமைக்கபட்ட கொள்கையை யாரெல்லாம் திராவிடத்தை நசுக்கிவிடலாம் என பார்த்து ஏமாந்து நிற்போருக்கும் பலநூற்றாண்டு வன்மத்தோடு நம்மை ஏளனம் செய்யும் திமிர்பிடித்த பாசிச கோமாளிகளுக்கு பாடம் எடுத்திருத்திருகிறார்
..
நாங்கள் பிறமத வழிப்பாட்டுதளங்களை இடிப்பவர்கள் அல்ல கல்விசாலைகளை உருவாக்குபவர்கள்..  மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்து நற்குணத்தை சிதைப்பவர்கள் அல்ல எதையும் சீர் செய்து அழகு பார்ப்பவர்கள்.. ஏற்றதாழ்வைச் சொல்லி பிரிப்பவர்கள் அல்ல சமத்துவத்தை சொல்லி சக மனிதனை மானத்தோடும் நேர்மையோடு உரிமையோடும் வாழ வழி செய்பவர்கள் ..  கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் அறிவிலி கூட்டமாய் நின்றாலும் முட்டாள்த்தனமாக மூடநம்பிக்கை கொண்டிருந்தாலும் பல்லக்கில் தான் செல்வேன் என அடம்பிடித்தாலும் அரவணைத்து அழைத்துச் செல்லும் சுயம் தெளியும் வரை என சொல்லி திராவிடத் தலைவனாய் தலைநிமிர்ந்து நிற்கிறார் ..
..
இத்தனை பக்குவத்தோடு ஒரு தலைவனை காண பெரும் மகிழ்ச்சி .. நாடு கண்ட நல்ல தலைவர்கள் வரிசையில் முன்னிலை நிற்கிறார் .. பல்துறை வித்தகர்கள் பன்மொழிப்புலமை கொண்டவர்கள் நிர்வாகத்தில் தன்னை சாணக்கியன் என்றவர்கள் சில நேரங்களில் கொள்கையில் கூட சமரசம்  செய்தவர்கள் உண்டு .. சிலருக்கு காலம் வாய்ப்பை நீண்டகாலம் தரவில்லை தந்த வாய்ப்பை சில காரணங்களுக்காக தாமதபடுத்தி செயல்படுத்தியவர்கள் உண்டு .. (அண்ணா கலைஞர்) ஆனால் நீண்ட அரசியல் அனுபவம் தளபதி ஸ்டாலின் அவர்களை தெளிவாக செயல்பட வைக்கிறது .. கலைஞரிடம் பயின்ற வித்தைகள் 
அவரை மெருகேற்றி மிளிர வைக்கிறது .. நிதானம் பேராயுதம் என்பதை உணர்ந்து எப்போது சுழற்றவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படும் முதலமைச்சர் .. எதிரிகளின் பெருங்கூச்சலும் பகைவரின் பதற்றமும் நமக்கு நல்ல தலைவர் இவரென அடையாளம் காட்டுகிறது முதிர்ந்து தருவைப் போல  நிழல் தருகிறார் பலன் தருகிறார்
..
மௌலானா ரூமி அவர்கள் சொன்னதைப்போல
ராஜாளிபோல் முனைப்புக் கொண்டு
அட்டகாசமாய் வேட்டையாடுகிறார்
சிறுத்தை போல் கம்பீரம் கொண்டு எதையும் 
போராடி வெற்றி பெறவேண்டும் எண்ணுகிறார்
குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தை வீணடிக்காமல்
ஒன்று வெறும் சத்தம்,
இன்னொன்று வெறும் நிறம்.. என்பதை உணர்ந்து செயல்படுகிறார்..
தளபதி அவர்கள் 
செயல், காரியகாரர் நம்பிக்கையாளர், நல்ல தலைவர் 
மக்கள் விரும்பும் தலைவர் 
..
ஆலஞ்சியார்

Friday, May 20, 2022

#நெஞ்சுக்குநீதி..
தீண்டாமை பாவச் செயல் 
தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் பாடபுத்தகத்தோடு மறந்து போகிற சமூகம் நிலை.. 
இதைப்போல நிறைய படங்கள் வந்திருக்கின்றன இதுவொரு புலனாய்வு திரைப்படம் என்பதை தாண்டி நிறைய பேசியிருக்கிறது ..
..
ஒவ்வொரு சாதிக்கும் தனி குணம் இருக்குன்னு என் தாத்தா சொல்வார் இப்ப மட்டும் உயிரோடிருந்தால் போயா மசிருன்பேன்  என்கிற  வசனம் சுடுகிறது .. சாதீய உணர்வை மங்காமல் பார்த்துக்கொள்வதில் அப்பன் தாத்தனின் வழிமுறைகளும் செயல்முறைகளும் முக்கிய பங்குவகிப்பதை மறுக்கவியலாது 
உணர்வுபூர்வமாக மெல்ல நம் ரத்தத்தில் ஏற்றபடுகிற "வெறி" தொடர்ந்து நம்மை குதிரைக்கு போடபடும்"கடிவாளம்" போல ஒரே எண்ணத்தில் ஓட வைக்கிறது .. 
"எல்லோரும் சமம்னா யாருதான் சார் ராசா" கேள்வியில் விடையறியா "மூலம்" நம்மை  வேட்டையாடும் எல்லோரும் சமம் என நினைப்பவர் தான் ராசா என்றாலும் கேள்வி வேர் எந்தளவு ஊடுறுவியிருப்பதை புரிந்துக்கொள்ளமுடியும் 
..
சாதிசங்கங்களையும் தலையில் கொட்டி நமக்காக பேசுவான் என நினைத்தால் மத்தவனுக்கு செருப்பா இருக்கிறான் என்று உரைக்கிறமாதிரி பேசுவதும் படிச்சு பெரியாளா வந்தா நமக்காக எதுவும் செய்றதில்லை என்ற யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்கிறது திரைப்படம்.. காவல்துறையில் சாதிய நிலை
எந்தளவு புரையோடி இருக்கிறதென்பதும் "அதுங்க" என்ற சொல்லாடல் உணர்த்துகிறது ..
நான் FC சார் ..அவரும் நீங்களும் ஒண்ணா ..இல்லை சார் அவரும் அய்யர் சார் நமக்கெல்லாம் மேலே..
நீங்க SC யா என கேட்க ஆமாம்சார்.. அவுங்க  எங்களுக்கு கீழே சார் என்பதிலிருந்து தீண்டாமையின் கொடூரம் அது எந்தளவு வேரூன்றியிருக்கிறதென்பதை காட்டியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகள் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொண்ட போதும் இன்னமும்  பெருநகரங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் சிற்றூர்களில் சாதீய கோரதாண்டவம் இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் .. பட்டியிலின மக்களிடையே கூட படித்தவுடன் "மேட்டிமைதன்மை " குடியேறி சொந்த இனமக்களை கூட புறக்கணிக்கிற/ தவிர்க்கிற நிலைதானிருக்கிறது.. 
படம் முழுக்க சாதிய படிநிலைகளை அதன் வேரின் விஷத்தை தோலுரித்து சட்டத்தின் முன் அனைவரும் சமமென சொல்கிறது ..சட்டம் நீதி எல்லாநேரமும் கைகொடுப்பதில்லை நியாயம் பேசுவதில்லை.. அதன் கட்டமைப்பு சாதீய அடுக்குநிலையில் உருவானது.. சாமனியனால் பெறமுடியாது .. 
மிருகபலம் கொண்டது பணம் புகழ் சாதி மதம் இவை காவல்துறை  நீதித்துறைகளில் வேரூன்றி அசைக்கமுடியாமல் இருப்பதை 
நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும் ..
..
Article 15 நமக்கு தந்த உரிமை மற்றவர்களையும் சமமாக மதிக்கவேண்டும் 
இனம் மொழி சாதி மதம் பாகுபாடு பார்க்க கூடாதென்பதை உறுதி செய்தாலும்.. 
வளரும் தலைமுறையினரிடையே 
சமத்துவத்தை எல்லாரும் சமம் என்பதை "சரியாக" போதிக்கவேண்டும் .. "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்" பேசுபொருளாக மாறவேண்டும் சாதிசங்கள் அது சமுதாய வளர்ச்சிக்கல்ல என்பதையும் மக்கள் உணரும் வகையில் தொடர் நடவடிக்கைகள் ஏற்பட்டால் தான் அது 
"நெஞ்சுக்கு நீதி" 
..
உதயநிதிக்கு நல்ல படமாக அமைந்திருக்கிறது ..இயல்பான நடிப்பும் மிகைப்படுத்தாத திரைக்கதை நகர்வும் யதார்த்தமான வசனங்களும் ஒரு
நல்ல சினிமாவை தந்திருப்பதில்  மகிழ்ச்சி
..
ஆலஞ்சியார்

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் விடுதலையும் 
தமிழக அரசின் அதிகார வரம்பும் 
இங்கே உறுதியாகியிருக்கிறது 
31 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தூக்குத்தண்டனை ரத்து செய்யபட்டு அது ஆயுள்தண்டனையாக மாறியும் சட்டபோராட்டங்களும் நிறைய வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கிறது இது முக்கியமான வழக்காக வரும் காலங்களில் பேசபடும் இந்த தீர்ப்பு தொடர்ந்து சிறைகளில் வாடும்  எளியவரின் விடுதலைக்கு முன்னுதாரமாக எடுத்துக்கொள்ளபடும் ..
..
ஒரு தாய் தன் மகனுக்காக நீண்ட 
போராட்டம் வரலாற்றில் பேசபடும் ..
அந்த தாய்  அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி  கருணைக் காட்டுங்கள் என தட்டியது வீண்போகவில்லை கதவு திறந்தது .. ஆரம்பகாலங்களில் அவரை சில  ஈழப்பிணந்திண்ணிகள் தவறாக வழிநடத்தியதையும் நாம் பதிவு செய்யவேண்டியிருக்கிறது ..
..
நீண்டநாள்கள் சிறைவாசம் என்பது கொடுமையான தண்டனை .. இந்த தீர்ப்பு சொல்லும் சேதி விசாரணை கைதிகளாக நெடுநாட்கள் சிறையில் கழிப்போருக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது  மாநில அரசின் அதிகாரவரம்பில் குடியரசு தலைவருக்கு  தலையிட அனுமதியில்லை ஆளுநர் தன் அதிகாரவரம்பை மீறகூடாது அவர் கேபினட் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமே தவிர தனியாக கருத்து கூற கூடாதென தீர்ப்பு மாநில சுயாட்சியை வலியுறுத்துவதும் மாநில அரசே நீண்டநாள் சிறைவாசிகளை  விடுதலை செய்யலாம் என சொல்லியிருப்பது பெரும் நம்பிக்கையை விதைக்கிறது 
..
கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி 
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது..
சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.. 
..
ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்..
ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க வேண்டும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர்  முடிவெடுக்க  முடியாது..
ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர்..
..
அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை.. 
குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும்..  அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை கவர்னர் மீறிவிட்டார் .. காந்தியை கொன்ற கோட்சேவின் சகோதரர்
 (ஆயுள்தண்டனைகைதி) 14 ஆண்டுகளில் விடுவிக்கபட்டார் என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார் 
..
இந்தநேரத்தில் நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுளாக குறைத்து தொடக்கம் குறித்த #பேரருளாளன்_கலைஞரை நினைவுகூற வேண்டும் ..
நல்ல ஆட்சியை தந்த மக்களுக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu M. K. Stalin 
 அவர்களுக்கும் நன்றி!..
எழுவர் விடுதலையில்லாமல் எம் இனத்தின் விடுதலை இல்லை 
தொடர்ந்து முயற்சிப்போம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
செய்து முடிப்பார் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 14, 2022

தி.மு.கழகம்..
நிறைய பேருக்கு கழகத்தின் கொள்கை ,இயக்கம் நடந்துவந்த பாதை எதற்காக தொடங்கபட்டது ஏன் தொடரவேண்டும் என்றெல்லாம் தெரியாது.. கலைஞரை பிடித்திருக்கிறது ஸ்டாலின் செயல்பாடுகள் பிடிக்கும் என் அப்பன் காலத்திலிருந்து திமுக அதனால் தொடர்கிறேன் என்போரே அதிகம் .. 
..
தி.மு.கழகம் எல்லோரையும் அரவணைக்கும் அது கடமையும் கூட ஆனால் தொடர்ந்து இந்திய ஒன்றியத்தில் மக்கள் தொண்டாற்ற இவ்வியக்கம் நிலைக்க வேண்டுமெனில் மக்களிடம் செல்லவேண்டியது அவசியம்.. ஆனால் பதவி கிடைத்தால் போதும் என குறுகிய வட்டத்திற்குள் செயலாற்றுகிற கூட்டம் பெருக்கெடுத்துநிற்கிறது .. உதயநிதி படத்தை பெருசா போடு.. அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் .. சின்னவரின் வழியில் செயல்படுவோமென பாட தொடங்கியிருக்கிறார்கள் இந்த காரியகாரர்கள் .. ஆபத்தான போக்கு இது .. 
நான் யார் வரவேண்டுமென சொல்வதற்கு வரவில்லை இயக்கம் தனக்கான தலைவனை தயார் செய்யும் .. ஆனால் அதற்காக இப்போதே துதிபாடுவது தலைமைக்கே சங்கடத்தை தரும்..
இன்னொன்று உண்டு இதில்.. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ..
..
நூற்றாண்டு கண்ட இயக்கம் மக்களிடம் செல்வதை குறைத்துக்கொண்டதோ என அஞ்சவேண்டியிருக்கிறது .. தகுதியற்றவர்களின் தரமற்ற பேச்சுகள் மக்களிடம் சலிப்பை தரும்.. இயக்கத்தின் அடித்தளத்தையே அசைத்து பார்க்க பாசிசம் நம் கைகளையே தயார் செய்கிறது .. ஆர்எஸ்எஸ் விரும்பிகள் மெல்ல ஊடுறுவலாம்..
நம் மெத்தனபோக்கு பெரும் விரிசலை தரலாம்.. கொள்கை தெளிவற்ற கோமாளிகள் கட்சியின் முகத்தை சிதைக்கலாம் இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாவற்றிக்கும் தலையசைத்து ஜனநாயகத்தை நீர்த்துபோக செய்வதும் ஜால்ராக்களின் ஓசை செவிப்பறையை கிழிப்பதும் காணும் போது அறிவுடைச் சமூகத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் புரிகிறது ..
..
இந்த இயக்கம்  மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கும், அனைவரையும் சுயமரியாதையோடும் சமமாக நடத்தவும் அவர்களின் எல்லா உரிமைகளையும் (கல்வி,வேலைவாய்ப்பு) பெற்றுதரவும் சமுதாயத்தில் ஏற்றதாழ்வற்ற சமநிலையை கொண்டுவரவும் அறிவுடைச் சமூகமாக தமிழினத்தை உயரத்தில் நிறுத்திடவும், தமிழர் வாழ்வு பண்பாடு கலாச்சாரத்தை உலகறிய செய்யவும், தொடங்கபட்டது .. நோக்கம் அறிவோம் இலக்கும் அறிவோம் பகைவர் யாரென அறிவோம் .. ஆனால் தொடர்ந்து நம்மை அழுத்திவரும் பாசிசத்தை இணக்கமாக செல்ல தமிழகத்து இளைஞர்கள் தயாரானது எப்படி .. எங்கே நாம் சறுக்கினோம் .. எதற்காக நம்மோடு இருந்தவர்கள் பகைவர் முன் பல்லிளிக்கிறார்கள் நாம் செய்ய மறந்தது எது என ஆய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது ..நம் கைகளை கொண்டே நம் கண்களை பறிக்க முயல்கிறார்களே எங்கே தவறு என இயக்கம் உணரவேண்டியது அவசியம் .. எழுத்தும் பேச்சும்,கலந்துரையாடலும், ஆய்வரங்க கூட்டங்களும் தெருமுனை விளக்கங்களும்,திண்ணை பிரசாரமும் கிராமங்களை தேடி நம் தலைவர்கள் இயக்கத்தின் இளைஞர்படையினர் கருத்து பிரசாங்களை செய்ய வேண்டியது அவசியம் .. சின்னவர் வழியில் என செம்படிக்காமல் ஊர்தோறும் மக்களோடு கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் .. மக்களோடு செல் மக்களோடு பழகு மக்கள் சொல் கேள் இதுதானே அண்ணனின் அருள்வாக்கு..  அதை செய்ததால் தானே இன்றைக்கும் உயிர்ப்போடு 
தி.மு.கழகம் இருக்கிறது .. கருத்துரிமைக்கு மதிப்பு தந்த இயக்கம் வா இந்த பக்கம் போவோம் என்றால் ஏன் இந்த பக்கம் போக வேண்டுமென கேள்வி எழுப்புவார்கள் என் தம்பிகள் என்றார் அண்ணா .. தனக்கு வரும் எதிர்கருத்துகளையும் அது கட்சியினரிடமே இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு கேட்டு மறுத்தோ ஏற்றோ செயல்பட்டவர் கலைஞர் .. ஆம் கலைஞரைப்போல சிறந்த ஜனநாயகவாதியை இந்திய ஒன்றியத்தில் காண முடியாது
..
தலைவனை இயக்கம் கண்டெத்தும் அதற்கான வரையறைகளை வகுத்து தரும் நாம் மக்களிடையே செல்வோம் இன்னமும் இந்த
இயக்கத்தின் அவசியத்தை  மக்களிடையே எடுத்து வைப்போம் .. பாசிசம் நம்மிடையே பிரிவினையே செம்மையாக செய்ய தொடங்கியிருப்பதறிந்து முளையிலேயே கிள்ளியெறிவோம் 
..
 தி.மு.கழகம் பகுத்தறிவு இயக்கம் 
மக்கள் இயக்கம் .. நம்பிக்கையாளர் மறுப்போர் அனைவருக்குமான இயக்கம் .. "தமிழ்நாடு,தமிழர் நலன்,தமிழர் வாழ்வு உயர்வு" மட்டுமே இலக்கு ..
தொடர்ந்து பணிசெய்வோம் 
தலைவரின் கரம் பிடித்து ..
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்

Wednesday, May 11, 2022

சாதிக் பாட்சா ..
திமுகழகத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் படித்தவர் பண்பாளர் கண்ணியமிக்க பேச்சாளர் எளிமையின் இலக்கணம் ..  எளிமைக்கு சிலரை அடையாளபடுத்தும் ஊடகங்கள் இவர் எளிமையின் சிகரமாய் வாழ்ந்ததை தவிர்த்தே போகின்றன .. 
இவர் தந்தை நிலக்கிழாராக செல்வந்தராக இருந்தவர்  அவர் மறைவிற்கு பிறகு இவரின் தாயார் சிலநூறு  ரூபாய்களுக்காக சொத்தின் மதிப்பறியாமல் விற்று குடும்பத்தை நடத்தினார் .. உலக வழக்கறியாத இந்த தாயை சிலர் ஏமாற்றியும் எழுதிவாங்கி கொண்டனர்  அவர் மறைவிற்கு பிறகு சாதிக்பாட்சா அவர்கள் திமுகவின் அமைச்சரான பிறகு சிலர் தேடிவந்து தங்களின் தாய் சொத்தின் மதிப்பைவிட குறைவாகவே விற்றார் அதைவைத்து நாங்கள் நிறைய சம்பாதித்துவிட்டோம் திருப்பி எழுதி தருகிறோம் என்றபோது என் தாய் விற்றதை அவர் எவ்வளவு குறைவாக விற்றிருந்தாலும் மனமகிழ்வோடு தான் தந்திருப்பார்  அதை திருப்பி வாங்குவது அழகல்ல முறையல்ல அது அவரின் பெருமைக்கு இழுக்கு எனக்கும் ஏற்புடைய செயல் அல்ல என மறுத்தார் .. செல்வோக்கோடு அதுவும் மந்திரியாய் இருந்தபோது மிரட்டி கூட வாங்கியிருக்கமுடியும் ஆனால் அதை செய்யாமல் தன் தாய் செய்தது சரியென்று அவருக்கு இழுக்கை தேடிதராமல் வாழ்ந்த உயர்ந்த மனிதர் ..
..
சாதிக் அவர்களின் துணைவியார் புனித பயணம் (மக்காவிற்கு ஹஜ்) மேற்கொள்ளவேண்டுமென்ற ஆவலை சொல்ல வசதியில்லை கடன்வாங்கி ஹஜ் செல்லவேண்டுமென்று மார்க்கம் சொல்லவில்லையென சொன்னவர் .. இதையறிந்து கலைஞர் திமுக பொருளாளருக்கு மாத சம்பளம் இவ்வளவு என அறிவித்தார் அதற்கு முன்பு வரை சம்பளம் யாருக்கும் தரபடவில்லை தலைவர் செயலாளருக்கு சம்பளமில்லை ஆனால் பொருளாளர் பதவி வகிப்பவருக்கு சம்பளம் வழங்கபட்டுவருகிறது ..
எளிமையாகவே வாழ்ந்த மனிதர் எதற்கும் ஆசைபடாமல் பதவியை பொறுப்பாக உணர்ந்து செயல்பட்டவர் நான்கு முறை அமைச்சராக இருந்தவர் பதவியை தவறாக பயன்படுத்தியதில்லை ..
..
திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்துபோன பிறகு பதவி சுகம் தேடி சில பித்தளைகள்  சென்றபோது தங்கமாய் தங்குமிடம் இதுதான் என தெளிவோடு சொல்லி நான் சாதிக் அப்படியென்றால் நேர்மையாளன்/உண்மையாளன் என பொருள் எனச் சொல்லி போக மறுத்து பொன்னாய் மின்னியவர் ..
கழகத்தின் கட்டி தங்கம் .. கலைஞரின் நம்பிக்கைக்குரிய தோழர் கொள்கையே மூச்சாய் வாழ்ந்து பொதுவாழ்வில் எப்படி வாழ வேண்டும் இயக்கத்திற்கு எப்படி கட்டுபட்டு கண்ணியத்தோடு கடமையாற்ற வேண்டுமென பாடமாய் இருப்பவர் 
திமுகவிற்கு கிடைத்த நன்முத்து ..
கழகத்தின் வெற்றியிலும், தோல்வியிலும் சோதனையிலும் சாதனையிலும் அசையாத மலையாக இருந்து, எதற்கும் ஊசலாடத இதயத்தோடு இருந்தவர்  என்றார் கலைஞர் 
..
போற்றுதலுக்குரிய சாதிக் பாட்சா புகழ் வாழ்க!
..
ஆலஞ்சியார்

Tuesday, May 10, 2022

வெந்து தணியட்டும் ..
மக்களின் கோபம்  தீயாய் ..
மக்களின் மீது கவலைக்கொள்ளாமல் ஆட்சியாளன் தனக்காக தன் இனத்திற்காக, தனக்கு வேண்டிய முதலாளிகளுக்காக செயல்படுவானாயின் ..
எரியும் ..
எரிந்து சாம்பலாகும் 
வெந்து தணியும் நாடு..
..
இலங்கை மட்டுமல்ல இதோ இந்தியாவும் புகைந்துக்கொண்டிருக்கிறது .. கொரோனா தாக்கத்திற்கு முன்பு எரிப்பொருள் விலை என்ன இரண்டாண்டில் சதமடித்து சில கணவான்களின் கல்லாவை நிரப்ப ஆட்சியாளர்கள் மௌனமாய் சம்மதிக்க மக்கள் புகைந்துக்கொண்டிருக்கிறார்கள் .. 
பொருளாதாரம் தெரியாத பேதைகளால் நாட்டின்  வளர்ச்சி அகலபாதாளத்தை நோக்கி விரைகிறது.. ஏன் இப்படியென்றால் தயாராக இருக்கும் சாதி,மதம் .. 
மதவெறியில் எதையாவது தூண்டி பேசுபொருளாக்கி மறைக்க பார்க்கிறார்கள்.. 
..
ஒருவித பதற்றத்தோடு நாட்டை மக்களை வைத்திருந்தால் தாங்கள் நினைத்ததை சாதிக்கலாம் மீறி யாராவது குரலெழுப்பினால் கொலை செய்வோம் நீதி தவறாத கனவான்களை வெட்டி கொல்வோம் மதகலவரத்தை தூண்டி குளிர்காய்வோம் .. பிற்போக்குதனத்தை விதைத்து மக்களை விலைபேசி கொள்ளையர்கள் ரௌடிகள் களவாணிகளை கட்சியில் சேர்த்து புதிய பாரதம் படைப்போம் .. மாநிலங்கள் தங்கள் பங்கை கேட்டால் பிரிவினவாதம் என முழங்குவோம்.. ஆட்சியாளரை கேள்வி கேட்க  மைக்கை நீட்டினால் 
OH MY GOD என ஓட்டம் பிடிப்போம் .. தயாத்து கட்டி எல்லையில்வைத்து பாதுகாப்போம் மீறி கேள்வி எழுந்தால் நேருவை சொல்லி வியக்கவைப்போம் .. நான்கு குஜராத்திகளுக்காக நாட்டை நாசமாக்குவோரே எச்சரிக்கை..
புகைந்துக்கொண்டிருக்கிறது
..
கனவான்களே..
இலங்கை எரிகிறது .. இதுவொரு எச்சரிக்கை
பசியும் பட்டினியும் பொருளாதார சீரழிவால் நாட்டை நாசமாக்கியவர்கள் ஓடி ஒளிய இடமின்றி தவிக்கிறார்கள்  இனத்தைச் சொல்லி பகைமுடித்து பின் மதத்தை சொல்லி கலவரபடுத்தியவர்கள் இன்று மக்களின் தன்னெழுச்சியால் மிரண்டோடுகிறார்கள்.. கொடூர ஆட்சியாளர்கள் விரட்டபட்டும் கொல்லபட்டதாகவும் தான் வரலாறு சொல்கிறது ..சர்வாதிகார தோரணை வீழ்ந்தே போகும் .. மக்கள் பிரிவினைவாதிகளை மதத்தை சொல்லி கலவரம் செய்வோரை சிறுபான்மையினரை சூறையாடுவோரை .. குறிப்பிட்ட மக்களின் வளர்ச்சிக்காக மற்ற அனைவரையும் புறக்கணிப்பதை அவர்களின் வளர்ச்சிக்கு தடைபோடுவோரை விரட்டியடிக்கும் காலம் வரும் .. கைமீறிபோனால் புகைவது எரிய தொடங்கும்  வெந்தே தீரும் ..
#வெந்து_தணியும் ..
..
ஆலஞ்சியார்

Saturday, May 7, 2022

பேரன்பின் மு.க.ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu 

திமுக தலைவராக பார்த்து வியந்த கண்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்ற போது கசிந்த கண்களோடு பதற்றத்தோடும் ஒருவித பரிதவிப்போடும் இக்கட்டான சூழலில் பதவியேற்கிறார் என்ற படபடப்பும் இருந்தது .. மிக சதூர்யமாக நிர்வாக திறனோடு தன் சகாக்களை முடுக்கி தானும் களத்தில் நின்று வென்று இன்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறார்
இரண்டாம் ஆண்டு இணையற்றதாக இருக்கும் என்ற இலக்கோடு நகர்வதே மிகப்பெரிய சவால்.. தன்நம்பிக்கையும் கடின உழைப்பும் நிர்வாகதிறனும் திறமையான துறைவல்லுநர்களின் வழிகாட்டலும் நேர்மையும் நிச்சயம் இலக்கை அடைய முடியும் என்று நம்பிக்கை பிறக்கிறது ..
..
தினம் தினம் ஒரு செய்தியோடு பகைவர்கள் காத்திருப்பதும் எப்படியேனும் வீழ மாட்டாரா அதை வைத்து அரசியல் நடத்தலாம் என 
அழுக்கு அரசியலை முன்னெடுப்போர்,  எப்படியேனும் ஒரு கலவரம் மதவெறியோடு இருந்தால் நலம், குறைந்தபட்ச சாதியமோதல் என காத்துகிடக்கும் கயமைகள் .. உள்ளுக்குள்ளே விசத்தை தேக்கிவைத்து காலம் வருமென காத்துகிடக்கிறார்கள் துரோகிகள் .. இனசண்டை மொழிசண்டை மதசண்டை என ஏதாவது நிகழ்த்த முடியாத என பாசிசத்தின் அடிவருடிகள் நப்பாசையோடு தவமிருக்கிறார்கள் .. ஊடகங்கள் அறமின்றி விலைபோனதும், நல்ல செய்திகள் அரசின் நல்லதிட்டங்கள் பேசபடாமல் தவிர்த்து மடைமாற்றுவதும் நடக்கிறது ..ஆனாலும் உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை மக்கள்  
உண்மையின் பக்கம் நிற்கிறார்கள் 
..
நிறைய திருத்தங்கள் வேண்டும் அய்யா .. உதவாகரைகள் அரசிலும் கட்சியிலும் உண்டு .. பதவி புகழ் அவர்களின் கண்களை மறைக்கிறது தன்னடக்கம் உயர்வை தருமென  என போதிக்க வேண்டியிருக்கிறது .. இத்தனை வெற்றிக்கும் பிறகு தன்னடக்கத்தோடு செயல்படும் உங்களை கண்டுபடித்திடவேண்டும் .. தலைமைப்பண்பிற்கு இலக்கணமாய் கலைஞர் இருந்தார் அதன் தொடர்ச்சியாய் தங்களை கண்டு வியக்கிறது நாடு  பதவியை பொறுப்பாய் உணர்ந்து செயல்படும் போது வெற்றியின் படி அருகில் வரும்  என்ற யதார்த்த பாடம் தங்களின் வெற்றி உணர்த்துகிறது.. நல்ல தலைவர்களை மக்கள் பற்றிப்பிடித்துக்கொண்டால் நாடு வளரும் உயரும் வரலாறு பேசும் என்பதின் அடையாளமாய் தங்களின் நல்லாட்சி திகழ்கிறது ..
..
கட்சியிலும் ஆட்சியிலும் புதிய இரத்தம் பாய்ச்சிட வேண்டும் பொறுப்பற்றவர்களை விலக்கி பொறுப்புணர்ந்து செயல்படுவோரை முன்னிறுத்தி பயிற்சி தரவேண்டும் .. கொள்கையில் தெளிவோடு, நெறியோடு, தன்னலமற்ற சேவை செய்யும் இளைஞர்களை பொறுப்பிற்கு கொண்டுவர "பயிற்சிப்பட்டறை " அமைத்திடவேண்டும் .. இன்னும் நூறாண்டுகள் நாம் பாசிசத்தோடு சண்டைபோட வேண்டிவரும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்திடல் வேண்டும்.. பெரியாரை பேரறிஞரை பேரருளாளனை சரியாக படித்துணர்ந்தவர்கள், நாட்டின் மீதும் இனத்தின் மீதும் மொழியின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்கள்,நல்லதை விரும்பி தீமையை உணர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்தோர், கண்டறிந்து களப்பயிற்சி தந்து பாசிசத்தை வீழ்த்தும் தளபதிகளாய் உருவாக்கிடவேண்டும் ..
..
எதுவும் எளிதில் கிடைக்காது கிடைத்தால் நிலைக்காது.. கடின உழைப்பும் நேர்கொண்ட நன்னடையும், திறனோடுகூடிய நிர்வாகவும் நல்ல பண்பும், கொள்கைத் தெளிவும், பொதுவாழ்வில் தூய்மையும்நேர்மையும் நல்லதொரு தொடக்கத்தையே தருமென இளைஞர்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. நல்ல தலைவன் கிடைத்திருக்கிறாரென்ற நிம்மதி மக்களிடத்தில் நிலைத்துநிற்கிறது 
தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சமூகநீதியை, சமதர்மத்தை, கொண்டதாய் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை படைத்திட பெரியார் கண்ட கனவை நினைவாக்கிட ஒன்றியத்திற்கே வழிகாட்டும் "திராவிடமாடல்" என பேர்சொல்லும் .. தமிழகம் ஒன்றியத்தின் முதன்மைமாநிலம் இதற்காக பட்ட துன்பங்களும் ஏசல்களும் கேலிகளும் நம்மை துளைத்துவிடவில்லை மாறாய் செழுமைபடுத்தி நிழல்தரும் "தரு" என உயர்த்தியிருக்கிறது ..
இன்னமும் நமது பணி தொடரவேண்டும் .. நல்லாட்சியில் தமிழகம் மிளிர வேண்டும் ..
வாழ்த்துகள் முதல்வர் அவர்களே எனச் சொல்லி தூரநிற்காமல்
வாழ்த்துகள் தலைவா என அரவணைத்து நிற்கிறோம் ..
இனி ..
தளபதி படையே தமிழகம் ஆளும் 
தமிழகத்தை திராவிடமே ஆளும்
..
என்றும் நன்றியோடு..
ஆலஞ்சியார்

Thursday, May 5, 2022

ஓராண்டு ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. 
 திராவிட சித்தாந்தத்தை தூக்கிபிடிக்கிறார் நான் ஏற்றுக்கொண்ட இயக்கத்தை வழிநடத்துகிறார் என்பதையெல்லாம் தாண்டி மக்களின் முதலமைச்சராய் எப்படி இவரால் செயல்பட முடிகிறதென்ற வியப்போடு பார்க்கிறேன்..
.. 
கொள்கையில் தெளிவுண்டு அறிவோம்.. பகைவர் இவரென பிரகடனம் செய்துவிட்டு போர்புரிகிறார் என்பதும் அறிவோம்.. உள்ளும் புறமும்  (இயக்கத்திலும் வெளியிலும்)  எண்ணற்ற வசைபாடல்களும், இழிசொற்களும்,வன்மமும் துரோகமும், குறைகூறலும் உண்டென்பதையும் அறிவோம் .. ஒவ்வொரு நொடியும் இயங்கவிடாமல் தடுக்க பெரும் சக்திகளின் கூடாலோசனையும் காய்நகர்த்தலும் உண்டு ..ஆயினும் ஏற்ற உறுதிமொழிக்கொப்ப பாகுபாடின்றி வாக்களித்தோர் வாக்களிக்காதோர் என்ற  ஏற்றதாழ்வற்ற நேர்நிலையோடு சமசரமற்று ஆட்சிசெய்வதும் எதிரிகள் கதிகலங்குவதும் பகைவர் தினம்தினம் மூக்குடைபடுவதும் காணும் போது திராவிடம் சரியான தலைவனை இனங்காட்டியிருக்கிறது என்பதை எண்ணி வியக்கிறோம் ..
..
பத்தாண்டு பாழ்ப்பட்ட நிலத்தை பதப்படுத்தவே சில ஆண்டுகளாகும்.. ஆனால் ஓராண்டில் எப்படி சாதிக்கமுடிந்தது .. பதிவியேற்றபோது எங்கும் அலறல் சத்தம் எங்கே கூட இருப்பவன் உயிர்போய்விடுமோ குடும்பத்தை தாங்கும் தூண் சரிந்துவிடுமோ ஆதரவற்று போய்விடுவோமோ என மக்களின் அழுகுரல் .. உயிர்வளி ( ஆக்சிஸன்) கிடைக்காமல் மருத்துமனைகளில் இடமில்லை என மக்கள் திண்டாடிய போது பொறுப்பேற்று சிலதினங்களுக்குள்ளாகவே கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து தானே நேர்சென்று ஒவ்வொன்றையும் சரிபடுத்தி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட "கர்த்தனாய்" நின்ற பெருமகன்..
நிர்வாக சீர்கேட்டால் அடிமைகள் குலைத்துபோட்டதை சரிசெய்து வருவாய் இழப்பின்றி நேர்செய்து கல்வியில் புகுத்தபட்ட மடமைகளை களையவும் கல்வி எல்லோருக்கும் கிட்டவேண்டும் இல்லாதோர்க்கு எளிதில் கிட்டவேண்டும் அதற்கு தடையாய் இருக்கும் நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யபடவேண்டும் என சட்டரீதியாக முயற்சியெடுத்து ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் 
.. 
ஒவ்வோரு நாளும் புதிதாய் என்ன செய்யலாம் எப்படி அமைச்சர்களை அதிகாரிகளை விரைந்து செயல்பட வைக்கலாம்  என எதையும் பிழையின்றி செய்ய தனிகவனம் செலுத்தி உழைத்துக்கொண்டிருக்கிறார் .. இவருக்கு சலிப்பே வருவதில்லை நல்லது செய்யவே நேரம் போதவில்லை குறைகூறுபவர்களைப் பற்றி நான் ஏன் கவலைபடவேண்டும் என மிக சரியாக நகர்கிறார் .. நல்ல விமர்சனங்களுக்கு செவிசாய்த்து எப்படி மக்களுக்கு நல்லதை செய்யமுடியும் என செய்துகாட்டி
மக்களிடம் நம்பிக்கை பெற்றிருக்கிறார் ..
..
பொதுமக்கள் நல்ல ஆட்சியென புகழ்வது வெளிப்படையாகவே தெரிகிறது.. குறைகளே இல்லையா என கேள்வி எழும்.. அதிகாரத்தில் இருக்கும் போது தான் அது முள்படுக்கையென புரியும் .. அவசரகதியில் எதையும் செய்துவிடமுடியாது .. கட்சிகாரனின் கோபமும் ஆதங்கமும் எதிரிகளை கையாள்வதில் தயக்கம் இருப்பதை அவர் அறியாமல் இல்லை .. தான் கொண்ட கொள்கைக்கு மாறாகவும் சிலவற்றை செய்யவேண்டி வரும் ஆம் வாக்களிக்காதவர்கள் எதிர்த்தவர்கள் அவர்களுக்கு சேர்த்துதான் ஆட்சி அவர்களின் உரிமையையும் ஆசைகளையும் நம்பிக்கைகளையும் நடத்திகாட்டுவதில் தான் நேர்மை இருக்கிறது.. தனக்கு பிடிக்கவில்லை தவறு என தெரிந்தும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதும் ஆட்சியாளின் கடமை அதுதான் அறம்  அதையும் செய்கிறார் நம் முதலமைச்சர் 
..
எல்லோருக்குமான அரசு இது .. தொழில் வளர்ச்சி தனிநபர் வருமானம் உயர்வு நிம்மதியான வாழ்வு,மதவெறியோ சாதீய தாண்டவமோ தலைதூக்காமல் அதேநேரம்
அனைவரின் உரிமைகளுக்கு மதிப்பளித்து வாழ வகைசெய்யும் அரசு .. கல்வி ஒன்றே வரும் தலைமுறையை மேம்படுத்தும் சமன்செய்யும் சீர்தூக்குமென நிதிநிலை அறிக்கையில் பெரும்பகுதியை ஒதுக்கி இந்திய ஒன்றியத்தில் தலைசிறந்து வழிகாட்டும் மாநிலமாய் தளபதி Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
தலைமையில் அரசு செயல்படுகிறது .. இந்தியாவில் முதன்மை மாநிலமாய் திகழ்கிறது 
திராவிட மாடல் ஆட்சி .. ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது 
தமிழ்நாட்டின் நலன் வளர்ச்சி இவைகளில் சமரசம் செய்துக்கொள்வதில்லை என்ற முனைப்போடு எல்லோரையும் அரவணைத்து ஆட்சி செலுத்துகிறார் ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
மடாதிபதிகள் எப்போதிலிருந்து "இந்துத்துவா "வை கையிலெடுத்தார்கள் .. துறவறம் அன்பு அகிம்சை என வாழ்ந்த பீடங்கள் இன்று ஹிம்சை செய்கிறது 
..
தருமபுரம் மடாதிபதி 1962 ம் ஆண்டு இந்த வருடம் மட்டும் அனுமதியுங்கள் அடுத்தவருடம் முதல் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு இடம்பெறாதென தவத்திரு குன்றக்குடி அடிகளார்  திராவிட கழக எதிர்ப்பை தொடர்ந்து பெரியார் சந்தித்தது கேட்டுக்கொண்டார் அதைப்போல் 1963 ல் பல்லக்கு சவாரி நிறுத்தபட்டது .. இப்போது வந்துள்ள பண்டார சன்னதி திருப்பனந்தாளில் திராவிட கழக எதிர்ப்பை தொடர்ந்து 12.02.22 அன்று நடந்தே சென்றார் ..திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பவும் பல்லக்கு என பிரச்சனை செய்கிறார்கள் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என  பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக இப்போது பாஜக ஆதரவோடு முயற்சிக்கிறார்கள் .. 
மூன்று மாதங்களுக்கு முன் எடுக்கபட்ட முடிவை மாற்றிக்கொண்டதின் பின்னணி குறித்து விசாரிக்கபடவேண்டும்..
..
மன்னார்குடி ஜீயர்  அமைச்சர் பெருமக்கள் தெருவில் நடமாட முடியாதென பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார் .. எங்கே கைது செய்யபட்டுவிடுமோ என கருப்பு கொடி காட்டுவதை தான் அப்படி சொன்னேன் என பல்டி அடிக்கிறார்
மதுரை மடாதிபதியோ  நானே வருவேன்  என்கிறார் திடீரென  உயிருக்கு ஆபத்தென புலம்புகிறார் .. பாஜக தலைவர் நானே தூக்குவேன் .. திட்டமிட்டு கலவரத்தை நிகழ்த்த முயற்சிக்கிறார்கள் .. ஆரம்பத்திலேயே இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும்  Chief Minister of Tamil Nadu  தனிகவனம் செலுத்தி கலவரத்தை தூண்ட  நினைப்போரை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும் காவிகட்டினால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் நடத்தாலாம் என எண்ணுவோருக்கு இது உத்திரபிரதேசம் அல்ல தமிழ்நாடு என புரியவைக்கவேண்டும் 
..
இப்போதெல்லாம் மதகுருமார்கள் துறவிகள் குளுகுளு அறைகளில் சுகவாசம் வாழ்கிறார்கள் .. ஆயிரம்கணக்கான ஏக்கர்களில் சொத்துகள், கணக்கின்றி வருவாய் கேள்வி எழுப்பினால் மதத்தை போர்வையாக்கி ஒளிந்து கொள்ளுதல் .. அதைவிட கேவலமாக  அதிமுக அடிமைகள் பல்லுக்கு சுமப்பதை மரியாதை குறைவாக எண்ணகூடாதென எடப்பாடி சொல்வதை கேட்டு உண்மையில் வருத்தம் வரவில்லை மானசோரம் கெட்டு காலில் விழுகிறவர்களிடம் 
"மானமொன்றே பெரிதென கொண்டு வாழ்ந்ததெங்கள் இனம் " என சொன்னால் புரியவா போகிறது ..
பல்லக்குத் தூக்குபவரின் 
தோள்வலியும், உடல்வலியும்.....
பல்லக்கில் அமர்ந்து பவனி வருபவனுக்கு தெரியாது.. என்பார் இனமான பேராசிரியர் ..  உண்மையில் பாஜகவின் முகமாகதான் அதிமுக செயல்படுகிறது .. 
அதிமுக பாஜக தவிர்த்து எல்லா கட்சிகளும் பல்லக்கு தூக்குவதை எதிர்க்கிறார்கள் .. வேண்டுமென்றே கலவரம் செய்வதற்காக பாஜக தூண்டுதலில் நடப்பதாக தமிழக கட்சிகள் சொல்கின்றன 
..
தமிழ்நாட்டிற்கு சம்மந்தமில்லாதவை "இந்து" நிகழ்ச்சிகள் என்ற பெயரில் புகுத்தப்பட்டது.அப்படி வந்ததுதான் பட்டின பிரவேசம் என்கிறார்
தமிழ் சைவ பேரவை
கலையரசி நடராஜன் அவர்கள் ..  உண்மைதான் .. 
பல்லக்கை தூக்குவேன் என்பதிலும் தூக்குமிடத்தில் இருப்பேன் என்பதிலும் இருக்கிறது இவர்களின் இந்துத்துவ தர்மம் .. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது கூட தீண்டாமையை உணர்த்துவதை புரிந்துக்கொள்ளாதவரை துறவிகள் கொகுசு வாழ்க்கைதான் வாழ்வார்கள் ..
ஆரம்பத்திலேயே களைய வேண்டியவைகளை களைகளை பிடிங்கியெறியாமல் போனால் பயிர் நாசமாகும் ..
..
ஆலஞ்சியார்

Monday, May 2, 2022

பத்தாண்டுகள் அதிமுக எப்படி தமிழகத்தை சீரழித்திருக்கிறதென்பதற்கு குறிப்பாக கல்வித்துறையில் நடக்கும் சில விருப்பதகாத விடயங்கள் சாட்சியாகிறது..
இன்னும் தெளிவாக கடந்த நான்காண்டில் அடிமைகளை எப்படி பாசிச சக்திகளால் மிரட்டபட்டு தங்கள் சித்தாந்தவாதிகளை கல்வித்துறை ஊடுறுவ செய்திருக்கிறார்கள் என்பதை படம்பிடித்துகாட்டுவதாக அமைந்தது மதுரை மருத்துவகல்லூரி சமஸ்கிருத உறுதிமொழி ..
..
நிறைய களையெடுக்க வேண்டியிருக்கிறது.. சுகாதாரத்துறையில் நீண்டநாட்களாக வெங்கட்ராமனின் பேரன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செயலாளராக பணிபுரிகிறார்கள் அவரை வேறொரு துறைக்கு மாற்றி தமிழக அரசின் கொள்கை சார்ந்தவரை நியமனம் செய்யவேண்டும் .. அதேபோல் உயர்கல்வித்துறை செயலாளர், கல்வி இயக்குரக செயலாளர் என உயர்பதவியில் பாசிச பாஜகவால் பரிந்துரை செய்யபட்டு அடிமைகளால் நியமிக்கபட்டவர்களை கண்டறிந்து காத்திருப்போராக மாற்றவேண்டும்
தமிழக அரசால் அங்கீகரிக்கபடாத உறுதிமொழியை ஏற்றவர்களை முதலாம் ஆண்டு பயில அனுமதிக்ககூடாது .. கல்லூரி டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியதோடு நின்றுவிடாமல் புதிய டீன் நியமனம் செய்திட வேண்டும் ..
 .. 
தமிழகத்தில் ABVP யின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செய்தியாளர் சந்திப்பின் பின்னணியை விசாரிக்கவேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் ..  சகர மகரிஷியின் உறுதிமொழியை திணிப்பதன் மூலம் சித்தாந்தத்தை திணிக்க முயல்வது வெளிப்படையாக தெரிகிறது அக்னி பிராமணர்கள் மருத்துவர்கள் முன்னிலையில் எனும் போதே சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே கல்வி என்ற பார்பனக் கொள்கையை முன்னெடுக்க முயற்சிப்பது தெரிகிறது  கூடவே பார்பனர்களை தூக்கிபிடிக்க நினைப்பதும் அவர்களை உயர்வானர்கள் என காட்டி மற்றவர்களை கீழானவர்கள் என சித்தரிக்கும் சனாதனக்கோட்பாட்டை மாணவர்களிடையே திணிக்க முயல்வதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது .. முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய விசசெடிகள்  வளர விடுவது ஆபத்தானது 
..
திமுக மாணவர்அணி ,இடது சாரி DYFI SFI  முழு வீச்சோடு செயல்படவேண்டும் .. மாணவர்களிடையே மத சிந்தனையை ஏற்றதாழ்வை வெறியை உண்டாக்கும் பிற்போக்கு சக்திகளை விரட்டிட வேண்டியது அவசியம் அவசரமும் கூட.. முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu 
 தனி கவனம் செலுத்தி கல்வித்துறை புகுந்துள்ள நஞ்சு சக்திகளை வெளியேற்றிடவேண்டும் .. நல்லதொரு சமுதாயம் படைக்க நல்லவைகளை விதைப்போம் .. களைகளை பிடிங்கி எறிவோம்
..
ஆலஞ்சியார்