மாபெரும் பின்னடைவு ..
ஹிஜாப் அணிந்ததால் தேர்வெழுத மறுக்கபட்டநிலையில் 20,000த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பத்தாமாண்டு தேர்வெழுத முடியவில்லை..
சட்டம் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் பாசிசத்தின் கோரபற்களில் சிக்கி எதிர்காலம் ..? கேள்விக்குறியாகி நிற்பது நாட்டிற்கே தலைகுனிவு ..
..
ஒரேயொரு மாணவிக்காக ரயில்நிலையத்தை மூடாத நாடுண்டு.. இங்கே பல்லாயிரக்கணக்கானோரின் கல்வியை நிறுத்தி மதம் சிரிக்கிறது ..நோக்கம் வென்றதாக
நினைக்கலாம் நாடு சர்வதேசத்தின் முன் குனிந்து நிற்கிறது .. கல்வி மறுக்கபடுவதைவிட கொடுமை ஏதுமில்லை .. சமூகம் மடைமையாககூட இருக்கட்டும் அடிப்படைவாதம் பேசட்டும், முட்டாள்தனமாக கூட சிந்திக்கட்டும் .. அதைமாற்ற கல்வி அவசியம் கல்விமட்டுமே புராதனங்களை, பொய்மைகளை, மதங்களை கடந்து மனிதம் வளர பயன்படும்
..
முஸ்லிம் சமூகம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ..ஹிஜாப் அணிந்தே ஆகவேண்டுமென பத்வாக்கள் வரலாம்,இன்னமும் அதே நிலைப்பாட்டோடு இருக்க போகிறோமா என மார்க்க பெரியவர்கள் முடிவெடுக்க வேண்டும் .. எப்பாடுபட்டாயினும் கல்வி கற்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்திட வேண்டும் .. கல்வி நிலையங்களில் மத அடையாளம் தேவையில்லை என்பது எல்லோருக்கும் பொறுந்துமெனில் இந்துமத அடையாளங்கள் அழிக்கபடவேண்டிய கட்டாயத்திற்கு காலம் நகர்த்தும் ..
அவரவர் மத நம்பிக்கைகளை கடந்து கல்வியைப் பற்றிபிடித்துக்கொள்ளுங்கள் என உரக்க சொல்லவேண்டியது நமது கடமை ..
..
எப்பாடுபட்டாயினும் கல்வியை விட்டுவிடாதீர்கள் குழந்தைகளே
உன்சாத்திரத்தை விட
உன் முன்னோரைவிட
வெங்காயம் விளக்காமாத்தை விட உன் அறிவு பெரிசு என்றார் பெரியார் .. ஆம் அறிவை தேடு அதற்கான தடைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் தூக்கிபோடு ..
உச்சநீதிமன்றத்தில் உன் விரும்பம் நியதி மறுக்கபடலாம் ஆனால் உன் கல்வி எனும் உரிமையை மறுக்க யாராலும் எந்தசக்தியாலும் முடியாது .. அதற்கான தடைகளை உன் உணர்வுகளை தூண்டி மதவெறி என்ற முத்திரையை குத்தி தனிமைபடுத்த பார்க்கும் அயோக்கியத்தனத்தை அனைவரும் சேர்ந்து எதிர்ப்போம் ..
நீட் தேர்வை தமிழகம் எதிர்க்கிறது சட்ட போராட்டத்தின் மூலம் விடியலை பெற தொடர்ந்து முயற்சிக்கிறது அதுவரை தேர்வை எழுதாதீர்கள் என முட்டாள்தனமான முடிவை எடுக்கவில்லை .. உரிமை போராட்டம் தொடரும் அதுதான் சிறந்த முடிவு இதை உணர்ந்து முஸ்லிம்கள் முடிவெடுக்கவேண்டும்..
..
இறுதியாய் எந்த இடைஞ்சல் வந்தாலும் கல்வியை விடாதே அறிவை தேடு அதுமட்டுமே தெளிவை தரும்.. மூட பழக்கங்களிலிருந்து உன்னை காக்கும் .. பாசிசத்தை வீழ்த்த உன் கல்வி மட்டுமே கை கொடுக்கும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment