Saturday, March 5, 2022

தலைவன்..
கட்டுபாடோடு கட்சியை வழிநடத்தவேண்டுமென்று தன் தொண்டர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு மீறியவர்கள் பதவி விலகிவிட்டு தன்னை சந்திக்க வரவேண்டுமென்ற உத்தரவிட்டு உயர்ந்து நிற்கும் தலைவன் 
அரசியலில் புதியதொரு வழிதடத்தை உருவாக்கி நேர்மையோடு வழிநடத்தி பெரும்படையோடு காலத்தில் என்றும் நிலைத்துநிற்கிறார்..
..
உள்ளாட்சிகளில், கட்சி அரசியலை மீறி, சாதிய பின்னணி, தெரிந்தமுகம், வேண்டியவர், ஊர்காரர்,என எப்போதும் நடக்கும் விடயத்தில் தான் "ஒழுங்கு " செய்திருக்கிறார்.. உண்மை அப்பகுதியில் செல்வாக்கோ பலமோ இல்லாத கட்சிகளுக்கு ஒதுக்கியதில் நேர்ந்த தவறுகள், நீண்டகாலமாக அரசியல்  செய்துவந்தவர்கள், மக்களோடு பழகியவர்கள்,தங்களுக்கான அங்கீகாரம் மறுக்கபட்டதும், வெற்றிபெறமுடியும் என்றவுடன் மீறி செயல்பட்டதறிந்து தலைவர் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.. சில இடங்களில் பெரும் தொகை செலவு செய்தும் வென்றவர்கள் கட்டுபாடு மீறினால் கட்டம் கட்டபடுவீர்கள் என்ற எச்சரிக்கை செலவு செய்தால் அதிகாரம் பதவி கிடைக்கும் என்ற நினைப்பில் வெந்நீர் ஊற்றியிருக்கிறார்..
..
உள்ளாட்சிதானே நடந்ததென அலட்சியம் செய்யாமல் வருந்தி 
"கூனி குறுகி" நிற்கிறேன் என்ற அறிக்கை இந்திய அரசியலுக்கு புதிது.. கட்சிகாரன் தானே வென்றிருக்கிறான் கட்சி பலம் கூடும் என்றிராமல் தலைமை பொறுப்போடு கட்சியினருக்கு ஒழுங்கு முக்கியம் என "பறைச்சாற்றி" உயர்ந்துநிற்கிறார் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
.. 
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறை நல்ல தலைவனை கண்டிருக்கிறது ..
தலைவனின் தலைமைப்பண்பும், தோழமை உணர்வு, நம்பிவந்தவர்களுக்கு தந்த உறுதியை காக்கவேண்டுமென்பதில் உண்மையாகவும் இருந்து மக்கள் மனங்களில் உயர்ந்துநிற்கிறார்..
மிகச் சிறந்த தலைவர்களை உலகம் கண்டிருக்கிறது அந்த உன்னதர்கள் வரிசையில் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இடம்பெறுகிறார்..
..
அரசியலில் புதிய இலக்கணம் படைக்கிறார் நீதி தவறா எம் தலைவர் ..
பழுத்த அனுபவமும், பெருந்தலைவர்களோடு நின்று பயின்ற அனுபவமும் காலம் தந்த அனுபமும் மெருகேற்றி நல்லதலைவராய்  நம்முன் நிறுத்தியிருக்கிறது .. அவரது கரத்தை
பற்றிப்பிடித்துக் கொள்வோம்
நல்ல தலைவனை பெற்றிருக்கிறோம் எனப் பெருமைக் கொள்வோம் ..
வாழ்த்தி மகிழ்வோம் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment