Thursday, March 17, 2022

#DravidianBudget2022..
..
திறமையானவர்கள் கைகளில் அதிகாரம் கிடைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்கு சான்றாய் தமிழகம் திகழ்கிறது ..
நீங்கள் கோவில் கட்டுங்கள் நாங்கள் புத்தக பூங்கா அமைக்கிறோம் .. 
..
நல்ல தலைவன் கைகளில் நாடு 
பெண்கள் கல்வி குறித்து அதிகம் கவலைப்பட்டார் பெரியார் .. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கென்ற மூளையில் மதம் குடிகொண்டு நாட்டை சீரழித்தகூட்டம் இன்று திராவிடமாடல் கண்டு விழித்துக்கொள்கிறது .. கலைஞர் பெருமகன் பெண்கள்
திருமண உதவித்திட்டத்தை எட்டு வரை படித்தால் என தொடங்கி பிறகு பன்னிரண்டாக்கினார்  இன்று திராவிடத்தின் நான்காம் தலைமுறைத்தலைவன் தளபதியார்
அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்விக்கு சென்றால் மாதம் ₹1000 உதவித்தொகை எனொ அறிவித்து மகளிர் கல்வியை உறுதி செய்கிறார்..
..
ஐஐடி ல் சேரும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்கிறார் .. பெரியார் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப் படும் இந்திய ஒன்றியத்திற்கு தேவை பெரியாரின் சமூகப் பார்வை என்பதை உணர்ந்து நம் முதல்வர் செயல்படுகிறார்..
..
பழங்குடியினத்தை சேர்ந்த மாணவிகள்  கல்விகற்பதை ஊக்குவிக்கும் NSIGSE திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது ஆனால் திமுக அரசு பழங்குடியினர் கல்வி அக்கறை செலுத்துகிறது.. கல்வி வேளாண்மை, மருத்துவம் மதம்சார்ந்த நம்பிக்கை அறிவியல்,சமூகநலன் என எல்லாவற்றிலும் அக்கறையோடு திட்டம் தீட்டி நிதிஒதுக்கி நல்ல முன்னுதாரணமாக ஒன்றியத்திற்கு வழிகாட்டியிருக்கிறது
..
சமூகநலத் திட்டங்களுக்கு முன்னுரிமை என
தமிழ்நாடு நிதியமைச்சர் சொன்னதிலிருந்தே சரியான பாதையில் திராவிட அரசை செலுத்துகிறார் நம் முதலமைச்சர்
பன்முக தன்மையை அழிக்க நினைக்கும் பாசிசசக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை கலாச்சாரத்தை பண்பாட்டை காக்கும் பொறுப்பு நம் அரசிற்குள்ளதென தெளிவாக பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இது திராவிட மாடல் என பகைவர்களுக்கு புரியவைத்திருக்கிறார்..
..
"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்றான் வள்ளுவன் 
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசனுக்குரிய தகுதிகளாகும்.. அந்த தகுதியை
பெற்ற தலைவராய் நம் 
தமிழ்நாட்டு முதல்அமைச்சர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் திகழ்கிறார் ..
..
நாடு ஒளிருமென நம்பிக்கை பிறக்கிறது
#திராவிடமாடல்
#DravidianBudget2022
#TNBudget2022 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment