Saturday, March 12, 2022

ஐந்து மாநில  தேர்தலில் பாஜக வெற்றி, அதுகுறித்து எதிர்க்கட்சி கவலையும் ..
..
எதிர்க்கட்சிகள் காங்கிரஸோடு இணைந்து செயல்பட தயாரென பேச தொடங்கியிருப்பதே ஜனநாயகத்தின் மிச்சமிருக்கும் நம்பிக்கை ஒளி.. முதலில் காங்கிரஸ் மேலாதிக்கவாதிகளிடமிருந்து விடுதலை பெறவேண்டும், ஜமீன்களும் பெருந்தனக்காரர்களும் பாப்பனீய சிந்தனாவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கவேண்டும் .. இன்னமும் நிறைய #பிரணாப்முகர்ஜிகள் காங்கிரஸில் உண்டு 
கார்த்திக் சிதம்பரம் போன்ற மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட உதவாகரைகளும் அரசியல் அறிவற்றவர்களும்  நிறைய காணலாம் அவர்களை களையெடுக்கவேண்டியது அவசியம் .. இவர்களை வெளியேற்றிவிட்டு சாமானிய மக்களிடம் செல்லவேண்டும் அங்கிருந்து தலைவர்களை உருவாக்க சிலகாலம் பிடிக்கும் அதை இப்போதே துவங்கவேண்டும் ..அதுவரை ராகுல் தூய்மைவாதம் பேசி எந்த பலனுமில்லை..
..
பாஜக எதிர்க்கட்சிகளை பிரிப்பதில் அவர்களை ஒன்று சேரவிடாமல் தொடர்ந்து ஊடகத்துணையோடும் காங்கிரஸில் இருக்கும் கருப்பாடுகளின் துணையோடு சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறது .. மிக குறைவான வாக்கு விகிதம் என்றாலும் தேர்தலில் வெற்றி என்பதொன்றே அதிகாரத்தில் அமர்த்தும் அதை  மிக சரியாக செய்கிறது .. பஞ்சாப்பில் காங்கிரஸ் தேர்தல் நெருங்கிற நேரத்தில் தலைமையை மாற்றியது அங்கே பலவீனபட காரணம் .. எதை எப்போது செய்யவேண்டும் என்பதில் இருக்கிறது அரசியல்வெற்றி.. பஞ்சாப் மக்கள் காங்கிரஸை வீழ்த்த நினைக்கவில்லை மாறாக பாஜகவை அழிக்க நினைத்து அதற்கு மாற்றான காங்கிரஸ் பலவீனபட்ட நிலையில் ஆம் ஆத்மியை அறியணையேற்றியிருக்கிறார்கள்.. காங்கிரஸ் இதை உணராதவரை இழப்பு இந்திய மக்களுக்குதான் 
..
தமிழகத்தைப்போல மிக தெளிவாக திட்டமிடலோடு தேர்தலை சந்திக்கவேண்டும், திமுக தோழமைகளை அரவணைத்து சென்று எதிரியை வீழ்த்தியதை தளபதியின் அணுகுமுறை அரசியல் முதிர்ச்சி 
நுட்பமான உத்தி இவைகள் அரசியல் இலக்கணம் .. 
மம்தா காங்கிரஸோடு இணைந்து செயல்பட தயார் என்ற அறிவிப்பை "நல்நோக்கமாக" கருதி இந்திய ஒன்றியத்தின் மாநிலத் தலைவர்கள் தங்கள் தலைக்கனத்தை அகங்காரத்தை தூக்கெறித்துவிட்டு  ஒன்றிணைந்தால் நாட்டில் இரண்டாவது விடுதலை போர் என வரலாறு பேசும்..
..
இப்போது இந்திய ஒன்றியத்திற்கு தேவை " திராவிட மாடல்" அதை அனைத்து மாநில தலைவர்களும் உணர தொடங்கியிருப்பதாக  வரும் செய்திகள் நம்பிக்கை தருகிறது காங்கிரஸ் கம்யூனிஸ்ட்(தேசிய கட்சிகள்) தங்கள் பலம் என்னவென்று அறிந்திருக்கும் .. அந்தந்த  மாநில கட்சிகளோடு இணைந்து பாசிச பாஜகவை வீழ்த்த முன்வரவேண்டும் .. இடதுசாரிகளிலும் ஆர்எஸ்எஸ் கருப்பாடுகள் உண்டு அவை மெல்ல தலைகாட்டி மீண்டும் உருமாறிக் கொள்ளும்..  
..
தேசத்தின் தலைவராக யாரை முன்னிறுத்தலாமென சண்டை மூட்ட பாசிசம் முயலும்.. இவையெல்லாம் பாஜகவிற்கு துணை சேர்க்க கைக்கூலிகள் செவ்வனே செய்வார்கள் .. இன்றைக்கு இந்திய ஒன்றியத்திற்கு
நம்பிக்கை தரும் தலைவராக தளபதியார் மிளிர்கிறார் .. மாநிலகட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் பாசிசத்தை வேரறுக்கவேண்டியதும் அவர் அறிவார் .. குறுகிய எண்ணங்களிலிருந்து மீண்டு நல்ல மீட்சி வேண்டி மாநிலத்தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் அதன் முன்னெடுப்பை 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செய்யவேண்டும் .. அதன் அவசியத்தை/அவசரத்தை உணர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்..
..
நல்லதை விதைப்போம்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment