Thursday, March 3, 2022

கவனித்தீர்களா..
பெண்களை அதிகளவில் அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்க்கிறது திராவிடமாடல்
இதைதான் பேராசான் பெரியார் சொன்னார்.. பேரறிஞர் கனவுகண்டார் முத்தமிழறிஞர் தொடங்கிவைத்தார் இன்று முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் படையோட்டம் நடத்தியிருக்கிறார்..
11மாநகராட்சிகளில் பெண்கள் 
"மாநகரத் தாயாக" உயர்வு பெறுகிறார்கள் .. நல்ல தொடக்கம்..
..
கும்பகோணம் காங்கிரஸூக்கு வழங்கியதில் எமக்கும் கோபமுண்டு .. ஆனால் அங்கே ஆட்டோ டிரைவர் மேயராகிறார் இதற்குதானே திராவிடப் பெரியவர்கள் பாடுபட்டார்கள்
கோயம்புத்தூர் மேயர்  கல்பனா ஆனந்தகுமார் மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவர் வசதியின்மை காரணமாக, கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் முதல்வரை சந்திக்க பேருந்தில் சென்னைக்கு வந்து சென்றவர்.. தாம்பரம் மேயர் தொழிலாளியின் மகள், 
சாமானியர்கள் அதிகாரமிக்க அமர்த்துவதே நாம் கொண்ட கொள்கையில் சரியாக பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சி.. கோவை போன்ற வணிக நகரில் செல்வந்தர்களும், செல்வாக்குள்ளவர்களும்,  அழுத்தம் தந்தும் தலைவரின் முடிவு சிலருக்கு அதிர்வை தந்தாலும் பயணம் சரியான திசையில் செல்வதை உணர்த்துகிறது..
..
மாநகராட்சி,நகராட்சி,பேரூர் தலைவர்களாக புதியவர்கள் அதிகளவில் இடம்பெறுவது நல்ல தொடக்கம் .. சில வருத்தங்கள் வரும் போகும் .. கொள்கையில் உறுதிக் கொண்டவர்கள் தலைவரின் தேர்விற்கு தலையசைப்பதை காணமுடிகிறது.. சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை என குரல் உயர்வதை அறிகிறோம் பேரூராட்சிகளில் 20 பேர் தேர்வென்பது கூட ஆறுதல் தரகூடிய விடயமல்ல .. சமுதாயம் முத்துபேட்டை நகராட்சியில் பிரிந்துநின்று தோற்றதை கணக்கில் கொள்ளவேண்டும்..
மேலூர் எந்த வார்டில் ஹிஜாப் கழட்ட சொன்னார்களே அங்கிருந்தே தலைவர் முகமது யாசின்தேர்வு செய்திருப்பதிலிருந்தே பகைவர்க்கு சேதி சொல்கிறார் தலைவர் ..
..
உள்ளாட்சிகளில்தான் உண்மையான சனநாயகம் இருக்கிறது .. பொறுப்பிற்கு வருபவர்கள் அதை உணர்ந்து செயல்படவேண்டும் ஏனெனில் 
Stslin is More Dangerous .. எதிரிகளுக்கு மட்டுமல்ல தவறு செய்பவர்களுக்கும் தான் .. நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது 
மக்கட்பணி செய்ய , அதை உணர்ந்து செயல்படுங்கள் 
பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment