ஹிஜாப் தடை செல்லும் ..
மாநில அரசு தடைவிதித்தது செல்லும் .. மாணவர்கள் சீருடையில் Uniform
இருக்கவேண்டும் என்ற கருத்தையொட்டி தீர்ப்பெழுதியிருக்கிறார்கள் ..
ராமர் கோவில் விடயத்தில் நம்பிக்கை சார்ந்து தீர்ப்பளித்த நீதிமன்றம் இங்கே கல்வி மாணவர்கள் சீருடையென
என காரணம் காட்டுகிறது..
..
ஹிஜாப் கட்டாயமா என கேள்வி எழுப்பி சிலர் முஸ்லிம் பெண்கள் சரிபாதிக்கும்மேல் ஹிஜாப் அணிவதில்லை என பதில் தருகிறார்கள் .. ஆனால் உடை விடயத்தில் கேள்வி கேட்கவில்லை பள்ளிக்கு ஒரே சீருடையோடுதான் வரவேண்டும். பொட்டு வைத்துக்கொள்ளலாம் பூணூல் அணியலாம் அவை மத அடையாளமாக பார்க்க தேவையில்லை
அவை கட்டாயமாக்கபட்டதென விளக்கங்கள் வருகின்றன.. உடை சுதந்திரம் பொதுவெளியில் தானே தவிர கல்விநிலையங்களில் அல்ல என்பவர்கள்
நாமம் போட்டுக்கொண்டு உத்திராட்சம் அணிந்துக்கொண்டு வருவது இதில் சேராது .. முகத்தை மறைப்பதல்ல ஹிஜாப் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை..
..
முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வி முக்கியம் இத்தடைகள்யாவையும் புறந்தள்ளி, கல்வி ஒன்றே மடமையிலிருந்தும், மூடபழக்கங்களிலிருந்தும் காக்கும் என்பதை உணர்ந்து கற்க முன்வேண்டும் .. அடிப்படைவாதிகள் இருசாராரும் பெண்கல்வியில் பிற்போக்குத்தனமானவர்கள் .. எப்படியேனும் கல்விக்கு தடை போட துடிப்பவர்கள் அவர்கள் அதற்கு அற்பமான ஆயுதங்களை (ஹிஜாப்) முன்நிறுத்துவார்கள் கவனம் தேவை குழந்தைகளே!..
..
பாசிச ஆர்எஸ்எஸ் திட்டங்கள் ஒவ்வொன்றும் மெல்ல அரங்கேற தொடங்கியிருப்பது ஆபத்தானது ஐந்துமாநில வெற்றிக்காக காத்திருந்து தீர்ப்பு வந்திருக்கிறது .. சிறு சிறு தடைகள் நம் பயணத்தில் களைப்பை தரலாம் ஆனால் துணிந்து போடா மயிரு என தூக்கியெறிந்துவிட்டு நம் கல்வியை உறுதி செய்வோம் .. இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
கொந்தளிக்காமல் பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பள்ளி கல்லூரிக்கு அனுப்புவதை திருத்தாமல் இருக்கவேண்டும் ..
..
இந்திய நீதிகள் நூல்களால் ஆனது .. ஆகமவிதியென தங்களுக்கு சாதகமானவற்றை சேர்த்து, தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக எதையும் செய்பவர்கள், மதம் என்ற பெயரில் தலையிட கூடாதென ஒப்பாரி வைப்பவர்கள் .. தலையில் துணியை கட்டிக்கொள்வதில் என்ன தவறைக் கண்டார்கள் .. சீக்கிய மதத்தவர்கள் டர்பன் அணியலாம் அது விதிமீறலில் வராது .. சீருடை என்பது எல்லோரும் ஒரே வண்ணத்தில் வேண்டும் , ஏற்றதாழ்வற்ற மனப்பான்மையோடு சமமென உறுதிபடுத்ததான் .. மத அடையாளமற்ற நிலையில் யாருமில்லை .. குறிப்பிட்ட மதத்தவர் மீது மட்டும் இதுபோன்ற தாக்குதல் நடத்தபடுவதன் மதவெறியை ஏற்படுத்தி வேற்றுமையை உருவாக்கி கலவரத்தோடு இந்த மண்ணை வைத்திருக்கவேண்டுமென்பதை தவிர வேறில்லை ..
இன்று அறுதிப் பெரும்பான்மை
ஆட வைக்கும் ..
ஆனால் விழும் போது எழவே முடியாமல் போகும் .. இந்த தேசம் பன்முகத்தை இன்முகத்தோடு ஏற்கும் பண்பாடு நிறைந்தவர்களை கொண்டது
எச்சரிக்கை..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment